Featured Post Today
print this page
Latest Post
Showing posts with label பொதுவானவை. Show all posts
Showing posts with label பொதுவானவை. Show all posts

வீசி எறியப்படும் வளைகுடா அடிமைகள்!

டந்த 1960 களில் வளைகுடா நாடுகளில் பெட்ரோல் படுகைகள் கண்டுபிடிக்கப் பட்டபோது வறண்ட பாலைவனமாக இருந்த இப் பிரதேசங்களைக் கட்டமைக்க இலட்சக் கணக்கான தொழிலாளர்கள் தேவைப்பட்டனர்.
இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை, நேபாளம், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளிலிருந்து கை நிறையச் சம்பளத்துடனும் கவர்ச்சியான சலுகைகளுடனும் பல்வேறு துறைகளில் திறமையான தொழிலாளர்கள் இறக்குமதி செய்யப்பட்டனர். அந்த நேரத்தில் போதிய உள்நாட்டு வேலை வாய்ப்புகளற்று இருந்த இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகள், வளைகுடா நாடுகளிலிருந்து வரத் துவங்கிய அந்நியச் செலவாணிகளில் சுகம் கண்டு, கிடைத்தவரை லாபம் என்ற மனநிலையில் நாடு திரும்ப நேரிடும் வெளிநாடுவாழ் மக்களுக்கான உருப்படியான திட்டங்கள் ஏதுமின்றி இருந்தன.

2010-2011 ஆம் ஆண்டில் துனீஷியா, எகிப்து, லிபியா போன்ற வட ஆப்பிரிக்க நாடுகளில் ஏற்பட்ட மக்கள் புரட்சியின் காரணமாக ஆட்சியாளர்களின் பதவிகள் பறிக்கப்பட்டு ஆட்சிமாற்றம் ஏற்பட்டது. மேற்கத்திய நாடுகள் இதனை "வளைகுடா வசந்தம்" என்று குறிப்பிட்டனர். பெட்ரோலிய வளம் மிக்க ஏனைய அரபு நாடுகளிலும் பல்வேறு காரணங்களுக்காக மக்கள் புரட்சி ஏற்படும் சூழல் இருந்தாலும் அரேபிய மன்னராட்சியாளர்கள் அவற்றை ஓரளவு சமாளித்து வருகின்றனர். எனினும், இங்கொன்றும் அங்கொன்றுமாக அவ்வப்போது புரட்சிக்குரல் எழுவதும் அவற்றைத் திரைமறைவுப் பேரங்கள் வாயிலாகவோ அல்லது தேசத் துரோகக் குற்றச்சாட்டுகளின் பெயரில் சாம/பேத/தண்ட நடவடிக்கைகள் வாயிலாகவோ ஒடுக்குவதும் நடைபெற்று வருகின்றன.
நாம ஊர் விட்டு இங்கே பொழக்க வந்திருக்கோம்... இந்த நாட்டு கவர்மெண்ட்டு போகச் சொன்னா போயிட வேண்டியது தானே? இதிலே என்ன எதிர்ப்பு வேண்டிக் கிடக்கு?
இந்நிலையில் எஞ்சியுள்ள அரேபிய நாடுகளிலும் வளைகுடா வசந்தம் பரவி, இதுநாள் வரை அனுபவித்து வந்த சுகபோக வாழ்வுகள் பறி போய்விடுமோ என்ற கவலை அரபு ஆட்சியாளர்களுக்கு ஏற்பட்டதால், தம் குடிமக்களை வசப்படுத்த பல்வேறு சலுகைகளை, நலத் திட்டங்களை அவர்கள் அறிவித்தனர். ஏற்கனவே குடிமக்களுக்கு நிலம், வீடு, நீர், மின்சாரம், உயர்கல்வி, திருமணம் என்று அனைத்து அடிப்படைத் தேவைகளையும் வளைகுடா அரசுகள் இலவசமாக வாரி வழங்குவது கவனிக்கப் பட வேண்டியதாகும். எனினும், தற்போது அதிகம் இளைஞர்கள் படித்துப் பட்டம் பெற்று வருவதன் மூலம் நாட்டில் வேலைவாய்ப்பின்மை சிறிது சிறிதாகப் பெருகியதால், இத்தகைய நலத் திட்டங்களில் மக்களுக்குத் திருப்தி ஏற்படவில்லை.

இதனைக் கண்டு கொண்ட ஆளும் வர்க்கம், குடிமக்களுக்கு மேலும் நம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக, வெளிநாட்டுத் தொழிலாளர்கள் மீது தன் பார்வையைத் திருப்பியது.. அவர்கள் மீது பல்வேறு கட்டுப்பாடுகளை ஆள்வோர் விதித்தனர். இதன் விளைவாக, சவூதியின் நிதாகத் (Nitaqat/அறநெறி) சட்டத்தைத் தொடர்ந்து குவைத்திலும் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் மீது கிடுக்கிப் பிடி சட்டம் பாய்கிறது. இது, உள்நாட்டு மக்களுக்கு உயர் பதவிகளில் வேலை வாய்ப்பினை ஏற்படுத்தித் தருவதற்காக அமைக்கப்பட்ட Saudization, Omanization, Qatarization, Emiratization போன்றவற்றின் புதிய பதிப்பு என்றாலும், இம்முறை சற்று கூடுதல் கெடுபிடிகள் உள்ளன.


சவூதியின் நிதாகத் சட்டத்தின்படி ஆயிரக்கணக்கான இந்தியர்கள் வேலை வாய்ப்பினை இழந்த செய்திகளைக் கடந்த சில மாதங்களாக அறிந்து வருகிறோம். அதனைத் தொடர்ந்து கடந்த சில வாரங்களாக முன்னறிவிப்பின்றி, குவைத்தும் களத்தில் இறங்கியுள்ளது. இதில் சிக்கியவர்களுள் தாய்நாடு திரும்பத் தயங்குபவர்கள், மறுபரிசீலனைக்கு விண்ணப்பிப்பவர்கள், நிபந்தனைக் காலத்திற்குள் வெளியேறாதவர்கள் என எந்தப் பேதமுமின்றிக் கொத்தாக அள்ளிச் சென்று சிறையில் அடைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. தாய்நாட்டிற்குத் திரும்ப விமானங்களில் இடம் கிடைக்காத குறுகிய கால இடைவெளியில் பல்லாயிரக் கணக்கானோரை வெளியேற்றிக் கொண்டிருப்பது இந்தியத் தூதரகங்களுக்கே சவாலான விசயமாக உள்ளது. காலக் கெடுவை நீடிக்கக் கோரி இந்தியத் தூதரகம், தமிழக அமைப்புகள், மற்றும் பேரவைகள் சார்பாக முன் வைக்கப்பட்டவேண்டுகோளும் நிராகரிக்கப் பட்டுள்ளது.
 
(வெளியாகும் செய்திகளின்படி, குவைத்தில் இருந்து மட்டும் வருடத்திற்கு ஒரு லட்சம் வீதம் என மொத்தம் 10 இலட்சம் வெளிநாட்டுத் தொழிலாளர்களை, பலவந்தமாக வெளியேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குவைத்தில் மட்டும் மொத்தம் 6.5 இலட்சம் இந்தியர்கள் பணிபுரிகின்றனர் என்பதும் அதில் சரிபாதி கேரள மாநிலத்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது)
 
வளைகுடா நாட்டு அரசுகள் மேற்கொண்டு வரும் இந்த அடக்குமுறை, சரியென்றும் தவறென்றும் இருவிதமான கருத்துக்கள் இந்தியர்களிடையே நிலவி வருவதைக் காண்கிறோம்.  "நாம ஊர் விட்டு இங்கே பொழக்க வந்திருக்கோம்... இந்த நாட்டு கவர்மெண்ட்டு போகச் சொன்னா போயிட வேண்டியது தானே? இதிலே என்ன எதிர்ப்பு வேண்டிக்கிடக்கு?" என்பது போன்ற கமெண்ட்டுகளோடு வளைகுடா அரசுகளின் இச்செயல் மிகச் சரிதான் என்று ஓட்டளித்த நபர்கள், நல்ல ஸ்திரமான வேலைகளிலும் உயர் பதவிகளிலும் கை நிறைய சம்பாதிப்பவர்கள்; அதிர்ஷ்டவசமாக இத்தகைய சிக்கல்களில் மாட்டிக்கொள்ளாதவர்கள்.
 
கடைமட்டத்தில் தொடங்கியுள்ள இந்தச் 'சுத்திகரிப்பு' நடவடிக்கை மேல் மட்டத்திலும் தொடர்வதற்கு அதிகக் காலமில்லை. இப்போதே 60 வயதைத் தொட்ட சீனியர்களுக்குக் குடியேறல் (இக்காமா) புதுப்பித்தல் இல்லை என்று சொல்கிறார்கள். அடுத்து, தொழில் மற்றும் வர்த்தகச் சிக்கல்களுக்குத் தீர்வு சொல்லும் திறனாளிகள் தவிர்த்து மற்ற பணிகள் மண்ணின் மைந்தர்களுக்கே என்றும் தகவல்கள் வருகின்றன. வெளிநாட்டவர்களுக்கான விசாவிற்கு விண்ணப்பித்தல், புதுப்பித்தல் துவங்கி டிரைவிங் லைசன்ஸ் வரை கழுத்தை நெரிக்க வைக்கும் கெடுபிடிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இந்த நேரத்தில், நம் அடி மனதில் எழும் கேள்விகளைத் தடுக்க இயலவில்லை. ஆனால், இந்தக் கேள்விகள் மூலம் எழுந்து நிற்கும் "யானைக்கு மணி கட்டுவது யார்?" என்ற கேள்வி அதைவிட பூதாகரமாய் நிற்கிறது.
  • ஒரு நாட்டின் சட்ட திட்டங்களுக்குக் கட்டுப்படுவது, அங்கு பணியாற்றச் சென்றவர்களின் கடமை. இதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், தம் நாட்டின் அடிப்படைக் கட்டமைப்புகள் சீரடைந்தவுடன் பிழிந்து போட்ட கரும்புச் சக்கையாய், இதுநாள்வரை அந்த நாடுகளின் முன்னேற்றத்தின் முதுகெலும்பாய் இருந்தவர்கள் மீது இப்படிக் கடுமை செலுத்தி வெளியேற்றுவது எவ்வகையில் நியாயம்?
  • ஸ்பான்ஸரின்கீழ் வேலை செய்யாமல் ஏதோ ஒரு காரணத்திற்காக அவரிடமிருந்து வெளியேறிச் "சட்டத்தை மீறிவிட்ட குற்றத்திற்காக" நாட்டை விட்டுத் துரத்தப்படும் அவல நிலை ஒரு பக்கம் இருக்கட்டும். ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு வேலைக்குவந்த தொழிலாளி, என்ன காரணத்தால் தப்பித்து ஓடினார் என்று நடுநிலையாக இருதரப்பிலும் விசாரணை மேற்கொண்ட பிறகு, தவறு செய்தவர் பக்கம் நடவடிக்கை எடுப்பதுதானே சரியான அணுகுமுறை?
    • தாய், தாரம், சகோதரிகள் கழுத்தில் கிடந்த கருகமணி / தாலி உட்பட அனைத்தையும் விற்று அடகுவைத்து, டிராவல்ஸ் புரோக்கர் - ஏஜண்ட்டுக்கும் விமான டிக்கெட் என்றும் பணம் கட்டி வளைகுடா கனவில் வரும் தொழிலாளிகள், ரத்தம் சிந்திச் சம்பாதிக்கும் பணத்தில் பெருந்தொகையை உள்நாட்டு ஸ்பான்ஸருக்குக் கப்பம் கட்டும்படியான ஃப்ரீ விஸா (ஆஸாத் விசா) எனும் அடிமை வியாபாரத்தை வளரச் செய்த இத்தகைய ஸ்பான்ஸர்களுக்கு என்ன தண்டனை அளிக்கப் போகின்றன இந்த அரசுகள்?
(நாம் அறிந்த இந்திய டிரைவர் ஒருவர், 800 ரியால்கள் மட்டுமே சம்பளம் தரும் தமது ஸ்பான்ஸர் வீட்டுக் கொடுமை தாங்க முடியாமல், வெளியில் சென்று வேலை செய்யக் கோரிக்கை விடுத்துள்ளார். அந்த அடிமையை "விடுதலை" செய்வதற்காக ஸ்பான்ஸர் கேட்ட கப்பத் தொகை 8 ஆயிரம் ரியால்கள் முதல் 10 ஆயிரம் ரியால்கள் வரை. இந்தக் கடனை அடைக்க எத்தனை மாதங்கள் தனியே உழைக்க வேண்டியிருக்கும் என்பதையும் அந்தக் கடன் தொகை அடைந்த பிறகே அவருடைய குடும்பத்தினருக்காக உழைக்கத் தொடங்க வேண்டும் என்பதையும் சிந்தித்தால் முதுகுத் தண்டு சில்லிடும். இவருக்காவது ஒரு முறையோடு ஆயிற்று. வருடந்தோறும் கப்பம் கட்டும் "கத்தாமா" (பணிப்பெண்கள்) கண்ணீர்க் கதைகள் இங்கே நிறைய உண்டு. இந்நாட்டுக் குடிமகன்களுக்கு மில்லியன் கணக்கில் லாபம் ஈட்டித் தரும் அநியாயத் தொழில் இது என்பதை அரசுகள் "அறியாமல்" போனது துரதிருஷ்டம்) -
இந்தக் கொடுமையெல்லாம் கடைநிலைத் தொழிலாளிகளுக்கு மட்டும் தான் என்றில்லை. படித்துப் பட்டம் பெற்ற மேல்தட்டு அலுவலர்கள் கூட இந்த அடிமை வியாபாரத்தில் சிக்கி வாழ்க்கையில் சில வருடங்களை இழந்துள்ளனர்.
  • இத்தகைய நாடுகளில் இயங்கும் தொழிலாளர்களுக்கான அமைச்சகங்கள் (Ministry of Labor) மற்றும் மனித உரிமை மீறல்பற்றி ஏட்டளவில் பேசும் ஐ.நா, ஸ்பான்ஸர் மீதுள்ள தவறுகளைக் காணும் சூழல்களில் மவுனித்து விடுவது அதன் பாரபட்சத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வருகிறது.
  • 5.நாட்டை விட்டு ஒரு தொழிலாளியை வெளியேற்றும் தகுதிகள் என்னென்ன என்று குவைத் அரசு விளம்பரப் படுத்தியிருக்கும் பட்டியல் வியப்பை ஏற்படுத்துகிறது. கீழே காண்க:

  • காரை சரியான இடத்தில் பார்க் செய்யவில்லை என்றாலும் நாடு கடத்தல்
  • சீட் பெல்ட் போடவில்லை என்றாலும் நாடு கடத்தல்
  • தமது PRO வின் மொபைல் எண் கையில் இல்லை என்றாலும் நாடு கடத்தல்

என்று நீளும் பட்டியல் மிரள வைக்கிறது. இந்தப் பட்டியலின் அடிப்படையில் சிக்கும் அப்பாவிகள் எவரையும், எந்த ஒரு காரணத்தையும் சொல்லி நாடு கடத்தி விட இயலும். இவ்வளவு தூரம் சுற்றி வளைப்பதை விட "வெளிநாட்டவர் என்று சொன்னாலே நாடுகடத்தல்" என்று நேரடியாக அறிவித்திருக்கலாம்.
  • மேற்கூறிய பட்டியலில் குறிப்பிட்டுள்ள சாலை விதிமுறைகளை மீறுபவர்கள் உள்நாட்டவர்களா அல்லது பிழைக்கவந்த வெளிநாட்டவர்களா என்று ஆதாரங்களுடன் உள்ள புள்ளி விபரங்களைப் பார்வையிட்டால் விடை என்ன என்று தனியே சொல்லத் தேவையில்லை. விபத்துகளின்போது விசாரணைக்குக் காவல்துறை அழைத்துச் சென்றால் உள்நாட்டவரோடு வெளிநாட்டவர் எவ்வாறு நடத்தப்படுவர் என்பதிலும் ரகசியம் ஏதுமில்லை.

இத்தகைய கெடுபிடிச் சட்டநடவடிக்கை மூலம் கடைநிலை வெளிநாட்டுப் பணியாளர்களைப் பலவந்தப்படுத்தி வெளியேற்றி விட்டாலும் வளைகுடா வசந்தம் வீசப் போவதில்லை என்று உறுதியாகச் சொல்லி விட முடியாது. ஏனெனில் இவ்வாறு வெளியேற்றப்படும் கடைநிலைப் பணியாளர்களால் ஏற்படும் வெற்றிடத்தை உள்நாட்டுப் பணியாட்கள் கண்டிப்பாக நிரப்பப் போவதில்லை. தீயாய்க் கொளுத்தும் வெயிலில் கட்டுமானப் பணிக்கோ, நிரம்பி வழியும் குப்பை கூளங்களை அள்ளவோ அரபு குடிமக்கள், பணியாளர்களாக முன் வரப் போவதில்லை.
 
மேலும், ஓரளவு படித்த அரபு இளைஞர்களும் ஆசிய நாட்டவர்களைப் போன்று எல்லாச் சூழலுக்கும் இயைந்து பணியாற்றும் திறமையும் பொறுமையும் பெற்றவர்களல்லர். சாதாரணமாகவே இவர்களது வேலை நேரம் 3-5 மணி நேரங்களே என்பதையும் கவனத்தில் கொண்டால் இத்தகைய கெடுபிடிச் சட்டங்கள், உள்நாட்டு மக்களை ஏமாற்றும் கண்துடைப்பு நாடகங்களே அன்றி வேறில்லை என்பதை உணர்ந்து கொள்ளலாம்.

இங்குள்ள ஆட்சியாளர்கள் தங்கள் சுகபோக அதிகாரங்களைத் தக்க வைப்பதற்காகவும் உள்நாட்டுக் கலவரம் - மக்கள் புரட்சி என்ற சிந்தனைகள் குடிமக்களுக்கு வந்து விடாமல் செய்வதற்காகவும் பல்வேறு மானியங்களை அள்ளி வீசுகின்றனர். மேலே சொன்னபடி,  திருமண உதவி, இலவச வீடுகள், இலவச உயர்கல்வி, இலவச மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளைத் தொடர்ந்து வழங்க வேண்டுமெனில் வெளிநாட்டவர்களின் இருப்பு அவசியம். எனவே, அவர்களைத் துடைத்து விரட்டிவிட்டு,  பெட்ரோலை மட்டுமே நம்பியிருக்கும் உள்நாட்டு உற்பத்தி பெரிதாய் ஏதுமற்ற அரபு நாடுகளால் அதிக நாட்கள் தாக்குப் பிடிக்க முடியாது என்பதே யதார்த்தம். குடிமக்களுக்கான சலுகைகளுக்குச் சிறிதளவு குறைவு ஏற்பட்டாலும் வளைகுடா வசந்தம் எழுச்சி அடையும் அளவிற்கே இங்கே நிலைமை பலவீனமாக உள்ளது.

இச் சூழலில் இந்திய அரசுக்கு நாம் வேண்டுகோள் விடுப்பது யாதெனில், கோடிக்கணக்கான ரூபாய்களை அந்நியச் செலாவணியாக ஈட்டி, இந்திய நாட்டிற்குப் பெரும் வருவாய்க் கேந்திரமாக இதுநாள் வரை திகழ்ந்த வளைகுடா தொழிலாளர்கள் அடுத்த 10 வருடங்களுக்கு இவ்வாறு கொத்துக் கொத்தாக மூட்டை கட்டி அனுப்பப்படுவது இந்தியப் பொருளாதாரத்திற்குப் பெரும் அடியாக அமையும் என்பதைத் தெளிவாக உணர்ந்து கொண்ட நிலையில், உரிய தற்காப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியதும் - ஆயிரக்கணக்கில் வந்து குவியும் வளைகுடா நாடுகளில் வாலிபத்தை தொலைத்த இளம் முதியோர்களின் மறுவாழ்விற்கான நலத்திட்டங்களை அமைத்து அவர்களை அரவணைப்பதும் இந்திய அரசுக்கு இந்த நிமிடத்திய அவசியமாக உள்ளது.
 அபூ ஸாலிஹா
நன்றி - சத்தியம்

0 comments

இறைச்சிக்கடை அரசியலால் மாடறுப்பது தடை செய்யப்பட்டால்…

(“ராவய” சிங்கள பத்திரிக்கையின் ஆசிரியர் “விக்டர் ஐயவன்” எழுதிய ஆக்கத்தை நவமணி பத்திரிக்கை வெளியிட்டிருந்தது. காலத்தின் தேவை கருதி அவ்வாக்கத்தை இங்கு வெளியிடுகின்றோம்.)

கடந்த வெசாக் பௌர்ணமி தினத்தன்று தலதா மாளிகைக்கு முன்னால் தனக்குத்தானே தீமூட்டிக் கொண்டு இந்திர ரத்ன தேரர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தை நாம் அனைவரும் அறிவோம். நான்கு கோரிக்கைகளுடன், குறிப்பாக மிருகவதையை முன்வைத்து மாடறுப்பது இங்கு தடை செய்யப்பட வேண்டும் என்று தீக்குளித்து உயிரை மாய்த்துக் கொண்டார்.
இவரதும் இவர் போன்றும் மாடு அறுப்பதற்கு எதிராகக் கூக்குரலிடுவோரின் கோரிக்கை அமுலாக்கப்படுமானால் நாடு மிகவும் பாரியதொரு பொருளாதார நெருக்கடிக்கு முகம்கொடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படும். அத்துடன் வேலையில்லாப் பிரச்சினை மேலும் விஸ்வரூபம் எடுக்கவும் அது வழிவகுத்து விடும்.
இவற்றினை வைத்து நாம் சிறிது அலசிப் பார்ப்போம். ஜீவகாருண்யம் என்ற போர்வையிலேயே மாடுகள் அறுக்கப்படுவதைத் தடை செய்யக் கோரிக்கை விடுக்கிறார்கள். அப்படிப் பார்த்தால் நாட்டைச்சூழ மீன் பிடிக்கிறார்கள், ஆடு, கோழிகள் அறுக்கப்படுகின்றன. ஏன் நாட்டில் மிகவும் பெரும்பாலானோர்களால் கோழி, முட்டை உணவாகக் கொள்ளப்படுகிறது. பொதுவாக சகல இன, மதத்தவர்களாலும் கோழி இறைச்சியும் முட்டையும் உணவில் பிரதான பங்கு வகிக்கின்றன.
கோழியும் மாட்டைப்போன்று உயிருள்ள ஒரு பிராணி. அது வெட்டப்பட்ட பின் துடிக்கும் காட்சியை நாம் அனைவரும் நன்கறிவோம். இப்படி இருந்தும் ஏன் அதற்கெதிராக குரல் கொடுப்பதில்லை.
பெரும்பாலான மதகுருக்கள் உட்பட சகல மதத்தவர்களும் போல கோழியையும் முட்டையையும் பல வழிகளிலும் உணவாகப் பயன்படுத்துகிறார்கள். சில சந்தர்ப்பங்களில் முட்டைக்குத் தட்டுப்பாடு நிலவும் போது வெளிநாடுகளில் இருந்தும்கூட இறக்குமதி செய்து தேவையைப் பூர்த்தி செய்கிறார்கள்.
எனவே, ஜீவ காருண்யம் என்று கோழிகள் அறுப்பதைத் தடை செய்தால் நாட்டில் எத்தனை கோழிப் பண்ணைகள், எத்தனை ஆயிரம் பேர் அதன் மூலம் பொருளாதார ரீதியாக சீவிக்கிறார்கள் என்பதை சிந்தித்துப் பாருங்கள்.
அதேபோன்றுதான் நாட்டில் பரவலாக பசுப் பண்ணைகள் இருந்து வருகின்றன. நாட்டின் பால் தேவையைப் பூர்த்தி செய்ய முடியாத நிலையில் பலதரப்படட பால்மா வகைகள் இறக்குமதி செய்யப்படுகின்றன.
இந்நாட்டிலுள்ள குறிப்பிட்ட பௌத்தர்களும் இந்துக்களும் மாமிச உணவுகள் பரிமாறப்படாவிட்டாலும் பால் வகைகள், முட்டை சேர்ந்த உணவுகளை உட்கொள்வதைக் காண்கின்றோம். அல்லது ஆட்டிறைச்சி, கோழி இறைச்சியை உண்ணும் பௌத்த இந்துக்களும் இருக்கவே செய்கின்றார்கள். ஏன் இந்த பௌத்த பிக்குகளும் அவர்கள் சார்ந்தோரும் மாட்டிறைச்சியை மட்டும் துõக்கிப் பிடிக்க வேண்டும்? இவர்களின் பௌத்த அடிப்படை வாதத்தில் எழுந்த சிந்தனையின் வெளிப்பாடே காரணமாகும்.
நாட்டின் பால் தேவைக்காக தினம் பசுவொன்று 20-25 லீற்றர் பால் தரக்கூடிய ரக பசுக்கள் கொண்ட பால் பண்ணை அமைய வேண்டும். பால் பண்ணையோடு மேய்ச்சல் புல் வெளியும் தொடர்பு படுகிறது. இவையும் தொழில், பொருளாதாரத் துறைகளில் பங்கு வகிக்கின்றன. நல்ல ரக பசு ஒன்று ஒரு இலட்சம் முதல் இரண்டு இலட்சம் ரூபா பெறுமதிவாய்ந்ததாகும்.
மூன்று வருடங்களின் பின்பே பசு கன்று ஈன்று பால்தரும் நிலையை அடைகின்றது. அது சுமார் 7 வருடங்கள் வரை பயன்பாடுடையதாக அமையும். அதன்பின் மாடு அறுப்புத் தடை வந்தால் பால் எடுப்பது நிறுத்தப்பட்டபின் குறித்த பசுவை, பசுக்களை அப்படியே விட்டு விட்டால் அவற்றுக்கான மேய்ச்சல் நிலம், உணவுப் பிரச்சினை, இட நெருக்கடியால் பண்øயாளர் மண்ணைத்தான் கவ்வ வேண்டிவரும்.
சுமார் ஒன்று இரண்டு லட்சம் ரூபாவுக்கு வாங்கிய பசு, பால் பயன்பாடு தீர்ந்த பின் இறைச்சிக்காக விற்கப்படுமாயின் 500 கிலோ எடையுடையதாக வைத்துக் கொண்டால் கிட்டத்தட்ட ஒரு லட்சம் ரூபாவுக்கு விற்பனை செய்யலாம். பால் பண்ணையாளரின் இலாபம் இதிலேதான் தங்கியிருக்கிறது. மாடு அறுப்பது தடைசெய்யப்பட்டால் நாட்டில் பால பண்ணைகள் கூட இழுத்து மூட வேண்டித்தான் வரும் என்பது உறுதி.
மாட்டிறைச்சியை விரும்பாத இந்துக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட இந்தியாவில் கூட பால் பண்ணைகள் இலாபத்திலும் சிறப்பாகவும் இயங்க அங்கு வாழும் 177 மில்லியன் முஸ்லிம்கள் இறைச்சியை உணவாகக் கொள்வதே பிரதான காரணமாகும்.
உலகில் தாவரங்கள் உட்பட சகல உயிரினங்களும் உயிர் வாழ புரதம் இன்றியமையாததாகும். அமினோ அமிலங்களின் சேர்க்கையே புரத உற்பத்திக்கு காரணியாகும். தாவர இலைகள் காற்று, சூரிய ஒளி மூலம் தம் உணவைத் தயாரித்துக் கொள்கின்றன.
ஏனைய உயிரினங்கள் அமினோ அமிலத்தினை உட்கொள்ளும் உணவு மூலம் பெற்றுக் கொள்கின்றன. 10 வகையான அமினோ அமிலங்கள் அடங்கிய உணவே நிறைவான புரத உணவாகக் கொள்ளப்படுகிறது. தாவர உணவு வகைகளில் இரண்டொரு அமினோ அமிலங்களே காணப்படுகின்றன. ஆனால் மாமிச உணவுகளிலே தான் 10 வகை அமினோ அமிலங்களும் அடங்கியிருப்பதாக வைத்திய விஞ்ஞானம் கூறுகின்றது. எமது உடலில் நீருக்கு அடுத்தபடியாக அதிகமாக இருப்பது புரதமேயாகும்.
எனவே, இறைச்சி உண்பதைத் தடுக்க பிரசாரம் செய்யும் பௌத்தர்கள் தம் இனத்தைப் பலவீனப்படுத்தி நோயாளியாக்கவே வழி வகுக்கிறார்கள் என்றால் மிகையாகாது. ஆதிகால சிங்களவர்கள் பலசாலிகளாக இருந்து பாரமான கருங்கற்களைச் சுமந்து மிகப் பெரிய குளங்கள் வாவிகளை அமைத்திருக்கிறார்கள். அவர்கள் மாமிசம் உண்டதனாலே தான் இவ்வாறு பலம் பெற்றிருக்கிறார்கள்.
குறித்த குளங்களில் மீன் வளர்த்து உணவாகப் பெற்றிருக்கிறார்கள், கண்ணி வைத்தும் வேட்டையாடியும் மரை, மான்கள், காட்டுப் பன்றிகளைப் புசித்திருக்கிறார்கள். தமது வேட்டைப் பொருட்களில் ஒரு பகுதியை விகாரைகளுக்கும் பங்கு வைத்திருக்கிறார்கள். அரச மாளிகைக்குக் கூட வேட்டையாடிய இறைச்சியை விநியோகித்திருக்கிறார்கள்.
மகிந்த தேரர் இலங்கை வந்து தேவநம்பிய திஸ்ஸ மன்னனைச் சந்தித்த சந்தர்ப்பத்தில் அவர் வேட்டையாடிய இறைச்சியை சாப்பிட்டுக் கொண்டிருந்ததாக மகாவம்சத்தில் பதிவாகியிருக்கிறது. மன்னன் பௌத்த தர்மத்தைத் தழுவிய பின்னரும் வேட்டையாடியதைக் கைவிட்டதாக வரலாற்றில் அறிய முடியவில்லை.
கி.பி. 1153 முதல் 1185 வரை ஆட்சிபுரிந்த சிரேஷ்ட பௌத்த மன்னனாக மதிக்கப்படும் முதலாவது பராக்கிரமபாகு மன்னன் அவரது மகாராணி உட்பட அரச அதிகாரிகளுடன் மான், மரை வேட்டைக்குச் சென்றதாக சூலவங்ஸவில் குறிப்பிட்டிருக்கிறது.
அநாகரிக தர்மபால மாமிசம் உண்போரைக் காட்டு மிராண்டிகளாகவே கணித்தார். அவர் அன்று முஸ்லிம்கள் மீதுள்ள வெறுப்புணர்ச்சியின் வெளிப்பாடாகவே அதனை முன்வைத்திருக்கிறார். அவரின் இனவாதச் சிந்தனையின் பலாபலனாகவே 1915 ஆம் ஆண்டு சிங்கள முஸ்லிம் இனக்கலவரம் வெடித்து பல இழப்புக்களைச் சந்தித்தமை மறப்பதற்கில்லை. இன்று எழுந்துள்ள அதே விரோதப் போக்கு நீடிக்குமானால் நாடு அதைவிடவும் பாரதூரமான விளைவுகளைச் சந்திக்க வேண்டி ஏற்படும் என்ற அச்சமும் தெரிவிக்கப்படுகிறது.
உலகில் 79 மில்லியன் தமிழர்கள் வாழ்கிறார்கள். அதனால் இங்கு 30 வருடங்கள் இனப்போர் வெடித்து நாடு அதளபாதாளத்தில் வீழ்ந்தது. ஆனால், உலகில் 1619 மில்லியன் முஸ்லிம்கள் வாழ்கின்றார்கள். 50 மேற்பட்ட முஸ்லிம் நாடுகள் உலகில் இருக்கின்றன. இப்போதுள்ள நிலையில் சிங்கள முஸ்லிம் முறுகல் நிலை உக்கிரமடையுமாயின் பாரதூர விளைவுகளை நினைத்தும் பார்க்க முடியாதென்ற உண்மையும் மறுப்பதற்கில்லை. இனவாத ரீதியாக மாடறுப்பது உட்பட எழும் முஸ்லிம் விரோத செயற்பாடுகளைத் தூண்டுவோர் இதனை உணர வேண்டும்.
சிங்களத்தில் : விக்டர் ஐவன்.
நன்றி - rasminmisc
0 comments

பஸ் பயணங்களும்,இறையச்சத்தின் நிலைபாடும்.

காலச் சக்கரம் சுற்றிக் கொண்டிருப்பதால் உலகின் வளர்ச்சி பல விதங்களில் முன்னேறிக் கொண்டு வருகிறது.
ஆரம்ப காலங்களில் எங்காவது பிரயாணம் செய்ய வேண்டும் என்றால் கழுதை குதிரை ஒட்டகம் என்று பயணித்த காலம் போய் இன்று சைக்கில் தொடங்கி ராக்கட் வரை மனிதன் முன்னேறியுள்ளான். இந்த முன்னேற்றம் பாராட்டத் தக்க ஒன்றாக இருந்தாலும் முன்னேற்றத்தினால் வரும் பிரச்சினைகளை எதிர் கொள்ளும் வழி முறைகளையும் நாம் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும்.
இன்று பிரயாணிப்பதெற்கென்று பல வாகன முறைகள் இருந்தாலும் பெரும்பாலான மக்கள் பஸ்ஸில் தான் பிரயாணம் செய்கிறார்கள் இந்த பஸ் பிரயாணம் இலாபகரமானதாகவும், சுலபமானதாகவும் இருந்தாலும் பல சரியான முறையில் பயண்படுத்தாவிடில் பல சிக்கல்களை நம்முள் ஏற்படுத்தி விடும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் பஸ் பிரயாணம் பல வகைகளில் அமைந்திருக்கிறது.
இலங்கை இந்திய மக்களைப் பொருத்தவரை பஸ் பிரயாணம் என்பது மிகவும் இன்றியமையாத ஒன்றாக உள்ளது. அதாவது பஸ் பிரயாணத்தை தவிர்க்க முடியாத ஒன்றாகத்தான் இங்கு குறிப்பிட வேண்டியுள்ளது.
பஸ்ஸில் பிரயாணிக்கும் ஒவ்வொருவரும் ஷைத்தானை கூடவே அழைத்து செல்வதைப் போன்ற ஒரு நிலையை அடைகிறார்கள்.
இலங்கையைப் பொருத்தவரை ஆண், பெண் கலவை என்பது தற்காலத்தில் சாதாரணமானதாக மாறிவிட்டது.
ஆண்களுடன் பேசுவது சுற்றுவது ஆண்கள் பெண்கள் நிகழ்ச்சிகள் நடத்தப் படுவது அனைத்தும் ஒரு மேற்கத்தேய கலாச்சாரம் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.
இதே நிலை பஸ் பிரயாணத்திலும் தொடர்கிறது.
அதாவது அண்ணிய ஆணும் பெண்ணும் சாதாரணமாக அருகாமையில் அமர்ந்து செல்லும் காட்சிகள்.
கூட்ட நெறிசலில் ஒருவரை ஒருவர் உரசும் நிகழ்ச்சிகள் இவையெல்லாம் மிகைத்துப் போயிருப்பதை இலங்கை பஸ் பயணத்தில் நாம் கண் கூடாக காண முடியும்.
இதே நேரம் சிங்களப் பாடல் இல்லாமல் பஸ் ஒரு அடி கூட நகராது.
பாடல் போட்டால் தான் அங்கு எதுவும் நடக்கும் என்ற ஒரு அவள நிலை.
ஆடைக் கலாச்சாரத்தை சொல்லவே வேண்டியதில்லை. குட்டைப் பாவாடைகளும்உடலோடு ஒட்டிப் போன சல்வாரிகளும்துபை பேஷனை மிஞ்சிய ஹபாயாக்களும் காற்றில் பறப்பதென்பது இலங்கையில் அன்றாட காட்சியாக மாறிவிட்டது.
இதில் சில மாற்றங்களுடன் தான் இந்திய பஸ் பயணம் அமைந்திருக்கும்.
இலங்கையில் பாடல் இல்லையென்றால் பஸ் இல்லை.இந்தியாவில் படம் இல்லையென்றால் பஸ் இல்லை.
சென்னை நகருக்குள் ஓடும் பஸ்களில் மாத்திரம் பெரும்பாலும் டி.வி இல்லாமல் இருக்கிறது.
மற்ற எல்லா ஊர்களுக்கு செல்லும் பஸ்களிலும் டி.வி கட்டாயம் இருந்தாக வேண்டும் என்ற நிலை.
ஒரு காலத்தில் டெக் வைத்து படம் போட்ட காலம் போய் இந்தியாவில் அதிலும் தமிழகத்தில் சேட்லைட் மூலமாக அரசு போக்குவரத்துக் கலகமே படம் போடும் நிலை. இதே நேரம் ஆடைக் கலாச்சாரமோ இலங்கை இந்தியா என்று எந்த வேறுபாடும் இல்லாமல் தான் இருக்கிறது. இப்படிப் பட்ட பயணங்களில் கூட்ட நெறிசலில் சிக்கிக் கொள்பவர்களின் நிலை என்ன?
கூட்ட நெறிசலில் பெண்களோடு உறச வேண்டும் என்பதற்காகவே வரும் இளைஞர்களும் இலங்கையை விட இந்தியாவில் அதிகம் தான். இந்த நிலைகளை கருத்தில் கொண்டுதான் ஈமானைப் பாதுகாப்பதற்காகவே இஸ்லாம் மிகச் சிறந்த ஒரு பிராத்தனையை பிரயாணத்தில் ஓதும் படி சொல்லித் தருகிறது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பயணத்திற்காக தமது வாகனத்தில் எறி அமர்ந்ததும் மூன்று தடவை, “அல்லாஹு அக்பர் – அல்லாஹு அக்பர் – அல்லாஹு அக்பர்‘ எனக் கூறுவார்கள். பின்னர் பின்வருமாறு கூறுவார்கள்:
ஸுப்ஹானல்லதீ ஸக்கர லனா ஹாதா வமா குன்னா லஹு முக்ரினீன். வ இன்னா இலா ரப்பினா லமுன்கலிபூன். அல்லாஹும்ம இன்னா நஸ்அலு(க்)க ஃபீ ஸஃபரினா ஹாதா அல்பிர்ர வத்தக்வா வமினல் அமலி மா(த்)தர்ளா. அல்லாஹும்ம ஹவ்வின் அலைனா ஸஃபரனா ஹாதா வத்வி அன்னா புஃதஹுஇ அல்லாஹும்ம அன்(த்)தஸ் ஸாஹிபு ஃபிஸ்ஸஃபரி வல் கலீஃப(த்)து ஃபில் அஹ்லி அல்லா ஹும்ம இன்னீ அவூது பி(க்)க மின் வஃஸாயிஸ் ஸஃபரி வகாப தில் மன்ளரி வஸுயில் முன்கலபி ஃபில் மாலி வல் அஹ்லி
பொருள்: அல்லாஹ் மிகப் பெரியவன். எங்களுக்கு இதை வசப்படுத்தித் தந்தவன் தூயவன். நாங்கள் இதன் மேல் சக்தி பெற்றவர்களாக இருக்கவில்லை. மேலும் நாங்கள் எங்கள் இறைவனிடமே திரும்பிச் செல்பவர்கள். இறைவா! எங்களின் இந்தப் பயணத்தில் நன்மையையும், இறையச்சத்தையும், நீ பொருந்திக் கொள்கின்ற நல்லறத்தையும் உன்னிடம் வேண்டுகிறோம். இறைவா! எங்களின் இந்தப் பயணத்தை எங்களுக்கு எளிதாக்கு! இதன் தொலைவை எங்களுக்குச் குறைத்து விடு! இறைவா! நீயே பயணத்தில் தோழனாக இருக்கிறாய். எங்கள் குடும்பத்தை நீயே காக்கிறாய். இறைவா! இப்பயணத்தின் சிரமத்திலிருந்தும், மோசமான தோற்றத்திலிருந்தும் செல்வத்திலும் குடும்பத்திலும் தீய விளைவுகள் ஏற்படுவதிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.   நூல்: முஸ்லிம் 2392
மேற்கண்ட பிராத்தனையில் இறைவா! எங்களின் இந்தப் பயணத்தில் நன்மையையும்இ இறையச்சத்தையும்இ நீ பொருந்திக் கொள்கின்ற நல்லறத்தையும் உன்னிடம் வேண்டுகிறோம். என்று குறிப்பாக குறிப்பிட்டு சொல்லப் படுகிறது.
அதாவது பிரயாணம் என்பது தீமையை அதிகம் தூண்டும் ஒரு இடம்.அதிலும் இரவு நேரங்களில் தூரப்பயணங்களை பஸ்ஸில் மேற்கொள்ளும் போது வீடியோ படங்களும் காமத்தை தூண்டும் பாடல்களும் ஒளி,ஒலி பறப்பப்படுவதென்பது சாதாரணமாகிவிட்டதால் ஈமானைப் பாதுகாக்க நினைக்கும் ஒவ்வொரு இஸ்லாமியனும் மேற்கண்ட  துஆவை மனனம் செய்து ஒவ்வொரு பிரயாணத்தின் போதும் ஓதிக் கொள்ள வேண்டும். 
rasminmisc
0 comments

சத்தியப் பாதையில் ஓர் சோதனைப் பயணம்.


எத்துனை சோதனைகள் வந்தபோதும் மார்க்கத்தை விட்டு விட மாட்டோம் என்று இந்த இஸ்லாமிய மார்க்கத்தின் கொள்கைகளுக்காக எந்த கஷ்டம் வந்தாலும் அதை நாங்கள் ஏற்றுக் கொள்வோம் என்ற கொள்கையில் வாழ்ந்தவர்கள் நபியின் தோழர்கள்.
இந்த மார்க்கத்தின் கொள்கையை ஏற்றுக் கொண்டு நபியின் ஒரு கட்டளைக்கு மாறு செய்த காரணத்தினால் சுமார் 50 நாட்கள் ஊரை விட்டு நீக்கப்பட்ட கஅப் பின் மாலிக் (ரலி) அவர்களின் தியாக வரலாற்றை இப்போது பார்ப்போம்.
புகாரியில் இடம் பெற்றுள்ள இந்த செய்தியில் கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் பட்ட துயரங்களை ஏற்றுக் கொள்ளும் யாரும் இந்த மார்க்கத்தில் இணைந்த பின்னால் இந்த மார்க்கத்தின் கட்டளைகளை விட்டு விலகவும் மாட்டார்கள் விட்டுவிடவும் மாட்டார்கள்.
மதீனாவில் இருந்து மக்காவை நோக்கி ஹஜ்ஜுக்காக வரும் மக்களிடம் சத்தியப் பிரச்சாரம் செய்யும் வேலையில் கருணை நபி (ஸல்) அவர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்த காலமது.
மினாவில் முதல் (ஜம்ரத்துல்) அகபா என்ற இடத்தில், மதீனத்துத் தோழர்களுடன் அழைப்புப் பணி சந்திப்பு நடைபெற்றது. இதற்கு அகபா (கணவாய்) உடன்படிக்கை என்று பெயர் வழங்கப்படுகின்றது.
நபியவர்கள் நடை நபியாகப் பட்டம் பெற்ற 11, 12, 13வது ஆண்டுகளில் இந்த வரலாற்றுப் புகழ் பெற்ற சந்திப்புகள் மதீனத்து தோழர்களுடன் நடந்தன.
இந்த சந்திப்புக்களில் இரண்டாம் சந்திப்பின் போது இஸ்லாத்தை ஏற்றவர் தான் கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள்.
இந்த உடன்படிக்கை போலவே திடீரென்று நடந்த போர்தான் பத்ர் ஆகும்.
சிரியா சென்று விட்டுத் திரும்ப வருகின்ற அபூசுஃப்யானின் வியாபாரப் படையை வழிமறிக்க வந்த நபித்தோழர்கள் மீது அல்லாஹ்வால் வலிய திணிக்கப்பட்ட போர் தான் பத்ருப் போர்!
இந்தப் போரில் கலந்து கொண்ட அனைத்து தோழர்களும் பாவங்கள் மண்ணிக்கபட்ட புனிதர்களாக மாறினார்கள்.
(ஹாத்திப் பின் அபீ பல்தஆ என்ற நபித்தோழர், மக்காவாசிகளான இணை வைப்போர் சிலருக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கன் இரகசியத் திட்டங்கள் சிலவற்றை முன்கூட்டியே தெரிவித்துக் கடிதம் அனுப்பி, மாட்டிக் கொண்ட போது) உமர் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதரே! என்னை விடுங்கள்; (சதி வேலைகள் செய்த) இவரது கழுத்தைக் கொய்து விடுகிறேன் என்று சொன்னார்கள்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், இவர் பத்ருப் போரில் கலந்து கொண்டார். மேலும், உமக்கென்ன தெரியும்? ஒரு வேளை மாண்பும் மகத்துவமும் வாய்ந்தவனான அல்லாஹ், பத்ருப் போரில் பங்கேற்றவர்கடம் நீங்கள் விரும்பியதைச் செய்து கொள்ளுங்கள்; உங்களை நான் மன்னித்து விட்டேன் என்று கூறிவிட்டிருக்கலாம் என்று சொன்னார்கள். (நூல்: புகாரி 4890)
அகபா உடன்படிக்கையில் கலந்து கொண்ட கஅப் பின் மாலிக், பத்ருப் போரில் கலந்து கொண்ட முராரா பின் ரபீஃ அல் அம்ரீ, ஹிலால் பின் உமைய்யா அல் வாகிஃபீ ஆகிய மூன்று பேரும் தபூக் போரில் கலந்து கொள்ளாததால் நபி (ஸல்) அவர்களால் 50 நாட்கள் ஊர் விலக்கி வைக்கப்படுகின்றார்கள்; சமூக பகிஷ்காரம் செய்யப் படுகிறார்கள். தியாகிகளான இம்மூவரும் தண்டிக்கப்பட்ட பின்னரும், நாங்கள் தியாகிகள்; எங்களைத் தண்டிக்கலாமா? ஊரை விட்டு ஒதுக்கி வைத்து உறவை விட்டும் துண்டிக்கலாமா? என்று கேட்கவில்லை. கட்டுப்பட்டார்கள்.
அற்ப சொற்ப இலாபங்களுக்காக கொள்கையைத் தூக்கியெறியவில்லை.
இப்போது அந்த மூன்று பேர் தொடர்பான செய்திகளைப் பார்ப்போம்.
அகபா பிரமாணத்தை விட பத்ர் எனக்குப் பெரிதல்ல.
கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
தபூக் போரைத் தவிர நபி (ஸல்) அவர்கள் புரிந்த எந்தப் போரிலும் நான் கலந்து கொள்ளாமல் இருந்ததில்லை. இது தவிர, நான் பத்ருப் போரிலும் கலந்து கொள்ளவில்லை. பத்ரில் கலந்து கொள்ளாத எவரும் (அல்லாஹ்வால்) கண்டிக்கப்படவுமில்லை. (ஏனெனில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குறைஷிகன் வணிகக் குழுவை (வழி மறிக்க) நாடியே (பத்ருக்குப்) போனார்கள். (போன இடத்தில்) போர் செய்யும் திட்டம் இல்லாமலேயே அவர்களையும் எதிரிகளையும் அல்லாஹ் (பத்ருக் களத்தில்) சந்திக்கும்படி செய்து விட்டான்.
இஸ்லாத்தில் நாங்கள் நிலைத்திருப்போம் என (அன்சாரிகளான) நாங்கள் உறுதிமொழி எடுத்த அகபா இரவில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நானும் இருந்தேன். இதற்குப் பதிலாக பத்ருப் போரில் கலந்து கொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைத்திருக்க வேண்டும் என நான் விரும்பியதில்லை; அல்அகபா பிரமாணத்தை விட பத்ர் மக்களிடையே பெயர் பெற்றதாக இருந்தாலும் சரியே!
கடும் வெப்பத்தில் ஓர் சத்தியப் போராட்டம்.
அந்த (தபூக்) போரில் நான் கலந்து கொள்ளாத போது இருந்த உடல் பலமும் பொருள் வசதியும் (என் வாழ் நால்) வேறெப்போதும் எனக்கு இருந்ததில்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! ஒரே நேரத்தில் இரண்டு ஒட்டகங்கள் ஒரு போதும் என்னிடம் இருந்ததில்லை.
ஆனால், அந்தப் போரின் போது ஒரே நேரத்தில் இரண்டு ஒட்டகங்களை நான் வைத்திருந்தேன். மேலும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு புனிதப் போருக்குச் செல்ல நாடினால் (பெரும்பாலும்) வேறெதற்கோ செல்வது போன்று அதை மறைக்காமல் இருந்ததில்லை. ஆனால், தபூக் போர் (நேரம்) வந்த போது அதற்காகக் கடும் வெயிலில் நபி (ஸல்) அவர்கள் படையெடுத்துச் செல்லவிருந்தார்கள். தொலைதூரப் பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கும் என்றும், பெரும் (பாலைவன) வனாந்திரப் பிரதேசத்தைக் கடந்து செல்ல வேண்டியிருக்கும் என்றும், அதிக (எண்ணிக்கையிலான) எதிரிகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்றும் எதிர்பார்த்தார்கள். எனவே, முஸ்லிம்களுக்கு அவர்கள் எதிர்கொள்ள வேண்டியது பற்றி வெப்படையாகவே தெரிவித்து விட்டார்கள். அப்போது தான் அவர்கள் தங்கன் போருக்கான ஆயத்த ஏற்பாடுகளைச் செய்து கொள்ள முடியும். தாம் விரும்பிய திசையை (தபூக்கை) அவர்களுக்குத் தெரிவித்தும் விட்டார்கள். எழுதப்படும் எந்தப் பதிவேடும் இத்தனை பேருக்கு இடமக்காது எனும் அளவிற்கு முஸ்லிம்கள் பெரும் எண்ணிக்கையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தார்கள்.
பேரிச்சம் மரங்கள் பழுத்துக் குலுங்கும் அந்த நேரம்.
(போரில் கலந்து கொள்ளாமல்) தலை மறைவாகி விடலாமென நினைக்கும் எந்த மனிதரும், அல்லாஹ்விடமிருந்து இறை அறிவிப்பு வராத வரையில் (தான் போருக்கு வராத) விஷயம் நபி (ஸல்) அவர்களுக்குத் தெரிய வராது என்று எண்ணவே செய்வார். (அந்த அளவிற்குப் படையினரின் எண்ணிக்கை மிகுந்திருந்தது. பேரீச்சம்) பழங்கள் பழுத்து மர நிழல்கள் அடர்ந்து நின்ற காலத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்தப் போருக்குச் செல்ல ஆயத்தமானார்கள்.
போக வேண்டும் என்பது பொடுபோக்காக மாறியது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும், அவர்களுடன் முஸ்லிம்களும் பயண ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தனர்.
நானும் அவர்களுடன் சேர்ந்து கொண்டு பயண ஏற்பாடுகளைச் செய்யக் காலை நேரத்தில் செல்லுவேன். எனது பயணத்திற்கான எந்த ஏற்பாட்டையும் செய்து முடிக்காமல் திரும்பி வந்து விடுவேன்.
(நினைக்கும் போது) அந்த ஏற்பாடுகளைச் செய்து முடிக்க எனக்குத் தான் சக்தியிருக்கிறதே! (பிறகு, நான் ஏன் அவசரப் படவேண்டும்?) என்று என் மனத்திற்குள் கூறிக் கொண்டேன். என் நிலை இப்படியே நீடித்துக் கொண்டிருந்தது. மக்கள் பெரும்பாடு பட்டனர். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தம்முடன் முஸ்லிம்களை அழைத்துக் கொண்டு காலை நேரத்தில் புறப்பட்டு விட்டார்கள். அப்போதும் நான் எனது பயணத்திற்கு வேண்டிய எந்த ஏற்பாட்டையும் செய்து முடித்திருக்கவில்லை.
நபி (ஸல்) அவர்கள் சென்ற பின் ஒரு நாள் அல்லது இரண்டு நாட்களில் பயண ஏற்பாடுகளைச் செய்துகொண்டு அவர்களுடன் போய்ச் சேர்ந்து கொள்வேன் என்று நான் (என் மனதிற்குள்) சொல்லிக் கொண்டேன். அவர்கள் அனைவரும் சென்ற பிறகு மறுநாள் காலை பயண ஏற்பாடுகளைச் செய்ய நினைத்தேன். ஆனால், அன்றைய தினமும் எந்த ஏற்பாட்டையும் செய்து முடிக்காமல் திரும்பி வந்தேன். அதற்கு அடுத்த நாள் காலையிலும் நினைத்தேன். அன்றும் எந்த ஏற்பாடும் செய்து முடிக்கவில்லை. (இன்று நாளை என்று) எனது நிலை இழுபட்டுக் கொண்டே சென்றது. முஸ்லிம்கள் விரைவாகப் புறப்பட்டுச் சென்று விட்டனர். (எனக்கு) அந்தப் போர் கை நழுவிவிட்டது. நான் உடனடியாகப் புறப்பட்டுச் சென்று படையினருடன் சேர்ந்து கொள்ளலாம் என்று நினைத்தேன். அப்படி நான் செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். அது என் விதியில் எழுதப்பட்டிருக்கவில்லை.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் போருக்குச் சென்றதன் பின்னால், மதீனாவில் நான் மக்கடையே சுற்றி வரும் போது எனக்குப் பெரும் வருத்தமே ஏற்பட்டது. நயவஞ்சகர் எனச் சந்தேகிக்கப்பட்ட மனிதர்களையும் இறைவனால் சலுகை வழங்கப்பட்ட (முதியோர், பெண்கள் போன்ற) பலவீனர்களையும் தவிர வேறெவரையும் நான் (மதீனாவிற்குள்) பார்க்கவில்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தபூக் சென்றடையும் வரையில் என்னை நினைவு கூரவேயில்லை. தபூக்கில் மக்கடையே அமர்ந்து கொண்டி ருக்கும் போது தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், கஅப் என்ன ஆனார்? என்று கேட்டார்கள்.
உலக ஆசையும், கஅபின் உண்மை நிலையும்.
பனூ சலிமா குலத்தைச் சேர்ந்த ஒரு மனிதர், அல்லாஹ்வின் தூதரே! அவரின் இரு சால்வைகளும் (ஆடை அணி கலன்களும்) அவற்றைத் தம் தோள்கல் போட்டு அவர் (அழகு) பார்த்துக் கொண்டிருப்பதும் தான் அவரை வரவிடாமல் தடுத்து விட்டன என்று கூறினார். உடனே, முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள், (அந்த மனிதரை நோக்கி), தீய வார்த்தை சொன்னாய். அல்லாஹ்வின் மேல் ஆணையாக! அவரைக் குறித்து நல்லதைத் தவிர வேறெதையும் நாங்கள் அறிந்திருக்கவில்லை; அல்லாஹ்வின் தூதரே! என்று கூறினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மௌனமாகவே இருந்தார்கள்.
சாக்குப் போக்கு சொல்ல நினைத்து சத்தியத்தின் பக்கம் திரும்புதல்.
நபி (ஸல்) அவர்கள் (தபூக்கிலிருந்து) திரும்பி வந்து கொண்டிருக்கிறார்கள் என்ற செய்தி எனக்கு எட்டிய போது கவலை என் மனதில் புகுந்தது. (அல்லாஹ்வின் தூதரிடம் சாக்குப் போக்குச் சொல்வதற்காகப்) பொய்யான காரணங்களை நான் யோசிக்கத் தொடங்கினேன்.
நாளை நபியவர்கன் கோபத்திலிருந்து நான் எப்படித் தப்புவேன்? என்று எனக்கு நானே கேட்டுக் கொண்டேன். மேலும், அதற்காக நான் என் குடும்பத்தாரில் கருத்துள்ள ஒவ்வொருவரிடமும் உதவி தேடினேன். ஆனால், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நெருங்கி வந்து விட்டார்கள் என்று சொல்லப்பட்ட போது (நான் புனைந்து வைத்திருந்த) பொய்மை என் மனத்தை விட்டு விலகி விட்டது.
பொய்யான காரணம் எதையும் சொல்லி நபி (ஸல்) அவர்கடமிருந்து ஒரு போதும் தப்பித்துக் கொள்ள முடியாது. (அல்லாஹ் தன் தூதருக்கு உண்மை நிலவரத்தைத் தெரிவித்து விடுவான்) என்று உணர்ந்து, நபி (ஸல்) அவர்கடம் உண்மையைச் சொல்லிவிட முடிவு செய்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காலை நேரத்தில் (மதீனாவிற்கு) வருகை புரிந்தார்கள். சாக்குச் சொன்ன சந்தர்ப்பவாதிகள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு பயணத்திலிருந்து திரும்பி வந்தால் முதலில் பள்வாசலுக்குச் சென்று அங்கு இரண்டு ரக்அத்கள் தொழுத பின் மக்களைச் சந்திப்பதற்காக (அங்கு) அமர்ந்து கொள்வது அவர்கன் வழக்கம். அதை அவர்கள் செய்த போது, (தபூக் போரில் கலந்து கொள்ளச் செல்லாமல்) பின்தங்கி விட்டவர்கள் நபி (ஸல்) அவர்கடம் வந்து, அவர்களுக்கு முன்னால் சத்தியமிட்டு (வராமல் போனதற்கு) சாக்குப் போக்குக் கூறத் தொடங்கினர். அவர்கள் எண்பதுக்கும் மேற்பட்ட நபர்களாக இருந்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அவர்கன் வெப்படையான காரணங்களை ஏற்றுக்கொண்டு அவர்கடம் உறுதிப் பிரமாணம் செய்து கொடுத்தார்கள். அவர்களுக்காகப் பாவமன்னிப்பும் தேடினார்கள். அவர்கன் அந்தரங்கத்தை அல்லாஹ்விடம் ஒப்படைத்து விட்டார்கள்.
சந்திக்கு வந்தாலும் பரவாயில்லை என்று சத்தியம் உரைத்த தோழர்.
அப்போது, நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கடம் வந்தேன். அவர்களுக்கு நான் சலாம் சொன்ன போது கோபத்திலிருப்பவர் எவ்வாறு புன்னகைப்பாரோ அது போலப் புன்னகைத்தார்கள். பிறகு, வாருங்கள் என்று கூறினார்கள். உடனே, நான் அவர்கடம் நடந்து சென்று அவர்கன் முன்னிலையில் அமர்ந்து கொண்டேன். அப்போது அவர்கள் என்னிடம், (போரில்) நீங்கள் ஏன் கலந்துகொள்ளவில்லை. நீங்கள் (போருக்காக) வாகனம் வாங்கி வைத்துக் கொண்டிருக்கவில்லையா? என்று கேட்டார்கள். நான், ஆம். (வாங்கி வைத்திருந்தேன்.) அல்லாஹ்வின் மீதாணையாக! தாங்கள் அல்லாத (வேறு எவரேனும் ஓர்) உலகாதாயவாதிக்கு அருகில் நான் அமர்ந்து கொண்டிருந்தால் ஏதாவது (பொய்யான) சாக்குப் போக்குச் சொல்லி கோபத்திலிருந்து தப்பித்துக் கொள்ள உடனடியாக வழி கண்டிருப்பேன். வாதத் திறன் எனக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆயினும், அல்லாஹ்வின் மீதாணையாக! தங்கடம் ஏதாவது பொய்யைச் சொல்லி இன்று உங்களை நான் என்னைக் குறித்துத் திருப்தியடையச் செய்துவிட்டாலும், அல்லாஹ் வெகுவிரைவில் (உண்மை நிலவரத்தைத் தங்களுக்குத் தெரியப்படுத்தி) என் மீது தங்களைக் கடுங்கோபம் கொள்ளச் செய்து விடுவான் என்பதை நான் நன்கு அறிந்துள்ளேன். (அதே சமயம்) தங்கடம் நான் உண்மையைச் சொல்லிவிட்டால் (தற்சமயம்) அது தொடர்பாக என் மீது தாங்கள் வருத்தப்படுவீர்கள். ஆயினும், அது விஷயத்தில் அல்லாஹ்வின் மன்னிப்பை நான் எதிர்பார்க்கிறேன். இல்லை; அல்லாஹ்வின் மீது ஆணையாக! (நான் போரில் கலந்து கொள்ளாததற்கு) என்னிடம் எந்தக் காரணமும் இல்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! தங்களை விட்டும் நான் பின்தங்கிவிட்ட அந்த நேரத்தில் எனக்கு இருந்த உடல் பலமும் வசதி வாய்ப்பும் அதற்கு முன் ஒரு போதும் எனக்கு இருந்ததில்லை என்று கூறினேன்.
அல்லாஹ்வின் தீர்பை எதிர்பார்து…..
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இவர் உண்மை சொல்லி விட்டார் (என்று கூறிவிட்டு என்னை நோக்கி) சரி! எழுந்து செல்லுங்கள். உங்கள் விஷயத்தில் அல்லாஹ்வே தீர்ப்பப்பான் என்று கூறினார்கள். உடனே நான் எழுந்து சென்றேன்.
சத்தியத்தை சாகடிக்க அசத்தியத்தின் பக்கம் செல்லலாமா?
பனூ சலிமா குலத்தைச் சேர்ந்த சிலர் என்னைப் பின் தொடர்ந்து ஓடி வந்து, அல்லாஹ்வின் மீதாணையாக! இதற்கு முன்னால் எந்தப் பாவத்தையும் நீங்கள் செய்ததாக நாங்கள் அறிந்ததில்லை. (போரில்) கலந்து கொள்ளாத (மற்ற)வர்கள் சொன்ன அதே (பொய்க்) காரணத்தை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கடம் சொல்வதற்குக் கூட உங்களால் இயலாமற் போய் விட்டதே! நீங்கள் செய்த பாவத்திற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்கும் பாவ மன்னிப்பே உங்களுக்குப் போதுமானதாய் இருந்திருக்குமே! என்று சொன்னார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! பனூ சலிமா குலத்தினர் என்னைக் கடுமையாக ஏசிக் கொண்டேயிருந்தனர். எந்த அளவிற்கென்றால், நான் (அல்லாஹ்வின் தூதரிடம்) திரும்பிச் சென்று (இதற்கு முன்) நான் சொன்னது பொய் என்று (கூறி, போரில் கலந்து கொள்ளாததற்கு ஏதாவது பொய்க் காரணத்தைச்) சொல்லி விடலாமா என்று நான் நினைத்தேன்.
தன்னுடன் இன்னும் மூவர்.
பிறகு நான் பனூ சலிமா குலத்தாரை நோக்கி, (தீர்ப்பு தள் வைக்கப்பட்ட) இந்த நிலையை என்னுடன் வேறு யாரேனும் சந்தித்திருக்கின்றார்களா? என்று கேட்டேன். அதற்கவர்கள், ஆம். இரண்டு பேர் நீங்கள் சொன்னதைப் போலவே (உண்மையான காரணத்தை நபியவர்கடம்) சொன்னார்கள். உங்களுக்குச் சொல்லப்பட்டது தான் அப்போது அவர்கள் இருவருக்கும் சொல்லப்பட்டது என்று கூறினார்கள்.
உடனே நான், அவர்கள் இருவரும் யார்? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், முராரா பின் ரபீஉ அல் அம்ரீ அவர்களும், ஹிலால் பின் உமய்யா அல் வாக்கிஃபீ அவர்களும் என்று பத்ருப் போரில் கலந்து கொண்ட இரண்டு நல்ல மனிதர்கன் பெயர்களை என்னிடம் கூறினர். அவர்கள் இருவராலும் (எனக்கு) ஆறுதல் கிடைத்தது. அவர்கள் இருவரின் பெயர்களையும் பனூ சலிமா குலத்தார் என்னிடம் சொன்னவுடன் நான் (என் இல்லத்திற்குச்) சென்று விட்டேன். பகிஷ்கரிக்கப்பட்ட பத்ரு ஸஹாபாக்கள்.
பேச்சுக்கு வந்த தடை.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்தப் போரில் கலந்து கொள்ளாதவர்கல் எங்கள் மூவரிடம் மட்டும் (யாரும்) பேசக் கூடாதென முஸ்லிம்களுக்குத் தடை விதித்து விட்டார்கள். எனவே, மக்கள் எங்களைத் தவிர்த்தனர். மேலும், அவர்கள் (முற்றிலும்) எங்கள் விஷயத்தில் மாறிப் போய் விட்டனர். (வெறுத்துப் போனதால்) என் விஷயத்தில் இப்பூமியே மாறிவிட்டது போலவும் அது எனக்கு அன்னியமானது போலவும் நான் கருதினேன். இதே நிலையில் நாங்கள் ஐம்பது நாட்கள் இருந்தோம். எனது இரு சகாக்களும் (முராராவும், ஹிலாலும்) செயலிழந்து போய்த் தம் இல்லங்கலிலேயே அமர்ந்து கொண்டு அழுது கொண்டிருந்தனர்.
அழுகையுடன் இருவரும், வெளியுலகில் ஒருவரும்.
நான், மக்களிடையே (உடல்) பலம் மிக்கவனாகவும் (மன) வலிமை படைத்தவனாகவும் இருந்தேன். எனவே, நான் (வீட்டை விட்டு) வெயேறி முஸ்லிம்களுடன் (ஐங்காலத்) தொழுகையில் கலந்து கொண்டும், கடை வீதிகல் சுற்றிக் கொண்டுமிருந்தேன். என்னிடம் எவரும் பேச மாட்டார்கள். நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கடம் செல்வேன். தொழுகையை முடித்துக் கொண்டு அவர்கள் அமர்ந்திருக்கும் போது சலாம் கூறுவேன். எனக்கு பதில் சலாம் சொல்வதற்காக அவர்கள், தம் உதடுகளை அசைக்கிறார்களா இல்லையா என்று எனக்கு நானே கேட்டுக்கொள்வேன். பிறகு, அவர்களுக்கு அருகிலேயே (கூடுதலான) தொழுகைகளை நிறைவேற்றுவேன். அப்போது என்னை நபி (ஸல்) அவர்கள் பார்க்கிறார்களா என்று ஓரக் கண்ணால் இரகசியமாகப் பார்ப்பேன். நான் என் தொழுகையில் ஈடுபட்டவுடன் அவர்கள் என்னைக் கவனிப்பதும், அவர்கள் பக்கம் நான் திரும்பியதும் அவர்கள் என்னிடமிருந்து முகத்தைத் திருப்பிக் கொள்வதுமாக இருந்தார்கள்.
ஸலாத்திற்கு பதிலில்லை.
மக்களின் புறக்கணிப்பு நீடித்துக் கொண்டே சென்ற போது, நான் நடந்து போய் அபூ கத்தாதா (ரலி) அவர்கன் தோட்டத்தின் மதிற் சுவர் மீதேறினேன். அவர் என் தந்தையின் சகோதரர் புதல்வரும், மக்கல் எனக்கு மிகவும் பிரியமானவரும் ஆவார். அவருக்கு நான் சலாம் சொன்னேன். அல்லாஹ்வின் மீதாணையாக! அவர் எனக்குப் பதில் சலாம் சொல்லவில்லை.
கதறி அழுத அந்த நிமிடம்.
உடனே நான், அபூ கத்தாதா! அல்லாஹ்வை முன் வைத்து உன்னிடம் கேட்கிறேன். அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நான் நேசிக்கிறேன் என்று நீ அறிவாயா? என்று கேட்டேன். அதற்கு அவர் (பதில் கூறாமல்) மௌனமாயிருந்தார். பிறகு மீண்டும் அவரிடம் அல்லாஹ்வை முன்வைத்து (முன்பு போலவே) கேட்டேன். அப்போதும் அவர் மௌனமாகவேயிருந்தார். மீண்டும் அவரிடம் நான் அல்லாஹ்வை முன்வைத்துக் கேட்டேன். அப்போது அவர், அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள் என்று (மட்டும்) பதிலத்தார். அப்போது என் இரு கண்களும் (கண்ணீரைப்) பொழிந்தன. பிறகு நான் திரும்பி வந்து அந்தச் சுவரில் ஏறி (வெயேறி)னேன்.
நேரம் பார்த்து வந்த சோதனை.
ஒரு நாள் மதீனாவின் கடைத் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தேன். அப்போது மதீனாவிற்கு உணவு தானிய விற்பனைக்காக வந்திருந்த ஷாம் நாட்டு விவசாயிகல் ஒருவர், கஅப் பின் மாலிக்கை எனக்கு அறிவித்துத் தருவது யார்? என்று விசாரித்துக் கொண்டிருந்தார். மக்கள் (என்னை நோக்கி) அவரிடம் சைகை செய்யலாயினர். உடனே அவர் என்னிடம் வந்து, ஃகஸ்ஸான் நாட்டின் அரசனிடமிருந்து (எனக்கு எழுதப்பட்டிருந்த) கடிதமொன்றைத் தந்தார்.
அதில் பின்வருமாறு எழுதப்பட்டிருந்தது:
நிற்க! உங்கள் தோழர் (முஹம்மது) உங்களைப் புறக்கணித்து (ஒதுக்கி) விட்டார் என்று எனக்குச் செய்தி எட்டியது. உங்களை இழிவு செய்து (உங்கள் உரிமைகள்) வீணடிக்கப்படும் நாட்டில் நீங்கள் நீடிக்க வேண்டுமென்ற அவசியத்தை உங்களுக்கு அல்லாஹ் ஏற்படுத்தவில்லை. எனவே, எங்கடம் வந்து விடுங்கள். நாங்கள் உங்கடம் நேசம் காட்டுகிறோம். இதை நான் படித்த போது, இது இன்னொரு சோதனை ஆயிற்றே! என்று (என் மனத்திற்குள்) கூறிக் கொண்டு அதை எடுத்துச் சென்று அடுப்பிலிட்டு எரித்து விட்டேன்.
குடும்ப வாழ்வுக்கு வந்த தடை.
ஐம்பது நாட்களில் நாற்பது நாட்கள் கழிந்த போது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய ஒரு தூதர் என்னிடம் வந்து, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நீங்கள் உங்கள் மனைவியை விட்டும் விலகி விட வேண்டுமென்று உத்தரவிடுகிறார்கள் என்று கூறினார். அதற்கு நான், அவளை நான் விவாகரத்துச் செய்துவிடவா? அல்லது நான் என்ன செய்ய வேண்டும்? என்று கேட்டேன். அவர், இல்லை. (விவாகரத்து செய்ய வேண்டாம்.) அவரை விட்டு நீங்கள் விலகிவிட வேண்டும். அவரை நெருங்கக் கூடாது (இதுவே இறைத் தூதர் உத்தரவு) என்று கூறினார். இதைப் போன்றே என் இரு சகாக்களுக்கும் நபி (ஸல்) அவர்கள் உத்தரவு அனுப்பியிருந்தார்கள். ஆகவே, நான் என் மனைவியிடம், உன் குடும்பத்தாரிடம் சென்று, இது விஷயத்தில் அல்லாஹ் தீர்ப்பளிக்கும் வரையில் அவர்களிடத்திலேயே இருந்து வா! என்று சொன்னேன். ஹிலால் பின் உமய்யா (ரலி) அவர்கன் மனைவி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, (என் கணவர்) ஹிலால் பின் உமய்யா செயல்பட முடியாத வயோதிகர். அவரிடம் ஊழியர் யாருமில்லை. நானே (தொடர்ந்து) அவருக்கு ஊழியம் செய்வதைத் தாங்கள் வெறுப்பீர்களா? என்று கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இல்லை. ஆயினும், அவர் உன்னை (உடலுறவு கொள்ள) நெருங்க வேண்டாம் என்று சொன்னார்கள். ஹிலால் அவர்களின் மனைவி, அல்லாஹ்வின் மீதாணையாக! என் கணவரிடம் எந்த இயக்கமும் இல்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! அவருடைய விஷயத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றதிலிருந்து இந்த நாள் வரையில் அழுது கொண்டே இருக்கிறார் என்றும் கூறினார்.
என் வீட்டாரில் ஒருவர், தம் கணவருக்குப் பணிவிடை புரிய ஹிலால் பின் உமய்யா அவர்களின் மனைவியை அனுமதித்தது போல், உங்கள் மனைவியை (உங்களுக்குப் பணிவிடை புரிய) அனுமதிக்கும்படி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்டால் (நன்றாயிருக்குமே) என்று கூறினார். அதற்கு நான், அல்லாஹ்வின் மீதாணையாக! என் மனைவி விஷயத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நான் அனுமதி கேட்க மாட்டேன். என் மனைவி விஷயத்தில் நான் அனுமதி கோரும்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்ன (பதில்) சொல்வார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. நானோ இளைஞனாக இருக்கிறேன். (ஹிலால், வயோதிகர். அதனால் அவருக்கு அல்லாஹ்வின் தூதர் சலுகை காட்டியிருக்கலாம்) என்று கூறி விட்டேன். அதற்குப் பின் பத்து நாட்கள் (இவ்வாறே) இருந்தேன்.
அதிகாலையில் நடந்த ஆச்சரியம்.
எங்கடம் பேசக் கூடாதென அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடைவிதித்த நாலிருந்து ஐம்பது நாட்கள் எங்களுக்குப் பூர்த்தியாயின. நான் ஐம்பதாம் நான் ஃபஜ்ருத் தொழுகையை எங்கள் வீடுகல் ஒன்றின் மாடியில் நிறைவேற்றிவிட்டு அல்லாஹ் (எங்கள் மூவரையும் குறித்து 9:118 ஆவது வசனத்தில்) குறிப்பிட்ட நிலையில் அமர்ந்திருந்தேன். (அதாவது:) பூமி இத்தனை விரிவாய் இருந்தும் என்னைப் பொறுத்த வரையில் அது குறுகி, நான் உயிர் வாழ்வதே மிகக் கஷ்டமாயிருந்தது. அப்போது, சல்உ மலை மீதேறி பொது அறிவிப்புச் செய்பவர் ஒருவர் உரத்த குரலில், கஅப் பின் மாலிக்கே! நற்செய்தி பெற்றுக் கொள்க! என்று கூறினார். உடனே நான் சஜ்தாவில் விழுந்தேன். சந்தோஷம் வந்து விட்டது என்று நான் அறிந்து கொண்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஃபஜ்ர் தொழுது கொண்டிருந்த போது (வஹீ அறிவிக்கப்பட்டு) எங்களை அல்லாஹ் மன்னித்து விட்டான் என்று அறிவித்து விட்டார்கள் என நான் விளங்கிக் கொண்டேன். எங்களுக்கு நல்வாழ்த்துச் சொல்ல மக்கள் வரலாயினர். என் இரு சகாக்களை நோக்கி நற்செய்தி சொல்பவர்கள் சென்றனர். என்னை நோக்கி ஒருவர் குதிரையில் விரைந்து வந்தார்.
செல்லும் இடமெல்லாம் சுபச் செய்தியே!
அஸ்லம் குலத்தைச் சேர்ந்த ஒருவர் ஓடிச் சென்று மலை மீது ஏறிக் கொண்டார். (மேலும், உரத்த குரலில் எனக்கு நற்செய்தி சொன்னார்.) மேலும், அந்தக் குரல் அக்குதிரையை விட வேகமாக வந்து சேர்ந்தது. எவரது குரலை (மலை மீதிருந்து) கேட்டேனோ அவர் என்னிடம் நற்செய்தி சொல்ல (நேரடியாக) வந்தபோது நான் என் இரு ஆடைகளையும் கழற்றி அவர் சொன்ன நற்செய்திக்குப் பகரமாக (பரிசாக) அவருக்கு அணிவித்தேன். அல்லாஹ்வின் மீதாணையாக! (ஆடைகளில்) அந்த இரண்டைத் தவிர வேறெதுவும் அப்போது எனக்குச் சொந்தமானதாக இருக்கவில்லை. (வேறு) இரண்டு ஆடைகளை (அபூகத்தாதா அவர்களிடமிருந்து) இரவல் வாங்கி நான் அணிந்து கொண்டு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நோக்கி நடந்தேன். அப்போது (வழியில்) மக்கள் கூட்டங் கூட்டமாக வந்து என்னைச் சந்தித்து, எனக்குப் பாவமன்னிப்புக் கிடைத்ததால், அல்லாஹ் உங்கள் பாவத்தை மன்னித்து விட்டதற்காக உங்களுக்கு வாழ்த்துச் சொல்கிறோம் என்று கூறலாயினர்.
நபிகளாரின் நல்வாழ்த்து.
நான் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலுக்குள் நுழைந்தேன். அங்கு தம்மைச் சுற்றிலும் மக்கருக்க அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அமர்ந்திருந்தார்கள். அப்போது என்னை நோக்கி தல்ஹா பின் உபைதில்லாஹ் (ரலி) அவர்கள் எழுந்தோடி வந்து எனக்குக் கைலாகு கொடுத்து என்னை வாழ்த்தவும் செய்தார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! முஹாஜிர்கல் அவர்களைத் தவிர வேறெவரும் என்னை நோக்கி (வருவதற்காக) எழவில்லை. தல்ஹா (ரலி) அவர்களின் இந்த அன்பை நான் ஒரு போதும் மறக்க மாட்டேன்.
நபியின் மண்ணிப்பா அல்லது நாயனின் மண்ணிப்பா?
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு சலாம் சொன்ன போது, சந்தோஷத்தினால் முகம் மின்னிக் கொண்டிருக்க அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், உன்னை உன் தாய் பெற்றெடுத்தது முதல் உன்னைக் கடந்து சென்ற நாட்களில் மிகச் சிறந்த நாளான இன்று உனக்கு (பாவ மன்னிப்புக் கிடைத்த) நற்செய்தி கூறுகிறேன் என்று கூறினார்கள். நான், அல்லாஹ்வின் தூதரே! (இந்த நற்செய்தியைத்) தாங்களே தங்கள் தரப்பிலிருந்து தெரிவிக்கிறீர்களா? அல்லது அல்லாஹ்வின் தரப்பிலிருந்து (வந்த வேத அறிவிப்பின் அடிப்படையில்) தெரிவிக்கிறீர்களா? என்று கேட்டேன். அவர்கள், இல்லை. அல்லாஹ்வின் தரப்பிலிருந்து (வந்த வேத அறிவிப்பின் அடிப்படையில்) தான் தெரிவிக்கிறேன் என்று சொன்னார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குச் சந்தோஷம் ஏற்படும் போது அவர்களது முகம் சந்திரனின் ஒரு துண்டு போல் ஆகி பிரகாசிக்கும். அவர்களது முகத்தின் பிரகாசத்தை வைத்து அவர்களது சந்தோஷத்தை நாங்கள் அறிந்து கொள்வோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு முன்னால் நான் அமர்ந்து கொண்டபோது, அல்லாஹ்வின் தூதரே! எனது பாவம் மன்னிக்கப்பட்டதற்காக என் செல்வமனைத்தையும் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் (அவர்கள் விரும்பும் வழியில் செலவிடுவதற்காக) தர்மமாக அத்து விடுகிறேன் என்று சொன்னேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், உங்கள் செல்வத்தில் சிறிதளவை உங்களுக்காக வைத்துக் கொள்ளுங்கள். அதுவே உங்களுக்கு நல்லது என்று கூறினார்கள்.
உண்மைக்குக் கிடைத்த உயரிய பரிசு.
கைபர் போரில் எனக்குக் கிடைத்த பங்கை நான் (எனக்காக) வைத்துக் கொள்கிறேன். அல்லாஹ்வின் தூதரே! உண்மை பேசிய காரணத்தினால் தான் அல்லாஹ் என்னைக் காப்பாற்றினான். (உண்மைக்குக் கிடைத்த பரிசாக) என் பாவம் மன்னிக்கப்பட்டதை அடுத்து நான் உயிரோடு வாழும் வரையில் உண்மையைத் தவிர வேறெதையும் பேச மாட்டேன் என்று கூறினேன்.
ஆகவே, அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இந்த வார்த்தையை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கடம் கூறிய நாலிருந்து உண்மை பேசியதற்காக எனக்கு அல்லாஹ் அருள் புரிந்தது போன்று வேறெந்த முஸ்லிமுக்கும் அல்லாஹ் அருள் புரிந்ததாக நான் அறியவில்லை. இந்த உறுதி மொழியை நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கடம் சொன்ன நாலிருந்து எனது இந்த நாள் வரை நான் பொய்யை நினைத்துப் பார்த்தது கூட இல்லை. நான் (உயிரோடு) எஞ்சியிருக்கும் காலத்திலும் அல்லாஹ் என்னைப் (பொய் சொல்லவிடாமல்) பாதுகாப்பான் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
மன்னிப்பை வழங்கிய வசனம்.
மேலும், தன் தூதர் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ், இந்த நபியையும், ஹிஜ்ரத் செய்தவர்களையும், அன்ஸார்களையும் அல்லாஹ் மன்னித்தான். அவர்களில் ஒரு சாராரின் உள்ளங்கள் தடம் புரள முற்பட்ட பின்னரும், சிரமமான கால கட்டத்தில் அவரைப் பின்பற்றியவர்களை மன்னித்தான். அவன் அவர்களிடம் நிகரற்ற அன்புடையோன்; இரக்கமுடையோன். தீர்ப்பு நிறுத்தி வைக்கப்பட்ட அந்த மூவரையும் (இறைவன் மன்னித்தான்.) பூமி விசாலமானதாக இருந்தும் அவர்களைப் பொறுத்த வரை அது சுருங்கி விட்டது. அவர்களது உள்ளங்களும் சுருங்கி விட்டன. அல்லாஹ்வை விட்டு (தப்பிக்க) அவனிடமே தவிர வேறு போக்கிடம் இல்லை என்று அவர்கள் நம்பினார்கள். பின்னர் அவர்கள் திருந்துவதற்காக அவர்களை மன்னித்தான். அல்லாஹ் மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன். நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! உண்மையாளர்களுடன் ஆகுங்கள்! எனும் (9:117-119) வசனங்களை அருனான்.
ஆகவே, அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ் எனக்கு இஸ்லாத்திற்கு வழி காட்டிய பின், தன் தூதர் (ஸல்) அவர்கடம் என்னை உண்மை பேசச் செய்து உபகாரம் புரிந்தது போன்று வேறெந்த உபகாரத்தையும் நான் மிகப் பெரியதாக ஒரு போதும் கருதவில்லை. நான் அவர்கடம் பொய் பேசியிருந்தால், (போருக்குச் செல்லாமல்) பொய் சொன்னவர்(களான நயவஞ்சகர்)கள் அழிந்து போனது போல நானும் அழிந்து விட்டிருப்பேன். ஏனெனில், இறைவன் வேத அறிவிப்பு (வஹீ) அருய போது யாருக்கும் சொல்லாத கடுமையான சொற்களைப் பொய் சொன்னவர்கள் குறித்து அருளினான்.
அவர்களிடம் நீங்கள் திரும்பும் போது அவர்களை நீங்கள் விட்டு விடுவதற்காக உங்களிடம் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்கின்றனர். அவர்களை விட்டு விடுங்கள்! அவர்கள் அசுத்தமாவர். அவர்களின் தங்குமிடம் நரகம். இது அவர்கள் செய்து கொண்டிருந்ததற்கான தண்டனை. நீங்கள் அவர்கள் மீது திருப்தியடைய வேண்டுமென்பதற்காக உங்களிடம் சத்தியம் செய்கின்றனர். நீங்கள் அவர்கள் மீது திருப்தி கொண்டாலும் குற்றம் புரியும் கூட்டத்தை அல்லாஹ் பொருந்திக் கொள்ள மாட்டான் என்று அல்லாஹ் கூறினான். (9:95, 96)
தியாகத்திற்குக் கிடைத்த சிறந்த பரிசு இதுதான். இது போல் நமது வாழ்வும் நலமாக அல்லாஹ்விடம் இறைஞ்சுவோமாக!.
0 comments

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger