மாணவியை செல்போனில் படமெடுத்த காவல்துறைக்கு சரமாரி அடி!

மதுரை: மாணவியை செல்போனில் படம் எடுத்ததோடு அபராதம் கட்டாவிட்டால் தன்னுடன் செல்போனில் பேச வேண்டும் என்று சொன்ன காவல்துறை ஏட்டுக்கு பொதுமக்கள் சரமாரி அடி கொடுத்தனர்.

மதுரை யானைக்கல் மேம்பாலம் வழியாக கல்லூரி மாணவி ஒருவர் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது அவரை பின்தொடர்ந்து வந்த செல்லூர் காவல்துறை ஏட்டு பாலு மாணவியிடம் லைசன்ஸ் உள்ளதா? என்று கேட்டுக் கொண்டே தனது செல்போனை எடுத்து, அந்த மாணவியை படம் பிடித்துள்ளர்.

மேலும் தன்னுடைய செல்போன் எண்ணை குரித்துக் கொண்டு என்னுடன் போனில் பேச வேண்டும் என்றும் இல்லையேல் அபராதம் கட்ட நேரிடும் என்றும் ஏட்டு மிரட்டியுள்ளார்.
இதனை கண்ட அப்பகுதி மக்கள் காவல்துரை ஏட்டை அடித்து உதைத்துள்ளனர். பின்பு அவர் அருகில் உள்ள காவல்நிலையத்தில் ஒப்படைக்கப் பட்டார்.

Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger