‘இனவாதத்தை விதைக்கும் பொது பல சேனா அமைப்பை தடைசெய்க!’ – ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் 2 வது பொதுக்குழுவில் தீர்மானம்


கடந்த 06-01-2013 ஆம் திகதி கொழும்பு நிவ் டவுண் மண்டபத்தில் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் 2 வது பொதுக்குழு இனிதே நடைபெற்றது. தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் பொதுச் செயலாளர் கோவை ரஹ்மதுல்லாஹ் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இப்பொதுக் குழுவில் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் தலைவர் ஆர்.எம்.ரியாஸ் அவர்கள் ‘நாம் கடந்து வந்த பாதை’ எனும் தலைப்பில் உரை நிகழ்த்தியதோடு, செயலாளர் அப்துர் ராஸிக் அவர்களினால் ‘தவ்ஹீத் எழுச்சி மாநாடு ஏன்?’ எனும் அறிமுக உரையும் நிகழ்த்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.நாடலாவிய ரீதியில் இயங்கக் கூடிய 38 கிளைகளின் நிர்வாக உறுப்பினர்கள் கலந்து கொண்ட இப்பொதுக் குழுவின் இறுதியில் பொதுக் குழு தீர்மானங்களும் வாசிக்கப்பட்டமை சிறப்பம்சமாகும்.
வாசிக்கப்பட்ட பொதுக் குழு தீர்மானங்கள்
1. கடந்த இரண்டு தசாப்தங்களாக இலங்கையில் ஏற்பட்டிருந்த பயங்கரவாதம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு நாட்டில் சுதந்திரமும், சுபீட்சமும் மலர்ந்திருக்கும் இக்கால கட்டத்தில், இனங்களுக்கு இடையில் பிளவை உண்டாக்கும் விதமாக நாட்டின் பல பகுதிகளிலும் கட்டவிழ்த்து விடப்படும் இனவாத செயல்பாடுகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். இனங்களுக்கு இடையில் பிளவை உண்டாக்கி இனக் கலவரத்தை தோற்றுவிக்கும் விதமாக செயல்பாடும் ஷபொது பல சேனா| என்ற அமைப்பை அரசாங்கம் தடை செய்ய வேண்டும் என இப் பொதுக் குழு வேண்டிக் கொள்கின்றது.
2. இஸ்லாத்தையும், இஸ்லாத்தின் இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களையும் அவமதிக்கும் விதமாக கேளிச் சித்திரங்கள், கட்டுரைகள், திரைப்படங்கள் போன்றவை வெளியிடப்படுகின்றன. சுமார் 200 கோடி மக்கள் பின்பற்றும் ஒரு தூய மனிதரையும், தூய்மையான மார்க்கத்தையும் அவமானப்படுத்த நினைப்பவர்கள் இது போன்ற செயற்பாடுகளை உடனடியாக நிறுத்த வேண்டும். ஒரு மதத்தை கேவலப்படுத்தி அதை பின்பற்றுபவர்களின் மனதை புன்படுத்துபவர்களை அந்தந்த நாட்டு அரசுகள் கடுமையாக தண்டிக்க வேண்டும் என இப் பொதுக் குழு வேண்டிக் கொள்கின்றது.
3. முஸ்லிம்களை தீவிரவாதிகளாகவும், குர்ஆனை தீவிரவாதத்தை போதிக்கும் வேதமாகவும் சித்தரித்து கமல்ஹாசன் நடிப்பில் வெளிவரவிருக்கும் ஷவிஸ்வரூபம்| திரைப்படத்தை இலங்கையில் திரையிடுவது தடை செய்யப்பட வேண்டும். ஷதிரைப்பட வெளியீட்டுக் கூட்டுத் தாபனம் மற்றும் இலங்கை அரசு ஆகியவை இது தொடர்பாக கவனம் எடுத்து இந்தப் படத்தை தடை செய்ய வேண்டும் என இப்பொதுக் குழு கேட்டுக் கொள்கின்றது.
4. ஜனநாயகம் மலர்ந்து, நாட்டு மக்கள் அனைவரும் அமைதியாக வாழும் இக்கால கட்டத்தில் நாடு முழுவதும் பள்ளிவாசல்கள் மற்றும் இஸ்லாமிய மதத் தளங்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களும், இனத் துவேச செயல்பாடுகளும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். இனத் துவேசத்தைத் தூண்டும் யாராக இருந்தாலும் அரசு பாரபட்சமின்றி அவர்களை உடனடியாக தண்டிக்க வேண்டும் என இப் பொதுக் குழு கேட்டுக் கொள்கின்றது.
5. சிறுவர்களுக்கு எதிரான ஷசிறுவர் துஷ்பிரயோகம்| மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் போன்றவற்றை தடுப்பதற்கு அனைத்துத் தரப்பாரும் முன்வர வேண்டும். சிறுவர்களுக்கும், பெண்களுக்கும் எதிரான செயல்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இந்நிலையில் இந்த குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை அரசாங்கம் கடுமையாக தண்டிப்பதுடன், பெண்களையும், சிறுவர்களையும் பாதுகாப்பதற்கு இஸ்லாமிய சட்டவாக்கம் தான் சிறந்த வழிகாட்டலாகும். ஆகவே, பெண்களை பாதுகாக்கும் விஷயத்திலும், சிறுவர் உரிமைகளைப் பாதுகாக்கும் விஷயத்திலும் இஸ்லாம் சொல்லும் வழி முறைகளை நடை முறைக்குக் கொண்டுவர வேண்டும் என இப் பொதுக் குழு கோரிக்கை வைக்கின்றது.
6. இன, மத, பால் அடிப்படையில் இனிமேல் பாடசாலைகள் எதுவும் ஆரம்பிக்கப்படாது என்று கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இதே நேரம் இன, மத, பால் அடிப்படையில் பாடசாலைகளை அமைப்பது பிரிவினையை உண்டாக்கும் என்று அமைச்சர் டலஸ் அழகப்பெருமவும் கருத்து வெளியிட்டுள்ளார். இந்தக் கருத்துக்கள் ஏற்புடையதல்ல. முஸ்லிம்கள் தங்கள் கல்வியுரிமையை பெற்றுக் கொள்ளவென பன்னெடுங் காலமாக போராடி தனிப் பாடசாலை உரிமையை பெற்றுக் கொண்டுள்ளார்கள். இதை இல்லாதொழிப்பது என்பது சிறுபான்மை மக்களின் உரிமை பரிப்பதெற்கு சமனானதாகும். அது மட்டுமல்லாமல் ஆண், பெண் கலவன் பாடசாலைகளை உருவாக்குவது ஒழுக்கத்தையும், ஒழுக்க விழுமியங்களையும் இல்லாதொழிக்கும் ஒரு செயல்பாடாகும். அதுமட்டுமன்றி ஒவ்வொரு சமூகத்தவர்களுக்கும் ஒவ்வொரு கலாசாரம் இருக்கின்றது. ஆண், பெண் கலவன் பாடசாலைகள் மூலம் பல் சமூகத்தின் கலாசாரங்களும் ஒன்றாகக் கலந்து கலாசார சீர் கேடுகள் உருவாகும். இன, மத, பால் ரீதியிலான பாடசாலைகளுக்கு தடை விதிப்பது சிறுபான்மை மக்களின் உரிமைகளைப் பரிப்பதாகும் என்பதினால் இன, மத, பால் ரீதியான பாடசாலைகளை உருவாக்குவதை தவிர்த்து கலவன் பாடசாலைகளை உருவாக்க வேண்டும் என்ற கருத்து ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாகும் என்பதை இப் பொதுக் குழு தெரிவித்துக் கொள்கின்றது.
7. அரசியல் யாப்பின் 13வது சரத்தை இல்லாதொழிக்க வேண்டும் என்று இனவாதம் பேசும் சிலர் கருத்து வெளியிட்டு வருவதும் நாம் அடிக்கடி கேள்விப்படும் ஒன்றாக இருக்கின்றது. அரசியல் யாப்பின் 13வது சரத்து என்பது அதிகார பரவல் முறையை அங்கீகரிப்பதாகவும், சிறுபான்மை மக்களின் உரிமைகளை பெற்றுக் கொள்ள ஒரு வாய்பாகவும் இருக்கிறது. அதனை இல்லாதொழிப்பதென்பது சிறுபான்மை மக்களுக்கு இழைக்கும் மிகப் பெரும் துரோகமாகும் ஆகவே 13வது சரத்தை இல்லாதொழிப்பதோ, மாற்றி அமைப்பது என்பதோ தேவையற்ற ஒன்றாகும் என்று இப் பொதுக் குழு கருதி, 13வது சரத்துக்கெதிராக கருத்துத் தெரிவிப்பவரக்ளை வன்மைகயாகக் கண்டிக்கின்றது.
8. முஸ்லிம்களையும், இஸ்லாத்தையும் கொச்சைப்படுத்தி இஸ்லாத்தின் தூய கருத்துக்களை கேளியும், கிண்டலும் செய்து இலங்கையில் சுமார் 20க்கும் மேற்பட்ட இணையதளங்கள் இயங்குகின்றன. இவையனைத்தையும் அரசாங்கம் தடை செய்ய வேண்டும் என இப்பொதுக் குழு வேண்டிக் கொள்வதுடன், இப்படியான தீய செயலில் ஈடுபடுபவர்களை இப் பொதுக் குழு வன்மையாக கண்டிக்கின்றது.
9. யுத்தம் முடிவுக்கு வந்து 43 மாதங்கள் கடந்த நிலையிலும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் இன்னும் மீள் குடியேற்றம் செய்யப்படவில்லை. அவர்களின் சொந்த இடங்களுக்கு செல்ல முடியாத நிலையில் தான் இன்னும் அவர்கள் இருக்கிறார்கள். ஆகவே அவர்களை அவசரமாக மீள் குடியேற்றம் செய்வதுடன் அவர்களுக்கான வாழ்வாதார உதவிகளையும் அரசு வழங்க வேண்டும் என இப்பொதுக் குழு வேண்டிக் கொள்கின்றது.
10. நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள பாரிய வெள்ளப்பெருக்கு காரணமாக பல இலட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு, வீடு வாசல்களை இழந்து தவிக்கும் இத்தருணத்தில் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் வெள்ள நிவாரணப் பணியில் முழு வீச்சுடன் ஈடுபட்டிருக்கிறது. இதே போன்று இலங்கை அரசம் போர்கால அடிப்படையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் ஜாதி, மத, இன வேறுபாடு இன்றி வழங்க வேண்டும் என இப்பொதுக் குழு வேண்டிக் கொள்கிறது.
11. இஸ்லாத்தை அதன் தூய வடிவில் நாடு முழுவதும் பிரச்சாரம் செய்யும் ஒரே அமைப்பான ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக எதிர் வரும் மார்ச் மாதத்தில் கிழக்கு மாகாணம் சம்மாந்துரையில் மாபெரும் கொள்கை எழுச்சி மாநாட்டை இலட்சக்கணக்காண மக்களை ஒன்று திரட்டி நடத்துவதென்று இப்பொதுக் குழு ஏகமனதாக தீர்மானிக்கின்றது.
 நன்றி - sltjweb.com 
Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger