துபை TNTJ 8-வது திரு குர்ஆன் மாநாடு!

சோனாப்பூர்: அல்லாஹ்வின் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் துபை மண்டலம் சார்பாக சென்ற 05.07.2013 அன்று சோனாப்பூரில் “8-வது திரு குர்ஆன் மாநாடு” மண்டல தலைவர் சகோ.முஹம்மது அலி தலைமையில் நடைபெற்றது.


இதில் தாயகத்திலிருந்து வந்துள்ள மாநில பேச்சாளர் சகோ.புளியங்குடி ஒலி முஹம்மது அவர்கள் “முஸ்லிம்களாகவேயன்றி மரணிக்காதீர்கள்” என்ற தலைப்பிலும் சகோ.அப்துல் கரீம் அவர்கள் “திரு குர்ஆன் உருவாக்கிய சமுதாயம்” என்ற தலைப்பிலும் மண்டல பேச்சாளர் சகோ.ஹாமீன் இப்ராஹிம் அவர்கள் “இந்தியாவில் முஸ்லிமகளின் பிரச்சனைகளும் தீர்வுகளும்” தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

இதில் 500-க்கும் மேற்ப்பட்ட சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்!

மண்டல தாவா செயலாளர் சகோ.முஹம்மது இப்ராஹிம் அவர்களின் தலைமையில் தொண்டரயினர் சிறப்பான முறையில் பணிகளை செய்தனர்.

எல்லாம் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே!












Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger