மரணத்தை வென்ற பெண்மணி ரிஷானா நபீக்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ.
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப் பெயர் கொண்டு ஆரம்பம் செய்கின்றேன்.
அல்ஹம்துலில்லாஹ்... அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருள் புரிவானாக.. நேர்வழி காட்டுவானாக. ஆமீன்.

,
இலங்கை பணிப்பெண் ரிசானா நபீக்கிற்கு சவூதி அரேபிய நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரியவந்ததை அடுத்து மூதூரிலுள்ள ரிசானாவின் வீட்டின் நிலமைகளை படங்களில் காணலாம். 
சவூதி அரேபியாவில் 2013.1.9 ம் திகதி மரண தண்டனை வளங்கி முடிவு பெற்ற பொண்ணான பொண்மணி ரிஷானா நபீக் என்பரின் மரணம் நிறைவேற்றப்பட்டதை அடுத்து முஸ்லீம் மக்களுக்கு இது ஒரு மறக்க முடியாத ஒரு விஷயம். ரிஷானா நபீக் கூறிய சில வரிகள் கீழே இருக்கின்றது இதைப் பார்த்தாவது நம் இளஞ்சர்கள் சமூதாயம் இனியாவது சீதனம் என்ற கொடூர லட்ச்சங்களை கை நீட்டி வாங்குவதை தடுப்போம் . மரணமடைந்த ரிஷாவின் கடேசி வசிய்யத் என்ற வார்த்தை ஆண் சமூதாயமே சீதனம் வேண்டாம் என்ற வார்த்தைக்கு மதிப்பழித்தாள் அல்லாஹ் நமக்கு நல்லருள் புரிவான்,

ஈமான் கொண்டவர்களே நம்மால் முடிந்தளவு அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புக் கோருவோம்.

எல்லா ஆண்மாக்களும் மரணத்தை சுவைத்தே தீரும்

என் பெயரால்

முக நூல்களில்

அகநூல்களில்

பிரநூல்களில்

தர்க்கம்புரியும்

தர்க்கவாதிகளே

உங்களோடு

சிலநிமிடங்கள்

நான் ஒன்ரும் கோழை அல்ல

அழுதுபுலம்பி ஓடி ஒழிந்துகொள்ள

நான் எப்போதும்

அன்னையர்கள்

ஆயிஷா , பாத்திமா

பாசறையில்

பக்குவப்பட்டவள்

திருமறையின்

நபிவழியில்

ஷரியா நன்னெறியில்

மரணித்துப்போவதில்

மனவேதனை ஒன்றும் இல்லை

உங்களுக்கெல்லாம் ஒன்றுமட்டும் சொல்லிக்கொள்ள ஆசை எனக்கு

எனக்காக கண்ணீர்வடிக்க வேண்டாம்

ஏன் பிராத்தனைகூட செய்யவேண்டாம்

குருவிக்கூடு போன்ற என் குடும்பத்தைகொஞ்சம் எட்டிப்பாருங்கள்

அல்லாஹ்வின் மீது ஆணையாக என் அண்ணை அழமாட்டாள்

தயவுசெய்து ஆறுதல் என்ற பெயரால்

அவளைநீங்கள் கோழை ஆக்கி விடாதீர்கள்

உங்களால் முடிந்தால்

உங்கள் ஆண்பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுங்கள்

சீதனம் என்பது குடும்ப அனுமதியோடு செய்யப்படும் விபச்சாரம் என்று

நாளை என் தங்கைகளும்

உங்கள் பெண்பிள்ளைகளும்

தீன் ஒளியில் ஊரினில் வாழட்டும்.

நம் நாட்டில் மனச்சாட்சி இல்லாத எத்தனை உள்ளங்கள் இன்னும் இருக்கத்தான் செய்கின்றது கட்டிய மனைவியை காசுக்காக அயல் நாட்டுக்கு அனுப்பும் வெட்கம் கெட்ட ஒரு கூட்டமும் நம் இஸ்லாமியர்களில் இருக்கத்தான் செய்கின்றாகள் !!!!!!!!!!!!!!!!!!!!! கண்ணியம் மிக்க இளைன்சர்களே அல்லாஹ் உங்களுக்கு மிகுந்த கூலிகளை வழங்குவான் "ரிசானா" போன்ற ஏழை பெண்களை சீதனம் இன்றி திருமணம் செய்து கொள்ளுங்கள் நாம் யாரும் இந்த பூமியில் பல்லாயிரம் காலம் வாழ்ந்து விடப்போவதில்லை ஏழைகள் மீது அன்பு காட்டுங்கள் !!! யா அல்லாஹ் இந்த பூமியில் வாழும் அத்தனை ஏழைகளுக்கும் உன் அருளை இறக்கி அருள் செய்வாயாக !!!!!!!!!!

யா அல்லாஹ் இந்த பொண்ணான பொண்மணிக்கு உனது மேலான ஜன்னத்துல் பிர்தௌசைக் கொடுப்பாயாக.
நன்றி - ahmadyahya 
Share this article :

+ comments + 1 comments

Thursday, 10 January, 2013

ஜஷாக்கல்லாஹூ ஹய்ரா அருமையான தலைப்புகள்

Ameen Ameen Ameen Yaa Rabbal Aalameen

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger