லடாக்: கடந்த 20 நாட்களாக இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து ஆக்கிரமிப்பு செய்திருந்த சீன ராணுவம் வெளியேறியது.
காஷ்மீரில் உள்ள லடாக் பகுதியில் சீன ராணுவம் கடந்த மாதம் 15ம் தேதி திடீரென எல்லை கட்டுப்பாடு கோட்டில் இருந்து 19 கிலோ மீட்டர் தூரம் ராணுவ மோப்ப நாய் படையுடன் ஊடுருவி வந்த சீன படை, தலாத் பெக் ஓல்டி என்ற இடத்தில் 5 முகாம்கள் அமைத்தது. அதில், 50க்கும் மேற்பட்ட சீன ராணுவ வீரர்கள் தங்கினர்.
சீன ரணுவம் இந்திய எல்லையை விட்டு வெளியேறுமாறு இந்தியா - சீனா ராணுவ உயரதிகாரிகளுக்கு இடையில் நடைபெற்ற 3 கொடி கூட்டங்களும் தோல்வியில் முடிந்தன.
மேலும் லடாக்கில் உள்ள தவுலத் பேக் ஓல்டி எல்லைப் பகுதியில், சீன எல்லைக்குள் சுமார் 300 மீட்டர் தூரம் ஆக்கிரமித்துள்ள பகுதியில் இருந்து முதலில் இந்தியா வெளியேற வேண்டும். அதன் பிறகே, இப்போது ஆக்கிரமித்த பகுதியை விட்டு நாங்கள் வெளியேறுவது தொடர்பாக யோசிக்க முடியும்’ என சீனா கூறியது.
இந்நிலையில், சீன ராணுவம் நேற்று மாலை 7 மணியளவில் திடீரென தனது ஊடுருவலை கைவிட்டு வெளியேறியது. லடாக் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த அதன் முகாம்கள் அனைத்தும் அகற்றப்பட்டு, ராணுவ வாகனங்களில் ஏற்றி செல்லப்பட்டது. அதேபோல், இந்த பகுதியில் முகாமிட்டு இருந்த இந்திய ராணுவமும் அங்கிருந்து வெளியேறியது. அங்கிருந்து வெளியேறும் முன்பாக இருநாட்டு ராணுவ கமாண்டர்களும் கைகுலுக்கி கொண்டனர்.
Post a Comment