இலங்கை முஸ்லிம்களின் இன்றைய நிலை! – குவைத்தில் ஓர் வித்தியாசம்

அல்லாஹ்வுடைய மாபெரும் கிருபையினால் கடந்த 07-6-2013 வெள்ளிக்கிழமை அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் நடத்திய இலங்கை முஸ்லீம்களுக்கான மாபெரும் விழிப்புணர்வு உள்ளரங்க நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக நடந்தேறியது.

மண்டலத்தின் செயலாளர் சகோ. கூத்தாநல்லூர் ஜின்னா நிகழ்ச்சியை தொகுத்து வழங்க மண்டல தலைவர் சகோ. ராஜா ஷரீஃப் அவர்களின் வரவேற்புரையோடு ஆரம்பமான நிகழ்ச்சியில் பிறர் நலம் நாடுதல்” என்ற தலைப்பில் சகோ. அடியற்கை ஃபைசல் அவர்கள் உரை நிகழ்த்தினார்.
அதை தொடர்ந்து SLTJ யின் செயலாளர் சகோ. அப்துல் ராஸிக் அவர்கள் சிறப்புரையாற்றினார். வழமையான தொடர் சொற்பொழிவாக அல்லாமல் இலங்கை முஸ்லீம்களின் மூல வரலாறு மற்றும் இலங்கையில் முஸ்லீம்கள் தீவிரவாதிகளாகவும்பயங்கரவாதிகளாகவும் சித்தரிக்கப்படுவதன் பின்னனி,பொது பல சேனா என்கிற இனவாத குழுவினரின் இஸ்லாமியர்களுக்கு எதிரான சதி மற்றும் இலங்கையில் உள்ள முஸ்லீம் இயக்கங்களின் கையாலாகாத்தனம்,இயக்க தலைவர்களின் உண்மை முகம் ஆகியவற்றை புகைப்படங்கள் மற்றும் வீடியோ ஆதாரங்களுடன் விளக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சியாக இந்நிகழ்ச்சி அமைந்தது.
சுமார் எழுநூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் கலந்து சிறப்பித்த இந்நிகழ்வு நான்கு மணி நேரம் ஆவணப்படங்களை கொண்டு நடத்தப்பட்டது. எவ்வித சளிப்புமில்லாமல் அனைவரும் ஆச்சரியம் கலந்த சிந்தனையோடு நிகழ்ச்சியை அவதானித்தனை காணக்கிடைத்தது.
இலங்கையில் மிக நீண்ட வரலாற்று பின்னனி கொண்ட சமுதாயம் இஸ்லாமிய சமுதாயம் தான் என்பதையும்இலங்கையின் முன்னேற்றத்திற்காக இந்த சமுதாயம் செய்த தியாகத்தையும் ஆதாரங்களோடு பட்டியலிட்டுநாம் இலங்கையில் ஏன் எதிர்க்கப்படுகிறோம் யாரால் எதிர்க்கப்படுகிறோம் எதிர்ப்பவரகள் யாரால் தூண்டி விடப்படுகிறார்கள் என்பதையும் துள்ளியமாக சுட்டிக்காட்டினார்.
முஸ்லீம்களுக்கு எதிராக பல வருடங்களுக்கு முன்னதாகவே முடுக்கி விடப்பட்டிருக்கும் சதி வலையில் இலங்கையை பொறுத்தவரையில் பொது பல சேனா ஒரு பகடைக்காயே அன்றி வேறில்லை. என்பதற்கான புகைப்பட ஆதாரங்களும்இந்த சதியின் பின்ன்னியில் இயக்கம் கொடுப்பது அமெரிக்கா தான் என்பதை  அடுக்கடுக்கான சான்றுகளோடு விளக்கியது வந்திருந்த மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
முன் எப்போதையும் விட இந்த நிகழ்ச்சிக்கு மற்ற அமைப்பை சார்ந்தவர்கள் அதிக அளவு கலந்து கொண்டனர் என்பது கூடுதல் தகவல்.
இலங்கை முஸ்லீம்கள் அன்று முதல் இன்று வரை சந்தித்து வரும் பிரச்சனைகளை சிறு மேற்கோள்களாக இருந்தாலும் நுனுக்கமாக விளக்கி படிப்படியாக இன்றைய சூழல் வரை கொண்டு வந்து நாம் இந்த சதிகாரர்களை எதிர்கொள்ள ஒரே வழி குர்ஆன் ஹதீஸ் மட்டும் தான் மார்க்கம் என உறுதியாக நம்பி அதன் வழியில் நின்று போராடுவது தான். அது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்துக்கு மட்டுமே சாத்தியம் என இன்றைய முஸ்லீம்களின் இந்த நிலையை மாற்றும் தீர்வையும் சொல்லி தனது உரையை முடித்தது வந்திருந்த எல்லா தரப்பு மக்களாலும் ஏற்றுக்கொள்ளும் படியாகவே இருந்தது.
குவைத் தஸ்மா டீச்சர் சொசைட்டியில் நடந்த இந்நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் குவைத் மண்டலம் சார்பாக சிற்றுண்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இறுதியாக இலங்கை நியாஸ் நானா அவர்களின் நன்றியுரையோடு நிகழ்ச்சி நிறைவுற்றது. அல்ஹம்துலில்லாஹ்.
நிகழ்ச்சி களத்தொகுப்பு : கூத்தாநல்லூர் ஜின்னா

Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger