Featured Post Today
print this page
Latest Post
Showing posts with label முக்கிய செய்திகள். Show all posts
Showing posts with label முக்கிய செய்திகள். Show all posts

அனைத்து ஊர்களுக்கான சஹர் மற்றும் இஃப்தார் நேரத்தை எப்படி அறிந்து கொள்வது ?

தங்களது ஊர்களுக்குரிய சஹர் மற்றும் இஃப்தார் நேரத்தை அறிந்து கொள்ள விரும்புபவர்கள் பின் வரும் இணையதளத்தின் மூலம் அதற்குரிய நேரத்தை தெரிந்து கொள்ளலாம்.
sc1
இணையதளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யவும்

மேற்கண்ட இணையதளத்தில் எப்படி அவரவர் தங்களது ஊர்களுக்குரிய அட்டவனையை பெறுவது என்பதை பார்ப்போம்.
Prayer times by city என்ற பகுதியில் தங்கள் ஊரின் ஆங்கில பெயரின் ஆரம்ப 3 அல்லது 4 எழுத்துக்களை கொடுத்து அதற்கு கீழ் உள்ள பெட்டியில் இந்தியாவை தேர்வு செய்து கொள்ளுங்கள். (இந்தியாவில் உள்ளவர்கள்)
முழு பெயரையும் ஆங்கிலத்தில் எழுதினால் நமக்கு தேவையான ஊர் கிடைப்பதில் சில நேரங்களி்ல் சிக்கல் ஏற்படும். காரணம், தமிழ் வார்த்தைகளை ஆங்கிலத்தில் எழுதும் போது ஒவ்வொருவரும் ஒவ்வொரு spelling ஐ பயன்படுத்துவார்கள்.சில நேரங்களில் நமக்கு அவர்கள் எப்படி எழுதியுள்ளார்கள் என்பது தெரியாது.
இது போன்று நேரத்தில் ஆரம்பத்தில் இடம் பெறும் 3 அல்லது 4 வார்த்தைகளை கொடுத்தால் எளிதில் நமக்கு தேவையான ஊர்களை தேர்வு செய்து கொள்ளலாம்.
சென்னை போன்ற மிகவும் பிரபல்யமான ஊர்களுக்கு முழு பெயரைம் கொடுக்கலாம்
உதாரணமாக தென்காசிக்கு எடுக்க வேண்டும் எனில்:
tenkasi

மேற்கண்டவாறு ten , India என கொடுத்து find கொடுத்தால் ten என ஆரம்பிக்கும் அனைத்து ஊர்களையும் காண்பிக்கும் .அதில் நமக்கு தேவையான தென்காசியை தேர்வு செய்து கொள்ளலாம்

tenkasi2

தென்காசியை தேர்வு செய்தவுடன் பின் வரும் பக்கம் இடம் பெறும்.

tenkasi3

இதில் நமக்கு தேவையான வருடம் அல்லது மாதத்தை தேர்வு செய்து கொண்டு அதற்கு பிறகு வரும் அட்டவனையை காபி பேஸ்ட் செய்து கொள்ளலாம்.
அட்டவனையில் இடம் பெறும் சுப்ஹு நேரத்தை , சஹர் நேரமாகவும்  , மக்ரிப் நேரத்தை , இஃப்தார் நேரகமாகவும் கணக்கிட்டு கொள்ள வேண்டும்.
இதே வழி முறைகளை பயன்படுத்தி அனைத்து ஊர்களுக்கான தொழுகை நேரங்களையும் எடுத்துக் கொள்ளலாம்.
சில நேரங்களில் ஒரே பெயரில் பல ஊர்கள் இடம் பெறும். அது போன்ற நேரத்தில் map city என்ற வசதியை பயன்படுத்தி நமது ஊரை எளிதில் தேர்வு செய்யலாம்.
உதாரணமாக சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் என்ற ஊருக்கு அட்டவனை தேவை எனில் tir என கொடுத்தால்
same-name

மேற்கண்ட படத்தில் இரண்டு திருப்பத்தூர் இடம் பெற்றிருப்பதை நீங்கள் காணலாம். இதில் நமது ஊர் எது என்பதை அறிய map city ஐ தேர்வு செய்து மேப்பில் இடம்  பெற்றிருக்கும் அருகில் உள்ள ஊர்களை வைத்து எது நமது ஊர் என்பதை உறுதி செய்து கொள்ளலாம்.
சிறிய ஊர்களின் பெயர் சில நேரங்களில் இந்த இணையதளத்தில் இடம் பெற்றிருக்காது. அது போன்ற நேரங்களில் அருகில் உள்ள பெரிய ஊர்களின் பெயரைகளை கொடுத்து அட்டவனையை எடுத்துக் கொள்ளலாம்.
இந்த இணையதளத்தை பயன்படுத்தி சென்ற ஆண்டுகளுக்குரிய மற்றும் வரப்போகும் ஆண்டுகளுக்குரிய தொழுகை , சஹர் மற்றும்  இஃப்தார் நேரங்களையும் அறிந்து கொள்ளலாம்.
குறிப்பு: இந்த இணையதளத்தை நேரங்களை அறிந்து கொள்வதற்காக மட்டுமே குறிப்பிட்டுள்ளோம் இதில் இடம் பெற்றுள்ள மற்ற செய்திகளுக்கும் நமக்கு எந்த சம்பந்தமும் இல்லை.
நன்றி - TNTJ.NET
0 comments

நாட்டை கட்டியமைக்கும் சிற்பிகள் யார்?


கார்பரேட் முதலாளி பாபா ராம்தேவ் நடத்தும் பதஞ்சலி யோகபீடத்தில் நிகழ்ச்சியை ஒன்றை தொடங்கி வைத்துப் பேசினார் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி. 
மோடியின் அருள் வாக்கு 1: 6 கோடி குஜராத்தியர்கள் குஜராத் மாநிலத்தை நம் நாட்டில் ஒரு வெற்றிகரமான மாநிலமாக மாற்றியதைப் பார்த்து விட்டேன். 
பதில் 1: குஜராத் மக்கள் குடிக்க கூட தண்ணீர் இல்லாமல் படும் அவஸ்தையும், தினமும் நிகழும்விவசாயிகளின் தற்கொலையும், சிறுபான்மை மக்களுக்கு எதிரான ஒடுக்கு முறையும் இவைகள்தான் இந்த கொடுங்கோல் ஆட்சியாளரின் சாதனைகள். இவர் செய்தஅவலங்களை மக்கள் தலையில் போடுவதை பாருங்கள்.
மோடியின் அருள் வாக்கு 2: அதனால் 125 கோடி இந்தியர்களும் தங்கள் நாட்டை உலகில் ஒரு வெற்றிகரமான நாடாக மாற்றுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
பதில் 2: இவர் குஜராத்தில் செய்த அவலங்கள் போதாது என்று மொத்த இந்தியாவையும் சுடுகாடாக்க திட்டமிடுகிறார் போலும். குஜராத்தில் சிறுபான்மை முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ மக்களுக்கு எதிராக மத வெறியும், தலித் மற்றும் ஒடுக்கபட்ட மக்களுக்கு எதிராக ஜாதிய வெறியும் உரமிட்டு வளர்க்கப்படுகிறது. மீண்டும் நாடு வர்ணாசிரம கொள்கையை நோக்கி நகர்த்தப்படுகிறது.
மோடியின் அருள் வாக்கு 3: இந்த நாட்டைக் கட்டமைத்துப் பாதுகாப்பதில் சந்நியாசிகள், சாதுக்களின் பங்கு மிக அதிகம். நாம் குறைந்தது அவர்களைச் சந்தித்து, அவர்களின் பணியை அங்கீகரிக்க வேண்டும்.
பதில் 2: இவர்கள் நாட்டை கட்டியமைப்பதற்கு இவர்கள் என்ன செய்தார்கள் என்று மோடி ஒரு வெள்ளை அறிக்கை சமர்பிப்பாரா?விஞ்சானிகளையும், பொருளாதார மேதைகளையும் வீட்டுக்கு அனுப்பி விட்டு நாட்டை கட்டியமைக்கும் பணிக்கு இவர்களை நியமிக்கலாம்.
மோடியின் அருள் வாக்கு 3: பாபா ராம்தேவுக்கு அரசியல் ரீதியான கருத்தோட்டம் இருக்கும் என்று கூறப்படுவதை நான் நம்பவில்லை. அவர் மக்களுக்கான ஆரோக்கியத்துக்கு வழிகாட்டுகிறார். அவருடைய இந்தப் பயணத்தில் நிச்சயமாக நாட்டின் ஆரோக்கியமும் அடங்கியிருக்கிறது. 
பதில் 2: இதைமாதிரி பெரிய ஜோக் எதுவும் இருக்க முடியாது. பாபா ராம்தேவ் மக்களின் ஆரோக்கியத்திற்கு வழி காட்டுகிறாராம். அப்படி என்றால் அதை இலவசமாவல்லவா காட்ட வேண்டும். வெறும் சைக்களில் வலம் வந்த இந்த சாமியார் இன்று வெளிநாட்டு காரிலும், சொந்த ஹெலி ஹாப்டர் விமானத்திலும் வலம் வருவதின் மர்மம் என்ன? வெளிநாட்டில் சொந்தமாக ஒருதீவும், உல்லாசா பங்களாவும் இருப்பதேன்? இதுதான் சந்நியாசத்திற்கு அளவுகோலா? 
முன்னர் காடுகளில் சிந்த்தர்கள் வாழ்ந்தார்கள். அவர்கள் உண்மையிலேயே மக்களுக்கு தொண்டு புரிந்தார்கள். மருத்துவத்தை இலவசமா செய்தார்கள். பாபா ராம்தேவ், பிரமானந்தா, நித்தியானந்தா, ஸ்ரீ ரவிசங்கர், இவர்கள் எல்லாம் கார்பரேட் கொள்ளையர்களே அன்றி மக்களுக்கு சேவை புரியும் மகான்கள் இல்லை. 
 *ஒரு நாட்டை கட்டியமைக்கும் சிற்பிகள் உழைக்கும் வர்க்கமே*

நன்றி - சிந்திக்கவும் 
0 comments

டெல்லியை அச்சுறுத்தும் காமகொடூரர்கள்!


இந்திய தலைநகரான டெல்லி காமகொடூரர்களின் புகலிடமாக மாறிப்போனது. பொதுமக்கள் இவர்களுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை நடத்தியும்  இந்த காமகொடூரர்களை அடக்க அரசு இயந்திரங்கள் தவறிவிட்டன.
டெல்லியில் பெண்களுக்கு எதிராக பலாத்காரம் நாளொன்றுக்கு சராசரி 3 என்கிற விகிதத்தில் நடக்கிறது. 2013 ஜனவரி to மார்ச் 31 வரை மட்டும் 393 பாலியல்  பலாத்காரங்கள் காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சம்பவங்கள்: 1) இம்மாதம் 14-ம் தேதி மேற்கு டெல்லி சுல்தான்புரியில் பேருந்துக்குள் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது தொடர்பாக ராஜேஷ் கபல் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
2) 17-ம் தேதி கிழக்கு டெல்லியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவியை மூன்று பேர் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தனர். இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
3) ஏப்ரல் 17-ம் தேதி கிழக்கு டெல்லி ஜகத்புரி பகுதியில் 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக பள்ளி ஆசிரியர் பிரமோத் (32) கைது செய்யப்பட்டார்.
4) 18-ம் தேதி மேற்கு டெல்லி நஜஃப்கர் பகுதியில் இரண்டரை வயது பெண் குழந்தையை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக 25 வயது இளைஞர் கைது செய்யப்பட்டார்.
5) டெல்லி காந்தி நகர் ஏரியாவில் 4 நாட்களுக்கு முன்பு 5 வயது சிறுமி காணாமல் போனாள். இது தொடர்பாக அவளது பெற்றோர் போலீசில் புகார் கொடுத்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் சிறுமியின் வீட்டை ஒட்டிய மற்றொரு வீட்டின் அறையில் இருந்து அழுகுரல் கேட்டது. 
பூட்டியிருந்த அந்த வீட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது ரத்த வெள்ளத்தில் சிறுமி கிடந்தாள். உடனடியாக அவளை எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்த்தனர். அவளது மர்ம உறுப்பில் காயம் பலமாக இருந்தது. மருத்துவ பரிசோதனையில் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது.
மக்கள் போராட்டம்: இச்சம்பவங்களை கண்டித்து, டெல்லியின் முக்கிய இடங்களில் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.  டெல்லி போலீஸ் தலைமையகத்தையும், சோனியா காந்தி வீட்டையும், மத்திய உள்துறை அமைச்சர் ஷிண்டேவின் வீட்டையும் அவர்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.  
மக்கள் போராட்டத்தை ஒடுக்கும் மதி கெட்டவர்கள்: போராட்டத்தின் எதிரொலியாக இந்தியா கேட் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பொதுமக்கள் நடமாட்டத்துக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 
இந்தியா கேட்டை இணைக்கும் முக்கிய சாலை சந்திப்புகளில், மற்றும் பல்வேறு இடங்களிலும் போலீஸாரும் துணை ராணுவப் படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர். எய்ம்ஸ் மருத்துவமனை முன்பும் நூற்றுக்கணக்கான சமூக ஆர்வலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
காமகொடூரன் கைது: 15-ம் தேதி 5 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக மனோஜ்குமார் (22) என்பவனை வெள்ளிக்கிழமை அவனது செல்போன் நம்பரை வைத்து அவன் பீகாரில் ஒளிந்திருப்பதை போலீசார் கண்டுபிடித்து கைது செய்தனர். 
என்ன தண்டனை கொடுக்க போகிறார்கள்: டெல்லியில், கடந்தவருடம் 2012 ஜனவரி முதல் டிசம்பர் வரை 661 பாலியல் வன்கொடுமை புகார்கள் பதிவு செய்யப்பட்டன. இந்த கொடியவர்களுக்கு என்ன தண்டனை கொடுக்கப்போகிறார்கள் என்பதே இப்பொழுது நம்முன் எழும் கேள்வி. 
மக்களை பாதுக்காக் நேரம் இல்லை: இந்திய அரசுக்கு வரி பணம் செலுத்தும் மக்களை பாதுக்காக் நேரம் இல்லை. ராஜபக்சே அரசின் ராணுவத்துக்கு ஆயுத பயிற்சி கொடுக்கவும், ஆப்கானிஸ்தானின் உள்நாட்டு போரில் தலையிடுவதற்கும் அதிகமாக நேரம் இருக்கிறது. எங்கே இருந்து நாடு உருப்பட போகிறது.
நன்றி - சிந்திக்கவும் 
0 comments

இனியும் கேவலப்பட என்ன இருக்கிறது!


அவமானம் 1: கடந்த வாரம் அமெரிக்காவை சேர்ந்த எம்.பி.க்கள், தொழிலதிபர்கள் என்று 18 பேர் கொண்ட குழு குஜராத் வந்தது. அவர்கள்  முதல்வர் நரேந்திர மோடியை சந்தித்து பேசியதோடு அவருடைய நிர்வாக திறமையை பாராட்டினர். இதானால் அமெரிக்காவுக்கு மோடிக்கு விசா கிடைக்கும் என்று நம்பப்பட்டது.

இதானால் மீண்டும் நம்பிக்கையோடு அமெரிக்கா விசா  கேட்டு விண்ணப்பித்தார் மோடி. ஆனால் அமெரிக்க மோடியின் முகத்தில் கரியை  பூசியது. குஜராத் இனப்படுகொலை குற்றவாளியான மோடிக்கு விசா  வழங்கும் நடைமுறையில் எந்த மாற்றத்துக்கும் இடமில்லை என்று மீண்டும் அமெரிக்கா திட்டவட்டமாக அறிவித்தது. மீண்டும்அவமானப்பட்டார் மோடி. 

அவமானம் 2: இந்திய வம்சாவளி அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், சில தினங்களுக்கு முன் டெல்லி வருகை தந்தார். இவரது தந்தை குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர். அதனால் சுனிதா குஜராத்தில் பல்வேறு நிகழ்சிகளில் கலந்து கொள்வதாக இருந்தது.

இவர் குஜராத் விமான நிலையத்தில் வந்திறங்கியதும் இவரை அழைக்க முதல்வர் மோடி சார்பாக அரசு வாகனம் அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் மோடியின் அரசு மரியாதையை ஏற்க மறுத்து புறக்கணித்தார். மேலும் இவரை எப்படியாவது மோடியை சந்திக்க வைக்க அரசு துறையால் பல்வேறு முயற்ச்சிகள் செய்யப்பட்டன ஆனால் அனைத்தையும் புறக்கணித்து  மோடியின் முகத்தில் கரியை  பூசினார். 

 குறுக்கு வழியில் பிழைப்பு நடத்தும் திருட்டு உலகமடா தம்பி புரிந்து நடந்து கொள்ளடா என்கிற பாடல் வரிகள்தான் நினைவுக்கு வருகிறது. மோடியும் தான் செய்த இனப்படுகொலை குற்றங்களை மறைத்து பிரதமர் வேடம் போடலாம் என்ற கனவில் குறுக்கு வழியில் பல்வேறு காரியங்களை நிகழ்த்தி பார்கிறார். ஒன்றும் நடக்க மாட்டேன்கிறதே! 

குறிப்பு: அமெரிக்கா விசாவுக்கு பல்வேறு முறை விண்ணப்பித்தும் கிடைக்க வில்லை. பிறகு அமெரிக்க குழு ஒன்றை வரவழைத்து அவர்கள் மூலம் ஏதாது செய்ய முடியுமா என்று முயற்சித்தார். அதுவும் முடியவில்லை.

பிறகு அமெரிக்க விண்வெளி வீராங்கனையை தனது அரசு விருந்தினராக்கி உபசரித்து அமெரிக்காவிடம் நல்ல பெயர் வாங்கலாம் என்று பார்த்தார் அதுவும் முடியவில்லை. அமெரிக்க விசாவுக்கு ஏன்தான் இவர் ஆளாய் பறக்கிறாரோ தெரியவில்லை. 

ஏன்தான் இவருக்கு இந்த அமெரிக்க மோகமோ. ஆமா எங்கே பேனது இவரது தன்மானம், சுதேசி கொள்கை எல்லாம், பாரத் மாதாகி ஜெ என்று காத்தோடு கலந்து விட்டதோ. அமெரிக்க விசாவில் என்ன தேன் வடிகிறதா? வந்தால்  மகாதேவி (அமெரிக்கா விசா) இல்லையேல் மரண தேவி என்று அடம் பிடிக்கிறாரே மோடி. 
நன்றி - சிந்திக்கவும் 
0 comments

தில்சுக் நகர் குண்டு வெடிப்பு - முஸ்லிம்களை வேட்டையாடும் ஹைதராபாத் போலீஸ்!


ஹைதராபாத் தில்சுக் நகர் இரட்டை வெடி குண்டு சம்பவத்தை விசாரணை செய்து வரும் புலனாய்வு அமைப்புகள், ஹைதராபாத் முஸ்லிம்களை குறி வைத்து இயங்கி வருகின் றன. அப்பாவி முஸ்லிம் இளைஞர்களைப் பிடித்து தில்சுக் நகர் குண்டு வெடிப்பு தீவிரவாதிகள்  இவர் கள்தான் என அவர்களைக் காட்ட முயற்சிகள் மேற் கொண்டு வருகின்றன.

கடந்த காலங்களில் மேற் கொண்ட அதே முயற்சியை புல னாய்வு அமைப்புகள் இப்போதும் மேற்கொண்டு வருவது கவலைய ளிப்பதாக உள்ளது. கடந்த காலங்களில் பயங்கரவாதச் சம்பவங்க ளில் பொய்யாக தொடர்புபடுத் தப்பட்டு, கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட முஸ்லிம் இளை ஞர்கள் பலரை, நிரபராதிகள் என்று கூறி நீதிமன்றங்கள் விடு தலை செய்திருக்கின்றன. அதோடு பொய் வழக்குகளில் கைது செய்த காவல்துறைக்கும் நீதிமன்றங்கள் கண்டனம் தெரிவித்துள்ளன.
பல்வேறு மனித உரிமை அமைப்புகளும், முஸ்லிம் இளை ஞர்கள் தொடர்புபடுத்தப்பட்ட பயங்கரவாதச் சம்பவங்கள் தொடர்பாக உண்மை அறியும் குழுவாக செயல்பட்டு, "அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை ஜோடிக் கப்பட்ட வழக்குகளில் விசாரணை அமைப்புகள் கைது செய்யும் போக்கை தடுத்து நிறுத்த வேண் டும் என மத்திய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் பரிந்துரை களை அளித்துள்ளன.
கடந்த டிசம்பர் மாதம் 4ம் தேதி பாராளுமன்றத்தில் கேள்வி நேரத் தின்போது, சமாஜ்வாதி கட்சி, ஜனதா தள் (யு) உள்ளிட்ட பல் வேறு கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சமாஜ்வாதி கட்சி யின் நாடாளுமன்ற உறுப்பின ரான நரேஷ் அகர்வால் தலைமை யில் திரண்டு, பயங்கரவாத குற்றச் சாட்டுகளின் கீழ் கைது செய்யப் பட்டு, அவை நிரூபிக்கப்படாத நிலையிலும் கூட நாடு முழுவதிலு முள்ள பல்வேறு சிறைச்சாலைக ளில் அடைக்கப்பட்டுள்ள அப் பாவி முஸ்லிம்களை விடுதலை செய்ய வேண்டும் என குரல் எழுப்பினர்.
சபாநாயகரின் இருக்கையை நெருங்கி அவர்கள் குரலெழுப்பிய தால் அவர்களை அமைதிபடுத்த முயற்சித்தும் தோற்றுப் போன துணை ஜனாதிபதி ஹமீது அன் சாரி, கேள்வி நேரத்தை ஒத்தி வைக்கும் அளவிற்கு இந்த எம்.பி.க் கள் அப்பாவி முஸ்லிம்களை விடு தலை செய்ய வேண்டும் என்ற குரலை ஓங்கி ஒலித்தனர்.
இந்த எம்.பி.க்கள், உத்திரப் பிர தேசம், பீகார் போன்ற மாநிலங்க ளைச் சேர்ந்தவர்கள். இந்த மாநி லங்களிலிருந்துதான் அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் அதிகள வில் பயங்கரவாதச் சம்பவங்களில் பொய்யாக காவல்துறையினரால் கைது செய்யப்படுகின்றனர் என் பது குறிப்பிடத்தக்கது.
அப்பாவி முஸ்லிம் இளைஞர் களை பொய் வழக்குகளில் கைது செய்வதற்கும், சிறைப்படுத்துவ தற்கும் எதிராக கடுமையான எதிர்ப்புகள் எழும் நிலையிலும், தனது தவறான போக்கை விசா ரணை அமைப்புகள் மாற்றிக் கொண்டதாகத் தெரியவில்லை.
ஹைதராபாத் தில்சுக் நகர் குண்டு வெடிப்புச் சம்பவத்திலும் முஸ்லிம் இளைஞர்களை வேட் டையாடி வருகின்றன விசா ரணை அமைப்புகளும், காவல்து றையும்.
கடந்த 27ம் தேதி இரண்டு முஸ்லிம் இளைஞர்களை சீருடை அணியாத ஹைதராபாத் போலீ ஸôர் கைது செய்து ரகசிய இடத் தில் வைத்து விசாரித்து வருகின்ற னர். கைது செய்யப்பட்டிருக்கும் இருவரும் மாணவர்கள். அவர் களை விதிமுறைகளை மீறி வன் முறையாக கைது செய்திருக்கி றது காவல்துறை.
ஹைதராபாத் எம்.இ.எம்.ஜே. கல்லூரியைச் சேர்ந்த சையத் ஷஃ பியுத்தீன் என்ற மாணவர் மாலை நேரத் தொழுகையை முடித்து விட்டு நண்பர்களுடன் கல்லூரிக் குத் திரும்பிக் கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத சிலர் (சீருடை அணியாத போலீ சார்) ஷஃபியுத்தீனை கடத்திக் கொண்டு போய் ரகசிய இடத்தில் வைத்திருக்கின்றனர் என தெரி வித்துள்ளனர் அவரது நண்பர் கள்.
ஷஃபியுத்தீன் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் என்பதால் அங்குள்ள காவல் நிலையத்தில் ஷஃபியுத்தீன் கடத் தப்பட்டிருப்பதாக புகார் பதிவா கியுள்ளது.
ஷஃபியுத்தீனை கடத்திச் சென்ற பின்னர் கல்லூரிக்கு வந்த இருவர், உள்ளே நுழையமுற்பட் டுள்ளனர். அவர்களை உள்ளே விட காவலாளி மறுத்துள்ளார். அவரை தள்ளி விட்டு சுவர் ஏறி உள்ளே குதித்த அவர்கள், ஷஃபி யுத்தீனின் நண்பர்களிடத்தில் ஷஃபியுத்தீன் பயன்படுத்திய லேப்டாப்பை கேட்டுள்ளனர்.
நண்பர்களோ நீங்கள் யார் என்பதை அடையாளப்படுத்தி னால்தான் நாங்கள் லேப் டாப்பை ஒப்படைப்போம் என மறுத்துள்ளனர். உடனே ஷஃபி யுத்தீனுடன் நண்பர்களை பேச வைத்துள்ளனர் அந்த இருவரும்! வந்திருப்பவர்களிடம் லேப் டாப்பை கொடுக்குமாறு போனில் கூறியுள்ளார் மாணவர் ஷஃபியுத்தீன் நடுக்கம் நிறைந்த குரலில்.
இதேபோல இன்னொரு சம்ப வம் ஹைதராபாத்தின் சைதா பாத் அமீன் காலனி பகுதியைச் சேர்ந்த அத்னான் என்ற மாண வர் அங்குள்ள அன்வாருல் உலூம் கல்லூரிக்கு இறுதிப் பரீட்சைக்கு முந்தைய தினம் காலை இவரை கைது செய்த சாதாரண உடையில் வந்த போலீஸ், சைபராபாத் காவல்து றையின் சிறப்பு நடவடிக்கை குழு வின் அம்பர்டேட் அலுவலகத் தில் அத்னானை விசாரணைக் காக வைத்திருப்பதாக அத்னா னின் குடும்பத்திற்கு நள்ளிரவில் தகவல் கொடுத்துள்ளது.
கைது செய்யும் நபருக்கு அவர் எந்த குற்றத்திற்காக கைது செய் யப்படுகிறார் என்பதும், கைது செய்யும் போலீஸ் கைதுக்கு சாட்சியாக அவரது குடும்பத்தி னரிடமோ, அண்டை வீட்டாரி டமோ கையெழுத்து பெற வேண் டும் என்பதும், கைது செய்யப் போகும் அதிகாரி சீருடையுட னும் அதில் தனது பெயர், பொறுப்பு போன்றவற்றை வெளிப்படுத்தும் அடையாளங்க ளுடன் செல்ல வேண்டும் என்ப துமான நடைமுறைகளை பின் பற்ற வேண்டும் என்கிறது சட் டம்.
இதேபோல கைது செய்யப் பட்டவர் குறித்த தகவல்கள் அவ ரது குடும்பத்தினருக்கு உடனடி யாக தெரிவிக்க வேண்டும் என்ப தும், கைதானவரை நீதிமன்றத் தில் ஆஜர்படுத்திய பின்னர்தான் நீதிமன்ற அனுமதியுடன் அவரை தனது கஸ்டடியில் போலீஸ் எடு க்க வேண்டும் என்பதும் காவல் துறை மேற்கொள்ள வேண்டிய சட்ட நெறிமுறைகள்.
இந்த விதிமுறைகளையும், நெறிமுறைகளையும் பின்பற்றி னால் அப்பாவிகளை பிடித்து சென்று அச்சுறுத்தி, துன்புறுத்தி அவர்கள் மீது ஜோடிக்கப்பட்ட வழக்கை போட முடியாது என் பதால் கடத்தல் கும்பல்களாக ஹைதராபாத் காவல்துறை செயல்பட்டிருக்கிறது.
எப்படியிருப்பினும், தில்சுக் நகர் குண்டு வெடிப்பு வழக்கில் எத்தனை முஸ்லிம்களைக் கைது செய்தாலும் காவல்துறையால் நீதி மன்றங்களில் ஆதாரங்களை சமர்ப்பிக்க முடியாது. கைது செய்யப்படும் முஸ்லிம்கள் நிரப ராதிகள் என்று நீதிமன்றம் விடு தலை செய்யும் கடந்த காலங்க ளைப்போல! அப்போது இரண் டாவது முறையாக ஹைதராபாத் காவல்துறை கண்டனத்திற்குள் ளாகும்.
முதல் முறை மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பு சம்பவத்தில் அப்பாவிகளை கைது செய்து ஹைதராபாத் போலீஸ் கண்ட னத்திற்குள்ளானது எல்லோருக் கும் தெரிந்த விஷயம்தானே!
குண்டு வெடிப்பு விசாரணையை தேசிய புலனாய்வு நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டும் - அசத்துத்தீன் உவைசி
தில்சுக் நகர் இரட்டை குண்டு வெடிப்பு விசா ரணையை தேசிய புலனாய்வு நிறுவனத்திடம் ஆந்திர மாநில அரசு ஒப்படைக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருக்கிறார் மஜ்லிஸ் இத்தி ஹாதுல் முஸ்லிமீன் (எம்.ஐ.எம்.) கட்சியின் தலைவர் அசத்துத்தீன் உவைசி.
எம்.ஐ.எம். கட்சியின் 55வது ஆண்டு விழாவை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியில் கடந்த 2ம் தேதி ஹைதராபாத் தாருஸ் ஸலாம் அரங்கத்தில் பேசிய உவைசி,
“குண்டு வெடிப்பை நடத்தியவர்கள் கடுமை யாக தண்டிக்கப்பட வேண்டும். குண்டு வெடிப்பில் மரணமடைந்த மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பங்கள் ஏழ்மை நிலையிலுள்ளவை. அத னால் அரசாங்கம் அவர்களுக்கு அனைத்துவித உதவி களையும் செய்ய முன் வர வேண்டும்.
இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் பாரபட்சமற்ற முறையில் நேர்மையான விசாரணைநடிபேறு உறுதிப்படுத்த வேண்டும். குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு வகுப்புவாத வர்ணம் பூச மீடியாக்கள் முயற்சிக்கின்றன. குண்டு வெடிப்பு நடந்த ஒரு மணி நேரத்திற்குள் முஸ்லிம் சமூகத்தை குறி வைத்து பல்வேறு கதைகளை செய்தி ஊடகங்கள் அவிழ்த்து விட்டன.
அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் போலீசாரால் தொல்லைக் குட்படுத்தப்படுகின்றனர். மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பு சம்ப வத்தில் தவறுதலாக கைது செய்யப்பட்டு, அரசாங்கத்தால் நன்ந டத்தை சான்றிதழ் வழங்கப்பட்ட முஸ்லிம் இளைஞர்களையும் விசாரணைக்காக தூக்கிச் சென்றுள்ளனர் காவல்துறையினர்.
காவல்துறையும், ஒரு பிரிவு மீடியாக்களும் மக்களுக்கு தவ றான செய்திகளைத் தருகின்றன. குண்டு வெடிப்பை நிகழ்த்தி யிருப்பவர்கள் இந்திய குடிமக்களை கொல்ல வேண்டும் என்றநோக்கத்தோடு செயல்பட்டிருக்கிறார்களே தவிர மத நோக்கத்தோடு அல்ல. எனவே பாரபட்சமற்ற விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும். உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும்.
மத ரீதியாக மீடியாக்கள் மக்களை கூறுபோட வேண்டாம். செய்தி ஊடகங்களும், பத்திரிகைகளும் தொடர்ந்து முஸ்லிம் சமூகத்தை குறி வைத்து இயங்கினால் அவற்றின் மீது அவதூறு வழக்கு தொடருவேன்.
தில்சுக் நகர் குண்டு வெடிப்பு அப்சல் குருவின் தூக்கு தண்டனையின் எதிர் வினையாக நிகழ்த்தப்பட்டிருக்கிறது என மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே கூறியிருப் பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
இதுபோன்ற அறிக்கைகளின் மூலம் ஒரே கோணத்தில் விசா ரணையை மேற்கொள்ள வேண்டும் என தனது அதிகாரத்தை பயன்படுத்தி விசாரணை அமைப்புகளை கட்டா யப்படுத்தியுள்ளார் சுஷில் குமார் ஷிண்டே...'' என பேசியுள்ளார் அசத்துத்தீன் உவைசி.
இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்ச கம், குண்டு வெடிப்பு விசாரணையை தேசிய புலனாய்வு நிறுவனத்திடம் ஒப்படை க்கக்கோரி ஆந்திர அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது. தற் போது ஆந்திர மாநில காவல்துறை 15 (விசார ணைக்) குழுக்களை நியமித்து இந்த விசாரணை யில் ஈடுபட்டு வருகிறது. இதுவரை குற்றவாளி களை கண்டுபிடிக்க முடியவில்லை.
தேசிய புலனாய்வு நிறுவனமும் நேர்மையாக விசாரிக்குமா என்ற சந்தேகம் நமக்கு எழுகிறது. ஏனெனில், இந் தியன் முஜாஹித்தீன் என்கிற (இல்லாத) அமைப்பு பெரும் சதித் திட்டம் தீட்டியி ருபதாக கடந்த செப்டம்பர் மாதம் இல்லாத அமைப்பிற்கு எதிராக வழக்கு ஒன்றை பதிவு செய்திருந்தது புல னாய்வு நிறுவனம்.
இச்சூழலில், தில்சுக் நகர் குண்டு வெடிப்பு சம்பவத்திற்காக, ஏற்கெனவே வேறு வழக்கில் விசாரணைக் கைதிகளாக திகார் சிறையில் இருக்கும் சையது மக்பூல் மற்றும் இம்ரான் கான் ஆகிய இருவரை கஸ்டடியில் எடுத்து வைத்திருக்கும் புல னாய்வு நிறுவனம், அவர்களை ஹைதரபாத்திற்கு விசாரணைக் காக கொண்டு சென்று விசாரித்து வருகிறது.
இதன் அடிப்படையில் பார்த்தால் தேசிய புலனாய்வு நிறுவனமும் - அப்பாவி முஸ்லிம்களை குண்டு வெடிப்பில் சம்மந்தப்படுத்தி அவர்களை இரையாக் குமோ என்ற சந்தேகம் இயல்பாகவே எழுகிறது.
ஏற்கெனவே இந்துத்துவா பயங்கரவாதிகளை மக்கா மஸ்ஜித், சம்ஜவ்தா எக்ஸ்பிரஸ் ரயில், அஜ்மீர் தர்கா உள்ளிட்ட குண்டு வெடிப்பு சம்பவங்களில் துரத்தி துரத்தி கைது செய்து தனது திறமையை வெளிப்படுத்தியிருந்தது புலனாய்வு நிறுவனம். தில்சுக் நகர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் அது புல னாய்வு நிறுவனமாக செயல்படுகிறதா புடலங்காய் நிறுவனமாக செயல்படுகிறதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
தாடி வைத்த முஸ்லிம்களை...
ஹைதராபாத் தில்சுக் நகர் இரட்டை குண்டு வெடிப்புக்கு பின்னர் காவல்துறை மேற்கொண்டு வரும் விசாரணையும், பாதுகாப்பு ஏற்பாடுகளும் மற்றும் காவல் நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபட்டிருக்கும் விதமும் முற்றிலும் ஒரு சார்பு மனப்போக்கை வெளிப்படுத்துவதாகவே இருக்கிறது.
ஹைதராபாத் நகரில் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கை என்றபெயரில் சாலைகளில் குவிக்கப்பட்டிருக்கும் பெரும் எண்ணிக்கையி லான காவல் படை ஹைதராபாத்வாசிகளுக்கு மத்தியில் ஒரு பீதியை, பய உணர்வை ஏற்படுத்து வதற்காகத்தான் என்றே காவல்துறையின் நடவ டிக்கைகளின் மூலம் உணர முடிகிறது.
தீவிரவாதிகள் வேட்டை என்ற பெயரில் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை தொல்லைப்படுத்தியும் இலக்காக்கியும் வருகிறது ஹைதராபாத் போலீஸ். கடந்த 2ம் தேதி சனிக்கிழமை காலை ஹைதரா பாத் பேகம் பஜார் பகுதியில் தாடி வைத்த முஸ்லிம் இளைஞர்களை புகைப்படம் எடுத்தும், அதை தங்களின் மொபைல் போன்களில் பத்திரப்படுத் துவதுமான வேலைகளில் ஈடுபட்டிருந்தனர்.
அப்பாவி முஸ்லிம்கள் தங்களை சந்தேகத்திற்குள்ளாக்கும் போலீஸின் இத்த கைய தாக்குதல் ரீதியான நடவடிக்கைகளுக்கு இணக்கம் தெரிவித்தபடி நடந்து கொண்டனர் என்கிறது ஹைதராபாத்திலிருந்து வெளிவரும் சியாசத் உருது நாளேடு.
இதுபோன்ற செயல்கள் சட்ட மற்றும் மனித உரிமை மீறல் என்பது தெரிந்த நிலையிலும் ஒரு சமுதாயத்தை குறி வைத்து இத்தகைய காரியங்களில் பாதுகாப்பு போலீசார் ஈடுபடுகிறார்கள் என்றால் அது அதிகார வர்க்கங்கள் இடுகின்ற கட்டளை என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.
மேலதிகாரிகளின் வழிகாட்டுதல்படி பாதுகாப்பு போலீசார் இப்படி வரம்பு மீறி நடந்து கொள்ளும் நிலையில், இதற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட் டால் மாட்டிக் கொள்வதும், பணி இடை நீக்கம் செய்யப்படுவதும் பாதுகாப்பு காவலர்கள்தான்.
இவர்களுக்கு உத்தரவிட்ட உயரதிகாரிகள் தங்கள் பெயர் கூட வெளிவராத வகையில் தப்பித்துக் கொள்கிறார்கள்.
நன்றி - கீற்று 
0 comments

விவாதச் சவடால் விட்ட தாருஸ்ஸூன்னா பதில் தராது புறமுதுகிட்டு ஓட்டம்! பூச்சாண்டி காட்ட நினைத்தேரரின் போலிமுகம் புஷ்வானமானது!


அக்கறைப்பற்று அன்ஸார் (தப்லீகி) மற்றும் அமீருல் அன்ஸார் (மக்கி) ஆகியேரரின் சிந்தனைக்குள் சிறைப்பட்டு﹐ ‘ஷெய்க்’ எதைச் சொன்னாலும் மார்க்கம் தான் என்ற குருட்டு நம்பிக்கையில் கட்டுண்டு கண்மூடிப் பின்பற்றும் ‘தக்லீத்’ அமைப்பாகிய சம்மாந்துறையில் இயங்கும் ‘தாருஸ் ஸூன்னா அல் இஸ்லாமிய்யா’ கடந்த வருட இறுதிப் பகுதியில் எமக்கு விவாத அழைப்பு விடுத்தனர். அவர்களின் விவாத அழைப்பை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்ட ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் ஒப்பந்தம் செய்வதற்காய் தாருஸ் ஸூன்னாவின் வளாகம் நோக்கி சென்றது. 
‘அறிவிப்பாளர் வரிசை சரியாக அமைந்திருந்தாலும் அதன் கருத்து அல்குர்ஆனுக்கு முரண்படும் எனில் அந்த செய்தி இட்டுக்கட்டப்பட்டதே!’﹐ ‘சுூனியத்தினால் பிரிதொரு மனிதனுக்கு பாதிப்பை ஏற்படுத்த முடியும் என்று நம்புவது தெளிவான ஷிர்க்காகும். இவ்வாறு நம்புபவர்கள் அப்பட்டமான முஷ்ரிக்குகளே!’ என்பது ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் அழுத்தமான வாதமாகும்.
நாம் மேற்குறித்த இரு கருத்துக்களையும் மக்கள் மன்றத்தில் எடுத்துச் சொன்ன போது﹐ அன்ஸார் (தப்லீகி) உள்ளிட்ட பல வேக்காடுகள் சிறுத்தையாய் சீறியெழுந்தனர். தணல் பட்ட உடம்பாய் குதித்து நின்றனர். ‘ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் சுத்த வழிகேடர்கள்! நவீன முஃதஸிலாக்கள்! பீ.ஜே யை தக்லீத் செய்யும் முகல்லிதுகள்! ஹதீஸ் கலை அறியா அரைகுறைகள்!’ என்றெல்லாம் புழுதியை எம்மீது வாரி இரைத்தார்கள். முஸ்லிம்களை முஷ்ரிக்குளாக்கும் கூட்டம் என பெரரிந்து தள்ளினார்கள்.
மக்கள் மன்றத்தில் எமக்கெதிராய் எந்த விமர்சனக் கணைகளை வீராப்பாய் எடுத்து வைத்தீர்களோ அவ்விரண்டு தலைப்புகளையும் எமது விவாதத் தலைப்பாக ஆக்கிக் கொள்வோம். அதில் ‘ஆதார புூர்வமான ஹதீஸ்கள் அல்குர்ஆனுக்கு முரண்படுமா?’ என்பதை முதல் தலைப்பாகவும்﹐ ‘சுூனியம்’ குறித்த தலைப்பை அடுத்த நாளும் விவாதத்துக்குரிய தலைப்பாக வைத்துக்கொள்ளலாம் என்பதை காரண காரியங்களை அடிப்படையாகக் கொண்டு தெளிவு படுத்தினோம்.
‘முடியாது! சுூனியம் குறித்த தலைப்பில் மாத்திரம் விவாதிப்பதாய் இருந்தால் ஒப்பந்தத்தை தொடர்வோம். இல்லையென்றால் இத்தோடு விவாத ஒப்பந்தத்தை முறித்துக் கொள்வோம்!’ என்று ‘ஆளைவிட்டால் போதும்’ என்று விலாங்கு மீனாய் நழுவி ஓடினார்கள் அமீருல் அன்ஸாரியும் அவரின் முகல்லிதுக் கூட்டம் தாருஸ் ஸூன்னாவும். விவாத ஒப்பந்த னுஏனு யை எமது இணையதலத்தில் பார்வையிட்ட பொது மக்கள்﹐ சிறுத்தையாய் சீறி எழுந்தவர்கள் பெட்டிப்பாம்பாய் அடங்கிப்போனதை கண்டு ஆச்சரியப்பட்டார்கள். சொல்லம்புகளால் கீறிக்கிழித்தார்கள். வேதனை தாங்க முடியாது பரிதவித்த தாருஸ்ஸூன்னா அமைப்பினர்﹐ மண்ணில் விழுந்தும் மீசையில் மண் படியவில்லை என்ற கதையாய் தங்களை காட்டிக் கொள்வதற்காய் மீண்டும் ஒரு விவாத அழைப்பினை கடந்த 18-01-2013 அன்று எமக்கு விடுத்தனர்.
‘ஆதாரபுூர்வமான ஹதீஸ்கள் அல்குர்ஆனுக்கு முரண்படுமா? என்ற தலைப்பில் நாம் உங்களோடு விவாதம் புரிய தயார். ஏனெனில் உங்கள் கொள்கை படு பயங்கர வழிகேடாகும்.’ என்று அக்கடிதத்தில் குறிப்பிட்டிருந்தனர்.
ஏலவே﹐ இத்தலைப்பில் விவாதிக்க முடியாது என்று ஒப்பந்தத்தில் வைத்து விரண்டோடிய தாருஸ்ஸூன்னா அமைப்பினர்﹐ தாங்கள் இதற்கு முன் எம்மோடு விவாத ஒப்பந்தம் செய்ததையோ﹐ அதில் அவர்கள் பின்வாங்கியதையோ குறிப்பிடாது இருட்டடிப்பு செய்திருந்ததை அவர்களுக்கு உணர்த்தும் விதமாயும்﹐ உங்கள் கடிதத்தில் பின்வரும் விடயங்களை உள்ளடக்கி அனுப்பி வைக்குமாறும் குறிப்பிட்டு ஒரு பதில் கடிதத்தை அனுப்பி வைத்தோம். உரிய முறையில் பதில் வந்தால் நாம் எந்நேரமும் விவாதிக்கத் தயார் என்றும் குறிப்பிட்டிருந்தோம். பின்வரும் விடயங்களை இணைத்து கடிதம் தருமாறு வேண்டினோம்.
1.நாம் தான் ளுடுவுது யை முதலில் விவாதத்திற்கு அழைப்பு விடுத்தோம்.
2.நீங்களும் எமது வளாகத்திற்கு ஒப்பந்தத்திற்காய் வந்தீர்கள்.
3.குர்ஆனுக்கு ஆதார புூர்வமான ஹதீஸ்கள் முரண்படுமா? என்ற தலைப்பில் விவாதிக்க முடியாது என்பதால் நாமே ஒப்பந்தத்திலிருந்து பின்வாங்கினோம். இதற்காக மன்னிப்புக் கேட்கிறோம்.
4.மீண்டும் இத்தலைப்பில் விவாதிக்க நாம் விரும்புகின்றோம்.
5.முதலில் நீங்கள் எமது இடம் வந்ததால்﹐ இவ்வொப்பந்தத்திற்கு நாம் உங்கள் இடத்திற்கு வருகிறோம்.
6.ஓப்பந்தத்தில் வைத்து விவாத தலைப்புகளை முடிவு செய்வோம்.
மேற்குறிப்பிட்ட விடயங்களை உள்ளடக்கியதாக எமக்கு கடிதம் அனுப்பும் பட்சத்தில் நாம் விவாதிக்கத் தயார் என்று 23-01-2013 அன்று அறிவித்திருந்தோம். இக்கடிதம் அனுப்பப்பட்டு இன்றோடு ஒரு மாதம் கடந்துவிட்டது. ஆனால்﹐ விவாத சவடால் விட்டவர்களிடமிருந்து இது வரைக்கும் எவ்வித பதிலையும் காணவில்லை.
மக்கள் மன்றத்தில் எம்மை வழிகேடர்களாய் சித்தரித்த தாருஸ் ஸூன்னா அமைப்பினர் தங்கள் கூற்றில் உண்மையாளர்களாய் இருந்தால் அதே மக்கள் மன்றத்தில் எம்மோடு விவாதிக்க வந்திருக்க வேண்டும்? சவால் விட்டுவிட்டு ஓடி ஒழியும் இவர்களின் தொடை நடுங்கித்தனம் இவர்கள் ‘அசத்தியவாதிகள்’ என்பதை அழுத்தமாய் அடையாளப்படுத்திவிட்டது. எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே!
‘சத்தியம் வந்தது! அசத்தியம் அழிந்தது! அசத்தியம் அழிந்தே தீரும்! (17:81)
00123.01.2013-1
23.01.2013-2.jpeg
நன்றி - sltjweb 
0 comments

தீ மிதிக்க இன்சூரன்ஸ் : தமிழக அரசு சிந்திக்குமா? – உணர்வலைகள்

தங்களது அறிவைப் பயன்படுத்தி சரியான சட்ட நடைமுறைகளை வகுத்து மக்களைக் காக்கவேண்டியதுதான் ஒரு நல்ல அரசாங்கத்தின் கடமை.

ஆனால் நம் நாட்டில் நிலைமை அவ்வாறு இல்லைஒரு பக்கச்சார்பாகவும்அறிவுக்கும்தங்களுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லாதது போலவும்தான் சட்டங்கள் இயற்றப்பட்டுவருகின்றனஅதற்கு சமீபத்திய உதாரணம்தான் தமிழக அரசு போட்ட ஒரு உத்தரவு :
தீ மிதி விழா பக்தர்களுக்கு காப்பீடு : அறநிலையத்துறைக்கு அரசு உத்தரவு!
பூக்குழி இறங்குகின்றோம்குண்டத்தில் இறங்குகின்றோம் என்ற பெயரில் தீ வளர்த்து அதில்அனைவரும் ஓடக்கூடிய ஒரு நடைமுறை தமிழகத்திலுள்ள கோவில்களில் கடைப்பிடிக்கப்பட்டுவருகின்றது.
இது குறித்து தமிழக அரசு ஒரு உத்தரவை சென்ற வாரம் வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில்அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில்குண்டம் (தீ மிதி விழா)இறங்கும் பக்தர்களுக்குமூன்றாம் நபர் காப்பீடு செய்ய நடவடிக்கை எடுக்கஅறநிலையத்துறைஅதிகாரிகளுக்கு அரசு உத்தரவிட்டு உள்ளது.
தமிழகம் முழுவதும் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில், 38 ஆயிரத்து 421 கோவில்கள்உள்ளனஇதில், 1,000க்கும் மேற்பட்ட கோவில்களில்ஆண்டுக்கு ஒருமுறைபிரம்மோற்சவமும்இதர உற்சவங்களில்குண்டம் திருவிழாவும் நடக்கிறதுகுண்டம் திருவிழாவின்போது,பக்தர்களிடையே ஏற்படும் தள்ளுமுள்ளுபக்தர்கள் பரவசம் ஆகியவற்றால் குண்டத்தில்விழுந்தும் காயமடைகின்றனர்குண்டம் திருவிழாவில்பக்தர்களுக்கு தேவையான பாதுகாப்புஅடிப்படை வசதிகளை ஏற்படுத்தஅரசு உத்தரவிட்டு உள்ளது என்றும் அந்த அறிக்கையில்கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்துஅறநிலைய துறை அதிகாரிகள் கூறியதாவது:
·         குண்டம் திருவிழாவின்போதுபக்தர்கள் பாதுகாப்பை மேம்படுத்த அரசு உத்தரவிட்டுஉள்ளது.
·         குண்டம் துவங்க இரு மாதம் உள்ளபோதேஅந்தந்த மாவட்ட கலெக்டர்எஸ்.பி., நகராட்சி,மாநகராட்சி நிர்வாகம்சுகாதாரத் துறைஇதர துறை அதிகாரிகள்அறநிலையத்துறை சார்பில்முன்னேற்பாடு கூட்டம் நடத்த வேண்டும்.
·         குண்டம் விழா நடத்தப்படும் கோவில்களில் கீற்று கொட்டகைகள்பந்தல்கள் போன்று,தீப்பிடிக்கும் பொருட்கள் கண்டிப்பாக இருக்கக் கூடாது.
·         கோவில் வளாகம்கோவில் சார் கட்டடங்களில் மின் இணைப்புகளைப் பரிசோதிக்கவேண்டும்.
·         தேவைப்படும் இடங்களில்பக்தர்களுக்கான முதலுதவி சிகிச்சை நிலையங்கள்செயல்படுத்த வேண்டும்.
·         தீயணைப்பு வாகனங்கள்ஆம்புலன்ஸ்கள்ஸ்ட்ரெச்சர்நாற்காலி வண்டி ஆகியவைஎந்நேரமும் தயார் நிலையில் இருக்க வேண்டும்.
·         தேவையான இடங்களில்தேவையான அளவு தீயணைப்பான்கள் நிறுவவும்,தீயணைப்பானை இயக்கும் முறை குறித்தும்பாதுகாப்பு பணியில் ஈடுபடுவோருக்கு,முன்கூட்டியே பயிற்சி அளிக்க வேண்டும்
·         குண்டம் இறங்கும் முன்உடைகளில் தீப்பிடிக்காதவாறும்தவறி விழாதவாறும்,உடைகளை சரி செய்து கொள்ளும் படியும்பக்தர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும்.
·         கோவிலுக்கு வரும் பக்தர்களை கண்காணிக்கும் வகையில்அதிகப்படியான கோவில்அலுவலர்கள்பணியாளர்கள்என்.சி.சி., - என்.எஸ்.எஸ்., மாணவர்கள்சேவைதொண்டர்களையும்போலீசாரையும் ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
·         சிறுவர்சிறுமியர்முதியோர்கர்ப்பிணிகள்மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் குண்டம்இறங்க அனுமதிக்க கூடாது.
·         தீ மிதி திருவிழாவில் பங்கேற்கும் பக்தர்களுக்குமூன்றாம் நபர்காப்பீடு செய்யநடவடிக்கை எடுக்க வேண்டும்.
இது போன்றபாதுகாப்பு நடவடிக்கையைப் பின்பற்ற அறநிலையத்துறை அதிகாரிகளுக்குஉத்தரவிடப்பட்டதுஇவ்வாறுஅவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேற்கண்ட உத்தரவு குறித்த பல கேள்விகள் நம்முடைய உள்ளத்தில் எழுகின்றன.
தனிநபர் ஒருவர் தன்னுடைய உடலில் தீயை ஊற்றி கொளுத்திக் கொள்ள முயன்றால் அவரைக்கைது செய்து சிறையில் தள்ளுகின்றது காவல்துறைஅதே நேரத்தில் தீயில்இறங்கப்போகின்றோம் என்று அறிவிப்புச் செய்துவிட்டு தீக்குளிக்கப்போகும் நபர்கள் பக்தர்கள்என்று தங்களைச் சொல்லிக்கொண்டால் அவர்களுக்கு பாதுகாப்பு அளித்துகலெக்டர்தலைமையில் கூட்டம் நடத்தி தீயணைப்பு வண்டிகளோடுஆம்புலன்ஸ் சகிதம் சகலவசதிகளையும் அரசாங்கம் செய்து கொடுக்கின்றதென்றால் இவர்களுக்கு சிந்திக்கும் திறன்என்று ஒன்று உள்ளதா என நம்முடைய உள்ளத்தில் கேள்வி எழுகின்றது.
அதே நேரத்தில் மற்றுமொரு விஷயத்தையும் இங்கு நாம் சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம்.அதாவது இதற்கு முன்பாக மதுரை அருகே பேரையூர் கிராமத்தில்கோவில் திருவிழாவில்.தி.மு.அமைச்சர் துரைராஜ் முன்னிலையில்குழந்தைகளை உயிருடன் புதைத்து பக்தர்கள்நேர்த்திக் கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடந்ததுஇதன் காரணமாகவே அந்த துரைராஜ் என்றஅமைச்சர் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
குழந்தைகளை உயிருடன் புதைத்து நேத்திக்கடன் செலுத்தும் அந்தத் திருவிழாவிற்கு தமிழகஅரசு தடை விதித்துள்ளதுமனிதர்கள் தங்களது உடலை தாங்களே வருத்திக் கொண்டுதற்கொலைக்கு முயல்வது சட்டப்படி குற்றம் என்ற காரணத்தால்தான் இந்தத் தடைபோடப்பட்டுள்ளது.
அப்படியிருக்கையில்மண்ணில் புதைத்து உயிரோடு எடுக்கப்படுவதைக் காட்டிலும்தீமிதிப்பதில்தான் அதிக அசம்பாவிதங்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளனஅதிகமதிகம் தடைசெய்யப்படுவதற்கு தகுதியானது இந்த தீ மிதி நேத்திக்கடன்தான்அப்படியிருக்கையில் அதைஅனுமதித்து அதற்கு அரசாங்கமே பாதுகாப்பு அளிப்பது எவ்விதத்தில் நியாயம் என்று நாம் கேட்கவிரும்புகின்றோம்.
மேலும்தீக்குழி இறங்குபவர்கள் ஒவ்வொருவரும் சாமியின் அருளால் தங்களுக்கு எதுவும்காயங்கள் ஏற்படாது என்று சொல்லி அந்த நம்பிக்கையில்தான் தீக்குழி இறங்குகின்றனர்.அப்படியிருக்கையில்தீக்குழி இறங்குபவர்களுக்கு தீக்காயங்கள் ஏற்பட்டால் உடனடியாகஅவர்களை தூக்கிச் செல்ல ஆம்புலன்ஸ்களும்ஸ்ட்ரெச்சர்நாற்காலி வண்டி ஆகியவைகளைதாயாராக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும் என்று சொல்வது அவர்களது மத நம்பிக்கையைபுண்படுத்துவதாக ஆகாதா?
அவற்றிற்கெல்லாம் மேலாக அவர்களுக்கு மூன்றாம் நபர் இன்சூரன்ஸ் செய்யலாம் என்றுதமிழக அரசு உத்தரவிட்டிருப்பது அவர்களது மத நம்பிக்கையை புண்படுத்துவதன்உச்சகட்டமாகத் தெரியவில்லையா?
சேது சமுத்திரத்திட்டத்தில் கண்ணுக்குப் புலப்படாத வகையில் கடலுக்கு அடியில் உள்ள ஒருமணல் திட்டை சரி செய்ய மத்திய அரசு ஆயத்தப்பணிகளில் ஈடுபடுவது எங்களது மதஉணர்வுகளைப் புண்படுத்துகின்றதுஅந்த மணல் திட்டுக்களை இராமர் பாலம் என்று நாங்கள்நம்பிக்கொண்டிருக்கின்றோம்இதை இடிப்பது எங்களது மத உணர்வுகளைப் புண்படுத்துவதாகும்என்று சொல்லி கூச்சல் போடும் சங்பரிவாரங்கள் இந்த விஷயத்தில் வாய்மூடி மௌனியாகஇருக்கக் காரணம் என்னவோ?   சாமி அருளால் எங்களுக்கு எதுவும் அசம்பாவிதங்கள் நேராதுஎன்று நாங்கள் நம்பும்போது எங்களுக்கு பாதுகாப்பும்இன்சூரன்ஸ் போடுவது எங்களது தெய்வநம்பிக்கைகளை கேலி செய்வதாக உள்ளது என்று எந்த சங்பரிவாரத் தலைவரும் சொல்லக்காணோம்.
இதிலிருந்தே இவர்களது இரட்டைவேடம் அம்பலமாகியுள்ளது.
அதுபோக இன்சூரன்ஸ் கம்பெனிகள் இதற்கு எப்படி ஒப்புக் கொள்வார்கள் என்பதை நாம்சிந்திக்க வேண்டும்.
ஒரு குறிப்பிட்ட இடத்தைச் சொல்லிஇந்த இடத்தில்இன்ன நேரத்தில் நான் என் வீட்டையோ,அல்லது எனது வாகனத்தையோ தீவைத்துக் கொளுத்தப் போகின்றேன் என்று அறிவிப்புச்செய்துவிட்டு ஒருவர் தீவைத்துக் கொளுத்தினால் அவருக்கு இன்சூரன்ஸ் மூலமாக இழப்பீடுவழங்குவார்களா?
அப்படியிருக்கையில் இந்த இடத்தில்இன்ன நேரத்தில்நான் தீ மிதிக்கப் போகின்றேன் என்றுசொல்லி தீ மிதித்து அதில் காயம் ஏற்பட்டால் அது எப்படி இழப்பீடு பெறுவதற்கு தகுதியானஇழப்பீடாக இருக்க முடியும்?
ஆக இப்படிப் பல வகைகளில் இவர்கள் தங்களது மூளையை அடகு வைத்து விட்டுசட்டங்களைப் போடுகின்றார்கள்.
இதே நேரத்தில் இதுபோன்று தீமிதித்தல்மொட்டைத்தலையில் தேங்காய் உடைத்தல்மண்சோறு சாப்பிடுதல்காவடி தூக்குதல்கால்நடை பிரயாணம் செய்து தங்கள் உடலை வருத்திக்கொள்ளுதல்உடல் முழுவதும் அலகு குத்துதல் இப்படி பல வகைகளில் தங்களுக்குத் தாங்களேதங்களது உடலை வருத்திக் கொள்வதால் கடவுளுக்கு எந்த நன்மையும் ஏற்படப்போவதில்லைஎன்பதையும்இப்படிப்பட்ட செயல்கள் அனைத்தும் மூடநம்பிக்கைகள்தான் என்பதையும் பிறமதசகோதரர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
இஸ்லாம் இதுபோன்ற மூடநம்பிக்கைகளுக்கு 1400 ஆண்டுகளுக்கு  முன்பே முற்றுப்புள்ளிவைத்துவிட்டது.
வெயிலில் நின்று கொண்டே இருப்பேன்யாரிடமும் பேசமாட்டேன் என்று நேர்ச்சை செய்த ஒருநபித்தோழரை நபிகளார் கண்டித்தார்கள் என்ற செய்தியை நாம் பார்க்கின்றோம்.
அதுபோல நடந்தே ஹஜ் செய்வதாக நேர்ச்சை செய்தவரை நீ வாகனத்தில் சென்று ஹஜ் செய்என்று நபிகளார் கட்டளையிட்ட செய்தியையும் நாம் காண்கின்றோம்.
அதுமட்டுமல்லாமல் இஸ்லாம் காட்டித்தந்த வணக்க வழிபாடுகள் கூட மிக இலகுவானமுறையில் அமைந்துள்ளதை நாம் காண்கின்றோம்.
தொழுகையைக்கூட நின்று தொழ முடியாதவர் உட்கார்ந்து கொண்டு தொழட்டும் என்றும்,உட்கார்ந்து கொண்டும் தொழ இயலாதவர் படுத்துக் கொண்டு தொழட்டும் என்று வணக்கவழிபாடுகளை இஸ்லாம் இலகுவாக ஆக்கியுள்ளது.
இஸ்லாம் காட்டும் வணக்க வழிபாடுகளை ஒருவர் செய்து இறைவனை வணங்கக்கூடியஒருவர் அந்த வணக்க வழிபாடுகளை செய்வதற்காக இன்சூரன்ஸ் செய்யத் தேவையில்லை;அதற்காக ஆம்புலன்ஸ் கொண்டு வரத்தேவையில்லைஅதற்கு தீயணைப்பு வண்டிகளும்பாதுகாப்பிற்குத் தேவையில்லை.
இந்த வகையில் மேற்கூறிய செய்திகளை ஆய்வு செய்தால் இஸ்லாம் கூறும்வழிகாட்டுதல்கள்தான் சரியானவை மனித குலத்திற்கு நன்மை பயக்கக்கூடியவை என்பதை நாம்உணர்ந்து கொள்ளலாம்.
ஒரு முதியவர் தனது இரு மகன்கள் தாங்கிக் கொள்ள நடந்து செல்வதை நபிகள் நாயகம்(ஸல்அவர்கள் பார்த்தனர். "இவருக்கு என்ன நேர்ந்தது?'' என்று விசாரித்தனர். "நடந்தேசெல்வதாக இவர் நேர்ச்சை செய்து விட்டார்'' என்று நபித்தோழர்கள் கூறினார்கள்அப்போதுநபிகள் நாயகம் (ஸல்அவர்கள் "அந்த மனிதர் தன்னைத் தானே வேதனைப்படுத்திக் கொள்வதுஅல்லாஹ்வுக்குத் தேவையற்றது'' என்று கூறிவிட்டு வாகனத்தில் ஏறிச் செல்லுமாறு அவருக்குக்கட்டளையிட்டனர்.
அறிவிப்பவர்அனஸ் (ரலி)
நூல்புகாரி 1865, 6701
அல்லாஹ் உங்களுக்கு எந்தச் சிரமத்தையும் ஏற்படுத்த விரும்பவில்லைமாறாக நீங்கள் நன்றிசெலுத்துவதற்காக உங்களைத் தூய்மைப்படுத்தவும்தனது அருளை உங்களுக்குமுழுமைப்படுத்தவுமே விரும்புகிறான்.
அல்குர்-ஆன் 5 : 6
நன்றி - onlinepj 
0 comments

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger