துருக்கி கார் குண்டு வெடிப்பில் 18 பேர் பலி-

உள்நாட்டு சண்டை நடைபெற்று வரும் சிரியாவிலிருந்து ஆயிரக்கணக்கான அகதிகள் துருக்கி வருகின்றனர். 

அவர்களுடன் போராளிகளும் செல்வதாகவும், அவர்களுக்கு துருக்கி ஆதரவு அளிப்பதாகவும், சிரியா குற்றம் சாட்டி வருகிறது.

newsblast
இந்நிலையில், துருக்கி நாட்டின் சிரியா எல்லையோரம் அமைந்துள்ள ரெய்ஹான்லி நகரில் இன்று மாலை கார் குண்டுகள் வெடித்தன. நகரின் சிட்டி ஹால் மற்றும் போஸ்ட் ஆபிஸ் அருகே 4 இடங்களில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 18 பேர் கொல்லப்பட்டனர். 22 பேர் படுகாயமடைந்தனர்.
கடந்த சில மாதங்களாக இப்பகுதி தாக்குதலுக்கு ஆளாகி வருவது குறிப்பிடத்தக்கது. சிரியாவில் இருந்து வரும் போராளிகளுக்கு ஆதரவு அளித்து வருவதால், துருக்கி அரசுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதலாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இந்த குண்டுவெடிப்பை அடுத்து சிரியாவிலிருந்து வந்த கார்களையும், மக்களையும் அங்குள்ளவர்கள் அடித்து நொறுக்கினர்.
- நன்றி - இலங்கை  முஸ்லிம் 
Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger