மிரட்டல் விடுத்து மன்னிப்பு கேட்ட பதுங்கும் புலிகள்:

பிரபாகரன் செய்த அட்டூழியங்களையும்விடுதலைப்புலிகள் செய்த அடாவடித்தனங்களையும்,இனப்படுகொலைகளையும் ஆதாரப்பூர்வமாக சுட்டிக்காட்டி டிஎன்டிஜேவின் மாநிலமேலாண்மைக்குழு உறுப்பினர் அல்தாஃபி அவர்கள் கரூர் குளித்தலையில் நடந்தபொதுக்கூட்டத்தில் பேசியிருந்தார்மேலும் அவர் பேசிய பொதுக்கூட்ட உரைகள் ஃபேஸ் புக்கிலும்இடம்பெற்றிருந்தது.  இதற்கு வாதப்பிரதிவாதங்கள் ரீதியாக பதிலளிக்கத் திராணியில்லாதவிடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களான, “நாம் தமிழர்” கட்சியினர் நமது மாநில நிர்வாகிகள்எம்..சுலைமான் மற்றும் சையது இப்ராஹீம் ஆகியோரிடத்தில் தொலைபேசியில் தொடர்புகொண்டு இது குறித்து பேசியுள்ளனர்.

பிரபாகரன் முஸ்லிம்களை கொலை செய்தார் என்பதற்கு ஆதாரம் உள்ளதாஎன்று முதல்கேள்வி எழுப்ப அனைத்திற்கும் தெள்ளத்தெளிவான ஆதாரங்கள் உள்ளனஅதை நீங்கள்மறுப்பீர்களேயானால் அதை நாங்கள் நிரூபிக்கத்தயார் என்று நமது நிர்வாகிகள் பதில் சொல்ல,அது உண்மையென்று வைத்துக் கொண்டால் ராஜபக்சேவை நீங்கள் ஆதரிக்கின்றீர்களாஎன்றுகேள்வியெழுப்பியுள்ளனர்ராஜபக்சே போர் குற்றங்கள் செய்திருப்பாரேயானால் அவரும்குற்றவாளிதான்அதே நேரத்தில் முஸ்லிம் குழந்தைகளைக்கூட விட்டுவைக்காமல் கொலைசெய்து படுபாதக செய்லபுரிந்த பிரபாகரனும் அவனுடைய ஆதரவாளர்களும் மரணதண்டனைகொடுக்கப்பட வேண்டியவர்கள் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை என்று நமது நிர்வாகிகள்பதிலளித்துள்ளனர்.
அப்படியானால்மும்பையில் தீவிரவாதத் தாக்குதல் நடத்திய முஸ்லிம்களை நீங்கள்ஆதரிப்பீர்களாஅவர்களைக் கண்டிப்பீர்களாஎன்று அவர்கள் கேள்வி கேட்கதீவிரவாதசெயல்களை யார் செய்தாலும் அதை நாங்கள் ஆதரிக்கமாட்டோம்முஸ்லிம் பெயர் தாங்கிகள்அதைச் செய்திருந்தாலும் அவர்களும் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்தான் என்பதில் எங்களுக்குமாற்றுக்கருத்து இல்லை என்று நாம் பதில் கூற பதிலளிக்க முடியாமல் விழிபிதுங்கியுள்ளனர், "நாம் தமிழர்கட்சியினர்.
இது குறித்து பகிரங்க விவாதம் நடத்த நீங்கள் தாயாராஎன்று விவாதத்திற்கு பகிரங்கஅறைகூவல் விடுக்கப்பட்டதுஅதற்கு பதில் இல்லை.
நமது கேள்விகளுக்கு பதிலளிக்க வக்கில்லை என்றவுடன்விடுதலைப்புலிகளை எதிர்த்துபேசுவதை நீங்கள் நிறுத்த முடியுமாமுடியாதாஎன்று மிரட்டல் தொனியில் கேள்வி வர, “நீஇப்படியெல்லாம் மிரட்டினாயேயானால்இன்னும் அதிகமாக அவர்களைப்பற்றி பேசி அவர்களைதோலுரிப்போம் என்று நமது நிர்வாகிகள் தெரிவிக்கஅப்படியானால் நாளை கரூரில்நடக்கக்கூடாதது எல்லாம் நடக்கும் என்று மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதுபோன்று ஒரு நாளைக்கு நூறுபேரை நாங்கள் சந்திக்கின்றோம்நீ என்னவேண்டுமானாலும்செய்துகொள்உன்னுடைய இந்த மிரட்டல்களுக்கெல்லாம் நாங்கள் பயப்படமாட்டோம்” என்று நமதுநிர்வாகிகள் கூற தொலைபேசி இணைப்பைத் துண்டித்தனர்அதைத் தொடர்ந்து அந்தவிடுதலைப்புலி ஆதரவாளர் நமது கரூர் மாவட்ட பொறுப்பாளர் இர்ஷாத் அவர்களைதொலைபேசியில் தொடர்பு கொண்டு மிரட்டியுள்ளார்.
நமது நிர்வாகிகள் உடனடியாக கரூர் டவுன் காவல்நிலையத்தில் அவரது தொலைபேசிஎண்ணைக் கொடுத்து புகார் செய்யவே காவல்துறை உடனடியாக களமிறங்கியதுநமதுநிர்வாகிகளிடம் அவர்கள் பேசிய தொலைபேசி உரையாடல்கள் அனைத்தும் ரெகார்டுசெய்யப்பட்டிருந்ததால் அவர்கள் வசமாகச் சிக்கிக்கொண்டனர்.
போலீசார் அவர்களை காவல்நிலையத்திற்கு அழைத்து விசாரணை நடத்தவே அரண்டு போனவிடுதலைப்புலி ஆதரவாளர்கள் ஆரம்பத்தில் நாங்கள் அவ்வாறு பேசவே இல்லை என்றுமறுத்துள்ளனர்இவர்கள் பேசிய தொலைபேசி உரையாடல்கள் அனைத்தும் ரிகார்டுசெய்யப்பட்டுள்ளதுஅதை மாநிலத்தலைமையிடமிருந்து வாங்கி போட்டுக்காட்டட்டுமாஎன்றுநமது கரூர் மாவட்ட பொறுப்பாளர் ஹனீஃபா அவர்கள் கேள்வியெழுப்பியவுடன் நமது குட்டுவெளிப்பட்டுவிடும் என்று பயந்த விடுதலைப்புலிகளின் ஆதாரவாளர்கள் தாங்கள் பேசியதுஉண்மைதான் என்றும்அவ்வாறு நாங்கள் பேசியதற்காக நாங்கள் வருத்தம் தெரிவிக்கின்றோம்என்றும் மன்னிப்புக் கடிதம் எழுதிக்கொடுத்துள்ளனர்.
அவர்களிடத்தில் இது குறித்து நேரடியாக விவாதம் நடத்திக் கொள்ளலாம் என்று அழைப்புவிடுக்கப்பட்டதுஅந்த அழைப்பை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லைஇதிலிருந்தே அவர்களிடத்தில்உண்மையில்லை என்பது தெளிவாகின்றது.
நாம் தமிழர் மாவட்டத் தலைவர் ராஜா என்பவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பாகவழங்கப்பட்டதுஇஸ்லாமிய அழைப்புப்பணியும் செவ்வனே செய்யப்பட்டது.
நன்றி - onlinepj 
Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger