தாவீது இறை மகன்:
"நீர் என்னுடைய குமாரன்; இன்று நான் உம்மை ஜனிப்பித்தேன்'' - (சங்கீதம் 2:7)
என்று கர்த்தர் தாவீதை நோக்கிக் கூறுகிறார்.
"நான் அவனுக்குப் பிதாவாயிருப்பேன். அவன் எனக்குக் குமாரனாய் இருப்பான்." - (முதலாம் நாளாகமம் 17:13)
சாலமோன் இறை மகன்:
"அவன் (சாலமோன்) என் நாமத்திற்கு ஆலயத்தைக் கட்டுவான். அவன் எனக்குக் குமாரனாயிருப்பான். நான் அவனுக்குப் பிதாவாயிருப்பேன். இஸ்ரவேலை ஆளும் அவனுடைய ராஜாங்கத்தின் சிங்காசனத்தை என்றைக்கும் நிலைப்படுத்துவேன் என்றார்." - (முதலாம் நாளாகமம் 22:10)
எப்ராயீம் இறை மகன்:
"இஸ்ரவேலுக்கு நான் பிதாவாக இருக்கிறேன். எப்ராயீம் என் சேஷ்டபுத்திரனாயிருக்கிறான்." - (எரேமியா 31:9)
சாமுவேல் இறை மகன்:
"நான் அவனுக்குப் பிதாவாய் இருப்பேன். அவன் எனக்குக் குமாரனாயிருப்பான்." - (இரண்டாம் சாமுவேல் 7:14)
"இயேசு இறை மகன்" எனக் கூறப்படுவதால் இயேசுவை அழைத்து உதவி தேடக் கூடிய கிறித்தவர்கள் அதே போல் இறை மகன் என்று பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ள மற்றவர்களை அவ்வாறு அழைப்பதில்லையே அது ஏன்?
இத்தனை தேவகுமாரர்களிருக்க இயேசுவை மட்டும் "இறைவனின் மகன்' எனக் கூறுவது பைபிளின் போதனைக்கே முரணானது என்று அவர்களுக்குத் தெரியவில்லையா?
எல்லா மக்களும் தேவ குமாரர்கள்:"நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தரின் பிள்ளைகள்!" - (உபாகமம் 14:1)
"தம்முடைய பரிசுத்த வாசஸ்தலத்தில் இருக்கிற தேவன் திக்கற்ற பிள்ளைகளுக்குத் தகப்பனும் விதவைகளுக்கு நியாயம் விசாரிக்கிறவராகவுமிருக்கிறார். " - (சங்கீதம் 68:5)
திக்கற்ற பிள்ளைகளுக்கும் தேவன் தகப்பனாக இருக்கிறபடியால் "அகதிகள் முகாமில் இருக்கிற இறை மகன்களே! அநாதை விடுதிகளில் இருக்கின்ற இறை மகன்களே! எங்களுக்கு உதவுங்கள்'' என்று கிறித்தவர்கள் அழைப்பதில்லையே? அது ஏன்?
"இறை மகன்' எனும் அடைமொழி "கடவுளின் புத்திரர்கள்” எனும் கருத்தில் பைபிளில் பயன்படுத்தப்படவில்லை; "இறைவனின் அடியார்கள்' எனும் கருத்திலேயே பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை இதிலிருந்து அறியலாம்.
"இறை மகன்' என்பதைக் கிறித்தவர்கள் எந்தப் பொருளில் விளங்கி வைத்திருக்கிறார்களோ அந்தப் பொருளில் பைபிளில் பயன்படுத்தப்படவில்லை என்பதையும் இதிலிருந்து அறியலாம்.
"இயேசு இறை மகன்" எனக் கூறப்படுவதால் இயேசுவை அழைத்து உதவி தேடக் கூடிய கிறித்தவர்கள் அதே போல் இறை மகன் என்று பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ள மற்றவர்களை அவ்வாறு அழைப்பதில்லையே அது ஏன்?
இத்தனை தேவகுமாரர்களிருக்க இயேசுவை மட்டும் "இறைவனின் மகன்' எனக் கூறுவது பைபிளின் போதனைக்கே முரணானது என்று அவர்களுக்குத் தெரியவில்லையா?
எல்லா மக்களும் தேவ குமாரர்கள்:"நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தரின் பிள்ளைகள்!" - (உபாகமம் 14:1)
"தம்முடைய பரிசுத்த வாசஸ்தலத்தில் இருக்கிற தேவன் திக்கற்ற பிள்ளைகளுக்குத் தகப்பனும் விதவைகளுக்கு நியாயம் விசாரிக்கிறவராகவுமிருக்கிறார்.
திக்கற்ற பிள்ளைகளுக்கும் தேவன் தகப்பனாக இருக்கிறபடியால் "அகதிகள் முகாமில் இருக்கிற இறை மகன்களே! அநாதை விடுதிகளில் இருக்கின்ற இறை மகன்களே! எங்களுக்கு உதவுங்கள்'' என்று கிறித்தவர்கள் அழைப்பதில்லையே? அது ஏன்?
"இறை மகன்' எனும் அடைமொழி "கடவுளின் புத்திரர்கள்” எனும் கருத்தில் பைபிளில் பயன்படுத்தப்படவில்லை; "இறைவனின் அடியார்கள்' எனும் கருத்திலேயே பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை இதிலிருந்து அறியலாம்.
"இறை மகன்' என்பதைக் கிறித்தவர்கள் எந்தப் பொருளில் விளங்கி வைத்திருக்கிறார்களோ அந்தப் பொருளில் பைபிளில் பயன்படுத்தப்படவில்லை என்பதையும் இதிலிருந்து அறியலாம்.
இன்ஷா அல்லாஹ் தொடரும் ....
Post a Comment