பிளஸ் 2 தவறியவர்களுக்கு சிறப்புத் துணைத்தேர்வு‏...

பிளஸ் 2 சிறப்புத் துணைத்தேர்வுக்கு உரிய நேரத்துக்குள் விண்ணப்பிக்கத்தவறியவர்கள் "தத்கல்திட்டத்தின் கீழ் ஜூன் 6, 7 தேதிகளில் ஆன்லைன் மூலம்விண்ணப்பிக்கலாம்.
 

பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் இந்தத் திட்டத்தின் கீழ்www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் மேற்கண்ட நாள்களில் விண்ணப்பங்களைப்பதிவு செய்யலாம்.
 

தேர்வுக் கட்டணமாக ஒரு பாடத்துக்கு ரூ.85-ம், சிறப்பு அனுமதிக் கட்டணமாகரூ.1,000-ம் செலுத்த வேண்டும்பதிவிறக்கம் செய்யப்பட்ட சலான் மூலம் தேர்வுக்கட்டணத்தை ஜூன் 8-ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும்.
 

ஆன்லைனில் புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பத்தை பூர்த்தி செய்தவுடன்Confirmation copy என்பதை பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும்பதிவிறக்கம்செய்யப்பட்ட விண்ணப்பத்தில் மீண்டும் ஒரு புகைப்படத்தை ஒட்டிஅதன்மீதுவிண்ணப்பதாரர்கள் இறுதியாகப் பயின்ற பள்ளியின் தலைமையாசிரியரிடம்சான்றொப்பம் பெற வேண்டும்.
 
 

அந்த விண்ணப்பதோடுதேர்வுக் கட்டணம் செலுத்திய எஸ்.பி.ஐ. சலான்மதிப்பெண்சான்றிதழ் நகல், ரூ.40-க்கான அஞ்சல் வில்லை ஒட்டப்பட்ட சுயவிலாசமிட்ட உறைஆகியவற்றை இணைக்க வேண்டும்.
 
 

இந்த ஆவணங்களோடு கூடிய விண்ணப்பத்தை ஜூன் 14, 15 ஆகிய இரண்டுநாள்களில் சென்னையிலுள்ள அரசுத் தேர்வுகள் இயக்குநர் அலுவலகத்தில் நேரில்சமர்ப்பிக்க வேண்டும்.

தொகுப்பு - அல் அமீன்
Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger