Featured Post Today
print this page
Latest Post
Showing posts with label இலங்கை. Show all posts
Showing posts with label இலங்கை. Show all posts

முஸ்லிம் பெண்களின் புர்கா + நிகாப் தேசிய ஒற்றுமைக்கு அச்சுறுத்தல் - முஸம்மிலின் லங்காதீப கட்டுரையிலிருந்து

இனங்களுக்கிடையில் வேற்றுமையை உண்டுபண்ணக்கூடிய, தேவைக்குதவாத சமூகத்தனித்துவத்தை அளவுக்கு அதிகமாக வெளிப்படுத்தும் ‘’ கோணிபில்லா ” ( புர்கா / நிகாப் ) முறை இந் நாட்டின் தேசிய ஒற்றுமைக்கு அச்சுறுத்தலாக உள்ளதுடன் ஏனைய சமூகங்களுக்கு மத்தியில் வீணான சந்தேகங்களை ஏற்படுத்தக் கூட்டியதுமாகும்”. என்று தேசிய விடுதலை முன்னணி ஊடக பேச்சாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான  எம் முஸம்மில் தெரிவித்துள்ளார்.

2013/06/30 ந் திகதி லங்காதீப பத்திரிகைக்கு அவர் எழுதியுள்ள கட்டுரையொன்றில் மேற்படி கருத்து கூறியுள்ள அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,

 “ இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வந்த முஸ்லிம்களின் கலாசாரமானது இந்து கலாசாரத்தை அடியொட்டிய முஸ்லிம் கலாசாரமாக இருந்துள்ளது. இந்நாட்டு முஸ்லிம்கள் விளக்கேற்றும் பழக்கத்தை கொண்டிருப்பதை இதற்கான உதாரணமாக சுட்டிக்காட்டலாம். சுமார் 700 வருட கால வாரலாற்றைகொண்ட இந் நாட்டின் முஸ்லிம்கள் ஆரம்ப காலம் தொட்டே இந்நாட்டின் சிங்கள பாரம்பரிய கலாசாரத்தை அடியோட்டியே தமது முஸ்லிம் கலாசார தனித்துவத்தை பேணி வந்துள்ளார்கள். இந்த கலாசார முறையானது சிங்கள முஸ்லிம் இன ஒற்றுமைக்கும் முன்னுதாரணமாக இருந்துள்ளது. இந் நிலைமை இலங்கை முஸ்லிம்களின் ஆடை விடயத்திலும் பிரதிபலித்துள்ளது.

 அக்கால முஸ்லிம்கள் தமது கலாசார உடையை அடையாளபடுத்த , சிங்கள மக்களின் கலாசார உடையில் முஸ்லிம் கலாசார அடையாளங்களை உட்படுத்தியுள்ளார்கள். அக்காலம் தொட்டே முஸ்லிம் பெண்கள் மத்தியில் “சாரி” அணியும் பழக்கம் பிரபலமாக இருந்துள்ளது. அந்த ஆடைமுறையால் இந்நாட்டு சிங்களசமூக கலாசாரத்துடன் ஒன்றிப்போக கூடிய சந்தர்பமும் கிடைத்தது. அதேவேளை முஸ்லிம்களின் தனித்துவத்தை அடையாளப்படுத்த சாரியின் ஒரு பகுதியால் தமது தலையையும் மறைத்துகொண்டார்கள். அதே போல் முஸ்லிம் யுவதிகளுக்கு மத்தியில் சல்வார் கமிஸ் மிக பிரபலமான ஆடையாக இருந்தது, அதன் முந்தானையால் தமது தலையை மூடுவதால் அவர்கள் இஸ்லாமிய தனித்துவத்தையும் பேணி வந்தார்கள்.

பிற்காலத்தில் 1980/90  களுக்கு பிறகு மத்திய கிழக்கு பகுதியில் ஏற்பட்ட தொழில் வாய்ப்புகளால் இந் நாட்டு முஸ்லிம்களுக்கு மத்தியில் சவூதி அரேபிய ஆடை முறை தீவிரமாக பரவியது . பெண்களுக்கு மத்தியில் கருப்பு ஜுப்பா முறையும் ஆண்களுக்கு மத்தியில் வெள்ளை ஜுப்பா முறையும் ஆக்கிரமிப்பு பாணியில் மிகத்தீவிரமாக  அணுவணுவாக பின்பற்ற தொடங்கினார்கள். இந்த ஆடைமுறை நம் நாட்டில் பரவ ஆரம்பித்ததால் இன்று மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளதாகவே நான் கருதுகின்றேன். 

இனங்களுக்கு மத்தியிலோ சமயங்களுக்கு மத்தியிலோ பிளவுகளை வேற்றுமைகளை மேலோங்க செய்வதை விட ஒற்றுமையை வாளர்பதையே நாம் ஊக்குவிற்க வேண்டும். தற்காலத்தில் இந்நாட்டில் வாழும் மொத்த முஸ்லிம் சனத்தொகையில் இரண்டு அல்லது மூன்று சதவீதத்தினரால் பின்பற்றப்படும் இம் மத்திய கிழக்கு ஆடை முறையால் பெரும் பான்மை முஸ்லிம்களுக்கும் ஒரு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. அனாவசியமான முறையில் ,தேவைக்கு அதிகமாக தமது தனித்துவத்தை வெளிக்காட்ட இவர்கள் மேற்கொண்ட ஆக்கிரமிப்பு பாணியிலான இவர்களின் செயற்பாடுகள் இந் நாட்டின் தேசிய ஒற்றுமைக்கு விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தலாகவும் உள்ளது.

இவர்கள் இஸ்லாத்தை சுட்டிக்காட்டி இந்த புர்காவை (கோணிபில்லா உடையை) வலியுறுத்துவ தற்காக முன்வைக்கும் பிரதான காரணம் “ஆண்களின் காமஇச்சையிலிருந்து பெண்களை பாதுகாப்பது” என்பதாகும். பெண்களின் முகத்தையும் கைகையும் கண்டதும் காமம் வெளிப்படுவது மன நோயாளிகளுக்கல்லாமல் சாதாரணமான மனிதர்களுக்கு அல்ல என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
0 comments

இறைச்சிக்கடை அரசியலால் மாடறுப்பது தடை செய்யப்பட்டால்…

(“ராவய” சிங்கள பத்திரிக்கையின் ஆசிரியர் “விக்டர் ஐயவன்” எழுதிய ஆக்கத்தை நவமணி பத்திரிக்கை வெளியிட்டிருந்தது. காலத்தின் தேவை கருதி அவ்வாக்கத்தை இங்கு வெளியிடுகின்றோம்.)

கடந்த வெசாக் பௌர்ணமி தினத்தன்று தலதா மாளிகைக்கு முன்னால் தனக்குத்தானே தீமூட்டிக் கொண்டு இந்திர ரத்ன தேரர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தை நாம் அனைவரும் அறிவோம். நான்கு கோரிக்கைகளுடன், குறிப்பாக மிருகவதையை முன்வைத்து மாடறுப்பது இங்கு தடை செய்யப்பட வேண்டும் என்று தீக்குளித்து உயிரை மாய்த்துக் கொண்டார்.
இவரதும் இவர் போன்றும் மாடு அறுப்பதற்கு எதிராகக் கூக்குரலிடுவோரின் கோரிக்கை அமுலாக்கப்படுமானால் நாடு மிகவும் பாரியதொரு பொருளாதார நெருக்கடிக்கு முகம்கொடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படும். அத்துடன் வேலையில்லாப் பிரச்சினை மேலும் விஸ்வரூபம் எடுக்கவும் அது வழிவகுத்து விடும்.
இவற்றினை வைத்து நாம் சிறிது அலசிப் பார்ப்போம். ஜீவகாருண்யம் என்ற போர்வையிலேயே மாடுகள் அறுக்கப்படுவதைத் தடை செய்யக் கோரிக்கை விடுக்கிறார்கள். அப்படிப் பார்த்தால் நாட்டைச்சூழ மீன் பிடிக்கிறார்கள், ஆடு, கோழிகள் அறுக்கப்படுகின்றன. ஏன் நாட்டில் மிகவும் பெரும்பாலானோர்களால் கோழி, முட்டை உணவாகக் கொள்ளப்படுகிறது. பொதுவாக சகல இன, மதத்தவர்களாலும் கோழி இறைச்சியும் முட்டையும் உணவில் பிரதான பங்கு வகிக்கின்றன.
கோழியும் மாட்டைப்போன்று உயிருள்ள ஒரு பிராணி. அது வெட்டப்பட்ட பின் துடிக்கும் காட்சியை நாம் அனைவரும் நன்கறிவோம். இப்படி இருந்தும் ஏன் அதற்கெதிராக குரல் கொடுப்பதில்லை.
பெரும்பாலான மதகுருக்கள் உட்பட சகல மதத்தவர்களும் போல கோழியையும் முட்டையையும் பல வழிகளிலும் உணவாகப் பயன்படுத்துகிறார்கள். சில சந்தர்ப்பங்களில் முட்டைக்குத் தட்டுப்பாடு நிலவும் போது வெளிநாடுகளில் இருந்தும்கூட இறக்குமதி செய்து தேவையைப் பூர்த்தி செய்கிறார்கள்.
எனவே, ஜீவ காருண்யம் என்று கோழிகள் அறுப்பதைத் தடை செய்தால் நாட்டில் எத்தனை கோழிப் பண்ணைகள், எத்தனை ஆயிரம் பேர் அதன் மூலம் பொருளாதார ரீதியாக சீவிக்கிறார்கள் என்பதை சிந்தித்துப் பாருங்கள்.
அதேபோன்றுதான் நாட்டில் பரவலாக பசுப் பண்ணைகள் இருந்து வருகின்றன. நாட்டின் பால் தேவையைப் பூர்த்தி செய்ய முடியாத நிலையில் பலதரப்படட பால்மா வகைகள் இறக்குமதி செய்யப்படுகின்றன.
இந்நாட்டிலுள்ள குறிப்பிட்ட பௌத்தர்களும் இந்துக்களும் மாமிச உணவுகள் பரிமாறப்படாவிட்டாலும் பால் வகைகள், முட்டை சேர்ந்த உணவுகளை உட்கொள்வதைக் காண்கின்றோம். அல்லது ஆட்டிறைச்சி, கோழி இறைச்சியை உண்ணும் பௌத்த இந்துக்களும் இருக்கவே செய்கின்றார்கள். ஏன் இந்த பௌத்த பிக்குகளும் அவர்கள் சார்ந்தோரும் மாட்டிறைச்சியை மட்டும் துõக்கிப் பிடிக்க வேண்டும்? இவர்களின் பௌத்த அடிப்படை வாதத்தில் எழுந்த சிந்தனையின் வெளிப்பாடே காரணமாகும்.
நாட்டின் பால் தேவைக்காக தினம் பசுவொன்று 20-25 லீற்றர் பால் தரக்கூடிய ரக பசுக்கள் கொண்ட பால் பண்ணை அமைய வேண்டும். பால் பண்ணையோடு மேய்ச்சல் புல் வெளியும் தொடர்பு படுகிறது. இவையும் தொழில், பொருளாதாரத் துறைகளில் பங்கு வகிக்கின்றன. நல்ல ரக பசு ஒன்று ஒரு இலட்சம் முதல் இரண்டு இலட்சம் ரூபா பெறுமதிவாய்ந்ததாகும்.
மூன்று வருடங்களின் பின்பே பசு கன்று ஈன்று பால்தரும் நிலையை அடைகின்றது. அது சுமார் 7 வருடங்கள் வரை பயன்பாடுடையதாக அமையும். அதன்பின் மாடு அறுப்புத் தடை வந்தால் பால் எடுப்பது நிறுத்தப்பட்டபின் குறித்த பசுவை, பசுக்களை அப்படியே விட்டு விட்டால் அவற்றுக்கான மேய்ச்சல் நிலம், உணவுப் பிரச்சினை, இட நெருக்கடியால் பண்øயாளர் மண்ணைத்தான் கவ்வ வேண்டிவரும்.
சுமார் ஒன்று இரண்டு லட்சம் ரூபாவுக்கு வாங்கிய பசு, பால் பயன்பாடு தீர்ந்த பின் இறைச்சிக்காக விற்கப்படுமாயின் 500 கிலோ எடையுடையதாக வைத்துக் கொண்டால் கிட்டத்தட்ட ஒரு லட்சம் ரூபாவுக்கு விற்பனை செய்யலாம். பால் பண்ணையாளரின் இலாபம் இதிலேதான் தங்கியிருக்கிறது. மாடு அறுப்பது தடைசெய்யப்பட்டால் நாட்டில் பால பண்ணைகள் கூட இழுத்து மூட வேண்டித்தான் வரும் என்பது உறுதி.
மாட்டிறைச்சியை விரும்பாத இந்துக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட இந்தியாவில் கூட பால் பண்ணைகள் இலாபத்திலும் சிறப்பாகவும் இயங்க அங்கு வாழும் 177 மில்லியன் முஸ்லிம்கள் இறைச்சியை உணவாகக் கொள்வதே பிரதான காரணமாகும்.
உலகில் தாவரங்கள் உட்பட சகல உயிரினங்களும் உயிர் வாழ புரதம் இன்றியமையாததாகும். அமினோ அமிலங்களின் சேர்க்கையே புரத உற்பத்திக்கு காரணியாகும். தாவர இலைகள் காற்று, சூரிய ஒளி மூலம் தம் உணவைத் தயாரித்துக் கொள்கின்றன.
ஏனைய உயிரினங்கள் அமினோ அமிலத்தினை உட்கொள்ளும் உணவு மூலம் பெற்றுக் கொள்கின்றன. 10 வகையான அமினோ அமிலங்கள் அடங்கிய உணவே நிறைவான புரத உணவாகக் கொள்ளப்படுகிறது. தாவர உணவு வகைகளில் இரண்டொரு அமினோ அமிலங்களே காணப்படுகின்றன. ஆனால் மாமிச உணவுகளிலே தான் 10 வகை அமினோ அமிலங்களும் அடங்கியிருப்பதாக வைத்திய விஞ்ஞானம் கூறுகின்றது. எமது உடலில் நீருக்கு அடுத்தபடியாக அதிகமாக இருப்பது புரதமேயாகும்.
எனவே, இறைச்சி உண்பதைத் தடுக்க பிரசாரம் செய்யும் பௌத்தர்கள் தம் இனத்தைப் பலவீனப்படுத்தி நோயாளியாக்கவே வழி வகுக்கிறார்கள் என்றால் மிகையாகாது. ஆதிகால சிங்களவர்கள் பலசாலிகளாக இருந்து பாரமான கருங்கற்களைச் சுமந்து மிகப் பெரிய குளங்கள் வாவிகளை அமைத்திருக்கிறார்கள். அவர்கள் மாமிசம் உண்டதனாலே தான் இவ்வாறு பலம் பெற்றிருக்கிறார்கள்.
குறித்த குளங்களில் மீன் வளர்த்து உணவாகப் பெற்றிருக்கிறார்கள், கண்ணி வைத்தும் வேட்டையாடியும் மரை, மான்கள், காட்டுப் பன்றிகளைப் புசித்திருக்கிறார்கள். தமது வேட்டைப் பொருட்களில் ஒரு பகுதியை விகாரைகளுக்கும் பங்கு வைத்திருக்கிறார்கள். அரச மாளிகைக்குக் கூட வேட்டையாடிய இறைச்சியை விநியோகித்திருக்கிறார்கள்.
மகிந்த தேரர் இலங்கை வந்து தேவநம்பிய திஸ்ஸ மன்னனைச் சந்தித்த சந்தர்ப்பத்தில் அவர் வேட்டையாடிய இறைச்சியை சாப்பிட்டுக் கொண்டிருந்ததாக மகாவம்சத்தில் பதிவாகியிருக்கிறது. மன்னன் பௌத்த தர்மத்தைத் தழுவிய பின்னரும் வேட்டையாடியதைக் கைவிட்டதாக வரலாற்றில் அறிய முடியவில்லை.
கி.பி. 1153 முதல் 1185 வரை ஆட்சிபுரிந்த சிரேஷ்ட பௌத்த மன்னனாக மதிக்கப்படும் முதலாவது பராக்கிரமபாகு மன்னன் அவரது மகாராணி உட்பட அரச அதிகாரிகளுடன் மான், மரை வேட்டைக்குச் சென்றதாக சூலவங்ஸவில் குறிப்பிட்டிருக்கிறது.
அநாகரிக தர்மபால மாமிசம் உண்போரைக் காட்டு மிராண்டிகளாகவே கணித்தார். அவர் அன்று முஸ்லிம்கள் மீதுள்ள வெறுப்புணர்ச்சியின் வெளிப்பாடாகவே அதனை முன்வைத்திருக்கிறார். அவரின் இனவாதச் சிந்தனையின் பலாபலனாகவே 1915 ஆம் ஆண்டு சிங்கள முஸ்லிம் இனக்கலவரம் வெடித்து பல இழப்புக்களைச் சந்தித்தமை மறப்பதற்கில்லை. இன்று எழுந்துள்ள அதே விரோதப் போக்கு நீடிக்குமானால் நாடு அதைவிடவும் பாரதூரமான விளைவுகளைச் சந்திக்க வேண்டி ஏற்படும் என்ற அச்சமும் தெரிவிக்கப்படுகிறது.
உலகில் 79 மில்லியன் தமிழர்கள் வாழ்கிறார்கள். அதனால் இங்கு 30 வருடங்கள் இனப்போர் வெடித்து நாடு அதளபாதாளத்தில் வீழ்ந்தது. ஆனால், உலகில் 1619 மில்லியன் முஸ்லிம்கள் வாழ்கின்றார்கள். 50 மேற்பட்ட முஸ்லிம் நாடுகள் உலகில் இருக்கின்றன. இப்போதுள்ள நிலையில் சிங்கள முஸ்லிம் முறுகல் நிலை உக்கிரமடையுமாயின் பாரதூர விளைவுகளை நினைத்தும் பார்க்க முடியாதென்ற உண்மையும் மறுப்பதற்கில்லை. இனவாத ரீதியாக மாடறுப்பது உட்பட எழும் முஸ்லிம் விரோத செயற்பாடுகளைத் தூண்டுவோர் இதனை உணர வேண்டும்.
சிங்களத்தில் : விக்டர் ஐவன்.
நன்றி - rasminmisc
0 comments

இலங்கை – இனவாதம் முடிவுக்கு வந்துவிட்டதா?


கடந்த ஒன்றரை வருடங்களாக இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக தொடர்ச்சியாக நடை பெற்று வந்த இனவாத குரோத பிரச்சாரங்கள் கடந்த ஒரு மாதமாக ஓரளவுக்கு குறைந்திருந்தது.

ஆரம்பத்தில் இருந்தளவுக்கு படு பயங்கரமாக இல்லாவிட்டாலும், ஓரளவுக்கு ஆங்காங்கே முஸ்லிம் எதிர்ப்புப் பிரச்சாரங்கள் நடைபெற்றுக் கொண்டுதான் இருந்தன.
ஆனால் முஸ்லிம் தலைமைகளும், சில இயக்கங்களும் “இனி எல்லாம் முடிவுக்கு வந்துவிட்டது. யாரும் அஞ்சத் தேவையில்லை“ என்ற அடிப்படையில் பிரச்சாரங்களை முன்னெடுத்து வருகின்றார்கள்.
இதற்கான காரணம் என்ன?
பத்திரிக்கைகளில், தொலைக்காட்சிகளில் முஸ்லிம்களுக்கு எதிரான பிரச்சாரங்கள் பற்றிய செய்திகள் குறைவாக இடம்பிடித்தது. இன்னும் சொல்லப் போனால் சில செய்திகள் மீடியாக்களில் இடம் பிடிக்கவே இல்லை எனலாம்.
எது எப்படியோ இனி எல்லாம் முடிந்துவிட்டது என்றொரு சிந்தனைக்கு விரும்பியோ விரும்பாமலோ முஸ்லிம் சமுதாயத்தில் சிலர் தள்ளப்பட்டு விட்டார்கள். அதிலும் இலங்கை முஸ்லிம்களில் மத்ஹபை பின்பற்றுவர்கள் அதிகம். குறிப்பாக ஷாபி மத்ஹபை பின்பற்றும் தப்லீக் ஜமாத்தினர் ஒவ்வொரு ஊரிலும் நிறைந்திருக்கின்றார்கள்.
அதே போல் தவ்ஹீத், ஜமாத்தே இஸ்லாமி என்று பலரும் ஒரு வகையில் இந்த சிந்தனைக்குள் ஈர்க்கப்பட்டுவிட்டார்கள்.
தப்லீக் ஜமாத்தினரைப் பொருத்தவரையில் அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா என்ன முடிவை அறிவிக்கின்றதோ அந்த முடிவில் நிலைத்திருப்பார்கள். குறிப்பாக (இடர்கால) குனூத் ஓதும்படி வேண்டிக் கொண்ட உலமா சபை, பின்னர் அதை நிறுத்தும் படியும் வேண்டிக் கொண்டது.
பிரச்சினை இருக்கும் போது குனூத் ஓத சொன்னார்கள். இப்போது பிரச்சினைகள் முடிவுக்கு வந்துவிட்டது அதனால் ஓத வேண்டாம் என்று அறிவித்துள்ளார்கள். என்ற சிந்தனைக்குள் தாராளமாக தப்லீக் வாதிகள் ஈர்க்கப்பட்டுவிட்டார்கள்.
அதே போல் அமீர் சொன்னால் நாங்கள் எதனையும் செய்வோம் என்ற கருத்துப்பட ஜமாத்தே இஸ்லாமி இயக்கத்தை சார்ந்தவர்கள் தங்கள் காலத்தை கடத்தும் அதே நேரம் அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா சபையில் தங்கள் ஜமாத்தை சார்ந்தவர்களும் இடம்பிடித்திருப்பதினால் உலமா சபை சொல்வதையே தாரக மந்திரமாக ஏற்று செயல்படுவதற்கு இவர்களும் தயாராகிவிட்டார்கள்.
இறுதியாக தவ்ஹீத் பேசும் சகோதரர்களோ இரண்டு வகையினாராக இந்த விஷயத்தில் தங்களை அடையாளம் காட்டுகின்றார்கள்.
முதல்சாரார் ஜம்மிய்யதுல் உலமாவை ஏற்றுக் கொண்டு, நிதி நிறுவனங்களின் கொத்தடிமைகளாக இருக்கக் கூடியவர்கள். இவர்களைப் பொருத்தவரையில் தங்கள் நிதி நிறுவனங்கள் உலமா சபையை நம்பியுள்ளது. அதனால் தாங்களும் உலமா சபை சொல்வதை நம்பி நடக்க தயார் என்று உளப்பூர்வமான முடிவுக்கு வலிந்து ஈர்க்கப்பட்டுவிட்டார்கள்.
இரண்டாவது சாரார் நமக்காக உண்மையில் குரல் கொடுப்பவர்கள் யார்? என்பதை அறிந்து அவர்களின் ஆலோசனைப் படி தங்கள் முடிவை நிர்ணயிப்பவர்கள். இவர்களைப் பொருத்த வரையில் இன்னும் இனவாதம் முடிவுக்கு வரவில்லை. ஏதோ ஒரு பெயரில் மீண்டும் இது தலை தூக்கும் அதை எதிர் கொள்ளும் முறைகளை நாம் தெளிவாக அறிந்து அதன்படி அவற்றை எதிர்கொள்ள வேண்டும் என்ற நிலைபாட்டில் இருக்கின்றார்கள்.
எது எப்படியோ “எல்லாம் முடிந்துவிட்டது” என்ற நிலைக்கு பெரும்பாலான முஸ்லிம்களும், முஸ்லிம் அமைப்புக்களும் விரும்பியோ, விரும்பாமலோ வந்துவிட்டார்கள்.
ஆனால்…. உண்மையில்…..
இனவாதம் முடிவுக்கு வந்துவிட்டதா? என்ற கேள்விக்கான உண்மையான பதில் “இன்னும் முடிவுக்கு வரவில்லை” என்பது தான். உண்மையில் ஒரு மாத காலங்கள் பிரச்சினைகள் குறைந்திருந்ததே தவிர முடிவுக்கு வரவில்லை.
கடந்த ஒரு மாதத்திற்குள்ளும் கூட, கொழும்பு லேடி ரிஜ்வே மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சென்ற முஸ்லிம் சகோதரியின் ஹிஜாபை அகற்குவதற்கான முயற்சிகள் நடை பெற்றன. இது போல் நாட்டின் பல பகுதிகளிலும் ஆங்காங்கே சம்பவங்கள் நடை பெற்றது. ஆனால் அவை மீடியாக்களில் பெரியளவு இடம் பிடிக்கவில்லை. இதன் காரணமாகவே “எல்லாம் முடிந்துவிட்டது” என்ற முஸ்லிம்களின் போலி எண்ணம் வலுப்பெற்றது என்பது பின்புலக் காரணியாகும்.
எது எப்படியோ அமெரிக்க பயணத்தை முடித்துவிட்டு வந்திருக்கும் பொது பல சேனாவின் சகாக்கள் மீண்டும் பிரச்சினைகளை உண்டாக்கும் விதமாக கடந்த 11ம் தேதி கேகல்லையில் ஒரு பொதுக் கூட்டத்தை நடத்தினார்கள். இதில் அவர்கள் நினைத்த அளவுக்கு ஆதரவு கிடைக்காவிட்டாலும், வழமையான தங்கள் பாணியில் இனவாதத்தை கட்டவிழ்த்து விட்டார்கள்.
அதைத் தொடர்ந்து தாம் நடத்துகின்ற பத்திரிக்கையாளர் சந்திப்புக்களின் மூலம் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் கொச்சைப் படுத்தும் விதமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றார்கள்.
இலங்கையில் அல்-கைதா, அல்-ஜிஹாத் அமைப்புக்கள் இயங்குகின்றன. என்ற தங்களின் வழமையான கப்ஸாவை தொடர்ந்து கட்டவிழ்த்து விடுகின்றார்கள்.
அதே போல் தவ்ஹீத், வஹாபி இயக்கங்களை தடை செய்ய வேண்டும் என்ற பழைய புராணத்தை மீண்டும் பாட ஆரம்பித்துள்ளார்கள்.
இவைகளெல்லாம் இனவாதம் இன்னும் முடிவுக்கு வரவில்லை என்பதை தெளிவாக உணர்த்துகின்றது. மட்டுமன்றி அனகாரிக தர்மபாலவின் அடிச்சுவட்டை தொடர்ந்து பயணிப்பதற்கு இந்த இனவாதிகள் தயாராகியிருக்கின்றார்கள் என்பதை இந்த செயல்பாடுகள் தெளிவா உணர்த்துகின்றன.
ஆதலினால்…. நமது கடமை……
இப்போது நம் முன்னால் இருக்கின்ற கடமை என்ன? இஸ்லாத்தை அதன் தூய வடிவில் தெளிவாக எத்திவைக்க வேண்டும். குறிப்பாக சிங்கள மொழி மூலமாக பிரச்சாரத்தை பெருவாரியாக நாம் முன்னெடுக்க வேண்டும் என்பதை அனைவரும் உணர்ந்து சிங்கள மொழி மூலமான பிரச்சாரத்திற்கான சிறந்த திட்டமிடலுடன் நமது தஃவா பயணத்தை தொடர்வோமாக.
rasminmisc 
0 comments

மத சகிப்புத் தன்மை பேணாதவன் உண்மையான பௌத்தனாக மாட்டான்.



களனி பல்கலைக்கழக பேராசிரியர் ஜயந்த செனவிரத்ன.
மத சகிப்புத் தன்மை தொடர்பாக களனி பல்கலைக்கழக பேராசிரியர் ஜயந்த செனவிரத்ன எழுதிய ஆக்கத்தை இங்க பதிவிடுகின்றேன். இதில் மத சகிப்புத் தன்மை குறித்து உலக மட்டத்திலான கருத்துக்களை பேராசிரியர் ஆராய்வதுடன், பௌத்த மதத்திலிருந்தும் ஆதாரங்களை முன்வைத்திருக்கின்றார். இலங்கை நாட்டில் இனவாதத்தை விதைத்து பிரிவினை வாதத்தைத் தூண்ட நினைப்பவர்களின் சிந்தனையில் பௌத்த பொதுமக்கள் சிக்கிக் கொள்ளாமல் தங்களை பாதுகாத்துக் கொள்வதற்கான சில சிந்தனைகளை பேராசிரியர் இதில் தொகுத்திருக்கின்றார்.
மத சகிப்புத் தன்மை தொடர்பான பண்பு குறித்து எல்லோராலும் பேசப்படுகின்றன. பிற மதத்தவர்களுடன் இரண்டறக் கலந்து வாழும்போது, மேற்படி சகிப்புத் தன்மை பேணுவது மிகவும் உயர்வானதொன்றாக அவர்கள் கருதுகின்றனர். ஏனெனில் பெரும்பாலான பௌத்தர்கள் பிற மதங்களை மதித்து, மதங்களுக்கிடையிலான உறவினைப் பேணி நடக்கின்ற போதிலும் ஒரு சில அரசியல் இலாபம் கருதிய சக்திகள் பிறமதச் செயற்பாடுகளுக்கு ஊறு விளைவிக்கச் செய்யும் பண்பினை தம் அடிவருடிகளுக்கு ஊட்டி, அதன் மூலம் மத நம்பிக்கையாளர்களுக்கும் மதத்தைப் பின்பற்றுவோருக்கும் எதிராக தமது மதத்தைச் சேர்ந்தவர்களை ஈடுபடத் தூண்டும் நிலையைக் கண்டு வருவதானாலேயே மேற்படி மத சகிப்புத் தன்மை குறித்து பெயரளவில் விரும்புகின்றனர்.
பௌத்தர்கள் என்போர், சகல மதங்களிலுமுள்ள தர்க்க ரீதியான போதனைகளை மதித்து நடக்கும் வகுப்பினர் என்றே நான் நினைக்கிறேன். அல்லது, அந்நிய மத செயற்பாடுகளை மதிக்க முடியாவிடினும் அதனை விமர்சிக்காமல் மௌனம் காக்கும் ஒரு பிரிவினர் என்பதே எனது மற்றொரு கருத்தாகும். ஆனால், யாராலும் நினைத்துக் கூடப் பார்க்க முடியாத நிலைக்கு நிலைமை மாறியிருக்கிறது.
“பொறுமை’ என்பதற்கு மத நிம்மதி, நிம்மதி போன்ற அர்த்தங்கள் கொள்ளப்படுகின்றன. எவ்வாறான போதும் மத சகிப்புத் தன்மை தொடர்பாக பௌத்த மதத்தின் கருத்தை கேட்பதற்கு முன் அந்த நிலைப்பாடு தொடர்பாக அறிந்து கொள்வது பிரயோசனமாக அமையும் எனக் கருதுகின்றேன்.
“மத சகிப்புத் தன்மை’ எனும் சூழ்நிலையில் ஒரு பஷன் என்ற நிலைக்கு வீழ்ந்தது ஐரோப்பிய காலத்திலாகும். விசேடமாக 2001 செப்டெம்பர் 11ஆம் திகதி தாக்குதலைத் தொடர்ந்து ஐக்கிய அமெரிக்காவில் இந்தப் பதம் ஒரு மந்திரம் போன்றிருந்தது. ஐரோப்பாவில் ஏனையோர் நல்ல நிலைக்கு கருதப்படுவதாக இன்னும் காணக்கூடியதாக இல்லை. அதற்குக் காரணம் ஐரோப்பிய சங்கத்துக்கு உட்பட்ட சில பிரதேசங்களில் “சகிப்புத் தன்மை’ சிதைந்திருப்பதேயாகும். ஏனைய மதங்கள் பொறுமை காப்பதற்கு எத்தகைய கரிசனையும் அதற்காக எடுக்க வேண்டும் என்பது தெரிகிறது.
விசேட கருத்துக் கொண்டுள்ள “சகிப்புத் தன்மை’ என்ற சொல்லைப் பிரேரித்தவர் என்ற அடிப்படையில் கணிக்கப்படுபவரான ஜேர்மன் நாட்டு நோக்காளரான ஜர்கன் ஹபர்மாஸ் (Turgan Habermas) என்பவராவார். 2004 இல் ஜெகஸ் டெரீடா (Jacgues Derrida) மரணமானதைத் தொடர்ந்து ஐரோப்பாவின் முன்னணி நோக்காளராகத் திகழ்ந்தவர் இவரே.
ஹபர்மாஸ், பல்கலைக்கழகத்தை (Cosmopolitanism) கட்டியெழுப்பி, நோக்காளராகத் தன்னைக் காட்டிக் கொண்டு, சகிப்புத் தன்மை எனும் அடிப்படைக் கொள்கைக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டிருப்பது, அதில் காணப்படும் முழுமையான நியாயத் தன்மையினாலாகும் என்று கூறலாம். நவீன உலகில் காணப்படும் மதங்கள் ஒருமுகப்பட வேண்டும் என்றும் அவ்வாறே பன்மைத்துவவாதத்துக்கு திறந்துவிட வேண்டும் என்றும், அவர் அங்கு நம்பினார். அவ்வாறே நிகழ்காலத்தில் பல்வேறு பிரச்சினைகளில் சிக்கியிருக்கும் உலகை வெவ்வேறு கோணங்களில் நோக்குவதற்கு மதங்கள் வெற்றி கொள்ள வேண்டும் என்று அவர் நம்பினார்.
ஹபர்மாஸ் இங்கு சகிப்புத்தன்மை எனும் பதத்தைப் பிரயோகிப்பது லிபரல் அரசியல் சித்தாந்தத்தில் அவர் கண்டுகொள்ள விரும்புவது, நாட்டுப் பிரஜைகள் அனைவரும் பரஸ்பரம் என்ற அடிப்படையில் சம உரிமைகள் பெற்று வாழும் ஒரு சூழலையே அத்தகைய சூழலில் எந்தவொரு சமய அதிகார சபைக்கோ அல்லது அரசியல் அதிகார சபைக்கோ பொறுமை காக்க ஒருதலைப் பட்சமாக வரையறை விதிப்பது கடினமான ஒரு விடயமாகும். அதனால் சமூகத்தில் வாழும் அனைவரும் தமதும், ஏனைய மதத்தவர்களதும் நம்பிக்கையாளர்களுக்கும் பின்பற்றுவோருக்கும் விசேடமான எந்தவொரு சலுகைகளும் வழங்காது, ஏற்றுக் கொள்ளும் நிலை ஏற்படுகிறது.
ஹபர்மாஸ் நோக்கும் விதத்தில், சமய அடிப்படைவாதங்களை சகித்துக் கொண்டு இருப்பதில் மனிதப் போராட்டம் லிபரல் அரசை நிர்மாணிப்பதற்கு உதவிய சக்தியாக இருந்தது மாத்திரமல்ல, இன்றும் அது அவ்வாறே செல்லுபடியாகியிருக்கிறது. அனைவரும் பரஸ்பரம் அன்னியொன்யமாக வாழும் அரசியல் கலாசாரத்தில் இயங்கும் ஓர் அமைப்பு முறை இருப்பதால் (Normative Reasons) ஏனைய நம்பிக்கையாளர்களைப் புறக்கணிக்க முயற்சிப்போரை தோற்கடிக்கச் செய்யலாம் என்பதையும் அவர் காட்டித் தந்தார். இந்த அடிப்படையில் மத சகிப்புத் தன்மையை ஏற்றுக் கொள்ளும் அல்லது செயற்படுத்தும் மக்கள் இரண்டு வகையான சுமைகளை சுமக்கிறார்கள் என்று ஹபர்மாஸ் கூறுகிறார்.
அதாவது, முதலில், தமது சமயத்துக்கு பொருத்தமான விதத்தில் வாழ்வதாகும். இரண்டாவதாக அனைவருக்கும் சம உரிமை வழங்க வேண்டும் என்பதை ஏற்றுக் கொள்வதுடன் பிறரது உரிமைகளுக்கும் மதிப்பளித்தலாகும்.
ஐரோப்பிய சூழ்நிலையில் மத சகிப்புத்தன்மை முன்னுக்கு வந்தது தற்செயலான நிகழ்வொன்றல்ல. மிகவும் பலம் வாய்ந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த செயற்பாடு மூலமேயாகும். 14ஆம் நூற்றாண்டின் மத்திய பகுதியிலிருந்து பல நூற்றாண்டுகள் காலமாக ஐரோப்பாவால் மிகவும் விருப்பத்துடன் மேற்கொள்ளப்பட்ட அந்நியர்களை வெளியேற்றுவது அழிப்பது மற்றும் பலாத்காரமாக சம்ஹாரம் செய்வதுமான (Forcible Assimilation) செயற்பாடுகளுக்கு மேலதிகமாக இனங்களது ஒருமைப்பாடு மற்றும் பல் கலாச்சாரத்தை பிரபல்யப்படுத்துவது வரலாற்றின் முக்கிய நடவடிக்கைகளினூடாகவாகும்.
ஹபர்மாஸ் மூலம் இங்கு மேற்கொள்ளப்பட்டது சகிப்புத் தன்மை என்ற பதத்தை புனரமைப்புச் செய்து அதற்கு சம்பிரதாய பூர்வமாக முக்கியத்துவம் வழங்குவதாகும். அதே போன்றே இந்தியாவைச் சேர்ந்த மதமற்ற நோக்காளரான மீராநந்த (Meera Nanda) என்பவர், மத சகிப்புத்தன்மை என்பது, உள்ளத்திலிருந்து மாத்திரம் ஊற்றெடுத்து வரக்கூடிய ஒன்றென்று காட்டித் தருகிறார். அவற்றின்படி அந்த நிலைப்பாட்டிலிருந்து பிற மதத்தினரைப் பற்றிப் புரிந்து கொள்வதற்கோ அவசரமாகப் பின்பற்றுவதற்கோ அதில் எந்தவொரு ஆலோசனையும் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை. விசேடமாக, “பிறருக்குச் செய்யும் உபகாரம்’ என்ற அர்த்தம் பொறுமையில் கருக்கொண்டிருக்கிறது.
அடுத்து பொறுமையோடு இருப்பதால் கருணைப் பண்பு போன்று, பெருந்தன்மையும் இருக்கலாம். பெரும்பாலும் வரையறையற்ற அதிகாரம் கொண்ட பெரும்பான்மை மூலம் சிறுபான்மையினர் மீது பொறுமை மேற்கொள்ள முடியும். அத்துடன் எந்த நேரத்திலும் மேற்படி பொறுமையை நிறுத்திக் கொள்ள அவர்களாலே முடியும். அப்போது ஏனைய பலவீனமான சிறுபான்மை (எண்ணிக்கையின் அடிப்படையை பொறுத்தே இங்கு கருத்துக் கொள்ளப்படுகிறது). மதத்தினரின் குரல் மேலோங்குவதற்கும் இடம் கிடைப்பதில்லை. பெரும்பான்மையோரால் எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாது போன சந்தர்ப்பங்களில் ஏற்பட்ட பாராதூரமான அநியாயங்கள் ஏராளமானவற்றை அண்மைக்கால வரலாற்றில் காண முடிகிறது.
பகலில் தமது வீட்டில் உணவு உண்ட அயலவர் மாலையில் தனது வீட்டை தீக்கிரையாக்குவதைக் காண்கின்றோம். இது சர்வசாதாரண காட்சிகளாகும். பழைய யூகோஸ்லேவியா உடைந்து சிதறிப்போன பின்னர், பொறுமைக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டு, சமய ரீதியான வழிமுறை ஆரம்பமானதை அண்மையில் நாம் கண்டோம். அதனால் இலங்கையிலும் அத்தகையதொரு நிலை ஏற்பட வழியிருக்கிறது.
1983 கறுப்பு ஜூலை சிறுபான்மையினர் தாங்கிக் கொள்ளாத, பொறுத்துக் கொள்ளாத ஒன்றாக அமைந்தது. அதன் சிதைந்து போன இடங்கள் இன்னும் மீள முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றன. யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட போதும் தமிழ், சிங்கள மக்களுக்கு முகத்துக்கு முகம் பார்க்க முடியாத அளவுக்கு தூரமாக்கப்பட்டு விட்டது.
தற்போது பௌத்த இஸ்லாமிய சமய விரிசலுக்கான சந்தர்ப்பம் வந்திருக்கிறது. அதுவும் யாராலோ வைக்கப்பட்ட பொறியாகும். நூற்றுக்கு அறுபத்தைந்து வீதமான பௌத்த மக்கள் இந்த பொறியில் அகப்பட்டிருக்க மாட்டார்கள் என்றே கருதுகின்றேன்.
பௌத்தர்களுக்கு  சமய சக வாழ்வு தேவைப்படும் அதே நேரம் அதற்கான சூழல் எம் எதிரே வந்து கொண்டிருக்கிறது. நாம் தெரிந்த வரையில் சம்பிரதாயபூர்வமாக மதம் ஒன்றை அறிந்து கொள்வதற்கு மூன்று வழி முறைகள் காணப்படுகின்றன. அதாவது, சமய கிரகந்தங்கள், (Scriptures), இறைவாக்கு (God Gada) மற்றும் மறுவுலகம் (Next World) ஆகியன தொடர்பான ஆழமான கருத்துக்கள்.
இந்தியாவின் முதலாவது பிரதமர் நேரு, இந்த காரணிகள் மூன்றையும் வரையறைக்குட்படுத்தி மதம் ஒன்றை அறிமுகம் செய்தால் மக்கள் தமது விமர்சன ரீதியான அறிவை மட்டுப்படுத்திக் கொள்வர் என்று அவர் கூறினார். தமது அனுபவம் மற்றும் சுயசிந்தனை (விமர்சன அறிவு) யைப் பயன்படுத்தி உண்மையை ஆராய்ந்து உணர்ந்து கொள்வது மதத்தைப் புரிந்து கொள்வதற்கான மிகவும் சிறந்த வழிமுறையாகும் என்று அவர் மேலும் கூறினார்.அவ்வாறு செய்யும் போது எமக்கு சமய மேம்பாட்டினை குருட்டு பக்தி சிரத்தையுடனும் தவறான எண்ணப்பாடுகளிலிருந்தும் தவிர்ந்து கொள்ள முடியுமாகிறது.
நேரு பின்பற்றும் சமயமானது, சிறந்த செயற்பாடு, சிறப்புக்கும் கெட்ட செயற்பாடுகள் கேட்டுக்கும் இட்டுச் செல்லும் என்பதாகும். எனது மதத்தின் அடிப்படையும் அதுவேயாகும். (Good begets good and bad bagets bad; this is the main principle of my relagion) ஆபிரகாம் லிங்கனும் அதேபோன்றே கூறியிருக்கிறார்.
“நான் நல்லதொன்றைச் செய்யும் போது நல்ல எண்ணமும் தீமையொன்றைச் செய்யும் போது தீய எண்ணமும் ஏற்படுவதை உணர்கிறேன். இதுதான் எனது மதக் கோட்பாடாகும். (When I do good I feel Good, when I do bad, I feel bad, and that’s my religion) புத்தரின் போதனைகளின்படி மதம் ஒன்றைப் பின்பற்றுவதோ அல்லது ஏற்றுக் கொள்வதோ என்றால் குருட்டு பக்தியோ வைராக்கியமோ இல்லாது கடைப்பிடிக்க வேண்டும் என்பதாகும். சத்தியம் தொடர்பாக காலாமயன் செய்த போதனையில், “ஒரு பரம்பரையிலிருந்து அடுத்த பரம்பரைக்கு வந்ததால் மாத்திரம் மேற்படி சம்பிரதாயங்களில் நம்பிக்கை வைக்க வேண்டாம்.
வாய் வழியாக வந்தாலோ மேலான பண்டிதர்கள் எழுதி வைத்திருந்தாலோ அல்லது உயர்ந்த உளவியல் பண்பு உள்ளவரால் உருவாக்கப்பட்டது என்பதாலோ நம்பிக்கை கொள்ள வேண்டாம். செய்ய வேண்டியது, உங்களால் ஆழமாக ஆய்வு செய்து, தெளிவான முடிவுக்கு வந்து, உங்கள் அறிவுச் சிந்தனையோடு உடன்படுகிறதா என்பதுடன் மகிழ்ச்சிக்கும் உயர்வுக்கும் காரணமாக அமைகிறது என்பதை மாத்திரம் ஏற்றுக் கொண்டு, அதன்படி வாழுங்கள்’ (காலாம சூத்திரம், அங்குத்தர நிகாய)
(தமிழில் : ஏ.எல்.எம். சத்தார்)
நன்றி - rasmin 
0 comments

பொது பல சேனாவை விசாரனைக்கு உட்படுத்த வேண்டும்

bodu
ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்.
அமைதியான நாட்டுக்குள் பிரச்சினைகளை உண்டாக்கி, நாட்டு மக்களின் ஐக்கியத்தை துண்டாட நினைக்கும் பொது பல சேனா என்ற பிரிவினைவாத இயக்கத்தை அரசு தடை செய்வதுடன் அந்த இயக்கத்தின் அமைப்பாளர்கள் தொடர்பில் விரிவான விசாரனையும் நடத்த வேண்டும் என ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் அரசாங்கத்திடம் கோரிக்கை வைக்கின்றது.
யுத்தத்திற்கு பின்னரான இலங்கையில் அமைதியும், சுபீட்சமும் நிலை பெற்றுள்ள இவ்வேலையில் கடந்த சில மாதங்களாக இனவாதத்தை மக்கள் மத்தியில் பரப்பி சிறுபான்மை மக்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குள்ளாக்கும் விதத்தில் தனது செயல்பாடுகளை அமைத்துக் கொண்டுள்ள பொது பல சேனாவை அரசாங்கம் விசாரனைக்கு உட்படுத்த வேண்டும். என ஜமாத்தின் தலைவர் ஆர்.எம் ரியாழ் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இயங்கும் அல்-ஜிஹாத், அல்-கைதா, தௌஹீத் ஜமாஅத் அமைப்புக்கள் தொடர்பில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது பல சேனா அறிக்கை வெளியிட்டுள்ளது.
யுத்தத்தை வெற்றி கொண்டு நாட்டை அமைதியாக வழி நடத்தி வரும் அரசை கொச்சைப் படுத்தும் விதமாக அல்-ஜிஹாத், மற்றும் அல்-கைதா போன்ற ஆயுதம் தாங்கும் போராட்டக் குழுக்கள் இலங்கையில் இருப்பதாக பொது பல சேனா கருத்து வெளியிட்டுள்ளது. இது அரசின் நம்பகத் தன்மையை கெடுக்கும் செயல்பாடாகும்.
உண்மையில் அல்-ஜிஹாத் மற்றும் அல்-கைதா போன்ற இயக்கங்கள் இலங்கையில் இயங்குமாக இருந்தால் அவற்றுக்கு எதிராக அரசாங்கம் கட்டாயம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில் எமக்கு எவ்வித மாற்றுக் கருத்தும் கிடையாது.
ஆனால் தாங்கள் இலங்கை நாட்டின் உத்தியோகப் பூர்வமற்ற பொலிசார் என்று கூறிக் கொண்டு சட்டத்தை மதிக்காமல் சட்டத்தை தனது கையில் எடுத்து செயல்படும் பொது பல சேனா எனும் அமைப்பே இலங்கையில் பயங்கரவாத செயல்களில் ஒரு வருடகாலமாக பகிரங்கமான செய்ல்பட்டு வருவதனால் அவ்வமைப்பையும் அதன் அங்கத்தவர்களையும் அரசாங்கம் தடை செய்து உத்தரவிட வேண்டும் என்று அராங்கத்திற்கு கோரிக்கை வைக்கின்றோம்.
தவ்ஹீத் ஜமாஅத் அமைப்புக்களை விசாரனைக்கு உட்படுத்த வேண்டும் என்று பொது பல சேனா கோரிக்கை வைக்கின்றது. உண்மையில் விசாரிக்கப்பட வேண்டியவர்கள் யார்? தவ்ஹீத் ஜமாஅத் அமைப்புக்களா? அல்லது பொது பல சேனாவா? என்பது அரசுக்கும் நாட்டு மக்களுக்கும் தெளிவாகத் தெரிந்த விஷயமாகும்.
இலங்கையில் செயல்படும் தவ்ஹீத் அமைப்புக்களில் எவரும் நாட்டின் இறையான்மைக்கு எதிராக எச்சந்தர்ப்பத்திலும் செயல்படவில்லை. இதே நேரம் அரசின் சுமையை குறைக்கும் விதமாக பலவிதமான சமுதாயப் பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றார்கள் என்பது நிதர்சனமான உண்மையாகும்.
கடந்த ஒரு மாதங்களாக பொது பல சேனாவின் செயலாளர் கலபடவத்தே ஞானசார தேரர் அமெரிக்காவில் இருந்தார். இவரும் இவருடைய குழுவினரும் அமெரிக்காவுக்கு சென்றது ஏன்? என்பது பற்றி அரசு விரிவான விசாரனை ஒன்றை நடத்த வேண்டும். அதே நேரம் இவர்களுக்கு பின்புலமாகவிருந்த பிரச்சினைகளுக்கு தூண்டுதலாக இருப்பவர்கள் விஷயத்திலும் அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அரசைக் கேட்டுக் கொள்கின்றோம்.
0 comments

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger