திருமணமாகி இரண்டு மாதங்களில் குழந்தை - கணவன் அதிர்ச்சி

திருமணமாகி இரண்டு மாதங்களில் பெண்ணொருவர் குழந்தையைப் 
பிரசவித்துள்ளார். இந்த விபரீதச் சம்பவம் வவுனியாவில் இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் வவுனியாவைச் சேர்ந்த ஒருவரை கடந்த மே மாதம் திருமணம் செய்துள்ளார்.

இந்நிலையில் குடும்ப வாழ்க்கையை தொடர முன்னர் தனது வயிற்றில் கட்டி உள்ளதாகவும் அதனை சத்திரசிகிச்சை செய்து அகற்றவுள்ளதாகவும் அவர் கணவனுக்கு கூறியதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனைத் தொடர்ந்து குறித்த பெண் திடீரென்று நேற்று முன்தினம் அதிகாலை வவுனியாவில் குழந்தையென்றை பிரசவித்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியுள்ள கணவன் உடனடியாகவே குழந்தையையும் குறித்த பெண்ணையும் வாகனம் ஒன்றில் யாழ்ப்பாணம் அழைத்து வந்து மாமியார் வீட்டில் நடந்தவற்றைக் கூறி மனைவியையும் அவர் பிரசவித்த குழந்தையையும் விட்டுச் சென்றுள்ளார்.

அத்தோடு அவர் சீதனங்களாக பெற்ற நகை பணம் என்பவற்றையும் திரும்ப கொடுத்துள்ளார்.


இதுதொடர்பாக பெண்ணின் வீட்டார் தீவிரமாக விசாரித்த போது யாழ்ப்பாணத்திலுள்ள ஆச்சிரமமென்றிலுள்ள துறவியொருவரே காரணமென்று தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்து பெண்ணின் வீட்டார் குறித்த துறவியை சென்று விசாரித்த போது ஆரம்பத்தில் அதனை ஏற்க மறுத்த அவர் பின்னர் ஒருவழியாக அதனை ஏற்றுக் கொண்டு குழந்தைக்கு தானே தகப்பன் என்றும் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து உடனடியாகவே அவர் தனது ஆச்சிரமத்தை பூட்டிவிட்டு திறப்புக்களை அருகிலுள்ளவர்களிடம் ஒப்படைத்து விட்டு தலைமறைவாகி விட்டதாக தெரிவிக்கப்படுகிறது
Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger