அபுதாபியில் பணியின்போது புதைமணலில் சிக்கி இந்தியர்கள் பலி!


அபுதாபியில் பணியின்போது புதைமணலில் சிக்கி இந்தியர்கள் பலி!அபுதாபிஅபுதாபியில் கட்டுமானப் பணியின்போது புதைமணலில் சிக்கி இந்தியர்கள்  இருவர் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.


அபுதாபியில் உள்ள அல் ஜப்ரானியா பகுதியில் கழிவுநீர் அகற்றும் நிலையம் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் ஏராளமான தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.

இந்த பணியில் இந்தியர்கள், செல்வராஜ், (28), ராம்குமார் (35) ஆகியோர் ஈடுபட்டிருந்தனர். அபோது திடீரென மண் சரிந்து விழுந்ததில், செல்வராஜ், ராம்குமார் இருவரும் புதையுண்டனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த மற்ற தொழிலாளர்கள் அவர்களை காப்பாற்ற முயன்றும் முடியாததால் மீட்புக் குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப் பட்டது. அவர்கள் உடனடியாக வந்து  புதையுண்டவர்களை மீட்பதற்குள் ராம்குமார், செல்வராஜ் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தொழிலாளர்களுக்கு போதிய பாதுகாப்பு அளிப்பதை கட்டுமான நிறுவனங்கள் உறுதிப்படுத்த வேண்டும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்

நண்றி - இந்நேரம்

Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger