கடலில் இரண்டாகப் பிளந்தது கப்பல் : 26 ஊழியர் மீட்பு

சிங்கப்பூரைச் சேர்ந்த கப்பலொன்று சவூதி அரேபியாவிலிருந்து சரக்குகளை ஏற்றிக்கொண்டு வந்த போது மும்பை அருகே கடலில் இரண்டாக முறிந்து போனது. கப்பலிலிருந்த சுமார் 4,500 கொள்கலன்கள் (கண்டெய்னர்ஸ்) கடலில் மூழ்கியுள்ளன.

இதுபற்றிய விவரம் வருமாறு:

316 மீட்டர் நீளமுள்ள அந்த சரக்குக் கப்பல் சிங்கப்பூரைச் சேர்ந்தது.  சவுதி அரேபியாவில் இருந்து 4 ஆயிரத்து 500 கண்டெய்னர்களை ஏற்றிக்கொண்டு அரபுக்கடலில்  மும்பையிலிருந்து 840 (நாட்டிகல் மைல்)  நீர்க்கல் தொலைவில் வந்துகொண்டிருந்த போது  திடுமென்று கப்பலின் நடுப்பகுதியில் முறிவு ஏற்பட்டு கப்பல் இரண்டாகப் பிளந்தது. கப்பலில் இருந்த கொள்கலன்கள்  (கண்டெய்னர்கள்) கடலில் மூழ்கத் தொடங்கின. அந்தக் கப்பலில் இருந்த ஊழியர்கள் கடலில் தத்தளிக்கத் தொடங்கினர்.

இந்நிலையில், இச்சம்பவம் பற்றி அறிய வந்த மும்பை கடலோரக் காவல்படையினர் விரைந்து சென்று ஊழியர்கள் 26 பேரையும் மீட்டுள்ளனர்.  கப்பல் முறிந்துபோகக் காரணம் என்ன?  கொள்கலங்களில் கொண்டு வரப்பட்டதென்ன என்பவை குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.

Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger