முஸ்லிம்களை திட்டமிட்டு கருவறுத்த காவல்துறை – காவல்துறையினரின் காவி வெறி : முன்னரே திட்டமிடப்பட்டதற்கான ஆதாரங்கள்

இந்த உலகம் டிசம்பர் 21ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று அழியப்போகின்றது என்ற மூட நம்பிக்கைக்கு எதிராக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வெளியிட்ட பிரசுரத்திற்காக எந்த வழக்கும் போட சட்டத்தில் இடம் இல்லை.

வள்ளலார் ஏற்றிய தீபம் அணைந்ததால், உலகம் அழியப்போகிறது என்றால் அந்த தீபத்துக்கு முன்னரே வள்ளலார் மரணித்துவிட்டாரே என்ற கருத்து மத நம்பிக்கையைப் புண் படுத்துவது கிடையாது. முகம்மது நபி (ஸல்) அவர்கள் இறந்துவிட்டார்கள் என்று யாராவது கூறினால் அவர்கள் இஸ்லாத்தை இழிவுபடுத்திவிட்டார்கள் என்று அறிவுடையோர் கூற மாட்டார்கள்.
அதுபோன்ற ஒரு கருத்தை வெளியிட்டது எந்தவிதமான குற்றச் செயலிலும் சேராது என்பதுதான் உண்மை. இந்தப் பிரசுரத்திற்காக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று இந்து முன்னணியினர் புகார் கொடுத்தார்கள் என்பதற்காக சட்டம் தெரிந்த எந்த அதிகாரியும் வழக்குப் போடமாட்டார்.
மேலும் வள்ளலார் உருவ வழிபாட்டை எதிர்த்தவர். இறைவனை ஒளி வடிவமாகவே வழிபடவேண்டும் என்று பிரச்சாரம் செய்து இந்து மதத்தை எதிர்த்தவர். சிலை வழிபாடு நடத்தும் இந்துமுன்னணியினர் வள்ளலாருக்காக வக்காலத்து வாங்குவதற்கு கலவரம் ஏற்படுத்துவதே காரணம் என்பதை அறிவுள்ள அதிகாரிகள் உணர்ந்து கொள்வார்கள்.
ஆனால் இந்து முன்னணி கொடுத்த புகாரின் பேரில் டிஎன்டிஜே மாவட்ட மற்றும் கிளை நிர்வாகிகள் மீது உயர் அதிகாரிகள் மூலம் வழக்குப் பதிவு செய்யப்பட்டது முஸ்லிம்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தத்தான் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
வழக்குப் போட்டதுடன் நள்ளிரவில் கதவை உடைத்துக் கொண்டு போய் பெண்களைத் தரக்குறைவாகப் பேசி, ஆண்களைத் தரதரவென அடித்து இழுத்து வந்ததும் முஸ்லிம்களை அடக்கி வைக்க வேண்டும் என்று அதிகார வர்க்கம் திட்டமிட்டு நடத்திய சதியாகும்.
இப்படி நள்ளிரவு அராஜகம் நடத்தினால் டிஎன்டிஜேயினர் போராட்டம் நடத்தலாம். அதில் தக்க பாடம் கற்பித்தால் இனிமேல் எந்த முஸ்லிம் இயக்கத்திற்கும் போராடத் துணிவு இருக்காது என்று அதிகார மட்டத்தில் ஆலோசித்து முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
முற்றுகைப் போராட்டம் என்பது அனுமதியின்றி கைதாவதுதான் என்றாலும் முற்றுகைப் போராட்டம் நடத்தவருவோர் தங்கள் உணர்வுகளைக் காட்ட சிறிது நேரம் வழங்கி அதன்பின் கைது செய்வதுதான் இதுவரை நடைமுறையாக உள்ளது. ஆனால் மக்கள் சிறிது சிறிதாக வர ஆரம்பித்தவுடன் தலைவர்கள் வருவதற்கு முன்பே மக்களை இழுத்துச் சென்றதும், பாஷை தெரியாத வெளி மாநிலப் படைகளை குவித்தும், உத்தரவிடவேண்டிய அதிகாரிகளே ஒரு கான்ஸ்டபிள் தரத்திற்கு இறங்கி தடியடி நடத்தியதும் ஒட்டு மொத்த மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக நடத்தப்பட்டதுதான்.
தவ்ஹீத் ஜமாஅத்தினர் வாகனங்களை சேதப்படுத்தவில்லை. கல்வீசி போலீஸைத் தாக்கவில்லை. தலைவர்கள் வந்தபிறகுதான் கைதாவோம் என்று கூறியது தடியடிக்குரிய காரணம் இல்லை. முதல்வர் கூட்டிய அதிகாரிகள் மாநாட்டுக்குப் பின்னர் இரண்டு தடவை வன்முறை ஏற்பட்டுள்ளது. இவர்கள் எதற்கெடுத்தாலும் போராட்டம் – முற்றுகை என்று கிளம்பி விடுகிறார்கள். எனவே இனிமேல் இது போன்ற சமயங்களில் நையப்புடைத்து விரட்டவேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது தெரிய வருகிறது.
ஆனால் அல்லாஹ் இவர்களின் சதித் திட்டத்திற்கு படுதோல்வியை அளித்தான். தடியடிக்குப் பிறகு அந்த இடம் மயானமாகக் காட்சி தரும். அதைப்பார்த்தால் எவருக்கும் போராட்டம் நடத்த துணிவு வராது. ஆனால் 200 நபர்கள் வந்தவுடன் தடியடி நடத்த ஆரம்பித்த காவல்துறை, எதற்கும் அசையாமல் உறுதியாக ஆண்களும் பெண்களும் நின்றதைப் பார்த்து பின் வாங்கினார்கள். மேலும் இச்செய்தியறிந்து அங்கு இரண்டாயிரத் திற்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் குழுமினார்கள்.
இது திட்டமிட்டு நடத்தப்பட்ட கொலை வெறியாட்டம்:
கடந்த 22.12.12 சனிக்கிழமை அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய முற்றுகைப் போராட்டத்தின்போது முஸ்லிம்கள் மீது காவல்துறையினர் நடத்திய காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் என்பது ஏதோ எதேச்சையாக நடந்தது என்று யாரும் தவறாக எண்ணிவிடக்கூடாது.
இந்த போராட்டத்தில் முஸ்லிம்களை திட்டமிட்டு கருவறுக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிய காவல்துறை செய்த திட்டமிட்ட சதிச் செயல்தான் இந்த காட்டு மிராண்டித் தனமான தடியடித் தாக்குதல்.
ஆம்! போராட்டம் துவங்குவதற்கு முன்பே போராட்ட க்களத்தில் எண்ணற்ற போலீசார் குவிக்கப் பட்டிருந்தனர். நமது சகோதரர்களில் சிலர் அந்த போலீசாரை கவனித்தபோது அங்கு குவிக்கப்பட்டிருந்த பெரும்பாலான போலீசார் தங்களது சீருடையில் அவர்கள் பெயர் பொறிக்கப்பட்ட பேட்ஜுகள் இல்லாமல் தாங்கள் யார் என்பதை வெளிக்காட்டாத திருடர்கள் போல காட்சி தந்துள்ளனர். சுருங்கச் சொல்வதாக இருந்தால் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்த திருடர்களாகவே போலீசார் மாறியுள்ளனர்.
தடியடி நடத்தும்போது தாங்கள் யார் என்பதை முஸ்லிம்கள் அறிந்து கொள்ளக்கூடாது என்பதற்காகத்தான் இந்த அயோக்கியத்தனமான வேலையை போலீசார் செய்துள்ளார்கள் என்பது தடியடிக்குப் பிறகுதான் நமக்குத் தெரிய வந்தது.
அதற்கு முன்பாகவே சுதாரித்துக் கொண்ட நமது சகோதரர்கள் போலீசார் தங்களது பெயர்கள் பதித்த பேட்ஜு இல்லாமல் நின்றிருந்ததை படம் பிடித்தனர். அந்த புகைப்படங்கள் இதோ:
இதன் மூலம் முஸ்லிம்களை கருவறுக்க வேண்டும் என்று முன்கூட்டியே இவர்கள் திட்டமிட்டது அம்பலமாகியுள்ளது.
அதுமட்டுமல்லாமல் 21.12.12 வெள்ளிக்கிழமை அன்று நள்ளிரவு 2.30 மணிக்கு நமது நிர்வாகிகளது வீடுகளுக்குள் அத்துமீறி புகுந்த காவல்துறையினர் நமது தென்சென்னை மாவட்டத்தலைவர் அப்துர்ரஹீம் அவர்களது இல்லத்திற்குச் சென்று அவர் குடியிருக்கக்கூடிய வீட்டு உரிமையாளரை நள்ளிரவில் எழுப்பி, “தீவிரவாதிகளுக்கெல்லாம் ஏன் வீடு வாடகைக்கு விடுகின்றாய்? என்று கேட்டு இஸ்லாமிய சமுதாயத்தையே தீவிரவாதிகளாகச் சித்தரித்துள்ளனர்.
அதுமட்டுமல்லாமல் மாவட்ட துணைச் செயலாளருடைய வீட்டு காம்பவுண்டுக்கு வெளியில் செருப்புகள் அதிகமாகக் கிடந்ததைப் பார்த்த இந்தக் காவித்துறையினர், “இவ்வளவு செருப்புக்கள் வெளியில் கிடக்கின்றதே! இது என்ன வீடா? அல்லது வேற எதுவும் தொழில் செய்யும் இடமா?” என்று கேட்டுள்ளனர். மேலும் நமது சகோதரிகளிடத்திலிருந்த இரண்டு செல்போன்களையும் பிடுங்கிச் சென்றுள்ளனர். செல்ஃபோன்களை பிடுங்கிச் சென்றதன் மூலம் போலீசார் ராக் கொள்ளையர்களாக மாறியுள்ளனர்.
உலகம் அழியப்போகின்றது என்று சொல்லி மக்களுக்கு பீதியுண்டாக்கியவர்களை கைது செய்யத் துப்பில்லாத காவல்துறையினர் அந்த பீதியை போக்கும் வகையில் துண்டுப் பிரசுரம் விநியோகித்த நமது சகோதரர்கள் வீடுகளில் நள்ளிரவில் அத்துமீறி புகுந்து காவி விஷம் கக்கியுள்ளதை பார்க்கும்போது, முஸ்லிம்களை கருவறுக்க வேண்டும் என்ற வெறியோடு திட்டமிட்டு களம் இறங்கியுள்ளது புலப்படுகின்றது.
காவல்துறையின் வெறியாட்டத்தில் பாதிக்கப்பட்டோர் :
தடியடியின்போது குன்றத்தூர் அப்துல்காதர் என்ற சகோதரருக்கு முகத்தில் தாக்குதல் நடத்தியுள்ளது காவல்துறை,
திருவள்ளூரைச் சேர்ந்த 60 வயது முதியவரான நாசர் அவர்களை காட்டுமிராண்டித்தனமாக போலீசார் தாக்கியதில் அவரது கை உடைந்து எலும்பு முறிவு ஏற்பட்டது.
அதுமட்டுமல்லாமல் கால் ஊனமுற்ற சகோதரரான நந்தனம் பகுதியைச் சேர்ந்த அன்வர் அவர்களை முகத்தில் தாக்கியது இந்த காவல்துறை.
இவர்களது இந்த வெறியாட்டத்திற்கு 8வயது சிறுவனும் விதிவிலக்கல்ல. போராட்டத்தில் பங்கு கொண்ட 8வயது சிறுவனை மண்டையில் தாக்கி அவனது மண்டையை உடைத்து அராஜகம் புரிந்துள்ளனர்.
இனிமேல் முஸ்லிம்கள் நடத்தும் போராட்டங்களில் தடியடி நடத்துவது என்று எடுக்கப்பட்டுள்ள முடிவை முறியடிக்க வரும் சனிக்கிழமை (29.12.2012) மிகப் பெரும் கண்டனப் பொதுக்கூட்டத்தை டிஎன்டிஜே அறிவித்துள்ளது. சம்பந்ததப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கும்வரை தொய்வில்லாத தொடர்போராட்டத்தையும் மாநிலத் தலைமை அன்று அறிவிக்க உள்ளது.
Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger