பெண்களில் மூன்றில் ஒருவர் வன்முறைகளுக்கு ஆளாகின்றனர்

உலகின் பெண்களில் மூன்றில் ஒருவருக்கும் அதிகமானோர் பாலியல் அல்லது உடல் ரீதியான வன்முறைகளுக்கு ஆளாகி இருப்பதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஆய்வொன்று கூறுகிறது.
பெண்களில் மூன்றில் ஒருவர் உடல் ரீதியாக அல்லது பாலியல் ரீதியாக, பெரும்பாலும் கணவன்மாரால் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்
கொலை செய்யப்பட்டுள்ள பெண்களில் 38 வீதமானவர்களின் அவர்களின் வாழ்க்கைத் துணைவர்களாலேயே கொல்லப்பட்டுள்ளதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
இவ்வாறான வன்முறைகள் மன அழுத்தம் மற்றும் மற்றைய உடல் பாதிப்புகளுக்கு காரணமாகியுள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
இவ்வாறான தாக்குதல்களை பொறுத்துக்கொள்ளும் போக்கு கைவிடப்படவேண்டும் என்றும் அந்த ஆய்வறிக்கை கோரியுள்ளது.
ஆகக்கூடுதலாக, இலங்கையிலும் இந்தியாவிலும் வங்கதேசத்திலும் 38 வீதமான பெண்கள் வாழ்க்கைத் துணைகளால் வன்முறைகளுக்கு முகம்கொடுத்துள்ளனர்.

ஆப்பிரிக்க நாடுகளில் இந்த அளவு 37 வீதமாகவும் ஐரோப்பாவில் 25 வீதமாகவும் உள்ளது.
Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger