காரல் மீன்வரத்து அதிகரிப்பு - மீனவர்கள் மகிழ்ச்சி!

காரைக்கால்: காரைக்கால் மீனவர்கள் வலையில், மருத்துவ குணம் வாய்ந்த காரல் மீன்வரத்து அதிகம் கிடைப்பதால், மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மீன்பிடி தடைக்காலம் முடிந்த காலம் முதல், காரைக்கால் மீனவர்கள் வலையில் மீன்வரத்து குறைவாகவே உள்ளது. குறிப்பாக, பெரிய வகை மீன்களான பாறை, திருக்கை, வஞ்சிரம், கொடுவா உள்ளிட்ட மீன்கள் அதிகம் கிடைக்காததால் மீனவர்கள் கவலையில் இருந்தனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக கால்சியம் சத்து அதிகம் உள்ள காரல்வகை மீன்கள் அதிகம் கிடைத்து வருகிறது. 5 செ.மீ முதல் 10 செ.மீ வரை நீளமும், 5 செ.மீ அகலமும் கொண்ட இவ்வகை மீன்களை பத்தியக்குழம்பு வைத்து சாப்பிடுவார்கள். மேலும், ஏழை எளிய மக்கள் இந்த வகை காரல் வகை மீன்களையே அதிகம் வாங்கி செல்வார்கள்.

தற்போது அதிகம் கிடைக்கும் இந்த வகை காரல் வகை மீன்கள் 50 கிலோ கொண்ட ஒரு பெட்டி ரூ.1500 முதல் ரூ.2000 வரை விலை போகிறது. கிலோவாக வாங்கினால், ரூ.30 முதல் ரூ.40 வரை விலை போகிறது. உள்ளூர் மார்க்கெட்டுக்கு போக, மீதி உள்ள மீன்கள் கேரளாவுக்கு ஏற்றுமதியாகிறது. பெரிய வகை மீன்கள் கிடைக்காமல் கவலையில் இருந்த மீனவர்கள் காரல் வகை மீன்வரத்தால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger