தொடரும் திரைப்பட காவிச் சிந்தனை


இஸ்லாத்தை அழிப்பதற்கு ஒவ்வொரு காலகட்டத்திலும் பெரும் முயற்சிகள் எடுக்கப்பட்டு அனைத்தும் தோல்வியில் முடிந்தன. நவீன வளர்ச்சியின் உச்சத்தில் இருக்கும் இக்கால கட்டத்திலும் முஸ்-லிம்களை தீவிரவாதிகளாக காட்டி இஸ்லாத்தையும் அதைப் பின்பற்றி நடப்பவர்களையும் தனிமைப்படுத்த திரை உலகினர் குறிப்பாக தமிழகத்தை சார்ந்த திரைக்கூத்தாடிகள் பெரும் முயற்சி செய்து வருகின்றனர். முஸ்லி-ம்களை தீவிரவாதிகளாகவும், சமூகவிரோதிகளாகவும், தேசத்துரோகிகளாகவும் காட்டும் வகையில் பல படங்களை உருவாக்கி முஸ்-லிம்களை அழிக்கும் முயற்சிகள் தொடர்ந்து வருகின்றனர்.

ரோஜா, பம்பாய் போன்ற திரைப்படங்களில் முஸ்-லிம்களை தீவிரவாதிகளாக காட்டுவதும் திருக்குர்ஆனை கையில் வைத்து அப்பாவி மக்களை சுடுவது போன்ற காட்சிகளை எடுப்பதும், தீவிரவாதிகளை காட்டும்போது பள்ளிவாசல்களை காட்டுவதும் வாடிக்கையாக்கி விட்டனர் தமிழக திரைஉலகினர்.

முஸ்லி-ம்கள் என்றால் அப்பாவிகளை கொல்பவர்கள் என்ற கருத்தை சாதாரண மக்கள் மத்தியில் பதிய வைத்து இந்நாட்டின் மைந்தர்களை அந்நியப்படுத்த திட்டுமிட்டு செயல்பட்டு வருகின்றனர்.

தற்போது வெளிவந்துள்ள துப்பாக்கி திரைப்படத்தில் முழுக்க முழுக்க முஸ்லி-ம்களை தீவிரவாதிகளாக சித்திரிக்கும் காட்சிகள் நிறைந்து காணப்படுவதாகவும் மிகவும் மோசமான கருத்தை மக்கள் மனதில் பதிய வைக்கும் வேலையை செய்துள்ளதாகவும் படத்தை பார்த்தவர்கள் கூறுகிறார்கள்.

முஸ்-லிம்களின் எதிர்ப்பை அடுத்து நான்கு இடங்களில் வரும் காட்சிகள் நீக்கப்படும் என்று பட இயக்குநர் தெரிவித்திருந்தாலும் நீக்கிய பிறகுள்ள காட்சிகளும் முஸ்-லிம்களை சமூகவிரோதிகளாகவும் தேசத் துரோகிகளாகவும் காட்டும் வகையிலேயே இருப்பதாக படத்தை பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
முழு படத்தை வெட்டும் அளவுக்கு முஸ்-லிம்களுக்கு எதிரான காட்சிகள் அதில் நிறைந்து காணப்படுகின்றன. முஸ்லி-ம்களுக்கு எதிரான இந்த திரைப்படத்திற்கு ஆதரவாகவும் சில பசுத்தோல் போர்த்திய புலி-கள் பேசிவருகின்றனர். கருத்து சுதந்திரத்தை பறிப்பதாகவும். நாட்டில் நடப்பதைத்தான் அப்படத்தில் எடுத்துள்ளதாகவும் இப்படத்திற்கு வக்காலத்து வாங்குகின்றனர். ஆனால் நாட்டு நடப்பு இவர்கள் கூறுவது போல் இல்லை. முஸ்லி-ம்களில் சிலர் குண்டுவைத்தல் போன்ற காரியங்களில் இறங்கினாலும் அதைவிட அதிகமாக சங்கபரிவாரத்தினர் தான் அதிகமான குண்டு வெடிப்பை நிழ்த்தி படுகொலை செய்துள்ளனர்.

காந்தியைக் கொன்றதில் துவங்கி மாலேகான் குண்டு வெடிப்பு வரை இவர்கள் நிகழ்த்திய பயங்கரவாதம் கணக்கில் அடங்காது. இவர்களைப் பற்றி படம் எடுப்பதுதான் நடப்பதை படமாக்குவதாக ஆகும். பாபர் மஸ்ஜித் இடிப்பு, பல்லாயிரம் முஸ்லி-ம்கள் கொன்று குவிப்பு என சங்பரிவாரத்தினரை பற்றி படம் எடுப்பார்களா?

நாட்டில் நடப்பதை மக்களிடம் எடுத்துரைக்கும் சேவையை(?) திரையுலகினர்
செய்கின்றனர் என்றால் அமெரிக்காவிற்கு எதிராக திரைப்படம் எடுப்பார்களா? ஆப்கான், ஈராக் என்று எத்தனையோ இஸ்லாமிய நாடுகளில் குண்டுவைத்து பல்லாயிரக்கணக்கான முஸ்-லிம்களை கொன்று குவித்த அமெரிக்காவின் உண்மை நிலையை எடுத்துரைக்கும் திரைப்படத்தை தமிழ திரைப்படத்தினர் எத்துள்ளனரா?

அமெரிக்காவின் கள்ளப்பிள்ளை இஸ்ரோல் இன்று வரையும் பலாஸ்தீன பகுதி மக்களை குண்டுவீசி கொன்று குவிக்கும் அநியாயத்தை படம் எடுத்தார்களா?
குஜ்ராத்தில் ஆயிரக்கணக்கான முஸ்லி-ம்களை கொன்று குவித்த கலவரத்தைப் பற்றி படம் எடுத்தார்களா? எடுக்கமாட்டார்கள். ஏனென்றால் அதில் உயிர், உடமைகளை இழந்தவர்கள் முஸ்-லிம்கள்.

முஸ்-லிம்களின் உண்மையான பண்பாடுகள், பழக்கவழக்கங்கள், ஈகை குணங்கள் இவற்றை யாரும் படம் எடுப்பதில்லை. மாறாக முஸ்-லிம்கள் என்றால் தீவிரவாதிகள் என்பதை மட்டுமே கருவாக கொண்டே குழந்தைகளை பெற்றெடுக்கிறார்கள்.
இந் நிலை தொடருமானால் . . . முஸ்-லிம்களின் பொறுமைக்கும் எல்லை உண்டு. . . என்பதை திரைப்படத்துறையினர் மனதில் கொள்ளட்டும்.

நன்றி - safwanlanka 
Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger