மேலவை தேர்தலில் தி.மு.க.வின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கனிமொழிக்கு புதிய தமிழகம் கட்சி ஆதரவு அளிக்கும் என்று அக்கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் இருந்து தேர்வு செய்யப்பட உள்ள 6 பேருக்கான மேலவை தேர்தலில் அ.தி.மு.க. 4 வேட்பாளர்களையும், அ.தி.மு.க.வின் ஆதரவுடன் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மூலம் 5-வது வேட்பாளரையும் நிறுத்தியுள்ளன. 6-வது வேட்பாளராக தி.மு.க.வின் சார்பில் கனிமொழிக்கும் தே.மு.தி.க. சார்பில் இளங்கோவனுக்கும் கடும் போட்டி நிலவுகின்றது. கனிமொழிக்கு தி.மு.க. தலைவர்கள் ஆதரவு திரட்டி வருகிறனர்.
கடந்த சட்டமன்ற தேர்தலின் போது அ.தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகித்த புதிய தமிழகம் கட்சி மேலவை தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. முன்னதாக, மனிதநேய மக்கள் கட்சி நேற்று தி.மு.க.வுக்கு தனது ஆதரவைத் தெரிவித்தது. இந்த இரு கட்சிகளின் ஆதரவு மூலம் தி.மு.க.வின் எண்ணிக்கை 27 ஆக உயந்துள்ளது.
புதிய தமிழகம் கட்சி கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி தி.மு.க. தலைவர் கருணாநிதியை இன்று சந்தித்து கனிமொழிக்கு தங்களது கட்சியின் ஆதரவைத் தெரிவித்தார்.
Post a Comment