கும்பகோணத்தில் டி.என்.டி.ஜே.வின் 14வது மாநிலப் பொதுக்குழு இன்ஷா அல்லாஹ்!


இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 14.04.2013 ஞாயிறு அன்று காலை 10.30 மணிக்கு கும்பகோணம் பேருந்து நிலையம் அருகில் உள்ள மகாமகக் கலை அரங்கத்தில் டி.என்.டி.ஜே.யின் மாநிலப் பொதுக்குழு நடைபெற உள்ளது.

பொதுக்குழு உறுப்பினர்கள் மாவட்ட தலைமையகத்தில் அழைப்பிதழைப் பெற்றுக் கொள்ளவும். அழைப்பிதழ் கிடைக்கப் பெறாத கிளை நிர்வாகிகள் உடனடியாக மாவட்ட தலைமையைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
பொதுக்குழுவில் கலந்து கொள்ளத் தகுதியானவர்கள் :
மேலாண்மைக் குழு உறுப்பினர்கள், மாநில தணிக்கைக்குழு உறுப்பினர்கள், மாநில நிர்வாகிகள், மாநில அணிச் செயலாளர்கள், நடப்பு நிர்வாகத்திற்கு முந்தைய பதிவிக்காலத்தில் நிர்வாகத்தில் இருந்த முன்னாள் உயர்நிலைக்குழு உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகிகள், மண்டல நிர்வாகிகள், மாநிலப் பேச்சாளர்கள், மாவட்டப் பேச்சாளர்கள், மாவட்ட அணிச் செயலாளர்கள், கிளை நிர்வாகிகள், நடப்பு நிர்வாகத்திற்கு முந்தைய பதவிக்காலத்தில் நிர்வாகத்தில் இருந்த முன்னாள் மாவட்ட நிர்வாகிகள்
குறிப்பு :
நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில் உள்ளவர்கள் பொதுக்குழுவில் கலந்து கொள்ள அனுமதியில்லை.
மதிய உணவுக்கு மட்டுமே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
உறுப்பினர் அட்டை அவசியம் கொண்டு வரவேண்டும்.
பொதுக்குழு உறுப்பினர்களுக்கு சிறப்புச் சலுகையாக உணர்வு, ஏகத்துவம், தீன்குலப்பெண்மணி ஆகிய மூன்று இதழ்களுக்கும் சேர்த்து ஆண்டுச் சந்தா ரூ 500 மட்டுமே!
ரயில் மார்க்கமாக வருபவர்கள் இப்போதே தங்கள் பயணச் சீட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இப்படிக்கு
எம். ஷம்சுல்லுஹா ரஹ்மானி
மேலாண்மைக் குழுத் தலைவர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநிலத் தலைமையகம்
Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger