மணிக்கு 501 கிமீ செல்லும் சூப்பர் புல்லட் ரயில்: ஜப்பானில் சோதனை ஓட்டம் வெற்றி

டோக்கியோ: ஜப்பானில் மணிக்கு 311 மைல்கள் அதாவது 501 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் அதிவிரைவு புல்லட் ரயிலின் சோதனை ஓட்டம் நேற்று வெற்றிகரமாக நடத்தப்பட்டது. 1964ம் ஆண்டு ஜப்பானில் ஷின்கன்சென் அதிவேக ரயில் சேவை துவங்கப்பட்டது. உலகின் கவனத்தை வெகுவாக ஈர்த்த ஷின்கன்சென் ரயில்கள் பாதுகாப்புக்கு பெயர் பெற்றவை. இந்த நிலையில், மணிக்கு 500கிமீ வேகத்தில் செல்லும் அதிவேக புல்லட் ரயிலின் சோதனை ஓட்டம் நேற்று வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது. அந்த அதிவேக ரயில்கள் பற்றிய சில தகவல்களை ஸ்லைடரில் தெரிந்துகொள்வோம்.

மேக்னடிக் ரயில்... 


மேக்னட்டிக் சக்தியில் இயங்குவதால் அதிவிரைவாக செல்லும் இந்த ரயிலுக்கு சக்கரங்கள் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.



பயணநேரம் மிச்சம்... 


சோதனை ஓட்டமாக, டோக்கியோவில் இருந்து நாகோயா என்ற நகருக்கு சென்ற புல்லட் ரயிலில் பயணம் செய்வதால், 40 முதல் 90 நிமிடங்கள் வரை பயண நேரத்தை மிச்சப்படுத்தலாம்.



செலவு தான் கொஞ்சம் அதிகம்... 


கிட்டத்தட்ட $64 பில்லியன் செலவில் இந்த புல்லட் ரயில் வல்லுனர்களால் வடிவமைக்கப் பட்டுள்ளது.


அப்போ நம்ம ஊருக்கு 3045ல தான்... 


வரும் 2045ஆம் ஆண்டு முதல் தன் பயண தூரம் டோக்கியோவில் இருந்து ஒசாகா வரை நீட்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


செப்டம்பரில் தொடக்கம்... 


சோதனை ஓட்டம் வெற்றியடைந்ததால், இந்த புல்லட் ரயில் வரும் செப்டம்பர் மாதம் முதல் பயணிகளின் உபயோகத்திற்காக செயல்படும் என ஜப்பான் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


போக்குவரத்து தொழில்நுட்ப முன்னோடி.... 


தொழில் நுட்பத்தில் முன்னோடியாக விளங்கும் ஜப்பான் 1964-ம் ஆண்டு முதல் முதலாக புல்லட் ரெயிலை அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger