முதியோர் இல்லத்தில் மூதாட்டி மரணம் - திருமங்கலக்குடி குறிச்சிமலை கிளையில் நல்லடக்கம்.


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் பண்டாரவாடையில் இயங்கி வரும் முதியோர் இல்லத்தில் கடந்த 30.12.12 ஞாயிற்றுக்கிழமை அன்று என்பது வயது மதிக்கதக்க மூதாட்டி இறந்து விட்டார்கள் இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்.

அன்னாரது ஜனாஸா நல்லடக்கம் 31.12.12 திங்கட்கிழமை அன்று திருமங்கலக்குடி குறிச்சிமலை பொது மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

ஜனாஸா நல்லடக்கம் செய்ய அனுமதி தந்து உதவி செய்து நாட்டாண்மை, பஞ்சாயத்து, ஜமாதார்கள் மற்றும் இமாம் ஆகியோர் ஜனாஸா தொழுகையில் கலந்து கண்டனர்.

இதற்கு முன் முதியோர் இல்லத்திலிருந்து  ஒரு ஜனாஸாவை திருமங்கலக்குடி - குறிச்சிமலை சுன்னத்வல் ஜமாஅத் பொது மையவாடியில் நல்லடக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது. 

 திருமங்கலக்குடி - குறிச்சிமலை நாட்டாண்மை, பஞ்சாயத்தார்களுக்கு மறுமையில் நற்கூலியை வழங்க எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்க வேண்டுகிறேன்.





























நன்றி - tvtntj  
Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger