அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து - மாணவர்கள் உட்பட பலர் காயம்!

திருவாரூர்: திருவாரூர் அருகே அரசுப் பேருந்து கவிழ்ந்ததில் 50 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
 இன்று காலை களப்பாலில் இருந்து திருத்துறைப் பூண்டிக்குச் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து ஒன்று திருவாரூர் அருகே சென்று கொண்டிருந்தபோது, ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்து அருகிலிருந்த குளத்தில் தலைகீழாக கவிழ்ந்தது. இதில் பேருந்தில் பயணம் செய்த 30 மாணவர்கள் உள்பட 50 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
குளத்தில் பலர் மூழ்கியிருப்பதாகவும் கூறப் படுகிறது. தகவலறிந்ததும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger