கத்தோலிக்க பாதிரியார்கள் விரும்பினால் திருமணம் செய்துகொள்ள அனுமதிக்க வேண்டும் என்று இங்கிலாந்து பிஷப் கர்டினல் கெய்த் ஓ பிரையன் கோரிக்கை விடுத்துள்ளார்.
தேர்ந்தெடுக்கப்பட உள்ள புதிய போப்பிடம் இந்த கோரிக்கை என்று அவர் தெரிவித்துள்ளார்.
புதிய போப்பை தேர்ந்தெடுக்கும் கர்டினல் குழுவிலும் இடம் பெற்றுள்ள பிரையன், ஸ்காட்லாந்து நாட்டில் வாழும் ரோமன் கத்தோலிக்கர்களுக்குத் தலைமை பிஷப் ஆவார்.
"பாதிரியார்கள் திருமணம் தொடர்பாக இயேசு கிறிஸ்து எதுவும் சொல்லவில்லை. எனவே இவ்விவகாரத்தில் பாதிரியார்கள் பிரம்மச்சாரியத்தைக் கடைபிடிக்க வேண்டும் என்று கட்டுப்பாடு விதிக்கக் கூடாது" என்று கூறியுள்ள பிஷப் கெய்த் பிரையன், "சில பாதிரியார்களால் சீராக கடைபிடிக்க முடியவில்லை. எனவே, இல்லறத்தை நடத்த விருப்பப்படும் பாதிரியார்கள் திருமணம் செய்து கொள்ள அனுமதிக்க வேண்டும். கருக்கலைப்பு, கருணைக்கொலை ஆகியவற்றில் கத்தோலிக்க மதக்கொள்கை மாற்றப்பட வேண்டும்" என்றும் கோரியுள்ளார்.
Post a Comment