வாக்குகளை வீணாக்க விரும்பவில்லை - எம்.ஹெச்.ஜவாஹிருல்லா!

சென்னை:மாநிலங்களவைத் தேர்தலில் தி.மு.க சார்பாக போட்டியிடும் கனிமொழிக்கு மனிதநேய மக்கள்கட்சி ஆதரவளித்துள்ளது.
நேற்று காலை தி,மு.க தலைவர் கருணாநிதியை சந்தித ம.ம.க. சட்டமன்ற உறுப்பினர்கள் ஜவாஹிருல்லா, அஸ்லம் பாஷா மற்றும் ம.ம.க நிர்வாகிகள் தங்களது ஆதரவை தெரிவித்தனர். 
இந்த நிலையில் கருணாநிதியை சந்தித்த பிறகு செய்தியாளர்ளிடம் பேசிய ஜவாஹிருல்லா. "மாநிலங்களவைத் தேர்தலில் அ.தி.மு.க.வின் நான்கு வேட்பாளர்களும் அதேபோல இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போட்டியிடுகின்ற டி. ராஜாவும் வெற்றி பெற அ.தி.மு.க.வின் போதுமான வாக்குகள் அளிக்கப்பட இருக்கிற இந்த சந்தர்ப்பத்தில் எங்கள் வாக்குகளை வீணாக்க விரும்பவில்லை. ஆகவே தி.மு.கழக வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிக்கிறோம்.
அ.தி.மு.கவுடன் கடந்த சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு வேறு எந்த தேர்தலிலும் அவர்களோடு கூட்டணி அமைக்கவில்லை." என்று ஜவாஹிருல்லா கூறினார்.
வரும் பாராளுமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பீர்கள் என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, "அதுபற்றி நாடாளுமன்றத் தேர்தல் வரும்போதுதான் பேசமுடியும். மாநிலங் களவை தேர்தலுக்கு மட்டும் இப்போதுஇந்த ஒரு நிலைப்பாட்டை எடுத்திருக்கிறோம்." என்று ஜவாஹிருல்லா கூறினார்.
Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger