தமிழகத்தில் ஏற்பட்ட ஏகத்துவ எழுச்சி - ஓர் வரலாற்றுப் பார்வை (தொடர் - 9)


நன்றி அறிவிப்புக் கூட்டம்

இதனிடையே தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் வீரியமிக்க போராட்டங்களால் இடஒதுக்கீடு அறிவிப்பு வெளியாகிவிடும் என்ற செய்தி கசிய ஆரம்பித்தவுடன், டிசம்பருக்குள் இடஒதுக்கீட்டை அறி விக்கவில்லையென்றால் போராட்டம் என்ற கே­க்கூத்தான அறிவிப்பை தமுமுக வெளியிட்டது. அதுவரை மாநில அரசுக்கு அதிகாரமில்லை என்று கூறிக் கொண்டிருந்த திமுகவின் சிறுபான்மைப் பிரிவினர் தமுமுக, இட ஒதுக்கீடு அறிவிப்பு வெளியிடப்பட் டால் அதன் பலன் தவ்ஹீத் ஜமாஅத் திற்குச் சென்று விடும் என்று பயந்து இப்படியொரு அறிவிப்பைச் செய்துள்ளனர் என்று மக்கள் வெளிப்படையாகவே பேச ஆரம்பித்தனர்.

இடஒதுக்கீடு அறிவிப்பு வெளியான வுடன், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் நிர்வாகிகள் முதல்வர் கருணாநிதியைச் சந்தித்து நன்றி தெரிவித்ததுடன், வரும் நாடாளுமன்றத் தேர்த­ல் தனது ஆதரவை திமுகவுக்கு அளிப்பதாக வாக்குறு தியும் கொடுத்து விட்டு வந்தனர். இதிலும் தங்களின் கேடுகெட்ட அரசியலை நடத்த தமுமுக முன் வந்தனர்.


தவ்ஹீத்வாதிகள் இருந்தவரைதான் தமுமுக சார்பில் இடஒதுக்கீட்டுப் போராட்டங்கள் நடைபெற்றன. தவ்ஹீத் வாதிகளைக் கழற்றிவிட்டபின் இடஒ துக்கீட்டிற்காக உருப்படியான எந்தப் போராட்டத்தையும் நடத்தவில்லை என் பதை மக்கள் அறிவார்கள். அத்துடன் திமுக ஆட்சிக்கு வந்தபின் வாரியப் பதவி பெறுவதையே குறிக்கோளாகக் கொண்டிருந்ததால், சிறுபான்மைப் பிரி வின் இடஒதுக்கீட்டுக் கோரிக்கை சுத்த மாக வீரியமிழந்தது. இதையெல்லாம் மக்களுக்கு மறக்கடிக்க வேண்டும் என் பதற்காக கருணாநிதிக்கு நன்றி அறிவிப் புக் கூட்டத்தை மானங்கெட்டுப் போய் நடத்தினார்கள். மாநில அரசுக்கு அதிகா ரமில்லை என்றார்கள்.

ஜெயல­தா ஒரு ஆணையத்தை அமைத்தபோது வெற்றுப் பேப்பர் என் றார்கள். கருணாநிதி அந்த ஆணை யத்தை மாற்றியமைத்தபோதும் இதற் கும் இடஒதுக்கீட்டிற்கும் சம்பந்த மில்லை என்றார்கள். அந்த ஆணை யத்தின் பரிந்துரையின் அடிப்படையில் மாநில அரசு இடஒதுக்கீட்டை வழங் கியபோது, கருணாநிதியின் அறிவிப்பு செல்லாது என்று அறிக்கை விட்டு விட்டு ஒதுங்க வேண்டியதுதானே? அவ்வாறு செய்யாமல் கோடிக்கணக்கில் செலவு செய்து நன்றி அறிவிப்புக் கூட்டம் எதற்காக நடத்த வேண்டும்?

அப்போது அதிகாரமில்லை என்று சொன்னது, வாரியம் தந்த வள்ளலைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக! இப் போது நன்றி அறிவிப்புக் கூட்டம் நடத் துவது, நாங்கள்தான் வாங்கித் தந்தோம் என்று கூறி மக்களிடம் வசூல் வேட்டை நடத்துவதற்காக!


ஏமாற்றமளித்த இட ஒதுக்கீடு

இப்படிப்பட்ட துரோகங்களையெல் லாம் தாண்டி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் இடஒதுக்கீட்டைப் பெற்றுத் தந்தது. அத்துடன் காரியம் முடிந்து விடவில்லை.

கருணாநிதி அறிவித்த இடஒதுக்கீட் டில் குளறுபடிகள் இருப்பதை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தது. தமிழக அரசுத் தேர் வாணையம் வெளியிட்ட விளம்பரத்தில் முஸ்லிம்களுக்கு மூன்றரை சதவிகித இடஒதுக்கீடு கடைப்பிடிக்கப்பட வில்லை என்பதைக் கண்டு தவ்ஹீத் ஜமாஅத் கொதித்தெழுந்தது.

மூன்றரை சதவிகிதம் வழங்கப்பட வில்லை என்றால் மீண்டும் போராட்டம் தொடரும் என்று தவ்ஹீத் ஜமாஅத் அறிவித்து, சென்னையில் ஒரு கண் டன ஆர்ப்பாட்டத்தையும் நடத்தியது. கண்டனப் பொதுக் கூட்டங்களை நடத்தி சமுதாயத்திற்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியது.

ஆனால் ஏற்கனவே இடஒதுக்கீட்டுக் கொள்கையில் துரோகமிழைத்த தமுமுக இந்த விஷயத்திலும் தனது சமுதாய விரோதப் போக்கைத் தொடர்ந் தது. பதவியையும், பதவி தந்தவர்களை யும் காப்பாற்றுவதற்காக வாரியடித்துக் கொண்டு, வரிந்து கட்டிக் கொண்டு, இந் தக் குளறுபடிகளை நியாயப்படுத்தினார்கள். 

ரோஸ்டர் முறை, புரோட்டா மாஸ்டர் முறை என்று வியாக்கியானம் கொடுத்தார்கள். படிப்பறிவில்லாததால் இதுவெல்லாம் தவ்ஹீத் ஜமாஅத்தின ருக்குத் தெரியவில்லை என்று தொலைக் காட்சி நிகழ்ச்சிகளில் நையாண்டி பேசினார்கள். ஆனால் அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். இடஒதுக்கீட்டில் குளறு படிகள் நடந்திருப்பது உண்மைதான் என்று கருணாநிதியே முரசொலியில் எழுதி, இவர்களின் முகத்தில் கரியைப் பூசினார். இவர்களது சமுதாய துரோகத் தைத் தோலுரித்துக் காட்டினார்.

ஆள்பவரே சொல்­விட்ட பிறகு இந்த அடிமைகள் என்ன செய்ய முடி யும்? படிப்பறிவில்லாதவர்கள் சொன்ன அதே குற்றச்சாட்டை, முதல்வரிடம் சென்று கோரிக்கையாக வைத்து விட்டு, மானங்கெட்டுப்போய் அதைப்பத்திரிகைச் செய்தியாகவும் அளித்தார்கள். 

இடஒதுக்கீட்டில் உள்ள குளறுபடிக ளைச் சரி செய்ய வேண்டும் என்று இந் தப் படித்த(?) அறிவாளிகள் கருணாநிதி யிடம் சொல்­ விட்டு வந்தார்கள். இவர் களது அடிமைத்தனத்தையும், பதவிக்காக சமுதாயத்தை அடகு வைக்கும் போக்கையும் பார்த்து, ''நாங்க எவ்வளவோ பரவாயில்லைப்பா!'' என்று ஒரு லீக் பிரமுகர் சொன்னதுதான் இதில் வேடிக்கை!

உண்மையில் ஏனைய அரசியல்வாதி கள் இவர்களிடம் பிச்சை வாங்க வேண் டும். அந்த அரசியல்வாதிகள் இவர்க ளிடம் தோற்றுப் போய்விட்டார்கள் என்றே கூறவேண்டும்.

ஆனால் மக்கள் உண்மை நிலை யைப் புரிந்து வைத்திருக்கிறார்கள். இட ஒதுக்கீட்டில் தவ்ஹீத் ஜமாஅத்தைத் தவிர்த்து வேறு யாரும் உரிய முறையில் குரல் கொடுக்கவில்லை என்பதை நன் றாக விளங்கி வைத்திருக்கிறார்கள்.

இடஒதுக்கீட்டில் ஏற்பட்டுள்ள இந்தக் குளறுபடிகள் களையப்படுவதற்காக தவ்ஹீத் ஜமாஅத் காத்திருக்கின்றது. தவ்ஹீத் எழுச்சி மாநாட்டிற்குள் அவ் வாறு களையப்படவில்லை எனில், சட்ட மன்ற முற்றுகைக்கான தேதி மாநாட்டில் அறிவிக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

பாபரி மஸ்ஜித் இடிப்புக்குப் பிறகு, வல்ல ரஹ்மான் ஏற்படுத்திய நிர்ப்பந்தத் தால் சமுதாயப் பணிக்காகக் களமிறங்கிய தவ்ஹீத் ஜமாஅத் பல்வேறு துரோகங்களை, குழி பறிப்புகளைத் தாண்டி இன்றுவரை களத்தில் நிற்கின்றது. இவ்வாறு நிற்பதற்குக் காரணம், நீர்த்துப் போகாத அதன் நிலைபாடு! நிறம் மாறாத நெருப்புக் கொள்கை!

இத்தனையும் எதற்கு? நேர்முகமாகவோ, மறைமுகமாகவோ தேர்த­ல் சீட் வாங் கவா? இல்லை! இந்தச் சமுதாயப் பணிகளைக் கண்டு யாராவது தவ்ஹீத் கொள் கையை ஏற்றுக் கொள்ளமாட்டார்களா? என்ற எதிர்பார்ப்பில்தான்.


இனி ஈரமைப்பில்லை! ஓரமைப்புதான்!

உலகாதாயத்தை மட்டும் லட்சியமாகக் கொண்ட இவர்களிடம் மறுமை லாபத்தை எதிர்பார்ப்பது இலவு காத்த கிளி கதைதான் என்றெண்ணி, சமுதாயப் பாதைக்கு ஓர் அமைப்பு, சத்தியப் பாதைக்கு அதாவது ஏகத்துவ அழைப்புப் பணிக்கு ஓர் அமைப்பு என்று கண்டோம்.

சமுதாயப் பணிக்காகக் கண்ட இயக்கம் காலப் போக்கில் தவ்ஹீத் பணியை ஜீரணிக்கவில்லை. சத்தியத்திற்குக் கிடைத்த கிரெடிட்டை, பலனை மட்டும் அனுப வித்துவிட்டு, சாறை உறிஞ்சிவிட்டு நம்மை சக்கையாக வெளியே தள்ளியது. முகத்துக்கு நேராகப் புகழ்ந்து தள்ளிய அந்த முனாஃபிக்குகள் முதுகில் குத்தினார்கள். ஏகத்துவம் எனும் வட்டத்திற்குள் நாங்கள் வர மாட்டோம்; நாங்கள் வகுக்கும் வட்டத்திற்குள்தான் ஏகத்துவம் வர வேண்டும் என்ற நிலைப்பாட்டை நிறுவினர்.

இதுதான் நம்மைச் சிந்திக்க வைத்தது. சத்தியத்திற்கென்று ஒரு அமைப்பைக் கண் டோம். அதில் மதனிகள் சம்பளத்தைக் கவனத் தில் கொண்டு சமுதாயப் பிரச்சினைகளை மறுத் தார்கள். சமுதாயத்துக்கென்று ஒரு அமைப் பைக் கண்டோம். அவர்கள் சத்தியத்திற்குக் கதவைச் சாத்துகிறார்கள். இனிமேல் நமக்கு முன் இருப்பது, சத்தியத்திற்கு ஓரமைப்பு, சமு தாயத்திற்கு வேறமைப்பு என்ற அத்தியாயத் திற்கு முடிவுரை எழுதிவிட்டு, இரண்டிற்கும் ஒரே அமைப்பு என்ற புதிய அத்தியாயத்தைத் துவங்க வேண்டியதுதான் என்று முடிவெடுத்தோம்.

அல்லாஹ்வின் மகத்தான கிருபையால் அதுதான் இன்று நம்மை அரவணைத்துக் கொண் டிருக்கின்ற ஓர் இயக்கம். அந்தப் பேரியக்கம் தான் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்!

இப்போது சத்தியம், சமுதாயம் என்ற இரு சக்கரங்களுடன் இந்த இயக்கம் தமிழகத்தில் சாதனை படைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த வேளையில் ஒரு வேதனையையும் இங்கு குறிப்பிட வேண்டியுள்ளது.

சமுதாயப் பிரச்சினையை நாங்கள் கையில் எடுக்க மாட்டோம் என்று கூறிய அந்த இயக் கமும், ஏகத்துவம் எங்களுக்கு இரண்டாம் பட்சம் என்று நம்மை வெளியே அனுப்பிய பங்காளி இயக்கமும் நாம் வெளியே வந்த பிறகு, பக்காவாகக் கூட்டாளிகளாகிக் கொண் டன. எதற்கு? நம்மை எதிர்ப்பதற்கு!

இந்தக் கூட்டணிகளின் சதித்திட்டங்களை யெல்லாம் மீறி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அசுர வளர்ச்சி கண்டு வருகிறது. இந்த (மே 10,11) எழுச்சி மாநாட்டிற்குப் பிறகு இந்த இயக்கம் மேலும் வலுப்பெறும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

புகழனைத்தும் அல்லாஹ் ஒருவ னுக்கே!  

முற்றுப் பெற்றது....

நன்றி -tntjdubai  
Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger