சவூதி ஏர்லைன்ஸ் விமானம் திடீர் தரையிறக்கம்

மும்பை: சவூதி ஏர்லைன்ஸ் விமானம் பாதுகாப்பு காரணமாக புறப்பட்ட சில நிமிடங்களில் திடீரென தரையிறக்கப்பட்டது.
மும்பையில் இருந்து 321 பயணிகளுடன் 'எஸ்.வி.748' சவூதி ஏர்லைன்ஸ் விமானம் நேற்று சவூதிக்கு புறப்பட்டு சென்றது. புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானத்தின் வால் பகுதியில் அபாயம் ஏற்பட்டுள்ளதாக ஃபயர் அலாரம் கருவி எச்சரித்தது.

இதனை அடுத்து அவசரமாக மீண்டும் மும்பை விமான நிலையத்திலேயே தரையிறக்கப்பட்டது. நேற்று மாலை 4.35 மணிக்கு தரையிறங்கிய அந்த விமானத்தில் இருந்த 321 பயணிகளையும் பத்திரமாக இறக்கிய பின்னர், பாதுகாப்பான இடத்தில் அந்த விமானம் முழுவதுமாக சோதிக்கப்பட்டது. எனினும் ஆபத்தான பொருட்கள் எதுவும் கண்டெடுக்கப் படவில்லை.

Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger