Featured Post Today
print this page
Latest Post
Showing posts with label நவீன பிரச்சினைகள். Show all posts
Showing posts with label நவீன பிரச்சினைகள். Show all posts

கருத்தரித்த தேதியை வைத்து பாலினத்தைக் கண்டு பிடிக்கலாமா?

ஒரு இணைய தளத்தில் பெண் கருத்தரித்த தேதியையும்பிறந்த தேதியையும் குறிப்பிட்டால் பிறக்கப் போதும் குழந்தை ஆனா பெண்ணா என கணித்துச் சொல்கிறார்களாம். இது கூடுமா?

 பதில்
ஒரு பெண் கருத்தரித்து குறிப்பிட்ட காலத்தை அடைந்த பிறகு அறிவியல் சாதன வசதிகளைப்பயன்படுத்தி பிறக்கும் குழந்தை ஆணாபெண்ணாஎன்பதைச் சொல்ல முடியும்.
நீ பிறந்த தேதியையும்உனக்கு கருத்தரித்த தேதியையும் சொல் உனக்குப் பிறக்கப் போகும் குழந்தை ஆணாபெண்ணாஎன்பதைச் சொல்கிறேன் என்று சொன்னால் இது வடிகட்டிய பொய்யாகும்.  ஏனெனில் மறைவானவற்றை இறைவனைத் தவிர வேறு யாராலும் அறிந்து கொள்ள முடியாது.
நாளை என்ன நடக்கும்என்று அறியக் கூடிய மறைவான ஞானம் இறைவனைத் தவிர வேறு யாருக்கும் கிடையாது. அவ்வாறு இருப்பதாக நம்புபவன் இறைவனுக்கு இணை கற்பிக்கக் கூடியவன் என்பது இஸ்லாத்தின் அடிப்படை.
அல்லாஹ் கூறுகிறான்:
"வானங்களிலும் பூமியிலும் மறைவானதை அல்லாஹ்வைத் தவிர யாரும் அறிய மாட்டார்கள். தாங்கள் எப்போது உயிர்ப்பிக்கப்படுவோம் என்பதையும் அவர்கள் அறிய மாட்டார்கள்'' என்று கூறுவீராக!
(அல்குர்ஆன் 27:65)
மறைவானவற்றின் திறவுகோல்கள் அவனிடமே உள்ளன. அவனைத் தவிர யாரும் அதை அறிய மாட்டார்.
(அல்குர்ஆன் 6:59)
எனவே பிறக்கப் போகும் குழந்தை ஆணாபெண்ணாஎன்பதை அறிவியல் சாதனங்களைப்பயன்படுத்தாமல் எவராலும் அறிந்து கொள்ளவோசொல்லவோ முடியாது.
அவ்வாறு ஒருவன் சொல்வான் என்று நம்புவது இணைவைப்பாகும்.
தாங்கள் குறிப்பிட்ட இணையதளத்தில் அறிவியல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பிறக்கும் குழந்தையைப் பற்றி சொல்வது கிடையாது. மாறாக ஜோசியம் சொல்வதைப் போன்று குறிப்பிடுகிறார்கள். இதை ஒரு போதும் முஸ்லிம்கள் நம்பக்கூடாது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் குறிகாரனிடம் அல்லது வருங்காலத்தை கணித்துச் சொல்பவனிடம் சென்று அவன் கூறுவதை உண்மை எனக் கருதினால் அவன் நபியாகிய என்மீது அருளப்பட்டதை (வேதத்தை) நிராகரித்து விட்டான்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: அஹ்மத் 9171
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் ஜோதிடனிடம் வந்து எதைப் பற்றியாவது கேட்டால் அவனுடைய நாற்பது நாட்கள் தொழுகை ஏற்றுக் கொள்ளப்படாது.
அறிவிப்பாளர்: ஸஃபிய்யா
நூல்: முஸ்லிம் 4137
மேலும் ஒரு பெண் எப்போது கருத்தரித்தாள் என்பதை எப்படி அவளால் அறிந்து கொள்ள இயலும்? ஒரு மாதத்தில் ஒரே தடவை மட்டும் உடலுறவு வைத்திருந்தால் மட்டுமே இதை அறிந்து கொள்ள முடியும். ஒன்றுக்கு மேற்பட்ட நாட்கள் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் உடலுறவு கொண்ட பெண்ணால் கரு எந்த நாளில் உண்டானது என்பதை உறுதியாகச் சொல்ல முடியாது. கருவுற்ற நாளைச் சொன்னால் கண்டு பிடித்து தருவோம் என்று சொல்வது முட்டாள்தனமானது என்பதை இதிலிருந்தும் அறிந்து கொள்ளலாம்.
இவர்கள் சொன்னபடி இல்லாமல் மாறிவிட்டால் நீங்கள் கருத்தரித்த நாளை தவறாக சொல்லி இருப்பீர்கள் அதனால் மாறிவிட்ட்து என்று தப்பித்துக் கொள்வதற்காக இப்படி கேட்கிறார்கள் போலும்.
நன்றி - onlinepj 

0 comments

ஒட்டுப்பல் வைக்கலாமா

ஓட்டு முடி வைத்தவர்களை நபியவர்கள் சபித்துள்ளார்களேஎனவே ஓட்டுப்பல் வைக்கலாமா?

உடல் உறுப்புக்களில் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் செயற்கையாக உறுப்புக்களைப்பொருத்துவதற்கு மார்க்கத்தில் அனுமதியுள்ளது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு நபித்தோழருக்கு தங்கத்தால் ஆன செயற்கையான மூக்கை வைத்துக் கொள்ள அனுமதி கொடுத்துள்ளார்கள்.
5070أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ مَعْمَرٍ قَالَ حَدَّثَنَا حَبَّانُ قَالَ حَدَّثَنَا سَلْمُ بْنُ زُرَيْرٍ قَالَ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ طَرَفَةَ عَنْ جَدِّهِ عَرْفَجَةَ بْنِ أَسْعَدَ أَنَّهُ أُصِيبَ أَنْفُهُ يَوْمَ الْكُلَابِ فِي الْجَاهِلِيَّةِ فَاتَّخَذَ أَنْفًا مِنْ وَرِقٍ فَأَنْتَنَ عَلَيْهِ فَأَمَرَهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَتَّخِذَ أَنْفًا مِنْ ذَهَبٍ رواه النسائي
அர்ஃஜா பின் அஸ்அத் (ரலி) கூறுகிறார்கள் :
அறியாமைக் காலத்தில் குலாப் என்ற நாளில் நடந்த சண்டையின் போது எனது மூக்கில் பாதிப்பு ஏற்பட்டது. எனவே நான் வெள்ளியால் ஒரு (செயற்கை) மூக்கை பயன்படுத்தி வந்தேன். அதில் துர்வாடை கிளம்பியதால் தங்கத்தால் ஆன மூக்கை பயன்படுத்திக் கொள்ளுமாறு நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் எனக்கு உத்தரவிட்டார்கள்.
நூல் : நஸாயீ (5070)
இதனடிப்படையில் பல் விழுந்துவிட்டால் செயற்கைப் பல் பொருத்துவது அனுமதிக்கப்பட்டதாகும்.
பொதுவாக தங்கம் ஆண்களுக்கு தடைசெய்யப்பட்டதாக இருந்தாலும் மருத்துவ நன்மைக்காக அதைப் பயன்படுத்துவதற்கு மார்க்கம் அனுமதி கொடுத்துள்ளது. அழுக்கு சேறும் இடங்களில் வெள்ளியைப் பயன்படுத்தினால் அது நாற்றத்தைக் கிளப்பும். எனவே வெள்ளிக்கு பதிலாக தங்க மூக்கு தங்கப் பல் ஆகியவற்றை பயன்படுத்தில் துர்வாடை ஏற்படாது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெண்கள் ஒட்டுமுடி வைப்பதை தடைசெய்துள்ளார்கள். இந்தத் தடைக்கும் ஒட்டுப் பல் வைப்பதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.
பல்லுக்கும் தலைமுடிக்கும் வேறுபாடு உள்ளதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். தலை முடி குறைவாக இருந்தால் அழகு குறைந்து விட்டதாக ஒரு எண்ணம் ஏற்படுவதைத் தவிர இதனால் எந்த பாதிப்பும் ஏற்படாது. ஆனால் பல் உணவுகளை மெல்லுவதற்கும் தெளிவாகப் பேசுவதற்கும் பயன்படுகிறது. பல் இழந்தவர் ஒட்டுப் பல் வைக்காமல் இருந்தால் உணவுகளை மெல்லுதல் அல்லது தெளிவாக உச்சரித்தல் ஆகிய இரண்டு பாதிப்புகளோ அல்லது இரண்டில் ஒன்றோ ஏற்படும். எனவே ஒட்டுப்பல் வைப்பதை முடியுடன் ஒப்பிட்டு முடிவு எடுக்க முடியாது.
0 comments

ரிசானா விவகாரம் : கலைஞர் வைத்த வாதம் சரியா?

இலங்கை பெண்மணி ரிசானாவிற்கு சவூதி அரசு மரணதண்டனை அளித்த விவகாரத்தை கையில் எடுத்துக் கொண்டு இஸ்லாத்தை விமர்சிக்க இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி இஸ்லாமிய விரோதிகள் இஸ்லாத்தின் மீது புழுதி வாரி வீசும் இந்நேரத்தில் தி.மு.க. தலைவர் கலைஞர் இது குறித்து அறிக்கை ஒன்றை கடந்த 21.03.13 அன்று வெளியிட்டுள்ளார்.


மரணதண்டனைக்கு முடிவு கட்ட உலக நாடுகள் ஒன்று சேர வேண்டும் என்ற தலைப்பில் அவரது அறிக்கை பத்திரிக்கைகளில் வெளியிடப்பட்டுள்ளது.

தன்னை இலக்கியவாதி, முற்போக்குவாதி என்று சொல்லிக் கொள்ளும் மனுஷ்ய புத்திரன் என்பவர் நக்கீரன் இதழில் பொய்யின் மறுவடிவமாகவும், புளுகு மூட்டையின் மொத்த உருவமாகவும் எழுதிய கட்டுரையை மேற்கோள்காட்டி, அதையே தனது வாதத்திற்கு ஆதாரமாகக் காட்டி கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கையைக் கண்டு நமக்கு ஆச்சர்யம்தான்.

மனுஷ்ய புத்திரன் என்பவர் தனது கட்டுரையில் எழுதிய செய்திகளை அப்படியே நம்பி அதையே தனது கட்டுரையிலும் எழுதி பொய்(யரு)க்கு உரம் சேர்த்துள்ள கலைஞரிடத்தில் சில கேள்விகள்:

ஒருவர் ஒரு செய்தியை சொல்கின்றார் என்றால் அதுகுறித்த செய்திகளை ஆய்வு செய்யாமலும், அதற்குரிய ஆதாரங்களைக் கேட்காமலும் அதை அப்படியே நம்பிவிடுவீர்களா?
அதற்கு ஆதாரம் எதையும் கேட்க மாட்டீர்களா? அதை ஆய்வு செய்ய மாட்டீர்களா?
உங்களைப் பற்றியும் உங்களது குடும்பத்தார் பற்றியும் ஜெயலலிதா விடக்கூடிய அறிக்கைகள் அனைத்தையும் அப்படியே நம்பி ஏற்று அதை ஆராயாமல், அதற்குரிய சான்றுகளைக் கேட்காமல் அதை உண்மை என்று சொல்லி மற்றவர்கள் உங்களைப் பற்றி ஜெயலலிதா விட்ட அறிக்கையை அப்படியே வெளியிட்டால் அதை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா?

மேற்கண்ட கேள்விகளுக்கு கலைஞர் அவர்கள் நமக்கு பதில் சொல்ல கடமைப்பட்டுள்ளார்.

மனுஷ்ய புத்திரனது அனைத்து ஆதாரங்களும் பொய்கள்; புளுகு மூட்டைகள்; அவதூறுகள்; அநியாயங்கள் என்று அடுக்கடுக்கான சான்றுகளுடன் நாம் நிரூபித்துள்ளோம். அந்த சான்றுகளை கலைஞருக்கும் அனுப்பி வைத்துள்ளோம்.

ரிசானாவிற்கு அநியாயமாக மரணதண்டனை வழங்கப்பட்டுள்ளது என்பதுதான் கலைஞரின் வாதம். அந்த வாதத்திற்கு தனிக்கட்டுரையில் விரிவாக பதில் அளிக்கப்பட்டுள்ளது.

மனுஷ்ய புத்திரன் சொன்ன பொய்களைத் தவிர்த்துவிட்டுப்பார்த்தால் கலைஞர் தனது அறிக்கையில் கூடுதலாக ஒரேயொரு வாதத்தைத்தான் முன் வைத்துள்ளார்.

வண்ணாரப்பேட்டை சம்பவம் :

சென்னை வண்ணாரப்பேட்டையில் 3மாத குழந்தைக்கு அதன் தாய் பாலூட்டிய போது, அந்தக் குழந்தைக்கு பால் புரையேறி மூச்சுத்திணறி அது இறந்து விட்டது. இந்த சம்பவம் கலைஞரின் அறிக்கை வெளியாவதற்கு முந்தைய நாள் செய்தித்தாள்களில் வந்திருந்தது. அதைச் சுட்டிக்காட்டி இதுபோல ரிசானா பால் கொடுக்கும் போதும் பால் புரையேறி மூச்சுத்திணறி 4மாத குழந்தை இறந்திருக்கலாம் அல்லவா என்பதுதான் கலைஞரின் வாதம்.

இது எவ்வளவு பெரிய அபத்தமான வாதம்?. ஒரு குற்றச் செயல் சம்பந்தமாக பேசும்போது மற்றொரு விபத்தை அத்துடன் ஒப்பிட்டு பேசினால் அறிவுடையோர் அதை ஏற்றுக் கொள்வார்களா?

அந்த குற்றத்தை சம்பந்தப்பட்டவர் செய்தாரா? இல்லையா?
அதற்குரிய ஆதாரங்கள் என்ன?
அந்த ஆதாரங்கள் உண்மையானவையா?
இதைத்தானே அறிவுடையோர் ஆராய்வார்கள்.
இந்த அடிப்படை விஷயம் கலைஞருக்கு தெரியாததா?

ஒருவரை மாடியில் இருந்து கீழே தள்ளி ஒருவன் கொடூரமான முறையில் கொலை செய்கின்றான் என்று வைத்துக் கொள்வோம். அந்த கொலைகாரன் மீது சுமத்தப்பட்ட கொலைக் குற்றத்திற்கு ஆதாரங்கள் மற்றும் சாட்சியங்களின் அடிப்படையில் தீர்ப்பளிப்பதுதான் அறிவுடையோர் செயல். அதைவிட்டுவிட்டு இந்த கொலைச் சம்பவம் உண்மையா இல்லையா என்பதை அன்றைய தினம் செய்தித்தாளில் வந்த செய்தியை வைத்து எந்த அறிவாளியும் முடிவு செய்யமாட்டார்.

இன்று நான் செய்தித்தாள் படித்தேன். அதில் இருவர் மொட்டை மாடியில் நின்று பேசிக்கொண்டிருந்த போது, ஒருவர் கால் தவறி கீழே விழுந்து செத்துவிட்டார் என்ற செய்தி அதில் இருந்தது. அதுபோல கொலை செய்யப்பட்டதாகச் சொல்லப்படுபவரும் கால் தவறி கீழே விழுந்து இறந்திருக்கலாம் அல்லவா? என்று யாராவது கேட்டால் அது எப்படி அறியாமையாக இருக்குமோ அதுபோலத்தான் கலைஞரின் வாதமும் அமைந்துள்ளது.

இது குறித்து கலைஞருக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலத் தலைவர் பீஜே அவர்கள் கடிதம் எழுதியுள்ளார். அதில், மரணதண்டனை கூடாது என்பது உங்களது கொள்கையாக இருக்குமானால், நீங்கள் கூறிய கருத்துக்கள் உண்மைதான் என்று சொல்வீர்களேயானால், மனுஷ்ய புத்திரன் கூறிய பொய்களில் உங்களுக்கு உடன்பாடு இருக்குமேயானால் அதை தக்க ஆதாரங்களுடன் மறுக்கும் எங்களிடத்தில் நீங்கள் விவாதிக்க முன்வரவேண்டும் என்று கலைஞருக்கு விவாத அழைப்பு விடப்பட்டுள்ளது. 

கடிதத்தை காண 
Click Here
21.01.2013.
நன்றி - ONLINEPJ 
0 comments

பாலியல் குற்றத்திற்கு ஆண்மை நீக்கம்

பாலியல் பலாத்காரத்திற்கு ஆண்மை நீக்கம் செய்ய வேண்டும் என்ற சட்டம் இயற்றுவது சரியா?


மசூது, கடையநல்லூர்

பாலியல் வன்முறையில் ஈடுபடுவோருக்கு ஆண்மை நீக்கம் செய்ய வேண்டும் என்று சட்டம் இயற்றினால், அது மட்டுமே பாலியல் வன்முறையைக் குறைக்க உதவாது.

 கடும் தண்டனைகள் இருந்தாலும், மனிதனுக்கு காம வெறியை ஏற்படுத்தி அறிவுக் கண்ணை மறைக்கும் அனைத்து வாசல்களும் அடைக்கப்பட்டால் மட்டுமே இந்த சட்டங்கள் பயன் தரும்.

 1.ஆபாசமான சினிமாக்கள், ஆபாசமான நாடகங்கள், சுவரொட்டிகள் போன்ற அனைத்தும் ஒரு சமுதாயத்தில் பரவலாக இருந்தால் நல்ல மனிதன் கூட தடுமாறி மிருகமாக மாறிவிடுவான். பெண்களைப் போகப் பொருளாகக் காட்டும் அனைத்து வாசல்களும் அடைக்கப்படாமல் குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்கம் செய்வதால், குற்றங்கள் குறையாது.

 2.பெண்கள் அணியும் மானம் கெட்ட ஆடைகள் ஆண்களை பாலுணர்வுக்கு அழைப்பு விடுக்கும்போது, ஆண்கள் இதனால் பாதிக்கப்பட்டு பாலியல் வன்முறையில் இறங்குகிறார்கள். இதற்கும் தேவையான சட்டங்கள் இயற்றப்பட வேண்டும்.

 3.பெரும்பாலான பாலியல் வன்முறைகள் போதை மயக்கத்தில்தான் நடக்கின்றன. மது மற்றும் எல்லா போதைப் பொருட்களும் முழுமையாக தடை செய்யப்படவேண்டும். பாலியல் வன்முறைக்கு ஆண்களைத் தூண்டும் எல்லா வாசல்களையும் திறந்து போட்டுவிட்டு, பாலியல் வன்முறைக்கு அரசே காரணமாக இருந்துவிட்டு ஆண்மை நீக்கம் செய்வது ஏற்க முடியாதது.

 மேலும் தண்டனை எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்துவதற்கு முன் அதன் பயன் கிடைக்க இன்னும் சில ஏற்பாடுகள் அவசியமாகும்.

 ஒரு குற்றம் நடந்தால், அதை விசாரித்து குற்றவாளிக்கு தண்டனை அளிக்க அதிகபட்சம் இரண்டு மாதங்களே போதுமானது. குற்றம் நடந்த சில நாட்களுக்குள் தீர்ப்பு அளிக்கப்படாவிட்டால், குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் பெருமளவில் குறைந்துவிடும்.

 குற்றம் நடக்கும்போது அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அதை நேரில் கண்ட சாட்சிகளுக்கும் இயல்பாகவே கோபம் ஏற்படும். இந்தக் கோபம் அவர்களை சாட்சி சொல்லத் தூண்டும். அவர்கள் சரியாக சாட்சி சொன்னால்தான் குற்றவாளி தண்டிக்கப்படுவான்.

 நமது நாட்டில் பத்து முதல் ஐம்பது ஆண்டுகள் கூட ஒரு வழக்குக்கு தேவைப்படுகிறது.

 குற்றம் நடந்து இரண்டு வருடம் கழித்து விசாரணையை ஆரம்பித்தால் சாட்சிகளே பல விஷயங்களை மறந்துவிடுவார்கள். தீமைக்கு எதிரான அவர்களின் கோபமும் போய்விடும். இன்னும் எத்தனை வருடம் நம்மை இழுத்தடிப்பார்களோ என்ற எண்ணம் ஏற்பட்டால் நான் அந்தக்குற்றச் செயல் நடக்கும்போது பார்க்கவில்லை என்று சாட்சிகள் கூறும் நிலை ஏற்படும். இதனால் குற்றவாளி தப்பித்துக் கொள்வான்.

  வழக்கு தொடுத்த காவல்துறை அதிகாரிகள் பத்து ஆண்டுகளுக்குள் பல ஊர்களுக்கும் மாற்றப்படுவார்கள். இப்படி அடுத்தடுத்து வேறு வேறு அதிகாரிகள் மூலம் அந்த வழக்கு ஃபாலோ பண்ணப்படும். அரசு வழக்கறிஞர்களும் மாறிக் கொண்டே இருப்பார்கள். இதனால் இந்த வழக்கு பற்றிய முழு விபரம் இல்லாமல்தான் அரசாங்கத்தின் சார்பில் வழக்கு நடத்தப்படும். இதன் காரணமாகவும் குற்றம் சாட்டப்பட்டவன் தப்பித்துக் கொள்வான்.

 பத்து அல்லது இருபது ஆண்டுகளில் அந்த வழக்கு குறைந்தது ஐந்து நீதிபதிகளுக்கு மாறிவிடும். இதனால் நீதிபதிகளுக்கே வழக்கின் தன்மை முழுமையாக பிடிபடாது. குற்றவாளி தப்பிக்க இதுவும் காரணமாகிவிடுகிறது.

 சுப்ரீம் கோர்ட்வரை மேலும் பல ஆண்டுகள் இழுத்தடிக்கப்படும்போது குற்றவாளியே செத்துப் போய்விடுவான். அல்லது பாதிக்கப்பட்டவன் செத்துவிடுவான்.

 சுப்ரீம் கோர்ட் தண்டனையை உறுதி செய்து விட்டாலும், நாட்டு மக்களையும் சட்டத்தையும் காலில் போட்டு மிதிக்கும் வகையில் ஜனாதிபதி மன்னித்துவிடுவார்.

 இத்தகைய கோளாறுகள் உள்ள நாட்டில் எவ்வளவு கடுமையான தண்டனைகள் வந்தாலும் அந்தத் தண்டனைகள் குற்றவாளிக்குக் கிடைக்கப்போவதில்லை.

 நீதி மன்றங்களை அதிகரித்தல், நீதிபதிகளை அதிகரித்தல் மற்றும் அர்த்தமற்ற வாய்தாக்களை ஒழித்தல் ஆகிவற்றின் மூலம் தாமதமற்ற நீதி கிடைக்கும். குற்றவாளிகள் தண்டிக்கப்படும் சதவிகிதம் பன்மடங்கு அதிகரிக்கும்.

 இவற்றையெல்லாம் செய்துவிட்டு குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்கம் செய்ய வேண்டும் என்று சட்டம் இயற்றினால் அதை வரவேற்கலாம்.
12.01.2013. 03:48
நன்றி - onlinepj.com 
0 comments

பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோர்களுக்கு குண்டர் சட்டம்

பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோர்களுக்கு குண்டர் சட்டம் பயன்படுத்தப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பு ஏற்கத் தக்கதா?

- பர்வீன், துபை

எந்தத் தண்டனை வழங்குவதாக இருந்தாலும், சட்டப்படியும் நீதித்துறை வழியாகவும்தான் வழங்க வேண்டும். அரசாங்கம் இதை கையில் எடுத்துக் கொள்ளக்கூடாது. பாலியல் குற்றத்தில் ஒருவர்மீது போலீஸ் வழக்கு பதிவு செய்தால், அது சரியானதாக இல்லையா என்பதை நீதி மன்றத்தில் விசாரித்து தீர்ப்பளித்த பின்னரே அவர் குற்றவாளியாகக் கருதப்படுவார்.

 அவ்வாறு இல்லாமல் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு முன்னால், தீர்ப்பும் வழங்கப்படுவதற்கும் முன்னால் குண்டாசில் கைது செய்து தண்டனை அளிப்பதற்கு அரசாங்கத்திற்கு தார்மீக உரிமை கிடையாது.

 பெண்ணை பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆளும் கட்சிக்கு எதிரானவர்கள் மீதும் காவல்துறை அதிகாரிக்கு எதிரானவர்கள் மீதும் பொய் வழக்கு போடலாம். விலைமாதர்களை அதற்காக பயன்படுத்திக் கொள்ளலாம். பொய் வழக்கு மூலம் ஒருவரை ஒரு ஆண்டு உள்ளே வைப்பதற்குத்தான் குண்டர் சட்டம் பயன்படும்.

 மேலும் சில பெண்கள் ஆண்களுடன் தவறான உறவு கொண்டு மாட்டிக் கொள்ளும்போது ஆண் தன்னை பலாத்காரம் செய்துவிட்டான் என்று புகார் கொடுக்கலாம். இதன் காரணமாக அவனை ஒரு வருடம் உள்ளே தள்ளிவிடலாம். இதற்குத்தான் குண்டாஸ் பயன்படும்.

 அல்லது ஆணுடன் பழகி அவனிடம் பணம் பறித்துவந்த பெண் அந்த ஆண் அவளைவிட்டு விலகும்போது,அவனுக்கு எதிராக பாலியல் புகார் கொடுத்து குண்டாஸில் உள்ளே தள்ள முடியும்.

 ஏற்கனவே திருமணமான ஒருவனை அவன் திருமணமானவன் என்பதைத் தெரிந்துகொண்டே, தவறான உறவுகொண்டுவிட்டு அவனை மிரட்டி திருமணம் செய்ய வற்புறுத்தவும், குண்டர் சட்டத்தைப் பயன்படுத்த முடியும்.

 காதலிக்க மறுக்கும் ஆண்களுக்கு எதிராகப் புகார் கொடுத்து ஒருவருடம் அவனை சிறையில் அடைக்கவும்முடியும்.

 பணிபுரியும் இடங்களில் மேலதிகாரிகள் கண்டிக்கும் போதும் பெண்கள் இந்தச் சட்டத்தைப் பயன்படுத்தி அதிகாரிகளை பழிவாங்க முடியும்.

எனவே புகார் உண்மையா பொய்யா என்பதை தீர விசாரித்து, நீதிபதிகள் தீர்ப்பளிக்கும் முனனதாகவேஅரசாங்கம் தீர்ப்பு எழுதுவதை நாம் ஏற்க முடியாது.

இது பாலியல் குற்றத்தை குறைப்பதற்கு பதிலாக, ஆண்கள் மீது பழி சுமத்தவும் அவனது வாழ்க்கையைப்பாழாக்கவும்தான் உதவும். இதனால் அரசாங்கம் எதிர் பார்க்கும் நன்மை நிச்சயம் கிடைக்காது.
12.01.2013. 
நன்றி - onlinepj.com 
0 comments

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger