பல்லிளிக்கும் கருத்து சுதந்திரம்

கருத்து சுதந்திரம் பற்றி வாய் கிழியப்பேசும் கருணாநிதி தனக்கு என்று வரும்போது மட்டும் அந்தர் பல்டி அடிப்பது ஏன்?

ரஜ்ஜாக்புதுக்கோட்டை
அப்படி பல்டி அடித்தால்தான் அவர் கருணாநிதி. அதுதான் அவரது சுயரூபம்.
இஸ்லாத்தை விமர்சிக்க இவருக்கும், மிருக புத்திரன்களுக்கும் கருத்து சுதந்திரம் உள்ளதாம். திமுகவின் அடுத்த தலைவர் யார் என்பதை பொதுக்குழு கூடி முடிவு செய்யும் என்று கூற குஷ்புவுக்கு உரிமை இல்லையாம்.
எதற்கெடுத்தாலும் பொதுக்குழு என்று கூறி கட்சியினரை ஏமாற்றி வந்தார் கருணாநிதி. அதைத்தான் குஷ்புவும் சொன்னார். இதற்காக திமுகவினர் செருப்பு வீசுவதும்அவரது வீட்டைத் தாக்குவதும்தான் கருணாநிதியின் கருத்து சுதந்திரம்.
குஷ்புவை மணியம்மையோடு ஒப்பிட்டு குமுதம் ரிப்போர்ட்டர் செய்தி வெளியிட்டால் கருணாநிதி அதை அப்பத்திரிகையின் கருத்து சுதந்திரம் என்று எடுத்துக் கொண்டாரா?
குமுதம் ரிப்போர்ட்டரை எரிப்பதும்அதன் ஆசிரியரைக் கைது செய்ய அறிக்கை விடுவதும்தனது கட்சிக்காரர்களை போராட்டத்தில் இறக்கி குமுதம் ரிப்போர்ட்டரை மிரட்டுவதும் எந்த வகை கருத்து சுதந்திரம்?
குமுதம் ரிப்போர்ட்டரின் ஆசிரியரும் உரிமையாளரும் தங்கள் வீட்டுப் பெண்களை வைத்து பிஸினஸ் செய்கிறார்கள் என்று குஷ்பு எழுதியது எந்த வகை கருத்து சுதந்திரம்?
இஸ்லாம் குறித்தும் முஸ்லிம்கள் குறித்தும் அவதூறு கிளப்பி கருத்து சுதந்திரம் நாடகம் போட்ட மிருகபுத்திரன்கள் அதே உணர்வோடு கருணாநிதியைக் கண்டிப்பார்களாகுஷ்புவைக் கண்டிப்பார்களாகுமுதம் ரிப்போர்ட்டரைக் கண்டிப்பார்களாஇதில் எது கருத்து சுதந்திரம் என்று தெளிவுபடுத்துவார்களா?
இஸ்லாம் குறித்து எழுதும்போது இஸ்லாத்திற்கு எதிராகக் காட்டிய ஆவேஷத்தை இவர்களால் கருனாநிதி, குஷ்பூ, குமுதம் ரிப்போர்ட்டர்கள் விஷயத்தில் காட்டமுடியாது. பிழைப்பு நாறிப்போய்விடும்.
கடந்த 17:24 பிப்ரவரி தேதியிட்ட உணர்வில் கருத்து சுதந்திரத்திற்கு எல்லை உண்டு. அதை மீறும்போது  எவனும் சகித்துக் கொள்வதில்லை. தனக்கு என்று வரும்போது மட்டும் கருத்து சுதந்திரம் இவர்களுக்குக் கசக்கிறது என்று நாம் எழுதியதை குஷ்பு விவகாரம்  உண்மைப்படுத்துகிறது.
Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger