முரண்படும் சுவிஷேஷக் காரர்கள்
அதன்பிறகு, பைபிளை எழுதிய நான்கு சுவிசேஷக்காரர்களைப்பற்றி பேச ஆரம்பித்தோம். மத்தேயு, மார்க்கு, யோவான் மற்றும் லூக்கா அகிய நால்வரும் பரிசுத்த ஆவியில் தூண்டுதலினால்தால் பைபிளை எழுதினார்கள் என கிறிஸ்தவர்கள் நம்புகின்றார்கள். பரிசுத்த ஆவி என்பதை தாங்கள் தெய்வீக சக்தி என நம்புவது உண்மையானால், அப்பேர்ப்பட்ட பரிசுத்த ஆவியால் உந்தப்பட்டவர்களின் செய்தியும் ஒரே தரத்தில் அமைந்திருக்க வேண்டும். ஆனால் பைபிளை நாம் புரட்டிப்பார்க்கும்போது, இந்த நாங்கு சுவிசேஷங்களை எழுதியவர்களும் பல விசயங்களில் கருத்துவேறுபாடு கொண்டவர்களாக இருந்தார்கள் என்பதனை பல சந்தர்ப்பத்தில் அவர்களே நிரூபித்துள்ளார்கள்.
உதாரணத்திற்காக, நாம் சாதாரண விசயங்களுக்குள் நுழையாமல், கிறிஸ்தவ மதக்கொள்கையின் உயிர்நாடியான ஏசுவின் சிலுவை மரணத்தையே எடுத்துக்கொள்ளலாம். ஏசுவின் சிலுவை மரணம் என்னும் சம்பவத்தின் அடிப்படையில்தான் கிறிஸ்தவம் என்னும் தத்துவமே அடங்கியுள்ளது. அப்பேர்ப்பட்ட வரலாற்றுச்சிறப்பு வாய்ந்த ஒரு சம்பவத்தை பற்றி குறிப்பிடும்போது கூட, இந்த நான்கு சுவிசேஷக்காரர்களும் தங்களுக்குள் முறன்பட்டே எழுதியுள்ளனர்.
மார்க்கு, யோவான் மற்றும் லூக்கா ஆகியோர் ஆறாம் மணி நேரத்தில்தான் ஏசு சிலுவையில் ஏற்றப்பட்டார் என்பதாக கூறுகின்றனர். ஆனால் மத்தேயுவோ, தமது சுவிசேஷத்தில் ஏசுவின் சிலுவை மரணத்தைப்பற்றி குறிப்பிடும்போது ஆறாம் மணி நேரத்தில் பிலாத்து மன்னரால் விசாரிக்கப்பட்டுக்கொண்டிருந்தா ர் எனக்குறிப்பிடுகிறார். வரலாற்றில் முக்கியமான சம்பவத்தை குறிப்பிடும்போது நான்கு சுவிசேஷக்காரர்களும் இவ்வளவு முறன்பட்டு பேசுவது ஏன்?
விசாரணை நடைபெற்ற இடத்தில் இருந்து ஏசுவே தனது தோல்மீது சிலுவையை சுமந்துகொண்டு வந்தார் என சிலர் குறிப்பிடுகின்றனர். ஆனால், ஒரு வழிப்போக்கரின் மேல் அந்த சிலுவையை வைத்து அந்த வழிப்போக்கர்தான் அந்த சிலுவையை சுமந்துகொண்டுவந்தார் எனவும் அப்போது ஏசு, தம்முடன் வந்த மக்களுடன் பேசிக்கொண்டே வந்தார்கள் எனவும் வேறு சிலர் குறிப்பிடுகிறார்கள்.
ஏசு உயிர்த்தெழுந்தந்ததாக சொல்லப்படுகிற அந்த சம்பவத்தை முதன் முதலில் பார்த்தவர் யார் என்பதில்கூட இந்த நான்கு சுவிசேஷக்காரர்களும் ஒருவருக்கு ஒருவர் முறன்பாடான தகவல்களைத்தான் தெரிவித்துள்ளனர். ஞாயிறு அன்று காலையில் மகதலேனா மரியாள் தனியாக சென்று பார்த்தார். அப்போது அவரது சமாதியின் மேல் இருந்த கல் அகற்றப்பட்டு இருந்ததாக ஒரு சுவிசேஷக்காரர் கூறுகிறார். மகதளேனா மரியாளும், மற்றொரு மரியாளும் இன்னும் ஒரு பெண்ணுமாக மூன்றுபேர் சென்று பார்த்தார்கள் என வேறு ஒருவர் குறிப்பிடுகிறார். மற்றொருவரோ, மூன்று மரியாள்கள் மற்றும் இன்னும் சில பொதுமக்கள் என நிறைய மக்கள் சேர்ந்து சென்று பார்த்தார்கள் எனவும் அவர்கள் அனைவரும் பார்த்துக்கொண்டிருக்கும்போது வானத்தில் இருந்து ஒரு வானவர் இறங்கிவந்து சமாதியின்மேல் இருந்த கல்லை அகற்றினார் என குறிப்பிடுகிறார். ஏசு உயிர்த்தெழுந்த வரலாற்றுச்சிறப்புமிக்க அந்த சம்பவத்தைக் குறிப்பிடும்போதுகூட நான்கு சுவிசேஷக்காரர்களும் தங்களுக்குள்ளே எவ்வளவு முரண்பட்ட தகவல்களை குறிப்பிடுவது ஆச்சர்யமாகவே இருக்கிறது. என அவருக்கு எடுத்துரைத்தோம்.
மேலும், இறைவனின் வார்த்தைகள் என்றால் அதில் முரண்பாடு இருக்கக்கூடாது. மனிதனிடத்தில் முரண்பாடுகள் வரலாம், அது இயற்கை. ஏனெனில் மனிதன் பலகீனமானவன். ஆனால் எல்லாவித பலகீனங்களுக்கும் அப்பார்ப்பட்டவர்தான் ஆண்டவர். அவரது வார்த்தைகளில் நிச்சயமாக முரண்பாடுகள் இருப்பதற்கு வாய்ப்பே இல்லை. ஆனால் பைபிளில் உள்ள முரண்பாடுகளை பார்க்கும்போது நிச்சயமாக பைபிள் இறைவேதம் இல்லை என்ற முடிவுக்கே வரவேண்டியுள்ளது.
ஏசு கல்லரையிலிருந்து எழுந்துவந்ததும் தமது அடியார்கள் முன்னிலையில் தோன்றுகிறார். தனக்கு பசிப்பதாகக்கூறி அவர்களிடம் இருந்து தேண்கூட்டு துணிக்கையையும், பொரித்த மீன் துண்டுகளையும் வாங்கி புசிக்கிறார். ஆனாலும் அவரை ”ஏசு” என ஏற்றுக்கொள்ள அவரது சீடர்கள் மறுத்துவிடுகிறார்கள்.
பைபிளில் குறிப்பிட்டுள்ளபடி ஏசுவை வெள்ளிக்கிழமை மாலையில்தான் சிலுவையில் ஏற்றினார்கள். ஞாயிற்றுக்கிழமை காலைதான் அவர் உயிர்த்தெழுந்ததாக நம்பப்படுகிறது. தற்போதும்கூட Good Friday மற்றும் Easter Sunday என இந்த நாட்களைத்தான் கிறிஸ்தவர்கள் கொண்டாடுகிறார்கள். அதனை அடிப்படையாக வைத்து பார்க்கும்போது வெள்ளி இரவு, சனி பகல், சனி இரவு ஆக மொத்தத்தில் இரண்டு இரவுகள் மற்றும் ஒரு பகல்தான் அவர் கல்லரையில் இருந்துள்ளார். ஆனால் அவர் ஆதாரமாக காட்டும் ஜோனாவின் சம்பவத்தில் வருவதுபோல் மூன்று இரவுகளும் மூன்று பகல்களும் கல்லரைக்குக்ள் இருக்கவில்லை.
சில கிறிஸ்தவர்கள் “ஏசு வெள்ளிக்கிழமை மாலை கல்லரைக்குள் வைக்கப்பட்டு ஞாயிறு காலையில்தான் உயிர்த்தெழுந்தார். எனவே வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய மூன்று நாட்கள் அவர் கல்லரைக்குள் இருந்துவிட்டார். ஆதலால் ஜோனாவைப்போல் அவரும் மூன்றுநாட்கள் கல்லரைக்குள் இருந்துவிட்டார் என்பதாக கூறி இந்த வசனத்திற்கு பொருள் கொடுக்கின்றனர். ஆனால் அந்த பைபிள் வசனத்தில் மூன்று நாட்கள் என குறிப்பிடப்படவில்லை. மூன்று பகல் மற்றும் மூன்று இரவு என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது. மூன்று நாட்கள் என்று மட்டும் கூறப்பட்டிருந்தால் அவர்களது வாதத்தை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் நிச்சயமாக் வெள்ளி மாலையிலிருந்து ஞாயிறு காலை வரை மூன்று பகல் மற்றும் மூன்று இரவு என்ற கணக்கு தவறுதான். இதனைவைத்து பார்க்கும்போதும் பைபிளின் நம்பகத்தன்மை கேள்விக்குறியதாகவே உள்ளது.
மேலும் பைபிள் என்பது இறைவனின் வேதமாக இருக்குமேயானால், இறைச்செய்திகளை பெற்று மக்களுக்கு எடுத்துச்சொன்ன ஏசுவே தன் கைப்பட பைபிளை எழுதியிருக்க வேண்டும். அல்லது ஏசு கூறியதைக்கேட்ட அவர்களது நேரடிச்சீடர்கள் அதனை எழுதிவைத்திருக்க வேண்டும். அப்படி இல்லாமல் ஏசுவிற்கு ஒரு நூற்றாண்டிற்குப்பிறகு வாழ்ந்த சிலர் எழுதியதை ஏசுவிற்கு இறக்கப்பட்ட வேதம் என எப்படி நம்புவது? பைபிள் சம்பவங்களையும், அதனை எழுதியவர்களின் காலங்களையும் வைத்துப்பார்க்கும்போது பைபிள் என்பதை ஏசுவின் வாழ்க்கையில் நடந்தவற்றை எடுத்துக்கூறும் ஒரு வரலாற்று நூலாக வேண்டுமானால் எடுத்துக்கொள்ளலாமே ஒழிய அதனை இறைவனின் வேதம் என எப்படி நம்ப முடியும்? எனக்கேட்டோம்.
மேலும் “இந்த நான்கு சுவிசேஷக்காரர்களைப்போலவே, பவுல் என்றவர் எழுதியவையும் பைபிளில் இடம்பெற்றுள்ளன. அதில் பழைய ஏற்பாடுகளில் ஆண்டவர் இட்ட பல கட்டளைகளை தனது மனோஇச்சையின்படி பவுல் அவர்கள் மாற்றியமைக்கிறார். குறிப்பாக, ஆண்கள் யாவரும் விருத்தசேதனம் செய்யவேண்டும் என பழைய ஏற்பாட்டில் ஆண்டவர் கட்டளை இடுகிறார். ஆனால் பவுலோ அதனை தேவையில்லை எனக்கூறுகிறார். அதேபோல் மது அருந்தக்கூடாதெனவும், பன்றியின் மாமிசத்தை உண்ணக்கூடாதெனவும் பழைய ஏற்பாட்டில் ஆண்டவர் கட்டளையிட்டிருக்கும்போது, பவுல் என்ற ஒரு தனிமனிதர் தன் இஷ்டத்திற்கு வேதத்தில் மாற்றம் செய்தது எப்படி? கடவுளின் வார்த்தையைவிட ஒரு சாதாரண மனிதனின் வார்த்தைக்கு கிறிஸ்தவர்கள் இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து அதனை கடைபிடிப்பது ஏன்?” என வினவினோம்.
இவ்வாறாக பைபிளின் நம்பகத்தன்மையையும் அதனை இயற்றிய நான்கு சுவிசேஷக்காரர்களின் முரண்பாடுகளையும், வேதத்தில் பவுல் செய்துள்ள மாற்றங்களையும் அவர்களிடத்தில் எடுத்துவைத்து பைபிள் ஒரு இறை வேதமா என நாங்கள் அவரிடம் கேள்வி எழுப்பினோம். அதற்கும், மௌனத்தை தவிர வேறு எதனையும் அவர்களிடமிருந்து பெற முடியவில்லை.
பிறகு,.....இன்ஷா அல்லாஹ் தொடரும்...
நன்றி - jesusinvites
Post a Comment