பிரச்சாரகர் பயிற்சி வகுப்பு மே மாதம் ஆரம்பம்


ஏகத்துவக் கொள்கை சரியான முறையில் மக்களைச் சென்றடைவதில் பிரச்சாரகர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.. 
பிராச்சாரம் செய்வோர் சரியான ஞானமில்லாமலோ, ஞானமிருந்தும் தக்க முறையில் எடுத்துச் சொல்லும் வழிமுறை அறியாதவர்களாகவோ இருந்தால் அவர்களின் பிரச்சாரத்தினால் நன்மையை விட தீமையே அதிகமாகும். 
எனவே பேசும் திறன் வளர்க்கவும் பிரச்சாரகர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவைகளையும், அதற்கு ஏற்ற வகையில் சரியான ஞானத்தைப் பெற்றிடவும் ஒருமாத பயிற்சி வகுப்பு மே1 முதல் 30 வரை நமது மாநிலத் தலைமையகத்தில் நடக்கவுள்ளது.
சென்னையில் பீஜே, ரஹ்மதுல்லா, எம்.ஐ. சுலைமான் ஆகியோரின் மேற்பார்வையில் நடக்கும் இப்பயிற்சி முகாமில் உணவும் தங்குமிடமும் இலவசமாக செய்து தரப்படும் தேவையான நூல்களும் வழங்கப்படும். மாவட்ட, கிளை பரிந்துரையுடன் புகைப்படம் இணைத்து உடனே விண்ணப்பித்து பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
விண்ணப்பங்கள் வந்து சேரவேண்டிய கடைசி நாள் : ஏப்ரல் 20
குறிப்பு: இதற்கு முன் தலைமை சார்பில் நடத்தப்பட்ட ஒரு மாத பயிற்சி முகாமில் பயின்ற மாணவர்களுக்கும், பள்ளிக்கூடம் மற்றும் கல்லூரியில் பயின்று கொண்டிருக்கும் மாணவர்களுக்கும் அனுமதியில்லை
இப்படிக்கு,
மாநிலத்தலைமையகம்
Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger