ஆந்திராவில் வெயில் கொடுமைக்கு பலியானோர் 1,062 ஆக உயர்வு


ஐதராபாத்: ஆந்திராவில் வெயிலின் கொடுமை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக வெப்ப தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது.
இன்று மட்டும் அங்கு வெயிலின் உக்கிரம் தாங்காமல் பலியானோர் எண்ணிக்கை 206 ஆகும். நேற்று (25–ந் தேதி) அங்கு 130 பேர் வெயிலுக்கு பலியானதாக முதலில் வந்த தகவல்கள் தெரிவித்தன. பின்னர் இது 543 ஆக அதிகரித்தது. அதற்கு முதல் நாள் (24–ந் தேதி) 293 பேரும், 23–ந் தேதி 20 பேரும் வெயில் கொடுமைக்கு பலியானதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அதாவது கடந்த 4 நாள்களில் மட்டும் ஆந்திராவில் வெயில் கொடுமைக்கு பலியானோர் எண்ணிக்கை 1062 ஆக அதிகரித்து உள்ளது. இவர்களில் குழந்தைகளும், முதியவர்களும்தான் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger