|
தமிழகத்தில் 23.8.2010க்கு முன் ஆசிரியர் தொடர்பான அறிவிப்பு வெளியாகி சான்றிதழ்சரி பார்க்கப்பட்டு அதன் பின்னர் பணி நியமனம் செய்யப்பட்ட அரசு மற்றும் தனியார்பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் அனைவரும்ஆசிரியர் தகுதி தேர்வு எழுத தேவையில்லை.
ஆனால் இந்த தேதிக்கு பின்னர் ஆசிரியர் தேர்வு தொடர்பாக அறிவிப்பு வெளியாகிபணி நியமனம் பெற்ற ஆசிரியர்கள் இத்தேர்வை எழுத வேண்டும் என தேசியஆசிரியர் கல்வி நிறுவனம் அறிவித்துள்ளது.
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு ஆசிரியர் தேர்வுவாரிய பொது தகவல் அலுவலர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்படி தமிழகத்தில்23.8.2010க்கு பின்னர் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணி நியமனம்செய்யப்பட்ட இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் அனைவரும் ஆசிரியர்தகுதி தேர்வு எழுத வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
- ராஜா முகம்மது |
Latest Post
Showing posts with label கல்வி தகவல்கள். Show all posts
Showing posts with label கல்வி தகவல்கள். Show all posts
ஆசிரியர்,
கல்வி தகவல்கள்,
கல்வி வழிகாட்டி
ஆசிரியர் தகுதி தேர்வு: தமிழக அரசு புதிய அறிவிப்பு.
Labels:
ஆசிரியர்,
கல்வி தகவல்கள்,
கல்வி வழிகாட்டி
கல்வி தகவல்கள்,
கல்வி வழிகாட்டி
2011-12 கல்வியாண்டில்சிறப்பாக செயல்பட்ட பொறியியல் கல்லூரிகள்..
Labels:
கல்வி தகவல்கள்,
கல்வி வழிகாட்டி
கல்வி தகவல்கள்,
படிப்பு
ஆர்கிடெக்சர் துறை என்பது என்ன?...
|
நோக்கம் மற்றும் ஒரு இடத்தின் சுற்றுச்சூழல் ஆகியவற்றைப் பொறுத்து, முறையான உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, திட்டமிடல், வடிவமைத்தல் மற்றும் கட்டடம் கட்டுதல் ஆகிய செயல்களை மேற்கொள்ளல் ஆர்கிடெக்சர் எனப்படும். சிறப்பான வீடு மற்றும் பணியாற்றும் இடம் ஆகியவற்றை மக்கள் அதிகளவில் விரும்புவதால், இந்தத் துறையானது பெரியளவில் வளர்ந்து வருகிறது.
ஆர்கிடெக்சர் என்பது இன்றைய நிலையில் தவறாக புரிந்துகொள்ளப்பட்டதாக இருக்கிறது. இப்படிப்பில் சேரும்பல மாணவர்கள், இரண்டாம் செமஸ்டர் காலத்திற்குள்ளேயே, அப்படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டுவெளியேறி விடுகிறார்கள். இதற்கு முக்கிய காரணம் ஆர்கிடெக்சர் என்பதை வெறும் கட்டடத்தைவடிவமைக்கும் பணி என்று நினைத்து விடுகிறார்கள். மேலும், பல மாணவர்கள் நினைப்பது என்னவெனில்,ஆர்கிடெக்சர் என்பது அதிகம் அறிவியல் சம்பந்தப்பட்டதல்ல என்றும் அது பெருமளவில் கலைத்திறன்தொடர்பானது என்றும் நினைக்கின்றனர்.
மாணவர்கள், இப்படிப்பில் சேர்ந்தவுடன், ஒவ்வொன்றையும் வடிவமைப்பு மற்றும் கருத்துடன் இணைக்கும்போது,தாங்கள் எதிர்பார்த்ததைவிட, வித்தியாசமாக உணர்கிறார்கள். கணிதத்திறன் உள்ள ஒவ்வொருவரும்இப்படிப்பை தேர்ந்தெடுக்க தகுதி வாய்ந்தவர்களே. முதல் சில வருடங்கள், புத்தாக்க முயற்சிக்கென்று அதிகநேரம் செலவழிக்க வேண்டாம். பொறியியல் படிப்புடன் ஒப்பிடுகையில், இப்படிப்பின் தேர்வு நேரமானதுஅந்தளவு நெருக்கடியானதல்ல. ஆனால், அதேநேரத்தில், இப்படிப்பில் பலவிதமான பணிகள் நிறைந்திருக்கும்.
இப்படிப்பின் நான்காம் ஆண்டில், ஒரு மாணவர் ஸ்பெஷலைசேஷனை தேர்ந்தெடுக்கிறார். ஆர்கிடெக்சர்துறையைப் பொறுத்தவரை, ஸ்பெஷலைசேஷன் என்பது பரவலானது.
Sustainable development, Contemporary, Interior designing, Architectural photography உள்ளிட்ட பலவிதமான பிரிவுகளிலிருந்துஒருவர் தனது ஸ்பெஷலைசேஷனை தேர்ந்தெடுக்கலாம். அதேசமயம், தவறான ஸ்பெஷலைசேஷனைதேர்ந்தெடுத்தால், பெரிய சிக்கலில் மாட்ட நேரிடும். தற்போதைய நிலையில், Sustainable architecture எனப்படும்பசுமை கட்டடக்கலை பிரபலமாகி வருகிறது. இப்படிப்பில், 5ம் ஆண்டான இறுதியாண்டில், ஆய்வறிக்கையின்வாயிலாக, வடிவமைப்பு தொடர்பான முழு சுதந்திரம் மாணவர்களுக்கு கிடைக்கிறது. இந்த நிலையில், ஒருமாணவர், நிபுணத்துவம் பெற்ற ஆர்கிடெக்ட் என்ற நிலையை அடைகிறார்.
பி.ஆர்க் முடித்தவுடன் என்ன செய்வது என்ற கேள்வி இருக்கும். இந்தப் படிப்பானது, எம்.பி.பி.எஸ்., படிப்பைஒத்ததாகும். ஏனெனில், பி.ஆர்க்., நிறைவுசெய்த பிறகு, ஒருவர் ஏதேனும் ஒரு ஸ்பெஷலைசேஷனில்முதுநிலை படிப்பை மேற்கொள்ள வேண்டியிருக்கும். முதுநிலைப் படிப்பென்பது மிகவும் தனித்த அம்சம்கொண்டது. பிரிட்டன் போன்ற வெளிநாடுகளில் முதுநிலைப் படிப்பை மேற்கொள்வதைவிட, இந்தியாவில்மேற்கொள்வது எளிது என்று சம்பந்தப்பட்டவர்கள் கூறுகிறார்கள்.
பி.ஆர்க்., இளநிலைப் படிப்பை முடித்துவிட்டு பணிவாய்ப்பை தேடுவதைவிட, முதுநிலைப் படிப்பிற்கு பிறகானபணிவாய்ப்புகளைப் பெறுவது எளிது. அதேசமயம், இந்தியாவிற்கு திரும்பிவர விரும்பினால், பி.ஆர்க்., மற்றும்எம்.ஆர்க்., படிப்புகளுக்கு இடையிலான சம்பளம் விகிதம் மிகவும் குறைவாகவே இருக்கும். சென்னையைஎடுத்துக்கொண்டால், இங்கே கிடைக்கும் ஊதியம், பெங்களூர், அகமதாபாத் உள்ளிட்ட பிற நகரங்களைவிடநன்றாக இருக்கிறது என்று தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஒருவர் ஆர்கிடெக்சர் முடித்து, பணியில் சேர்ந்ததுமே, நல்ல ஊதியம் பெறலாம் என்ற தவறான கருத்து ஒன்றுஉள்ளது. ஆனால், குறைந்தது 10 முதல் 15 வருடங்கள் அனுபவம் பெற்று, ஒரு நல்ல ஆர்கிடெக்டாக தன்னைநிலைநிறுத்திக்கொள்ளும் ஒருவரே, சிறப்பான ஊதியம் பெறுகிறார். ஒரு சொந்தமாக தொழில் தொடங்கநினைப்பது நல்லதே. அதேசமயம், சிறிதுகாலம் பிற இடங்களில் பணியாற்றிவிட்டு, ஓரளவு அனுபவம் பெற்று,அதன்பிறகு சொந்த தொழிலில் இறங்குவதே புத்திசாலித்தனம்.
ஆர்கிடெக்சர் துறையில் பயிற்சி செய்வதென்பது, மருத்துவ துறையில் பயிற்சி செய்வதைப் போன்றதாகும்.துறையில், நாள்தோறும் ஏற்படும் மாற்றங்களைப் பற்றி தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். அதேசமயம், அதுவாழ்க்கை முழுவதற்குமான கற்றல் செயல்பாடாகும். ஆர்கிடெக்ட் பணி என்பது, வெறுமனே கட்டட வரைபடதிட்டங்களை வரைவது மட்டுமேயல்ல, மாறாக, உங்களின் படைப்புத்திறனையும், ஆர்வத்தையும்வெளிப்படுத்துவதாகும். அப்போதுதான், இத்துறையில் நீடிக்க முடியும்.
இத்துறையானது, அறிவியலும், வடிவமைப்பும் சேர்ந்த ஒன்றாகும். நீங்கள் உருவாக்கும் வடிவமைப்பின்மூலமாக, உங்களது வாடிக்கையாளரை திருப்திபடுத்துவது மிகவும் முக்கியம் மற்றும் நீங்கள் பல டிசைன்களைஉருவாக்க வேண்டியிருக்கும். மேலும், உங்களின் வடிவமைப்பு(design) முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை,சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று மேற்பார்வையிடுவதும் முக்கியம்.
எனவே, ஆர்கிடெக்ட் பணி என்பது, சாதாரணமாக, காலையில் சென்று மாலையில் வீடு திரும்பும் அலுவலகபணி போன்றதோ அல்லது பணம் சம்பாதிப்பதற்கான ஒரு எளிய தொழிலோ அல்ல. இது ஒரு சந்தோஷமான,புத்தாக்கமான, படைப்புத்திறனுள்ள மற்றும் உயர் பணிபொறுப்புள்ள பணியாகும்.
இத்துறையில் வெற்றியடைய வேண்டுமெனில், தீவிர அர்ப்பண உணர்வுடனும், போட்டிகளை ஜெயிக்கும்வகையிலான திறன்களை வளர்த்துக்கொள்ளும் மனப்பாங்குடனும் விளங்க வேண்டும். அப்போதுதான், ஒருவெற்றிகரமான ஆர்கிடெக்டாக நீங்கள் பரிணமித்து, உங்களின் ஆசையை நிறைவேற்றிக்கொள்ள முடியும்.
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தால் நடத்தப்படும் B.Arch படிப்பிற்கான ராங்க் பட்டியல் வரும்28/06/2013 அன்று வெளியிடப்படும். - திருத்துறைப்பூண்டி ராஜா முகம்மது |
Labels:
கல்வி தகவல்கள்,
படிப்பு
கல்வி தகவல்கள்,
கல்வி வழிகாட்டி
கட்டிடக் கட்டுமான மேற்பார்வை மற்றும் நிர்வாக படிப்பு...
Labels:
கல்வி தகவல்கள்,
கல்வி வழிகாட்டி
கல்வி தகவல்கள்,
கல்வி வழிகாட்டி
பொறியியல் கவுன்சிலிங் - தேதி வாரியான விபரங்கள்
நடைபெறும் இடம் :
நுழைவுத்தேர்வு மற்றும் சேர்க்கைக்கான மையம்,
அண்ணா பல்கலைக்கழகம்.
தொழிற்பிரிவு படித்த மாணவர்களுக்கான கவுன்சிலிங் தேதி விபரங்கள் :
இவர்களுக்கான கவுன்சிலிங் ஜுலை 1ம் தேதி தொடங்கி, ஜுலை 12ம் தேதி வரைநடைபெறுகிறது.
கட்-ஆப் மதிப்பெண் 195.00 என்பதில் தொடங்கி, 88.67 வரை நடைபெறுகிறது.
நடைபெறும் இடம் :
ராமானுஜன் கம்ப்யூட்டிங் மையம், அண்ணா பல்கலைக்கழகம்.
அகடமிக் பிரிவு மாணவர்களுக்கான கவுன்சிலிங்
ஜுன் 21ம் தேதி தொடங்கி, ஜுலை 26ம் தேதி வரை இந்த கவுன்சிலிங் செயல்பாடுநடைபெறும்.
கட்-ஆப் மதிப்பெண் 199.25 என்பதில் தொடங்கி, ஜுலை 26ம் தேதி பிற்பகல் 2மணிவரை, கட்-ஆப் 80.00 என்பது வரை நடைபெறுவதோடு, அன்றைய தினம்பிற்பகல் 3.30 வரை, இறுதியாக காத்திருக்கும் மாணவவர்களுக்கும் நடைபெறும்.
நடைபெறும் இடம் :
நுழைவுத்தேர்வு மற்றும் சேர்க்கைக்கான மையம்,
அண்ணா பல்கலைக்கழகம்.
விரிவான விபரங்கள் அனைத்தையும் அறிந்துகொள்ளhttp://www.annauniv.edu/tnea2013/schedule.htm
|
Labels:
கல்வி தகவல்கள்,
கல்வி வழிகாட்டி
கல்வி,
கல்வி தகவல்கள்,
கல்வி வழிகாட்டி,
மருத்துவ படிப்பு
எம்.பி.பி.எஸ்.: ஜூன் 19 முதல் கலந்தாய்வு...
Labels:
கல்வி,
கல்வி தகவல்கள்,
கல்வி வழிகாட்டி,
மருத்துவ படிப்பு
பிரபலமானவை
-
''யாருடைய சுயபுத்தியும் சொல்லாத எந்த விஷயத்தையும் இந்தச் சாமியார்கள் சொல்லிவிடுவது இல்லை. ஆனால், அவர்களின் தோற்றம் தரும் மாயை, அவர்...
-
SAIL(Steel Authority of India Limited) நிறுவனத்தில் டெக்னீ ஷியன் டிரெய்னி பணிக்கு தகுதியான B.E பட்டதாரிகளிடமிருந்து வி...
-
உலக பயங்ரகவாதி இஸ்ரேல் கடந்த புதன் கிழமையிலிருந்து பாலஸ்தீன நாட்டில் காசா பகுதிகளில் ராக்கட்டுகள் மூலம் வான்வழி தாக்குதல் நடத்தி வருகின்ற...
-
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு கிளையில் கடந்த 23.11.2012 அன்று வேணுகோபால் என்ற சகோதரர் தன் வாழ்க்கை நெறியாக தூய இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்....
-
ஆக்கம் -அப்துல் கரீம், மேலப்பாளையம் உலகில் உள்ள படைப்புகளில் மிகச்சிறந்த படைப்பு மனிதன் என்பதை சொல்லித் தெரிய வேண்டிய தில்லை. இப்போது கா...
-
முஸ்லிம் எதிரிகளுக்கு எதிரான எழுத்துப் போ ர் இஸ்லாத்தின் மீது சேறு பூச முனையும் அசத்தியவாதிகளுக்கு அவர் மறுப்பளிக்கும்போது, அணல் ததும...
-
திருக்குர்ஆனின் அத்தியாயங்கள் , அதில் இடம் பெறும் வசனங்கள் தொடர்பாகக் கூறப்படும் சிறப்புகள் பற்றி , அவை ஆதாரப்பூர்வமானதா ? பலவீனமானத...
-
கன்னியாக்குமரி மாவட்டம் களியக்காவிளை என்ற ஊரில் பல ஆண்டுகளுக்கு முன்னர் தவ்ஹீத் ஜமாஅத்திற்கும் சுன்னத் வல் ஜமாஅத் என்ற பெயரில் உள்ள கப்ர...
-
அல்லாஹுவின் திருப்பெயரால் அஸ்ஸலாமு அழைக்கும்(வரஹ்) தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குவைத் மண்டலம் ஹதியா கிளையில் ""ஆஷுரா நோன்பும் ...
-
ஆறு நோன்பு ஆதாரமற்றதா? பி. ஜைனுல் ஆபிதீன் حَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ وَعَلِيُّ بْنُ حُجْرٍ جَمِيعً...


