மும்பை: மந்திரவாதியின் பேச்சைக் கேட்டு, நரபலிக்கு இருவரை கொன்ற வாலிபர், கைது செய்யப்பட்டார். மந்திரவாதியைக் காவல்துறையினர் வலைவீசி தேடிவருகின்றனர்
மும்பையை அடுத்த சாஜன் பகுதியில் வசிப்பவர் சுனில். இவர் சில தினங்களாக கடன் தொல்லையில் சிக்கி தவித்தார். அதிலிருந்து மீள நரபலி கொடுக்க வேண்டும் என மந்திரவாதி ஒருவர் சுனிலுக்கு ஆலோசனை வழங்கினார். அதை உண்மை என நம்பிய சுனில் தொழில் ரீதியாக பேச்சு வார்த்தை நடத்த வரும்படி கூறி, தன் நண்பர் தனஞ்ஜய் ராஜூவைத் தனியாக அழைத்து சென்று இரும்பு கம்பியால் தலையில் தாக்கிக் கொன்றார்.
இந்த நிலையில் விவரம் அறிந்த தனஞ்ஜயின் தாயையும் கொன்று பிணத்தை சுனில் வீசியுள்ளார்.
இது தொடர்பாக சுனிலைக் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் நரபலிக்குத் தூண்டிய மந்திரவாதியைக் காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
இந்நேரம்
மும்பையை அடுத்த சாஜன் பகுதியில் வசிப்பவர் சுனில். இவர் சில தினங்களாக கடன் தொல்லையில் சிக்கி தவித்தார். அதிலிருந்து மீள நரபலி கொடுக்க வேண்டும் என மந்திரவாதி ஒருவர் சுனிலுக்கு ஆலோசனை வழங்கினார். அதை உண்மை என நம்பிய சுனில் தொழில் ரீதியாக பேச்சு வார்த்தை நடத்த வரும்படி கூறி, தன் நண்பர் தனஞ்ஜய் ராஜூவைத் தனியாக அழைத்து சென்று இரும்பு கம்பியால் தலையில் தாக்கிக் கொன்றார்.
இந்த நிலையில் விவரம் அறிந்த தனஞ்ஜயின் தாயையும் கொன்று பிணத்தை சுனில் வீசியுள்ளார்.
இது தொடர்பாக சுனிலைக் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் நரபலிக்குத் தூண்டிய மந்திரவாதியைக் காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
இந்நேரம்
Post a Comment