இயேசுவின் போதனைகள்... கடவுள் யார்?


செய்யித் இப்ராஹீம்மதுரை 
கடவுள் யார்?
கிறித்தவர்களது மதப்பிரச்சாரம் நாளுக்குநாள் அதிகரித்து வருவதையும்,
அவர்கள் தங்களது பிரச்சாரத்தின் வாயிலாக அப்பாவிகளை ஆசைவார்த்தைக் காட்டி மதமாற்றம் செய்யும் நிகழ்வுகளும் நாளுக்குநாள் அதிகரித்து வருவதையும் நாம் காண்கின்றோம்.
தங்களது மதத்தைப் பிரச்சாரம் செய்யும் கிறித்தவ போதகர்கள் மற்றும் பாதிரிமார்கள் கிறித்தவ மதப்பி
ரச்சாரத்தை வீடுவீடாகச் சென்று தாங்கள் செய்வதோடு மட்டுமல்லாமல் தங்களது வீட்டுப் பெண்களையும்
அதற்குத் தயார்படுத்தி களமிறக்கி விட்டுள்ளனர்.
கன்னியாஸ்திரிகளாக உள்ளவர்களும்இதர கிறித்தவப் பெண்களும் நமது பகுதியில் உள்ள முஸ்லி ம் பெண்களிடத்தில் வீடுவீடாக வந்து பிரச்சாரம் செய்யும் நிகழ்வுகளும் அதிகரித்து வருகின்றன. நம்மோடு அவர்கள் நடத்திய விவாதத்தில் கிறித்தவத் தரப்பு விவாதக்குழுவில் கிறித்தவப் பெண்களை பங்கேற்க வைக்கக்கூடிய அளவிற்கு அவர்களது பெண்கள் பயிற்று வைக்கப்பட்டுள்ளார்கள்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் செய்த பிரச்சாரங்கள் மற்றும் விவாதங்களின் வாயிலாக இதுபோன்று ஆங்காங்கே முஸ்-லி ம்கள் பகுதியில் வரக்கூடிய கிறித்தவப் பிரச்சாரகர்களை நமது சகோதரர்கள் பைபிளிலி ருந்து பல கேள்விகளைக் கேட்டு துளைத்தெடுத்ததன் விளைவாக அவர்கள் ஓட்டமெடுக்கும் நிகழ்வுகளும்அடுத்தமுறை இஸ்லாமியர்கள் இருக்கக்கூடிய பகுதிக்குச் சென்றால் நம்மிடத்தில் கேள்விகேட்பார்களே என்று அஞ்சி நமது பகுதிகளை முற்றிலுமாக தவிர்த்துவிட்டு ஓடக்கூடிய அளவிற்கு நிலைமை மாறியுள்ளது. அல்ஹம்துலி -ல்லாஹ்.
இருந்தபோதிலும்அத்தகைய பிரச்சாரகர்கள் அடங்கிய கிறித்தவ பெண்கள் குழு நமது சகோதரிகளை ஆண்கள் இல்லாத நேரங்களில் நமது வீடுகளுக்கு வந்து சந்திக்கும்போது நமது சகோதரிகளே அவர்களை நேர்கொண்டு விவாதம் செய்து அவர்களுக்கு பதிலடி கொடுக்கக்கூடிய அளவிற்கு நமது சகோதரிகளைத் தயார்படுத்த வேண்டியது நம்முடைய கடமையாகும். அப்படி நமது சகோதரிகளைத் தயார்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த ஆக்கம் எழுதப்படுகின்றது.
கிறித்தவர்களின் பிரதான பிரச்சாரமே இயேசுவை நாம் கடவுளாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது குறித்ததாகத்தான் இருக்கும்.
ஆனால் இயேசுவே தன்னை கடவுள் என்று சொல்லக்கூடாது என்றும்தனக்கு எந்த சக்தியும் இல்லை என்றும்தன்னால் சுயமாக எதுவும் செய்ய இயலாது என்றும் கூறியுள்ள பல செய்திகள் பைபிளில் உள்ளன. அத்தகைய செய்திகளில் சிலவற்றை இங்கு தொகுத்து வழங்கியிருக் கின்றோம்.
இதில் உள்ள செய்திகளை முஸ்-லி ம் சகோதரிகள் கிரகித்து குறித்து வைத்துக் கொண்டால் பைபிளில் கீழ்க்கண்ட வசனங்கள் உள்ளனவே! இதற்கு மாற்றமாக நீங்கள் பிரச்சாரம் செய்யலாமா?இயேசுவை கடவுள் என்று சொல்லலாமாஎனக்கேட்டால் எந்த ஒரு கிறித்தவ பிரச்சாரகராலும் இதற்கு பதிலளிக்க இயலாது. கிறித்தவப் பெண் பிரச்சாரகர்களை எதிர்கொள்ளவும்அவர்கள் இனிமேல் முஸ்-லி ம்கள் பகுதிகளின் பக்கம் தலைவைத்துப் படுக்காமல் இருக்கக்கூடிய அளவிற்கு அவர்களை விரட்டியடிக்கும் வகையிலும் நமது சகோதரிகளுக்கு இந்த ஆக்கம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.  
இயேசுவால் எதையும் செய்யும் வல்லமை உண்டா?
இயேசுவைக் கடவுள் என்றும் அவரால் அனைத்தும் செய்ய இயலும் என்றும் கிறித்தவர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றார்கள். ஆனால் அது பொய் என்று பைபிள் சொல்லி -க்காட்டுகின்றது.
இயேசுவால் சுயமாக எதையும் செய்ய இயலாதுஇயேசு என்பவர் கர்த்தர் அனுப்பிய தூதர்தான்:
நான் சுயமாய்ப் பேசவில்லைநான் பேசவேண்டியது இன்னதென்றும் உபதேசிக்கவேண்டியது இன்னதென்றும் என்னை அனுப்பின பிதாவே எனக்குக் கட்டளையிட்டார்.                   யோவான் 12:49
மேற்கண்ட வசனத்தில்என்னை அனுப்பின பிதாவே எனக்குக் கட்டளையிட்டார் என்று இயேசு சொல்வதிலி ருந்து அவர் கடவுளுடைய தூதர் என்று ஒப்புக்கொள்கின்றார்.  நான் சுயமாய்ப் பேசவில்லை என்று சொல்வதன் மூலம் தனக்கு எந்த அதிகாரமும் இல்லை என்பதை திட்டவட்டமாக தெளிவுபடுத்துகின்றார்.
 இயேசுவால் சுயமாக யாரையும் ஆசிர்வதிக்க இயலாது :
 அப்பொழுதுசெபதேயுவின் குமாரருடைய தாய் அவரிடத்தில் வந்து அவரைப் பணிந்துகொண்டு: உம்மிடத்தில் ஒரு விண்ணப்பம் பண்ணவேண்டும் என்றாள்.
 அவர் அவளை நோக்கி: உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார். அதற்கு அவள்: உம்முடைய ராஜ்யத்திலே என் குமாரராகிய இவ்விரண்டுபேரில் ஒருவன் உமது வலது பாரிசத்திலும்ஒருவன் உமது இடதுபாரிசத்திலும் உட்கார்ந்திருக்கும்படி அருள் செய்யவேண்டும் என்றாள்.
 இயேசு பிரதியுத்தரமாக: நீங்கள் கேட்டுக்கொள்ளுகிறது இன்னது என்று உங்களுக்குத் தெரியவில்லை. நான் குடிக்கும் பாத்திரத்தில் நீங்கள் குடிக்கவும்நான் பெறும் ஸ்நானத்தை நீங்கள் பெறவும் கூடுமா என்றார்.
அதற்கு அவர்கள் கூடும் என்றார்கள்.
அவர் அவர்களை நோக்கி: என் பாத்திரத்தில் நீங்கள் குடிப்பீர்கள்நான் பெறும் ஸ்நானத்தையும் நீங்கள் பெறுவீர்கள்ஆனாலும்என் வலது பாரிசத்திலும் இடது பாரிசத்திலும் உட்கார்ந்திருக்கும்படி என் பிதாவினால் எவர்களுக்கு ஆயத்தம் பண்ணப்பட்டிருக்கிறதோ
அவர்களுக்கேயல்லாமல்மற்றொருவருக்கும் அதை அருளுவது என் காரியமல்ல என்றார்.
மத்தேயு 20 : 20 முதல் 23 வரை
மேற்கண்ட வசனத்தில் தனது வலது பாரிசத்திலும்இடது பாரிசத்திலும் ஒருவரது குழந்தையை அமர வைக்கக்கூடிய ஆற்றல் கூட தனக்கு இல்லை என்றும்தன்னை அனுப்பிய பிதாவிற்கே அந்த ஆற்றல் உள்ளது என்று இயேசு சொல்வதி-லி ருந்து இயேசுவால் எதையும் செய்ய இயலாது. அவர் கடவுள் இல்லை. அவரை அனுப்பிய பிதா ஒருவர்தான் கடவுள் என்பது தெளிவாகின்றதா இல்லையா?
தேவன் ஒருவரைத் தவிர நல்லவன் ஒருவனும் இல்லை :
அப்பொழுது ஒருவன் வந்து, (இயேசுவை) நோக்கி: நல்ல போதகரேநித்திய ஜீவனை அடையும்படி நான் எந்த நன்மையைச் செய்ய வேண்டும் என்று கேட்டான்அதற்கு அவர்: நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்தேவன் ஒருவரைத்தவிர நல்லவன் ஒருவனும் இல்லையேநீ ஜீவனில் பிரவேசிக்க விரும்பினால் கற்பனைகளைக் கைக்கொள் என்றார்.                 மத்தேயு 19 : 16, 17
மேற்கூறப்பட்ட வசனத்தில்,  நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்?
தேவன் ஒருவரைத் தவிர நல்லவன் ஒருவனும் இல்லையே என்று திட்டவட்டமாக இரண்டாவது கருத்துக்கு இடமின்றிதெள்ளத்தெளிவாக அறிவிப்பு செய்து தான் கடவுள் இல்லை என்பதை இயேசு தெளிவுபடுத்து கின்றார்.
அதுமட்டுமல்லாமல் மேற்கூறப்பட்ட பைபிள் வசனத்தில்,
நித்திய ஜீவனில் பிரவேசிக்க விரும்பினால் கற்பனையை கைக்கொள்ள வேண்டும் என்று கூறிய இயேசுஅந்த கற்பனைகளில் பிரதானமான கற்பனை எது என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளார். இதோ அவர் கூறிக்காட்டியுள்ள பிரதானமான கற்பனை. இந்தக் கற்பனையை கைக் கொண்டால்தான் நித்திய ஜீவனில் பிரவேசிக்க முடியும் என்பதுதான் இயேசு அவர்களின் தீர்ப்பு. நித்திய ஜீவன் என்பது சொர்க்கமாகும். அதைத்தான் நித்திய ஜீவன் என்று கிறித்தவர்கள் குறிப்பிடுகின்றார்கள். அப்படியானால் கிறித்தவ அன்பர்கள் நித்திய ஜீவனில் பிரவேசிக்க வேண்டுமென்றால் இந்த பிரதான கற்பனையை கைக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் அவர்களுக்கு நரகம் உறுதி என்பதை இயேசு தெளிவுபடுத்தியுள்ளார். இதோ அந்த பிரதான கற்பனை:
பிரதானமான கற்பனையை கைக்கொள்வோம் :
வேதபாரகரில் ஒருவன் அவர்கள் தர்க்கம்பண்ணுகிறதைக்கேட்டு,
அவர்களுக்கு நன்றாய் உத்தரவு சொன்னாரென்று அறிந்து,
அவரிடத்தில் வந்து: கற்பனைகளிலெல்லாம் பிரதான கற்பனை எதுவென்று கேட்டான்.
 இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: கற்பனைகளிலெல்லாம் பிரதான கற்பனை எதுவென்றால்: இஸ்ரவேலே கேள்நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர்.
 உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும்உன் முழு ஆத்துமாவோடும்உன் முழு மனதோடும்உன் முழுப் பலத்தோடும் அன்புகூருவாயாக என்பதே பிரதான கற்பனை.
 மாற்கு அதிகாரம் 12 : 28 முதல் 30 வரை
நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர். அந்த தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும்உன் முழு ஆத்துமாவோடும்உன் முழு மனதோடும்உன் முழுப் பலத்தோடும் அன்புகூருவதுதான் பிரதான கற்பனை எனும் போது இயேசுவையும் சேர்த்து கர்த்தர் என்று சொன்னால் அது எப்படி பிரதான கற்பனையை கைக் கொண்டதாக ஆகும்பிறகெப்படி நாம் சொர்க்கம் செல்ல முடியும் என்பதை கிறித்தவ அன்பர்கள் சிந்திக்க கடமைப்பட்டுள்ளனர்.
இயேசுவை கர்த்தர் என்று அழைத்தால் பரலோக ராஜ்ஜியம் செல்ல முடியாது:
 பரலோகத்திலி ருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல்என்னை நோக்கிக் கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை.
 அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவாஉமது நாமத்தி னாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவாஉமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவாஎன்பார்கள்.
 அப்பொழுதுநான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை. அக்கிரமச் செய்கைக்காரரே,என்னைவிட்டு அகன்று போங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்.
 ஆகையால்நான் சொல்-லி ய இந்த வார்த்தைகளைக் கேட்டுஇவைகளின்படி செய்கிறவன் எவனோஅவனைக் கன்மலையின்மேல் தன் வீட்டைக் கட்டின புத்தியுள்ள மனுஷனுக்கு ஒப்பிடுவேன்.
பெருமழை சொரிந்துபெருவெள்ளம் வந்துகாற்று அடித்து,
அந்த வீட்டின்மேல் மோதியும் அது விழவில்லைஏனென்றால் அது கன்மலையின்மேல் அஸ்திபாரம் போடப்பட்டிருந்தது.
 நான் சொல்-லி ய இந்த வார்த்தைகளைக் கேட்டுஇவைகளின்படி செய்யாதிருக்கிறவன் எவனோ,அவன் தன் வீட்டை மணல் மேல் கட்டின புத்தியில்லாத மனுஷனுக்கு ஒப்பிடப்படுவான்.
 பெருமழை சொரிந்துபெருவெள்ளம் வந்துகாற்று அடித்து,
அந்த வீட்டின்மேல் மோதினபோது அது விழுந்ததுவிழுந்து முழுவதும் அழிந்தது என்றார்.
 இயேசு இந்த வார்த்தைகளைச் சொல்-லி  முடித்தபோதுஅவர் வேதபாரகரைப்போல் போதியாமல்அதிகாரமுடையவராய் அவர்களுக்குப் போதித்தபடியால்,
 ஜனங்கள் அவருடைய போதகத்தைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள்.
மத்தேயு அதிகாரம் 7 : 21 முதல் 29 வரை
கர்த்தர் என்பவர் நம்மைப் படைத்தவர். நாம் அனைவரும் அவரது அடிமை. இயேசு உட்பட அனைவருமே அவரது அடிமைகள்தான். அதனால்தான் இயேசு தன்னை கர்த்தாவே என்று அழைப்பவர் பரலோக ராஜ்ஜியத்திற்குச் செல்ல முடியாது என்று தெளிவாக அறிவிப்பு செய்கின்றார்.
ஆனால் கிறித்தவர்கள் இயேசு செய்த அறிவிப்புக்கு மாற்றமாக,
அவரது போதனைக்கு மாற்றமாக இயேசுவைத்தான் கர்த்தர் என்று
அழைக்கின்றனர்.
தன்னை கர்த்தர் என்று அழைத்தால் பரலோக ராஜ்ஜியத்தில் நுழைய முடியாது என்ற இயேசுவின் போதனையை கிறித்தவர்கள் கடைப்பிடிக்க வேண்டும்.
எனவே கிறித்தவ சகோதர சகோதரிகளே! இயேசுவை கர்த்தர் என்று அழைத்து பரலோக ராஜ்ஜியத்திற்கு செல்லும் பாக்கியத்தை இழந்துவிடாமல்அவரை வணங்காமல்அவரை அனுப்பியவராகிய கர்த்தர் ஒருவரை மட்டுமே வணங்கி நித்திய ஜீவனை அடைய கர்த்தர் நம்மை ஆசிர்வதிப்பாராக என்று நமது வீட்டுக்கு வரக்கூடிய கிறித்தவ பிரச்சாரகர்களிடத்தில் நமது சகோதரிகள் இந்த ஆக்கத்தை கையில் வைத்துக் கொண்டோ அல்லது இதில் உள்ள பைபிள் வசனங்களை குறித்து வைத்துக் கொண்டோ கேள்வியெழுப்பினால் அடுத்த தடவை உங்களது வீட்டுப்பக்கம்கூட அந்த அல்லேலுயா கூட்டத்தினர்
எட்டிப்பார்க்க மாட்டார்கள். அப்படி மீறி வரக்கூடியவர்களை நம்முடைய கேள்விகளுக்கு பதிலளிக்காமல் நீங்கள் இங்கு பிரச்சாரம் செய்யக்கூடாது என்று சொல்-லி ப்பாருங்கள். அத்துடன் அந்தக்கூட்டத்தினர்
ஓட்டமெடுத்துவிடுவார்கள்.
தீன்குலப்பெண்மணிகள் இந்த முயற்சியில் இறங்கலாம் தானே!
குறிப்பு : இது குறித்த கூடுதல் தகவல்கள் அறிய விரும்பும் சகோதரிகள் மவ்லவி பீஜே அவர்கள் எழுதிய
1. இதுதான் பைபிள்
2. இயேசு இறைமகனா?
3. இயேசு சிலுவையில் அறையப்படவில்லை
4. பைபிளில் நபிகள் நாயகம்
ஆகிய நூல்களைப் படித்தால் இன்னும் கூடுதல் விஷயங்களை அறிந்து கொள்ளலாம்.

நன்றி - தீன்குலப்பெண்மணி பிப்ரவரி 2013
Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger