உலக 2வது எயிட்ஸ் தினம் பெப்ரவரி – 14


HIV
மனித குலத்தின் ஈருல வெற்றிக்கு கருவாக இருக்கின்ற திருமறைக் குர்ஆன் ஜாஹிலியாக்காலம் தொட்டு இன்றைய நவீன காலம் வரை ஏற்படுத்திய மாற்றங்களையும், சாதித்த சாதனைகளையும் எழுத ஆரம்பித்தால் பேனாவின் மைக்குப்பிகள் முடிவுற்று விடும். நாங்கள் வாழுகின்ற சமகால தேசிய, சர்வதேச சமூக அமைப்புக்கள் இஸ்லாத்திற்கு முற்றிலும் முரணான ஜாஹிலிய்யத்தின் அடிப்டை அடித்தளத்தில் அமைந்திருப்பதை அவதானிக்கிறோம்.
ஓவ்வொரு கணப்பொழுதும் நமது முஸ்லிம் சமூக அமைப்பில் அரங்கேற்றப்படும் அரக்கத்தனமான ஆபாச அலை மாபெரும் புயலாக ஆர்த்தெழுந்து நம்மை மூழ்கடிக்க முனைகிறது. நாகரீகம் என்ற பெயரில் அநாகரீகம் முஸ்லீம் சமூகத்தின் மீது முடுக்கி விடப்படுகின்ற தனித்துவத்தை தகர்த்து எறியக்கூடியவாறு அபாயம் ஏற்பட்டுள்ளது.
தகவல் தொழில் நுட்பத்தின் அபரிமிதமான வளர்ச்சி காரணமாக முஸ்லீம்கள் அதன் நண்மைகளை விட தீமைகளுக்கே அதிகம் ஆளாகின்ற ஒரு மோஸமான சூழல் உருவாகியுள்ளது. நவீன நாகரீகம் என்ற பெயரில் இளைஞர் யுவதிகளிடத்தில் கட்டுப்பாடற்ற உறவைத் தோற்றுவிக்கும் அபாயமும், ஆடைக் குறைப்பும், ஒழுக்கச் சீர் கேடுகளும் இன்று பரந்து காணப்படுகின்றது. முஸ்லீம்களைப் பாதுகாக்க வேண்டுமெனின், இன்றைய முஸ்லீம் பாடசாலைகள் இஸ்லாமிய மயப்படுத்தப்பட வேண்டும்.
இன்று பல் வேறுபட்ட சமூக தீமைகளுக்கு வழிகோலுவது கட்டுப்பாடற்ற ஆண்- பெண் உறவாகும். இன்று கல்வி கற்க பாடசாலை செல்லும் அதிகமான மாணவர்களின் புத்தகப்பையில் சினிமா நட்சத்திர காவாலிகளின் வண்ணப் புகைப்படங்கள், கிரிகெட் ஹீரோக்களின் ஸ்டிக்கர்கள், அழகு இராணிகளின் ஆபாசமான அசிங்கமான போட்டோக்கள், விரசமான ஆபாச நூல்கள், மஞ்சல் பத்திரிகைகள், புத்தகங்கள், நீலப் பட வீடியோ சீடிக்கள். காதல் கடிதங்கள், கையடக்க ரேடியோ, கையடக்க வீடியோ கெமரா போன், போன்ற பொருட்களைக் கானமுடிகின்றது. இவ்வாரு மாணவர்கள் பயம் எதுவுமின்றி இவைகளை பாடசாலைக்கு கொண்டு செல்லுகின்றனர். அது அதிபர் ஆசிரியர்களின் கட்டுப்பாடும் கண்டிப்பின்மையும், இஸ்லாமிய முதிர்ச்சியான அறிவு வழங்கப் படாமையும், மாணவர்களுக்கு சரியான வழிகாட்டல்கள், பண்பாடு, ஒழுக்கம் போன்றவை, போதிக்கப்படாமையுமே முக்கிய காரணங்களாக இருக்கின்றன.
மொத்தத்தில் முஸ்லிம் பாடசாலைகள் இஸ்லாமிய மயப்படுத்தப்படாமையே மிக முக்கிய காரணமாக இருக்கின்றது. அதே போன்றுதான் அதிகமான வாழிபர்கள் அந்நிய மத கலாசாரத்தை இஸ்லாமிய மத கலாச்சாரத்தைப் போன்று பின்பற்றி வருகின்றனர். அவர்களின் உடையைப் போன்று தமது உடையை அணிவதற்கு முயற்சிக்கின்றனர்
அல்லாஹ் குர்ஆனில்: நம்பிக்கை கொண்டோரே! யூதர்களையும், கிறிஸ்த்தவர்களையும், உங்கள் பாதுகாவலர்களாக்கிக் கொள்ளாதீர்கள்! அவர்கள் மற்றவர்களுக்குப் பாதுகாவலர்கள். உங்களில் அவர்களைப் பொருப்பாளராக்கிக் கொள்வோர் அவர்களைச் சார்ந்தவரே! அநீதி இழைத்த கூட்டத்திற்கு அல்லாஹ் நேர்வழி காட்ட மாட்டான். (அல் மாயிதா-51)
இன்னும் அதிகமான வாலிபர்களைப் பார்த்தால் நரகத்திற்கு கூட்டம் சேர்க்கின்ற சினிமா வேடர்களை பின்பற்றும் முகமாக அவர்கள் முடி வெட்டுவது போல தனது அழகான தலை மயிரை பாதிப் பகுதியை சிரைத்தும் மீதிப்பகுதியை விட்டும் விடுகின்றனர். இது பார்ப்பதற்கு ‘எலி கடித்த தேங்காய்ப் பாதியைப் போன்று” மிக அசிங்கியமாக இருக்கின்றது.
அதே போன்றுதான் தலை மயிருக்கு வித விதமான நிறங்களைப் போட்டு தங்களை அந்நியர் என்று காட்டாமல் காட்டிக்கொள்கின்றனர். “ஹீரோ” யாராவது தனது “ட்ரவுசரில்” ஒரு சிறிய ஓட்டை ஒன்றிட்கு பொத்தல் போட்டிருந்தால் தனது புதிதாக தைக்கக் கூடிய ஆடையிலும் அந்த போத்தனைக் காணலாம்.
இன்னும் தாடியுடைய விடயத்தைப் பொருத்த மட்டில் நமது வாழிபர்கள், வயோதிபர்கள் அனைவரும் காபீர்களையே பின்பற்றுகின்றனர். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். தாடியை வளருங்கள் மீசையைக் கத்தரியுங்கள். என்று சொன்னார்கள் இன்று பார்த்தோமேயானால் சில வயோதிபர்கள் மாத்திரம் தாடியை வளர்க்கின்றனர். ஆனால் இளைஞர்களின் பலர் வழிக்கின்றனர். வாழிபர்களைப் பார்த்தால் “’ஏன்டா தாடி வளர்த்து கேடி மாதிறித் திரிகின்றாய்” நீ என்ன காதலில் தோற்று விட்டாயா? என்று நண்பர்கள் கேலி பன்னுவார்கள்
என் இஸ்லாமிய வாழிபர் சமுதாயமே! நபி மொழியைப் பயந்து தாடியை வளருங்கள். காதலென்ற இம்சையை கலற்றி எறியுங்கள். இல்லறம் இனிக்க இஸ்லாத்தைப் பின்பற்றி இம்மையிலும் மறுமையிலும் வெற்றி அடையுங்கள்.
மதுவில் மூழ்கிய இளைஞர்கள்.
அல்லாஹ் குர்ஆனில் ‘நீங்களே உங்கள் ஆத்மாக்களை அழிவின் பக்கம் போட்டுக்கொல்ல வேண்டாம். என்று சொல்லிக்காட்டுகிறான்.
மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
யார் விஷம் குடித்து தற்கொலை செய்துகொள்கிறாரோ அவர் நரக நெருப்பில் என்றென்றும் நிரந்தரமாக அதைக் குடித்துக்கொண்டேயிருப்பார்.( முஸ்லிம் – 175).
நாகரீகம் என்ற போர்வையில் பல தீமைகளை நாமே தேடிக்கொள்கிறோம். இன்று எம் இளைஞர்களில் அதிகமானோர் புகை பிடித்தல் போதைப் பொருட்கள் தூல், கன்ஞா, அபின், போன்ற ஆற்கொள்ளி நோய்கலைப் பறப்பக்கூடிய தீய பொருட்களையெல்லாம் உபயோகிக்கின்றனர். மற்றும் இது போன்ற பல தீமைகளை நாகரீகம் என்று பறைசாற்றிக் கொண்டு தவறான பாதைக்கு தாமாகவே இழுத்துச் செல்லப்படுவதை காணக்கூடியதாக உள்ளது. இதே போன்று அதிகமான பெண்களும் புகைப்பிடிக்கின்றனர்.
இந்த நூற்றான்டில், ஒரு பில்லியன் மக்கள் புகைப்பழக்கம் தொடர்பான நோயால் இறக்கக் கூடிய வாய்ப்புக்கள் அதிகம் இருப்பதாக உலக சுகாதார ஸ்தாபனம் (றூழ) தன்னுடைய ஆய்வில் கூறுகின்றது.
அலை மோதும் நிர்வாணிகள்.
அல்லாஹ் குர்ஆனில் ‘ஆதமுடைய மக்களே! உங்கள் வெட்கத் தலங்களை மறைக்கும் ஆடையையும், அலங்காரத்தையும் உங்களுக்கு அருளியுள்ளோம். (இறையச்சம்) எனும் ஆடையே சிறந்தது. அவர்கள் சிந்திப்பதற்காக இது அல்லாஹ்வின் சான்றுகளில் உள்ளது.
(அல் குர்ஆன் – 07:26)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இரண்டு கூட்டத்தினர் நரகத்திற்குச் செல்லுவார்கள். அவர்களை இதுவரை நான் பார்த்ததில்லை. அவர்களில் ஒரு சாரார் மாட்டு வால்கழைப் போன்ற சாட்டைகலை கையில் வைத்திருப்பார்கள். (தம் கையில் ஆட்சியை வைத்துக்கொண்டு).அவற்றால் மக்களை அடிப்பார்கள். இன்னொறு சாரார் பெண்கள் அவர்கள் ஆடை அணிந்தும் நிர்வாணமாக இருப்பார்கள், அவர்கள் ஒய்யாரமாக நடப்பார்கள், மற்றவர்களை தன் பக்கம் ஈர்ப்பார்கள். அவர்களுடைய தலை (மயிர்கள்) ஒட்டகத்தின் திமில்களைப் போன்று இருக்கும். அவர்கள் சொர்க்கத்திற்கு செல்ல மாட்டார்கள். சொர்க்கத்தின் வாடையைக்கூட நுகர மாட்டார்கள்.                                                                       அப+ ஹ_றைரா (ரலி). (நூல் முஸ்லிம் – 4316)
இன்று நாகரீகம் என்ற பெயரில் பெண்கள் அறை குரை ஆடை அணிந்து கொண்டு வீதியில் ஆண்களை உசுப்பேத்தி விடுகின்றனர். இன்னும் தங்களின் ஆடைகள் மிகவும் இருக்கமாகவும், கட்டையாகவும், குட்டையாகவும், மெல்லியதாகவும், அணிந்து கொண்டு வீதி, வீதியாக பவணி வருகின்றனர். இதனைப் பார்க்கின்ற வாலிபர்கள் இவளை எப்படியாவது அடைய வேண்டும். என்று திரிகின்றனர் இதனால் பாலியல் துஷ்ப்பிரயோகம், கற்பழிப்பு, கூட்டு பலாத்காரம், பெண்கள் கடத்தப் படுதல், போன்றவை நம் நாட்டில் அதிகரிக்கின்றதற்கு காரணமாக அமைகின்றது.
என் இஸ்லாமிய சகோதரிகளே, தாய்மார்களே, இந்த நபிமொழியைப் படித்த பிறகும் இப்படி நடக்க உங்களுக்கெளுக்கு மணம் வருகின்றதா.? இறைவனைப் பயந்து முன்னையவர்களான அவ்வன்னையர்களைப் பின்பற்றி சுவனம் நுழைய முயற்சியுங்கள்.
சீரியலிள் சீரழியும் சமுதாயம்;.
அன்றோர் காலம் இருந்தது எல்லா வீடுகளும் குர்ஆன் சத்தத்தில் மூழ்கிய காலம் இன்றைய காலம் இருக்கின்றது எல்லா வீடுகளும் (வுஎ) ஷைத்தான் பெட்டி” இல் மூழ்கி அனைத்து அனாச்சாரத்தையும் வெட்கம், கூச்சமின்றி தாய், தந்தை, அண்ணன், தம்பி, தங்கை அனைவறும் சேர்ந்து வயது வந்த ஆண் – பெண்களும், சேர்ந்து கட்டிப்பிடித்து கொஞ்சுகின்ற காட்சியைப் பார்க்கின்றன.
காதலர் தினம் இஸ்லாத்தில் ஏற்புடையதா?
அறிவும் ஆராய்ச்சியும் அமோகமாய் முன்னேறிய இன்றய கால கட்டத்தில் மனிதர்களில் ஒரு சாரார் மௌட்டீகத்திற்கும். பிற்போக்கு சிந்தனைகளுக்கும் கூஜா தூக்குகின்ற அவல நிலையை இன்று கண்கூடாகக் கானுகிறோம். கற்காலத்திலிருந்து பொற்காலத்திற்குத் தாவிய மனிதன் மீண்டும் கற்காலத்திற்கே செல்கிறானோ என அவதானிகள் சிந்திக்குமளவிற்கு மனித குலம் இன்று பாழ்பட்டுப் போயுள்ளது.
கொள்கையற்ற மனிதர்களை கவனிப்பாரற்று விட்டாலும் அங்கீகரிக்கப்பட்ட உயர்ந்த மார்க்கமாகிய இஸ்லாமியக் கொள்கையில் வாழுகின்றோம். எனக்கூறும் முஸ்லிம்களின் நிலையோ மேற்கத்தயக் கலாசாரத்தை விட ஒரு படி முன்னேறிக் காணப்படுகின்றமை ஆழ்ந்த கவலையை ஏற்படுத்துகிறது. இஸ்லாமிய மார்க்கத்தைப் பொருத்த மட்டில் போலிகளையும் சடங்குகளையும் அடியோடு நிராகரிக்கும் ஓர் இறைக்கொள்கையது. மனிதனின் பகுத்தறிவுக்கு வேட்டு வைக்கும் அத்தனை மூடக் கொள்கைகளையும் தூக்கி வீசுமாறு அறிவுருத்தும் இம்மார்க்கத்தில் ஒரு முஸ்லிம் எப்படி காதலர் தினத்தை கொன்டாட முடியும்.
நமது சமுதாயத்தில் பெப்ரவரி – 14. ம் திகதி உலகம் பூராகவும் இக் காதலர் தினத்தை கொண்டாடி வருகின்றனர். எந்த அளவுக்கெனில் கிட்டத்தட்ட ஐந்து, பத்து வருடம் காதலித்தவர்களையும் இத்தினம் இன்னும் பல தப்பான செயல்களைச் செய்வதற்காகத் தூண்டுகின்றது.இன்னும் பலருடைய கற்புகளைக் கொல்லை கொள்ளும் துர்நாளாக அத்தினம் அமைந்திருக்கின்றது.
இன்னும் எம் சமூகத்தினர் சிலர். ‘பசி வந்தால் பத்தும் பறக்கும். காதல் வந்தால் வசந்தம் பிறக்கும்” என்ற முதுமொழிகளையெல்லாம் கூறி காதலை ஆதரிக்கின்றனர். காதல் புதிய வசந்தம் பிறக்கும் என்று கருதிக் கொண்டு வசந்தத்தை நாடும் வாளிபர் சமூகம் வசந்தத்தையும் இழந்து, வாழ்வையும் இழந்து நடு வீதியில் பைத்தியக்காரர்களை விடவும் மிக மோசமான நிலையில் திரிகின்ற சகோதர, சகோதரிகளையும் காணலாம்.
உடற் கூறுகள் ஆண்களையும் பெண்களையும் வேறுபடுத்திக் காட்டும். உணர்வுகள் ஒன்றுபடுத்திக் காட்டும். இந்த உணர்வளைகள் காதலர்களை சும்மா விட்டு விடாது. எனவே இவ்வாரான செயற்பாடுகளில் மூழ்கி கற்பையும், மானத்தையும் பறி கொடுக்கும் இப்பாதால செயற்பாட்டிற்கு நாம் ஒரு போதும் சென்று விடக்கூடாது.
சுதந்திர தினம். பெற்றோர் தினம். முதியவர் தினம். எய்ட்ஸ் ஒழிப்பு தினம். தொலிழாளர் தினம். மே தினம். அந்தத் தொடரில் காதலர் தினத்தையும் மக்கள் மதிப்பதனைக் கானலாம். காதல் ஒரு நோய்தான் அதன் ஆரம்ப நாட்கள் கொஞ்சம் வலிதான். காதலிப்பவர்கள் ஆரம்ப கட்டத்தில் ஒருவர் மற்றவருடன் பேசுவதற்குக்கூட வெட்கப்படுவார்கள் காலம் செல்லச்செல்ல கட்டியனைப்பது முதல் முத்தம் கொடுத்தல் வரையும் அதனைத் தாண்டியும் படுக்கை வரைக்கும் அவர்கள் வெட்கமின்றி மிக வேகமாகச் செல்வதனையும் நாம் அறியலாம்.
இன்னும் பாடசாலையில் ஆரம்பிக்கின்ற காதல் கலாச்சாரம் பாடசாலையின் வாழ்க்கையை நாசப்படுத்துவது மட்டுமன்றி பரீட்சையில் நல்ல சிறந்த பெருபேறுகளைக்கூட எடுக்காமல் தனது மானத்தையும், பெற்றோர் தன் மகன் நல்ல முறையில் கல்வி கற்க வேண்டும் என்பதற்காக இரவு பகல், வெப்பம் குளிர், இது போன்ற இன்னும் பல கஷ்ட்டங்களையும் சுமந்து பிள்ளைகளைப் படிக்கவைப்பதற்காக அதிகமான சிரமத்தையும் சுமந்து கொள்கிறார்கள்.
இவர்கள் பரீட்சை முடிவில் பெற்றோர் வீதியில் நடமாட முடியாத அளவிற்கு மிகவும் கேவலமான பெருபேற்டை எடுக்கின்றனர். இதனால் சில மாணவர்கள் மானம் போய்விட்டது என்பதற்காக தனது உயிரைக்கூட போக்கிக் கொள்கின்றனர். இதன் பின்னனியில் பெற்றோர்களும் தற்கொலை செய்துகொள்கின்றனர். இன்னும் சில மாணவிகள் இக் கொல்லி நோயில் மூழ்கி தனது கற்பை திருமனத்திற்கு முன்பதாகவே இழந்துவிடுகின்றனர். பின்னர் கற்பை இழப்பதற்கு காரணமானவனை தேடித்திரிகின்றனர். அவனோ இன்னொரு பெண்ணுடன் தன் திருமனத்தை முடித்து சந்தோசமாக வாழ்க்கையை நடாத்துகின்றான். இவளோ கற்பையும் இழந்து வாழ்க்கையையும் நாசப்படுத்தி தன்மானத்தையும், குடும்ப மானத்தையும் நடுத்தெருவிற்கு கொண்டுவந்துவிட்டு கவலையில் மூழ்கி இருப்பதும் அன்றாடம் செவிகளில் வீழ்கின்றது.
ஆண்களைப் பார்த்தால். காதல் வந்தால் சொல்லியனுப்பு உயிரோடு இருந்தால் வருகிறேன். பொம்பலங்க காதலத்தான் நம்பிவிடாதே. காதலில் தோற்றவன் தாடி வளர்ப்பான். இது போன்ற இன்னும் ஏராலமான கதைகளையும், பாடல்களையும் பாடிக்கொண்டு வீதியில் பவனி வருவதனையும், போதையிலும் மதுவிலும் மாதுவிலும் மூழ்கி தனது உயிரையே மாய்த்துக்கொள்கின்ற வாழிபர் சமுதாயத்தையும் ஆங்காங்கே பார்ப்பீர்கள்.
சில ஆண்களைப் பார்த்தால் பெண்களுக்கு ஏசுகிறான். பலாத்காரமாக கூட்டு பலாத்காரம் செய்து பெண்களைக் கெடுத்து கொலையும் செய்கிறான். காதலித்தவள் தனக்கு கிடைக்கவில்லை என்பதற்காக அவளின் முகத்தில் ‘எசீட்” அடித்தவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். இப்படிப்பட்ட மாபாதகச் செயல்களைச் செய்யத் தூண்டியது எது? அதுதான் காதல் என்கின்ற பைத்தியம்.
இன்னும் காதல் முற்றிப்போய் உடம்பில் வெட்டுக் காயங்களை போட்டுக்கொள்ளுதல். அவளின் பெயரை உடம்பில் ஆங்காங்கே சுட்டுக்கொள்ளுதல், வெட்டிக்கொள்ளுதல் இவைகளும் இக்காதலினால்தான் ஏற்படுகின்றது.
எனவே இக்காதல் கலாச்சாரத்தை விட்டு விலகிவிட வேண்டும். இன்னும் ஒருவருக்கு சரியான காதல் (அன்பு) யார் மீது வரவேண்டுமென்றால். படைத்த இறைவன் மீதும், பெற்றெடுத்த தன் தாய்மீதும், தந்தை மீதும், வாழ்க்கைத் துனைவியான அன்பு மனைவி மீதும் தான். வரவேண்டுமே தவிர திருமணம் முடிப்பதற்கு முன்பான காதலை அன்பு என்று சொல்வது தவறானது.
எனவே இக்காதலர் தினத்தை பெப்ரவரி – 14. ம் திகதியைப் புறக்கனிப்பதன் மூலம்தான். டிசம்பர் – 01 ம் திகதி எய்ட்ஸ் நோயின் பாதிப்பில் ஆலாகாமல் எம் சமூகத்தைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.
நபிவழிக்கு மாற்றமாக நடப்பது நரகவழியல்லவா?
அன்புக்குரியவர்களே! சிந்தித்துப் பாருங்கள்!
காதலர் தின விழாக்களோ பிறந்ததின விழாக்களோ இஸ்லாமிய மார்க்கத்தில் அனுமதிக்கப் பட்டவையல்ல. மாறாக மாற்றுமத இதிகாசங்களிலிருந்தும் புராணங்களிலிருந்தும் இஸ்லாமியப் போர்வையில் தருவிக்கப்பட்டவையே! இஸ்லாமிய மார்க்கத்தின் மகத்துவமும் அதன் உயர்வும் தெரியாத அறிவிலிகளால்தான் இச்சடங்குகள் எமது மார்க்கத்தினுல் புகுத்தப்பட்டன. இதனைத் தான் நபி (ஸல்) அவர்கள் கடுமையாக எச்சரித்தார்கள்.
அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். எங்களது இம்மார்க்கத்தில் இல்லாத ஒன்றை யார் புதிதாக உருவாக்குகின்றாரோ அது நிராகரிக்கப்படும். (புஹாரி – 2697)
காதலர் தினத்தை அனுஷ்டிப்பதால் என்ன வந்துவிடப் போகின்றது. போன்ற அற்பத்தனமான கேள்விகளை அடுக்கி அல்லாஹ்வின் தூதரின் முன்மாதிரியில்லாத இம்மடமைத் தனங்கலுக்கு இரகசிய அங்கீகாரத்தை எடுப்பதற்கு சில இளைஞர்கள் விரும்புகின்றனர். எனவே தூய இஸ்லாமிய மார்க்கத்தில் தீய இத்தினங்களைப் புறக்கனித்து சுவனம் செல்லக்கூடிய நன்மக்களாக எம்மனைவரையும் அல்லாஹ் பொருந்திக்கொள்வானாக.
ம.அ. ஜவாஹிர் ஜமாலி.
நன்றி - sltj 
Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger