சோதனை வெற்றி: நீரிழிவு நோயாளிகளுக்கு செயற்கை கணையம் தயார்

உலகம் முழுவதும் நீரிழிவு நோய் அதிக அளவில் உள்ளது. இதனால் மனிதர்களின் அன்றாட நடைமுறை வாழ்க்கை மிகவும் பாதிக்கப்படுகிறது. எனவே, அதை கட்டுப்படுத்த தீவிர சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ரத்தத்தில் சர்க்கரை சத்து அதிகரிப்பின் காரணமாக நீரிழிவு ஏற்படுகிறது. இன்சுலின் மற்றும் குளுகான் என்ற 2 சுரப்பிகள் சரிவர இயங்காததால்தான் இந்த நோய் உருவாகிறது. இவற்றை கணையம் உற்பத்தி செய்கிறது.

இன்சுலின் 'பீட்டா செல்'கள் மூலமும், குளுகான் ஆல்பா 'செல்'கள் மூலமும் உற்பத்தியாகிறது. கணையம் பாதித்தவர்களுக்கு நீரிழிவு நோய் ஏற்படுகிறது. எனவே, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் ரோமன் ஹோவோர்கா தலைமையிலான நிபுணர் குழுவினர் கடந்த 5 1/2 ஆண்டு காலமாக தீவிர முயற்சி செய்து செயற்கை கணையத்தை உருவாக்கியுள்ளனர்.

இதன் பரிசோதனை இங்கிலாந்தில் சமீபத்தில் நடந்தது. அதில் கேம்பரிட்ஜ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஈடுபட்டனர். நீரிழிவு நோய் பாதித்தவர்களிடம் செயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட கணையம் பரிசோதிக்கப்பட்டது இதில் 5 பேருக்கு ரத்தத்தில் குளுகோஸ் அளவு மிகவும் குறைந்தது. அதன் மூலம் நீரிழிவு நோயின் தாக்கம் மிகவும் குறைவாக காணப்பட்டது.

எனவே, பரிசோதனை வெற்றி பெற்றதன் மூலம் அடுத்து 24 பேரிடம் இந்த செயற்கை கணையம் பரிசோதிக்கப்படுகிறது. ஆகவே, இனி நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் ஊசி மூலம் உடலில் இன்சுலின் செலுத்த வேண்டியதில்லை என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger