இலங்கை: முஸ்லிம்களுக்கு எதிராக துவேஷப் பேச்சு!

இலங்கையில் தமிழர்களுக்கு எதிரானப் போக்கு சற்று ஓய்ந்துள்ள நிலையில் பெளத்தன இனவாதிகளின் கவனம் முஸ்லிம்கள் மீது குவிந்திருப்பதைப் போன்று முஸ்லிம் துவேஷக் கருத்துகள் வெளியிடப்பட்டு வருகின்றன.
அவ்வகையில், பொதுபலசேனா என்கிற பெளத்த வலதுசாரி அமைப்பின் செயலாளர் கூறியிருக்கும் கருத்து சர்ச்சையை உண்டாக்கியுள்ளது.

பொதுபல சேனா என்ற சிங்கள இனவாத அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் என்பவராவார். அண்மையில் கட்டுநாயக்காவில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசிய கலகொட, "இலங்கையில் உள்ள முஸ்லிம்கள் உலக இஸ்லாமிய அடிப்படைவாத்திற்கு இலங்கையை கொண்டு செல்லத் திட்டமிட்டு இனத்தைக் கட்டியெழுப்பி, வர்த்தகம் உட்பட அனைத்துத் துறைகளிலும் மிகவும் சூட்சுமான முறையில்  தற்போது முஸ்லிம் விரிவுப்படுத்தலை மேற்கொண்டு வருகின்றனர். எனவே முஸ்லிம் வர்த்தகத்தையும், முஸ்லிம் மருத்துவர்களையும் சிங்களவர்கள் நிராகரிக்க வேண்டும். மேலும் சிங்களவர்கள் கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்த வேண்டாம் " என்று பேசியுள்ளார்.
Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger