மிர்ஸா குலாமை பொய்யனாக்கி மதுரையில் ஓட்டமெடுத்த காதியானிகள்!


மதுரை மாவட்டம் கோரிப்பாளையம் பகுதியில் காதியானிகள் கூட்டத்தினர்
முஸ்லிம்களை குழப்பி துண்டுப் பிரசுரங்களை விநியோகித்து வந்ததோடு
அங்கிருந்த முஸ்லிம் இளைஞர்களிடத்தில், “மிர்ஸா குலாம் காதியானி என்பவன்
இறைத்தூதராவான்” என்று சொல்லி விஷமப் பிரச்சாரம் செய்து வந்துள்ளனர்.
இதை அந்தப்பகுதியிலுள்ள முஸ்லிம் சகோதரர்கள் டிஎன்டிஜே கோரிப்பாளையம்
கிளை நிர்வாகிகளிடம் தெரிவிக்க மக்களை வழிகெடுக்கும் காதியானிகளை
தோலுரித்துக்காட்ட நமது கோரிப்பாளையம் கிளை சகோதர்ரகள் முடிவெடுத்தனர்.
ஏகத்துவப் பிரச்சாரத்தின் துவக்க காலத்திலிருந்து டிஎன்டிஜேவின்
பிரச்சாரப்பணிகளில் ஈடுபட்டு வரும் கோரிப்பாளையம் கிளைச் செயலாளர் சையது
அபுதாஹிர் அவர்களது தலைமையில் நமது சகோதரர்கள் காதியானிகளை கடந்த
24.03.13 அன்று ஒரு சகோதரருடைய இடத்தில் சந்தித்தனர்.
அவர்களிடம் மிர்ஸா குலாம் பொய்யன் என்பது குறித்து நிரூபிக்க நாங்கள்
தயார் என்று கூற, அரண்டுபோன காதியானிகள் அதைப்பற்றியெல்லாம் இங்கு
பேசக்கூடாது. ஈஸா (அலை) அவர்கள் மரணித்துவிட்டார்களா இல்லையா என்பதைப்
பற்றி மட்டும்தான் பேச வேண்டும். இல்லாவிட்டால் நாங்கள் இங்கிருந்து
சென்று விடுவோம் என்று கூறியுள்ளனர்.
காதியானி கூட்டம் என்பது மக்களை வழிகெடுக்க வந்த கூட்டம்தான் என்பதை
அந்தப்பகுதி மக்களுக்கும், முஸ்லிம் இளைஞர்களுக்கும் வெட்ட
வெளிச்சம்போட்டுக் காட்ட வேண்டும் என்பதால், காதியானிகள் வைத்த வாதத்தையே
பேசுவோம் என்று சொல்லி ஈஸா (அலை) அவர்கள் மரணிக்கவில்லை என்பதற்கு
ஆதாரமாக உள்ள திருமறைக் குர்ஆன் வசனங்களையும், இது குறித்து சகோதரர் பீஜே
அவர்களின் திருக்குர்ஆன் தமிழ் மொழிபெயர்ப்பில் விளக்கங்கள் பகுதியில்
உள்ள செய்திகளையும் தொகுத்து நமது தரப்பிலிருந்து சையது அபுதாஹிர்
அவர்கள் காதியானிகளிடம் கேள்விக்கணைகளைத் தொடுத்தார். ஆட்டம் கண்ட
காதியானிகள் பதிலளிக்க முடியாமல் விழிபிதுங்கினர்.
இறுதியில் ஈஸா (அலை) அவர்கள் மரணிக்கவில்லை; அவர்கள் திரும்பவும் இந்த
பூமிக்கு இறங்கி வருவார்கள் என்று நாங்கள் மட்டும் சொல்லவில்லை.
காதியானிகளாக இருக்கக்கூடிய நீங்கள் யாரை இறைத்தூதர் என்று
நம்புகின்றீர்களோ! அந்தப் பொய்யன் மிர்ஸா குலாம் காதியானியே ஈஸா (அலை)
அவர்கள் திரும்பவும் இந்த பூமிக்கு வருவார்கள் என்று கூறியுள்ளான் என்று
சொல்லி அதற்கான ஆதாரத்தை எடுத்துக்காட்டியுள்ளார்.
மிர்ஸா குலாம் காதியானி என்பவன் தனக்கு வஹீ வந்ததாகச் சொல்லி
எழுதிவைத்துள்ள, “ஆயினே கமாலத்தே இஸ்லாம்” என்ற நுலில் 409ஆம்
பக்கத்தில், “மஸீஹ் ஈஸா அவர்கள் வானிலிருந்து இறங்குவார்கள் என்பதை
மக்கள் அறிய வேண்டாமா? ஏன் இதை அறியாமல் இருக்கிறார்கள்?” என்ற செய்தியை
வாசித்துக்காட்டி நீங்கள் சொல்லக்கூடிய அடிப்படையில் பார்த்தால் யாரை
நீங்கள் இறைத்தூதர் என்று சொல்கின்றீர்களோ அந்த மிர்ஸா குலாமே ஈஸா (அலை)
அவர்கள் திரும்பவும் வருவார்கள் என்று சொல்லியுள்ளான். அப்படியானால்
நீங்கள் இறைத்தூதராக நம்பக்கூடிய மிர்ஸா குலாமை பொய்யன் என்று சொல்லி
விட்டீர்கள். அந்தப் பொய்யன் சொன்னதை நாம் ஏற்றுக் கொள்ளக்கூடாது என்று
சொல்லி வாதத்தை வைத்தவுடன் அடிப்படையே ஆட்டம் கண்டதால் ஆடிப்போயினர்
காதியானிகள்.
குர்ஆன் மற்றும் ஹதீஸ்களிலிருந்து மட்டும்தான் ஆதாரம் காட்டி பேச
வேண்டுமே தவிர, மிர்ஸா குலாம் எழுதிய புத்தகத்திலிருந்தெல்லாம் ஆதாரம்
காட்டக்கூடாது என்று சொல்லி அந்தர் பல்டி அடித்துள்ளனர்.
நீங்கள்தான் மிர்ஸா குலாம் என்பவனுக்கு வஹீ வந்ததாகச் சொல்லி
வருகின்றீர்கள். அப்படியானால் உங்களது பார்வையில் மிர்ஸா குலாம்
எழுதியதெல்லாம் வேதம் என்று ஆகிவிட்டது. அதிலிருந்துதான் இந்த ஆதாரத்தை
எடுத்துக்காட்டுகின்றோம் என்று சொன்னவுடன் பதில் சொல்ல முடியாமல்
வாயடைத்துப்போன காதியானிகள் விவாதத்தை பாதியிலேயே நிறுத்திவிட்டு
தலைதெறிக்க ஓட்டமெடுத்தனர்.
தவ்ஹீத் ஜமாஅத்தின் இந்த சீரிய முயற்சியால் காதியானிகள் போடும் ஆட்டம்
அந்தப் பகுதியில் அடங்கியுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்…..
உங்களது ஊர்களிலும் மக்களை வழிகெடுத்து நரகப்படுகுழி நோக்கி அழைத்துச்
செல்லக்கூடிய இந்தக் காதியானிகள் கூட்டம் ஆட்டம் போடுவார்களேயானால்,
அவர்களைக் குறித்து தவ்ஹீத் ஜமாஅத் தலைமைக்கு தகவல் கொடுத்தால், அவர்களை
தோலுரித்துக்காட்டக்கூடிய வகையிலான பிரச்சாரகர்களை டிஎன்டிஜே தலைமயகம்
அனுப்பி அவர்களது கொட்டத்தை அடக்கும் என்பதையும் சொல்லிக் கொள்கின்றோம்.
இதற்கு முன்பு மூன்று முறை ஓட்டம்:
இப்படி விவாதிக்க வந்துவிட்டு பாதியில் ஓட்டமெடுப்பது இவர்களுக்கு
ஒன்றும் புதிதல்ல. இதற்கு முன்பாக 2004ஆம் ஆண்டு மதுரையில் இந்தக்
காதியானிகள் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பீபீகுளம் பகுதியில்
அவர்களது அலுவலகத்துக்கே சென்று சையது இப்ராஹீம் மற்றும் சையது அபுதாஹிர்
ஆகியோர் அடங்கிய டிஎன்டிஜே குழு இந்தக் காதியானிகளுடன் விவாதித்தது.
அப்போதும் நாம் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்க திராணியில்லாமல்
விழிபிதுங்கி மிர்சா குலாம் பற்றியெல்லாம் எங்களிடம் கேள்வி
கேட்கக்கூடாது என்று சொல்லி நழுவி ஓடினர். அதன்பிறகு மதுரையில் இவர்களது
கொட்டம் அடங்கியிருந்தது. அதற்கு முன்பாக இருமுறை ஓட்டமெடுத்துள்ளனர்.
தற்போது மறுபடியும் ஆட்டம் போட ஆரம்பித்துள்ளனர். இவர்களுக்கு தக்க
பதிலடி கொடுத்து காதியானி கொள்கையை கபுர் குழிக்கு அனுப்ப வேண்டும்.
tntj.net 
Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger