பிளஸ்-2 ஆன்லைன் தனித்தேர்வு விண்ணப்பதாரர்களுக்கு நுழைவுச்சீட்டு இன்று முதல் பிப்.,21ம் தேதி வரை விநியோகம் செய்யப்படும். என்று அரசுத் தேர்வுத்துறை இயக்கம் செய்தி வெளியிட்டுள்ளது.
இதுகுறித்த அரசுத் தேர்வுத்துறை செய்திக் குறிப்பில்:
பிளஸ்-2 தனித்தேர்வர்களுக்கு மார்ச் மாதம் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைனில் பதிவு செய்த தேர்வர்களுக்கு இன்று முதல் பிப்ரவரி 21ம் தேதி வரை தேர்வுக்கூட அனுமதி சீட்டு வழங்கப்டவுள்ளது. பதிவு செய்த தேர்விடத்தின் அடிப்படையில் அருகில் உள்ள தேர்வு மையத்தில் பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆன்-லைனில் பதிவு செய்த விவரங்களின் அடிப்படையிலேயே தேர்வுக் கூட அனுமதிச் சீட்டும் அச்சடிக்கப்பட்டுள்ளது.
ஆன்-லைனில் விண்ணப்பிட்ட போது வழங்கப்பட்ட விண்ணப்பத்துக்குரிய 10 இலக்க எண்ணை தேர்வுக் கூட அனுமதிச் சீட்டு விநியோக மையத்தில் தெரிவித்து அனுமதிச் சீட்டை பெற்றுக் கொள்ளலாம். அனுமதிச் சீட்டில் பிழைகள் ஏதும் இருந்தால் "மேல்நிலை கூடுதல் செயலாளர், அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை-6' என்ற முகவரியில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ தொடர்பு கொள்ள வேண்டும்.
தேர்வு அனுமதிச்சீட்டில் புகைப்படம் பதிவாகாத தேர்வர்கள் பாஸ்போர்ட் அளவிலான 2 புகைப்படங்களை தேர்வு மையத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டும். அனுமதிச் சீட்டில் ஒரு புகைப்படத்தை ஒட்டி மைய முதன்மைக் கண்காணிப்பாளரிடம் சான்றொப்பம் பெறவேண்டும். மற்றொரு புகைப்படத்தினை தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளரிடம் ஒப்படைக்க வேண்டும்.
எழுத்துத் தேர்வு மற்றும் செய்முறை அடங்கிய பாடங்களில் செய்முறைத் தேர்வில் 40 மதிப்பெண்களுக்கு குறைவாக பெற்று தேர்ச்சி அடையாதவர்கள் கண்டிப்பாக மீண்டும் செய்முறைத் தேர்வு மற்றும் எழுத்துத் தேர்வுக்கு வரவேண்டும். 200 மதிப்பெண் கொண்ட செய்முறைத் தேர்வு மட்டும் உள்ள பாடத்தில் தேர்ச்சி பெறாதவர்களும் மீண்டும் வரவேண்டும்.
முதன்முறையாக தனித் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளவர்கள் பகுதி 1, பகுதி 2 மொழிப்பாடத்தாள் 2 மற்றும் பகுதி 3-ல் சிறப்பு மொழி(தமிழ்) எழுதும் தேர்வர்கள் கேட்டல், பேசுதல் திறன் தேர்வுகளை செய்ய வேண்டும். மொழிப் பாடங்களில் கேட்டல், பேசுதல், திறன் தேர்வு மற்றும் செய்முறை தேர்வு குறித்த விவரத்தை அந்தந்த தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளரை அணுகி தெரிந்து கொள்ளலாம்.
தத்கல் முறையில் ஆன்-லைனில் விண்ணப்பித்த தனித் தேர்வர்கள் மட்டும் பிப்ரவரி 22, 23 ஆகிய தேதிகளில் அரசுத் தேர்வுகள் இயக்ககத்திற்கு நேரில் சென்று அனுமதிச் சீட்டுகளை பெற்றுக் கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது
பிளஸ்-2 தனித்தேர்வர்களுக்கு மார்ச் மாதம் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைனில் பதிவு செய்த தேர்வர்களுக்கு இன்று முதல் பிப்ரவரி 21ம் தேதி வரை தேர்வுக்கூட அனுமதி சீட்டு வழங்கப்டவுள்ளது. பதிவு செய்த தேர்விடத்தின் அடிப்படையில் அருகில் உள்ள தேர்வு மையத்தில் பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆன்-லைனில் பதிவு செய்த விவரங்களின் அடிப்படையிலேயே தேர்வுக் கூட அனுமதிச் சீட்டும் அச்சடிக்கப்பட்டுள்ளது.
ஆன்-லைனில் விண்ணப்பிட்ட போது வழங்கப்பட்ட விண்ணப்பத்துக்குரிய 10 இலக்க எண்ணை தேர்வுக் கூட அனுமதிச் சீட்டு விநியோக மையத்தில் தெரிவித்து அனுமதிச் சீட்டை பெற்றுக் கொள்ளலாம். அனுமதிச் சீட்டில் பிழைகள் ஏதும் இருந்தால் "மேல்நிலை கூடுதல் செயலாளர், அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை-6' என்ற முகவரியில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ தொடர்பு கொள்ள வேண்டும்.
தேர்வு அனுமதிச்சீட்டில் புகைப்படம் பதிவாகாத தேர்வர்கள் பாஸ்போர்ட் அளவிலான 2 புகைப்படங்களை தேர்வு மையத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டும். அனுமதிச் சீட்டில் ஒரு புகைப்படத்தை ஒட்டி மைய முதன்மைக் கண்காணிப்பாளரிடம் சான்றொப்பம் பெறவேண்டும். மற்றொரு புகைப்படத்தினை தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளரிடம் ஒப்படைக்க வேண்டும்.
எழுத்துத் தேர்வு மற்றும் செய்முறை அடங்கிய பாடங்களில் செய்முறைத் தேர்வில் 40 மதிப்பெண்களுக்கு குறைவாக பெற்று தேர்ச்சி அடையாதவர்கள் கண்டிப்பாக மீண்டும் செய்முறைத் தேர்வு மற்றும் எழுத்துத் தேர்வுக்கு வரவேண்டும். 200 மதிப்பெண் கொண்ட செய்முறைத் தேர்வு மட்டும் உள்ள பாடத்தில் தேர்ச்சி பெறாதவர்களும் மீண்டும் வரவேண்டும்.
முதன்முறையாக தனித் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளவர்கள் பகுதி 1, பகுதி 2 மொழிப்பாடத்தாள் 2 மற்றும் பகுதி 3-ல் சிறப்பு மொழி(தமிழ்) எழுதும் தேர்வர்கள் கேட்டல், பேசுதல் திறன் தேர்வுகளை செய்ய வேண்டும். மொழிப் பாடங்களில் கேட்டல், பேசுதல், திறன் தேர்வு மற்றும் செய்முறை தேர்வு குறித்த விவரத்தை அந்தந்த தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளரை அணுகி தெரிந்து கொள்ளலாம்.
தத்கல் முறையில் ஆன்-லைனில் விண்ணப்பித்த தனித் தேர்வர்கள் மட்டும் பிப்ரவரி 22, 23 ஆகிய தேதிகளில் அரசுத் தேர்வுகள் இயக்ககத்திற்கு நேரில் சென்று அனுமதிச் சீட்டுகளை பெற்றுக் கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது
நன்றி - இந்நேரம்
Post a Comment