டெல்லியில் தவிர்க்கப் பட்ட பெரும் விமான விபத்து - பயணிகள் உயிர் தப்பினர்!

புதுடெல்லி: டெல்லியில் தரையிறங்கிய ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் அதிர்ஷ்டவசமாக விபத்திலிருந்து தப்பியது.
இலங்கையிலிருந்து 70 பயணிகளுடன் நேற்று இரவு டெல்லி வந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் பறந்து கொண்டு இருந்தபோதே சக்கரங்களில் ஏதோ பிரச்சனை இருப்பதாக கட்டுப் பாட்டு அறைக்கு விமானிகள் தகவல் கொடுத்தனர்.
இந்த நிலையில் டெல்லி இந்திராகாந்தி விமான நிலையத்தில் விமானம் அவசரமாக மாலை 6:55 மணிக்கு தரையிறக்கப் பட்டது. இதனையடுத்து, அந்த விமானத்தை பாதுகாப்பாக இழுத்து வருவதற்கான ஏற்பாடுகளை டெல்லி விமான நிலைய அதிகாரிகள் அவசர அவசரமாக செய்தனர். எனினும் விமானத்தை ஓடுபாதையிலேயே நிறுத்த வேண்டி வந்தது. பின்பு விமானத்தின் அருகே சென்று பார்த்தபோது இரண்டு டயர்களும் வெடித்து இருந்தது தெரிய வந்தது.
வெடித்த டயருடன் விமானத்தை இழுத்து வருவது ஆபத்து என்பதால் பயணிகளை அங்கேயே இறங்கவைத்து அவர்களை விமான நிலைய பேருந்துகளின் மூலம் விமான நிலைய கட்டிடத்திற்கு அதிகாரிகள் அழைத்து வந்தனர்.
விமானம் ஓடுபாதையின் குறுக்கே நின்றதால் மற்ற விமானங்கள் மாற்று ஓடுபாதை வழியாக திருப்பி விடப்பட்டன.
இச்சம்பவம் டெல்லி விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger