தற்கொலைக் கலாச்சாரம்


ஓர் இளம் பெண்ணுக்கு வாந்தி மற்றும் வயிற்று வ­லி ஏற்படுகின்றது. ஏன் என்று பார்க்கும் போது அவள் ஒரு ப்ளஸ் டூ மாணவி! தேர்வு நேரம் நெருங்குகிறது. அதனால் இந்த வாந்தியும் வயிற்று வ­லியும் ஏற்பட்டுள்ளது என்று மனநோய் நிபுணர் சரியான காரணத்தைக் கண்டறிகின்றார்.

உள் மனதில் ஏற்படும் உயர் அழுத்தம் இப்படி உடல் ரீதியான அதிர்ச்சி அலைகளை, வாந்தி   பேதியை உருவாக்கி விட்டுள்ளது. இத்தனைக்கும் அந்த மாணவி கல்வியில் முதல் தரத்தை அடைந்தவள். தான் தோற்று விடுவோமோ என்ற எண்ணம், பரீட்சையைத் தட்டிக் கழித்து விட வேண்டும் என்ற எல்லைக்கு அவளைத் துரத்திச் சென்றுள்ளது.

சரியான ஆலோசனை, ஆறுதல் வழங்கப்பட்ட பிறகு அவள் சரியான மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற்றிருக்கின்றாள்.

இவ்வாறு இந்த மாணவியின் மன நிலை மட்டுமல்ல! மொத்த மாண சமுதாயத்தின் மன நிலையும் இப்படித் தான் ஆகி விட்டது. பள்ளி வாழ்க்கையில், பாடத்தில், பரீட்சையில் தோல்வி என்பது சகஜமான ஒன்று தான் என்று அதை எடுத்துக் கொள்வதற்கு மாணவ சமுதாயம் தயாரில்லை. தோல்வியை நாங்கள் தாங்கிக் கொள்ள மாட்டோம் என்ற நிலைக்குச் சென்று விட்டனர்.


இதன் உச்சக்கட்டம் தான் மாணவ, மாணவியரின் தற்கொலைகள். இராயப்பேட்டையைச் சேர்ந்த இனியன் ராஜ் என்ற மாணவன் தமிழ்நாடு தொழில்சார் துறை நுழைவுத் தேர்வில் (TNPCEE) குறைந்த மதிப்பெண் பெற்றதால் தற்கொலை செய்து கொள்கின்றான். அடுத்த நாள் குரோம்பேட்டை குருபாபு என்ற மாணவன் ப்ளஸ் டூ பரீட்சையில் தோல்வி என்பதால் தன்னுடைய உயிரைத் தானே பறித்துக் கொண்டான்.

National Crime Record Bureau Statistics  எனப்படும் தேசிய குற்றப் பதிவுத் துறையின் புள்ளி விபரப் படி, ஒவ்வொரு ஆண்டுத் தேர்வு முடிவு வெளியானதும் தமிழ்நாட்டில் மட்டும் 15 முதல் 29 வயதுக்குட்பட்ட மாணவர்கள் சராசரியாக 200 பேர் தற்கொலை செய்து கொள்கின்றார்கள். தேசிய அளவில் இந்த எண்ணிக்கை இரண்டாயிரத்தைத் தொட்டு விட்டது.

இது ஹிந்து நாளேடு தரும் உதிரத்தை உறைய வைக்கும் தகவல் ஆகும். ஜூனியர் விகடன் இந்த விவகாரத்தை அலசும் போது,

''தற்கொலைச் சாவுகள் பற்றிய புள்ளி விவரங்கள் நம்பிக்கைக் குரியவை அல்ல. ஏனென்றால் ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷனி­ருந்து திரட்டப்படும் தகவல்களை அடிப்படையாக வைத்துத் தான் நேஷனல் கிரைம் ரெக்கார்ட் பீரோ, தற்கொலை பற்றிய புள்ளி விவரங்களை வெளியிட்டிருக்கின்றது. ஆனால் மாநிலத்தில் நடக்கும் எல்லா தற்கொலைகளுமே போலீஸின் கவனத்திற்கு வந்து விடுவதில்லை. பல தற்கொலைகள் விபத்து என்றோ, நோயால் மரணம் என்றோ சொல்­ உண்மை மறைக்கப்பட்டு விடும். தேர்வு முடிவுகளால் தற்கொலைக்குத் தூண்டப்படும் மாணவர்களின் எண்ணிக்கை நாமெல்லாம் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு மிக மிக அதிகம்.

அது மட்டுமல்ல... தற்கொலை செய்து கொள்ள முயற்சிக்கும் ஐந்து பேரில் ஒருவர் தான் உயிர் இழக்கின்றார் என்கிறது புள்ளி விவரம். இந்தப் புள்ளி விவரத்தின் படி பார்த்தால் ஆண்டு தோறும் தமிழகத்தில் தற்கொலை செய்ய முயற்சிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை ஆயிரத்துக்கும் மேல் என்பது புரியும்'' என்று ஸ்நேகா தற்கொலைத் தடுப்பு மையத்தின்  இயக்குநர் கூறுகின்றார். என்று ஜூனியர் விகடன் குறிப்பிடுகின்றது.

இது நமது உதிரத்தை மேலும் உறை நிலைக்குக் கொண்டு செல்கின்றது. மாணவ மாணவியரின் மன அழுத்தத்தைக் கருத்தில் கொண்டு உரிய நேரத்தில் அவர்களின் உயிர் காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஸ்நேகா தற்கொலை தடுப்பு மையத்தின் இயக்குநர் இது பற்றிக் குறிப்பிடுகையில், இவ்வமைப்பில் தொடர்பு கொள்கின்ற 60 சதவிகிதம் பேர் நாங்கள் தற்கொலை செய்து கொள்ளப் போகிறோம் என்று தெரிவிப்பதாகக் கூறுகின்றார்.

மனோதத்துவ ரீதியிலான சிகிச்சை

ஒரு இழப்பு ஏற்படும் போது அது விதியினால் ஏற்பட்டது என்று நம்பி பொறுத்திருந்தால் அவனுக்கு ஏற்பட்ட இழப்பை சரி கட்டி வேறொரு சிறந்த பரிகாரத்தையும் வழங்கி விடுகின்றான்.

சங்கடம் ஏற்படும் போது ஒருவர், இன்னா­ல்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். அல்லாஹும் மஃஜிர்னீ ஃபீ முஸீபதீ வஅக்­ஃப்லீ கைரன் மின்ஹா (பொருள்: நாம் அல்லாஹ்வுக்குச் சொந்தமானவர்கள். அவனிடமே திரும்பச் செல்பவர்கள். அல்லாஹ்வே! எனக்கு ஏற்பட்ட சங்கடத்தில் எனக்குப் பகரமாக ஆக்குவாயாக!) என்று கூறினால் அதைவிடச் சிறந்த ஒன்றை அல்லாஹ் பகரமாக ஆக்கி விடுகின்றான் என நபி (ஸல்) அவர்கள் சொல்ல நான் கேட்டிருக்கின்றேன்.

(என் கணவர்) அபூஸலமா (ர­லி) இறந்த போது, 'முஸ்­லிம்களில் அபூஸலமாவை விட சிறந்தவர் யார் இருக்கின்றார்? நபி (ஸல்) அவர்களிடம் ஹிஜ்ரத் சென்ற குடும்பத்தில் அவர் முதல் மனிதராவார்' (என எண்ணினேன்) பின்பு நான் அந்தப் பிரார்த்தனையைக் கூறினேன். அல்லாஹ் எனக்கு ரசூல் (ஸல்) அவர்களைப் பகரமாக வழங்கினான். அறிவிப்பவர்: உம்மு ஸலமா (ர­லி) நூல்: முஸ்­லிம் 1525

இங்கு மார்க்கம் மேற்கண்ட பிரார்த்தனையை வெறும் மந்திர வார்த்தைகளாகச் சொல்ல வேண்டும் என்று கூறவில்லை. அவனது மன பாரத்தை இந்த வார்த்தைகள் கீழே இறக்கி வைக்கின்றது. அவனது பாரத்தை வாயாரச் சொல்­, அவனை அமைதிப்படுத்துகின்றது.

மன அழுத்தத்தைப் போக்க இதை விட மாமருந்து உலகில் கிடையவே கிடையாது.

மறுமை மீது மாறாத நம்பிக்கை

இஸ்லாமிய மார்க்கம் மறுமை நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டது. ஒருவர் இழந்து விட்ட இழப்புக்கு ஓர் ஈடாக, அவர் சந்தித்த சோதனைக்கு ஒரு பரிகாரமாக சுவனத்தைப் பரிசாக அளிக்கின்றான்.

அல்லாஹ் கூறுகின்றான்: இறை நம்பிக்கையுள்ள என் அடியான் அவனுக்குப் பிரியமான ஒருவரது உயிரை நான் கைப்பற்றி விடும் போது, நன்மை நாடிப் பொறுமை காப்பாரானால் சொர்க்கமே நான் அவருக்கு வழங்கும் பிரதிபலனாக இருக்கும். இவ்வாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர­லி) நூல்: புகாரி 6424, அஹ்மத் 9024

இதுவும் மன அழுத்தத்திற்கு ஒரு சிறந்த மருந்தாக அமைந்து விடுகின்றது.

இப்படி மேற்கண்ட இந்த வழிமுறைகளில் மன அழுத்தத்தைப் போக்கிக் கொள்ளாமல் தற்கொலை என்ற பெயரில் தன்னை அழித்துக் கொண்டால் அவன் இறை ஏற்பாட்டைக் குறை கூறியவனாக ஆகி விடுகின்றான். இதனால் தான் அவனுக்கு அல்லாஹ் சுவனத்தைத் தடை செய்து விடுகின்றான்.

இப்படித் தற்கொலை செய்பவர் போர்க்களத்தில் வந்து இஸ்லாத்திற்காக போராடியவராக இருந்தாலும் சரி தான்.

நபி (ஸல்) அவர்களும் இணை வைப்போரும் (கைபர் போரில்) சந்தித்துப் போரிட்டனர். நபியவர்கள் தம் படையின் பக்கம் சென்று விட, மற்றவர்களும் தம் படையின் பக்கம் சென்று விட்டனர். அப்போது அவர்களின் தோழர்களுக்கிடையே ஒருவர் இருந்தார். அவர், (எதிரிப் படையில்) போரில் கலந்து கொள்ளாமல் ஒதுங்கியிருப்பவர், படையி­ருந்து விலகி தனியே சென்றவர் என எவரையும் விட்டு வைக்காமல் அனைவரையும் தம் வாளால் வெட்டிய படி துரத்திச் சென்று கொண்டிருந்தார்.

நபித் தோழர்கள், ''இந்த மனிதர் போரிட்டதைப் போல் நம்மில் வேறெவரும் தேவை தீரப் போரிடவில்லை'' என்று கூறினார்கள். இதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள், ''அவரோ நரகவாசியாவார்'' என்று கூறினார்கள்.

அப்போது அந்தக் கூட்டத்தி­ருந்த ஒரு மனிதர், ''நான் அவருடன் இருக்கிறேன்'' என்று சொல்­லி விட்டுப் புறப்பட்டார். அவர் நின்ற போதெல்லாம் இவரும் நின்றார். அவர் விரைந்தால் இவரும் விரைந்தார்.  அவர் கடுமையாகக் காயப்படுத்தப் பட்டார். அதனால் சீக்கிரமாக மரணித்து விட விரும்பி தன் வாளின் (கைப்பிடி) முனையை பூமியில் ஊன்றி, அதன் கூரான முனையைத் தன் இரு மார்புகளுக்கு இடையில் வைத்து அந்த வாளின் மீது தன் உடலை அழுத்திக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.

(கண்காணிக்கச் சென்ற) அந்த மனிதர், அல்லாஹ்வின் தூதரிடம் வந்து, ''தாங்கள் அல்லாஹ்வின் தூதர் தாம் என்பதற்கு நான் சாட்சியம் அளிக்கிறேன்'' என்று சொன்னார். நபி (ஸல்) அவர்கள், என்ன விஷயம்? என்று கேட்டார்கள். அவர், ''சற்று முன்பு தாங்கள் ஒருவரைப் பற்றி நரகவாசி என்று கூறினீர்கள் அல்லவா? அதைக் கண்டு மக்கள் வியப்படைந்தனர். உங்களுக்காக நான் அவருடன் போய் வருகிறேன் என்று கூறி விட்டு அவரைத் தேடிப் புறப்பட்டேன். அவர் கடுமையாகக் காயப்படுத்தப்பட்டார். உடனே அவர் சீக்கிரமாக மரணிக்க விரும்பி வாளின் பிடி முனையைப் பூமியில் நட்டு, அதன் கூர் முனையைத் தன் இரு மார்புகளுக்கு இடையில் வைத்து அதன் மீது தன்னை அழுத்தி தற்கொலை செய்து கொண்டார்'' என்று கூறினார்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ''மக்களின் வெளிப் பார்வைக்கு ஒருவர் சொர்க்கத்திற்குரிய செயலைச் செய்வார். ஆனால் அவர் நரகவாசியாக இருப்பார். மக்களின் வெளிப் பார்வைக்கு ஒரு மனிதர் நரகத்திற்குரிய செயலைச் செய்து வருவார். ஆனால் அவர் சொர்க்கவாசியாக இருப்பார்'' என்று சொன்னார்கள். அறிவிப்பவர்: ஸஹ்ல் பின் ஸஅத் அஸ்ஸாயிதீ (ர­லி),  நூல்: புகாரி 2898

புனிதப் போர் என்ற பெயரில் நடைபெறும் தற்கொலைத் தாக்குதல்களும் இந்த அடிப்படையில் அமைந்தவை தான்.

ஜனாஸா தொழுகை இல்லை

இதுபோன்று தற்கொலை செய்து கொள்பவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் ஜனாஸா தொழுகை நடத்தவும் மறுத்து விட்டார்கள்.

ஒரு மனிதர் நோயுற்ற போது அவர் திடுக்கத்துக்குள்ளானார். அவருடைய அண்டை வீட்டுக்காரர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, ''அவர் இறந்து விட்டார்'' என்று சொன்னார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ''அவர் இறந்தது உனக்குத் தெரியுமா?'' என்று கேட்டார்கள். ''நான் அவரை (இறந்திருக்கக்) கண்டேன்'' என்று அம்மனிதர் கூறினார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ''அவர் இறக்கவில்லை'' என்று சொன்னார்கள். பிறகு அம்மனிதர், (நோயாளியிடம்) வந்ததும் அவர் கூரான ஈட்டியால் தன்னை அறுத்துக் கொண்டதைக் கண்டார். உடனே அம்மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ''அவர் இறந்து விட்டார்'' என்று தெரிவித்தார். நபி (ஸல்) அவர்கள், ''அவர் இறந்தது உனக்கு எப்படித் தெரியும்?'' என்று கேட்டார்கள். அதற்கு அம்மனிதர், ''அவர் தன்னிடமிருந்த கூரிய முனையுள்ள ஈட்டியால் அறுத்துக் கொள்வதை நான் பார்த்தேன்'' என்றார். ''நீ பார்த்தாயா?'' என்று நபி (ஸல்) கேட்க, அவர் ஆம் என்றார். ''அப்படியானால் நான் அவருக்குத் தொழுவிக்க மாட்டேன்'' என்று சொன்னார்கள். அறிவிப்பவர்: ஜாபிர் பின் ஸமுரா (ர­லி) நூல்: அபூதாவூத் 3185

புகாரியில் 6606வது ஹதீஸில், முஸ்­மான உயிரைத் தவிர வேறு எந்த உயிரும் சுவனம் செல்ல முடியாது என்று கூறுவதன் மூலம், தற்கொலை செய்தவன் காஃபிராகி விட்டான் என்று அடித்துச் சொல்­லி
 விடுகின்றார்கள்.

விதியின் மீது கொள்கின்ற நம்பிக்கை, மறுமையின் மீது கொள்கின்ற நம்பிக்கை, தற்கொலை செய்து விட்டால் ஜனாஸா தொழுகை இல்லை, சுவனம் செல்ல முடியாது என்று பல்வேறு அடிப்படைகளில் தற்கொலையை இஸ்லாம் வேரோடு கிள்ளி எறிகின்றது.

இப்படி இஸ்லாம் காட்டித் தரும் இந்த நம்பிக்கை மற்றும் வழிமுறைகளில் தான் தற்கொலையை ஒழிக்க முடியுமே தவிர வேறு எந்த வழிமுறையிலும் ஒழிக்க முடியாது என்பதை நாம் தெளிவாகப் பிரகடனப் படுத்துகின்றோம். இது தத்துவார்த்த அடிப்படையில் அல்ல! நடைமுறை செயல்பாடு அடிப்படையில் உலகப் புள்ளியியல் அடிப்படையில் நிரூபணமான உண்மையாகும். இந்த அடிப்படையில் தற்கொலை இல்லாத ஒரு சமுதாயத்தைப் படைக்க உலக மக்களை இஸ்லாத்தின் பால் வாருங்கள் என்ற அழைப்பை முன் வைக்கிறோம்.

அதே சமயம் முஸ்­லிம்களுக்கு மத்தியிலும் இந்தத் தற்கொலைகள் சில நடப்பதை மறுப்பதற்கில்லை. முஸ்­லிம்களுக்கு மத்தியிலும் இந்தத் தற்கொலைகள் நடப்பதற்கு முழு முதற் காரணம் மார்க்க அறிஞர்கள் தான்.

நபி (ஸல்) அவர்கள் தற்கொலையில் இறந்தவருக்குத் தொழுவிக்காமல் ஒதுங்கியிருக்கின்றார்கள். அது மட்டுமல்ல! தற்கொலை செய்தவன் முஸ்லிம் கிடையாது என்று தெளிவாக உணர்த்தியும் இருக்கின்றார்கள். அப்படியிருந்தும் இந்த மார்க்க அறிஞர்கள் எனப்படுவோர், நபி (ஸல்) அவர்களை விஞ்சிய மேதாவிகள் போன்று தற்கொலை செய்தவருக்கு ஜனாஸா தொழுகை நடத்துகின்றார்கள். தெரிந்தே இந்த     அக்கிரமத்திற்குத் துணை போகின்றார்கள். இது தான் முஸ்­லிம்களிடம் தற்கொலைச் சாவுகள் நடப்பதற்குக் காரணமாக அமைகின்றது. 

திருக்குர்ஆன் மற்றும் ஹதீஸ் அடிப்படையில் தற்கொலை என்பது எத்தகைய பாவம் என்பதை இந்த ஆ­ம்கள் தங்களின் பிரச்சாரத்தின் போது விளக்கியிருந்தால் மக்கள் விழிப்புணர்வு பெற்றிருப்பார்கள். ஆனால் அதைச் செய்யாமல் தற்கொலை செய்தவனுக்கு ஜனாஸா தொழுகை நடத்தி அதற்குத் துணை போகின்றார்கள் என்பது தான் வேதனை.

எனவே தற்கொலையைப் பற்றி மக்களிடம் விழிப்புணர்வுப் பிரச்சாரம் செய்து நிரந்தர நரகத்தைத் தரும் பாவமான தற்கொலையி­ருந்து நம்மையும் நமது சமுதாயத்தையும் காப்போமாக!!
நன்றி - tntjdubai 
Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger