ஈஸ்டர் சண்டேவா? – ஈஸ்டர் மண்டேவா?

ஈஸ்டர் சண்டேவா? – ஈஸ்டர் மண்டேவா? – பைபிள் சொல்லும் உண்மை! – அறியாத அப்பாவி கிறித்தவர்கள்!! 

கிறிஸ்துமஸ் கொண்டாடும் தேதி தவறு என்ற செய்தியை முதல் பக்கக் கட்டுரையில் கண்டோம். கிறித்தவர்கள் தாங்கள் வேதம் என்று நம்பக்கூடிய பைபிளில் அவர்கள் கொண்டாடும் ஈஸ்டர் சண்டே குறித்து என்ன சொல்லப்பட்டுள்ளது என்பதை ஆய்வு செய்தால் பைபிள் அடிப்படையில் அது ஈஸ்டர் சண்டே அல்ல! ஈஸ்டர் மண்டே என்பது தெரியவருகின்றது. அதுகுறித்து பைபிள் சொல்லும் உண்மைகளை கீழே தருகின்றோம். இதை கிறித்தவ சகோதரர்கள் நன்கு ஆய்வு செய்யக் கடமைப்பட்டுள்ளனர். ஏசு மரணித்த நாள்:  ஏசு சிலுவையில் அறையப்பட்ட நாளை குட் ஃப்ரைடே அதாவது புனித வெள்ளி என்று கிறித்தவ மக்கள் கொண்டாடி வருகின்றனர். அப்படியானால் அவர் மரணித்தது வெள்ளிக்கிழமை என்பது உறுதியாகின்றது.  ஏசு தான் மரணிப்பது குறித்து செய்த ஒரு முன்னறிவிப்பு மத்தேயு என்ற சுவிஷேசத்தில் 12 : 40 ஆம் வசனத்தில் இடம்பெற்றுள்ளது.  அதாவது அவர் மரணித்த பிறகு பூமியில் அடக்கம் செய்யப்பட்டு மூன்று இரவுகளும், மூன்று பகல்களும் பூமியின் இருதயத்தில் அவர் இருப்பார் என்பதுதான் அந்த முன்னறிவிப்பு.  ஏசு மரணித்த பிறகு உயிரோடு எழுந்ததாக சொல்லப்படும் அந்த நாளே ஈஸ்டர் பண்டிகை. இப்போது ஏசு சொன்ன முன்னறிவிப்பு எப்போது நிறைவேறும் என்பதை பைபிளின் துணையோடு நாம் கணக்குப்போட்டு பார்க்கலாம்.  அதாவது ஏசு மரணித்தது வெள்ளிக்கிழமை மதியம் 3மணி. அன்று இரவு அவர் அடக்கம் செய்யப்படுகின்றார். அந்த அடிப்படையில், மூன்று இரவுகளும் மூன்று பகல்களும் அவர் பூமியின் இருதயத்தில் இருந்தாக வேண்டும். ஆனால் ஞாயிற்றுக்கிழமை காலை அவர் உயிர்த்தெழுந்துவிட்டதாகவும், அதை சிலர் பார்த்ததாகவும் பைபிள் கூறுகின்றது.  இப்போது பைபிள் சொல்லக்கூடிய கணக்கை காண்போம். ஏசு இறந்து அடக்கம் செய்யப்பட்டது வெள்ளிக்கிழமை. வெள்ளிக்கிழமை – 1 இரவு சனிக்கிழமை காலை – 1 பகல் சனிக்கிழமை – 1 இரவு  ஞாயிற்றுக்கிழமை காலை மரகத மரியாள் ஏசு உயிர்த்தெழுந்த போது அவரை பார்த்ததாக பைபிள் கூறுகின்றது.  ஓய்வு நாள் முடிந்து, வாரத்தின் முதலாம் நாள் விடிந்து வருகையில், மகதலேனா மரியாளும் மற்ற மரியாளும் கல்லறையைப் பார்க்க வந்தார்கள்.  அப்பொழுது, பூமி மிகவும் அதிரும்படி, கர்த்தருடைய தூதன் வானத்திலிருந்திறங்கி வந்து, வாசலிலிருந்த கல்லைப் புரட்டித் தள்ளி, அதின்மேல் உட்கார்ந்தான்.  அவனுடைய ரூபம் மின்னல் போலவும், அவனுடைய வஸ்திரம் உறைந்த மழையைப்போலவும் வெண்மையாகவும் இருந்தது.  காவலாளர் அவனுக்குப் பயந்ததினால் திடுக்கிட்டுச் செத்தவர்கள் போலானார்கள்.  தூதன் அந்த ஸ்திரீகளை நோக்கி: நீங்கள் பயப்படாதிருங்கள்; சிலுவையில் அறையப்பட்ட இயேசுவைத் தேடுகிறீர்கள் என்று அறிவேன்.  அவர் இங்கே இல்லை; தாம் சொன்னபடியே உயிர்த்தெழுந்தார்; கர்த்தரை வைத்த இடத்தை வந்து பாருங்கள்; மத்தேயு 28 : 1 முதல் 6  கிறித்தவ நம்பிக்கை பிரகாரம் சனிக்கிழமை ஓய்வுநாள். அதற்கு அடுத்த நாளான ஞாயிற்றுக்கிழமை காலை நேரத்திலேயே ஏசு உயிர்த்தெழுந்ததாக பைபிள் கூறுகின்றது. அப்படியானால் பைபிள் கூறும் கணக்குப் பிரகாரம் மொத்தம் இரண்டு இரவுகளும், ஒரு பகல் மட்டும்தான் மனுஷ குமாரன் பூமியின் இருதயத்தில் இருந்துள்ளார். எனவே மரியாளுக்கு காட்சி தந்தது பிசாசாகத்தான் இருக்க வேண்டும். ஏனெனில் ஏசு சொன்ன முன்னறிவிப்பு பிரகாரம் மூன்று இரவும், மூன்று பகல்களும் பூமியின் இருதயத்தில் ஏசு இருந்திருக்க வேண்டும். ஏசு சொன்ன உண்மையான முன்னறிவிப்பின்படி, வெள்ளிக்கிழமை – 1 இரவு சனிக்கிழமை காலை – 1பகல் சனிக்கிழமை – 1 இரவு ஞாயிற்றுக்கிழமை – 1 பகல் ஞாயிற்றுக்கிழமை – 1இரவு திங்கள் கிழமை – 1 பகல்  மேற்கண்டவாறு கணக்கு போட்டால்தான் மூன்று இரவும், மூன்று பகல்களும் வருகின்றது. அப்படியானால், ஏசு தான் உயிர்த்தெழுவதாக குறிப்பிட்ட நாள் திங்கள் கிழமை இரவுதான். ஆக பைபிளின் அடிப்படையில் பார்த்தால் ஈஸ்டர் சண்டே என்பது முழுக்க முழுக்க தவறு. ஈஸ்டர் மண்டே என்பதுதான் சரி என்பது நமக்குத்தெரிய வருகின்றது.  ஆனால் கிறித்தவ நண்பர்களோ மரியாளிடத்தில் விளையாடிய பிசாசைப் பார்த்து அது ஏசு என்று தவறுதலாக விளங்கியுள்ளனர் என்பதும் பைபிளின் அடிப்படையில் தெரியவருகின்றது.  ஏசு தான் சொன்னபிரகாரம் மூன்று இரவுகளும், மூன்று பகல்களும் கழித்து திங்கள் கிழமை உயிர்த்தெழுந்தார் எனபதற்கு பைபிள் அடிப்படையில் எந்த ஒரு ஆதாரமும் இல்லாததால் ஏசு செய்த முன்னறிவிப்பும் பைபிள் அடிப்படையில் பொய்யாகிப்போனது. இதன் மூலம் பைபிள் இறைவேதமில்லை என்பதும் நிரூபணமாகிவிட்டது. மொழிபெயர்ப்பு மோசடி:  அதே நேரத்தில் ஏசுவைப்போல தோற்றமுடைய சாத்தான்தான் இந்த வேளையை ஏசுவுடைய வடிவத்தில் வந்து காட்டியுள்ளார் என்பதற்கு பைபிளிலேயே பலசான்றுகளை நாம் காண்பதால் அது இன்னும் உறுதிசெய்யப்படுகின்றது.  அதே நேரத்தில் இந்த உண்மையை மறைக்க பைபிள் மொழிபெயர்ப்பாளர்கள் எத்தகைய மொழிபெயர்ப்பு மோசடியை செய்துள்ளனர் என்பதையும் நாம் சுட்டிக்காட்ட கடமைப்பட்டுள்ளோம். பைபிள் ஆங்கில மொழிபெயர்ப்பு: Jonah was in the stomach of huge fish for three days and three nights. The son of man will be in the grave for three days and three nights. The son of Man will be in grave for three days and three nights. மத்தேயு 12 : 40  மேற்கண்ட ஆங்கில மொழிபெயர்ப்பில் மூன்று இரவுகளும், மூன்று பகல்களும் என்று தெள்ளத்தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், அதை கீழ்க்கண்டவாறு மோசடி மொழிபெயர்ப்பு செய்துள்ளனர் இந்த பாதிரிகள்.  யோனா இரவும் பகலும் மூன்றுநாள் ஒரு பெரிய மீனின் வயிற்றில் இருந்தது போல, மனுஷகுமாரனும் இரவும் பகலும் மூன்றுநாள் பூமியின் இருதயத்தில் இருப்பார். மத்தேயு – 12 : 40  மூன்று இரவுகளும், மூன்று பகல்களும் என்ற வாசகத்தை இரவும் பகலும் மூன்றுநாள் என்று திட்டமிட்டு மோசடி செய்து தங்களது திறமையை காட்டியுள்ளனர் இந்த பாதிரிமார்கள். இவர்களது இந்த மோசடியிலிருந்து கிறித்தவர்கள் மீண்டு வந்து உண்மையான சத்தியக் கொள்கையை விளங்கி பரலோக ராஜ்ஜியத்தில் வெற்றிபெற இறைவனிடம் இறைஞ்சுகின்றோம்.  ஆக கிறிஸ்துமஸ் எந்த நாள் என்பது தங்களுக்கு தெரியாது. ஈஸ்டர் சண்டே என்பது உண்மையல்ல; ஈஸ்டர் மண்டே என்பதுதான் சரி என்று நிரூபணமாவதிலிருந்து கிறித்தவர்களின் அடிப்படையே ஆட்டம் கண்டு வருகின்றதை பார்க்கின்றோம். ஒரு கிறித்தவ சகோதரர் மூலம் சென்னையிலுள்ள ஒரு கிறித்தவ பாதிரியாரிடம் ஈஸ்டர் மண்டே என்று சொல்வதுதான் சரியானதாக இருக்குமேயொழிய, ஈஸ்டர் சண்டே என்று சொல்வது சரியில்லை என்பதற்கான மேற்கண்ட ஆதாரத்தை கொடுத்தனுப்பினோம். அதற்கு அந்த கிறித்தவ பாதிரியார் சொன்ன விளக்கம் சிரிப்பை வரவழைப்பதாக அமைந்தது.  நாம் அனுப்பிய அந்த கிறித்தவ சகோதரர் ஈஸ்டர் சண்டே என்பது தவறு என்பதற்கு இந்த ஆதாரத்தை அந்த பாதிரியாரிடம் காட்டி நமது தரப்பு விளக்கம் என்னவென்று கேட்டதற்கு அந்த பாதிரியார் ஆதாரங்களை வாங்கிப் பார்த்துவிட்டு, பைபிள் அடிப்படையில் ஈஸ்டர் சண்டே என்பது தவறுதான். ஈஸ்டர் மண்டே என்பதுதான் சரி. ஆனால் உலகமெங்கும் ஈஸ்டர் சண்டே என்றுதான் நம்பிக்கொண்டுள்ளார்கள்.  அதுமட்டுமல்லாமல் வாராவாரம் ஞாயிற்றுக்கிழமைதான் விடுமுறை விடுகின்றார்கள். இந்த ஆதாரத்தைக்காட்டி திங்கள் கிழமை விடுமுறை விடச்சொல்ல இயலாது என்பதால் ஈஸ்டர் தினத்தை ஞாயிற்றுக்கிழமைகளிலேயே கொண்டாடி வருகின்றோம் என்று விளக்கமளித்துள்ளார்.  இப்படித்தான் இவர்களது விளக்கங்களும் நம்பிக்கையும் அமைந்துள்ளது.

thanks to-onlinepj
Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger