மக்கள்தொகை கணக்கெடுப்பில் பெயர் சேர்க்க மீண்டும் வாய்ப்பு

காரைக்கால்:காரைக்கால் நகராட்சி பகுதிக்குட்பட்டவர்கள், அரசின் மக்கள் தொகை கணக்கெடுப்பில் பெயர்ச் சேர்க்க, மற்றொரு வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
 இது குறித்து, மாவட்ட ஆட்சியர் செயலர் பாஸ்கரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
"காரைக்கால் புதிய நகராட்சி பகுதிக்குட்பட்ட 18 வார்டுகளில் வசிப்பவர்கள் ஏற்கெனவே நடைபெற்ற முகாம்களில் கைரேகை, கண் பதிவு, புகைப்படம் எடுக்காமல் விடுபட்டவர்கள் இருப்பின், காரைக்கால் நகராட்சி அலுவலகத்தில் இயங்கும் முகாமில் கலந்துகொண்டு பயன்பெற வேண்டுகிறோம்.
இந்த முகாமுக்கு செல்லும் போது, குடும்ப உறுப்பினர்கள் ஏற்கெனவே புகைப்படம் எடுத்ததற்கான ஆதாரம், ரேஷன் கார்டு, வாக்காளர் அட்டை போன்றவற்றை எடுத்து செல்லவேண்டும். வாரத்தின் அனைத்து நாட்களிலும் இந்த சிறப்பு முகாம் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவதால், பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி பலன் அடைய வேண்டுகிறோம்".
இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger