ராஜ் சென்னை என்பவருக்கு பதில்..

குதிரைக்கு இருக்கும் சுதந்திரம் கூட இந்த பெண்களுக்கு கிடையாதா ??? இப்படி ஒரு கேடு கேட்ட நிலைமை நம் பெண்களுக்கு வேண்டுமா

என்ற செய்தியுடன் தாங்கள் இந்த புகைப்படத்தையும் இணைத்து இந்த பதிவை வெளியிட்டுள்ளீர்கள்.

இந்த தளத்தை பொறுத்தவரை முகவரி இல்லாமல் வரக்கூடியவர்களை பற்றி எந்தவித முக்கியத்துவமும் கொடுப்பதில்லை என்பதை கொள்கையாக வைத்து வருகிறோம், இருப்பினும் தாங்கள் எங்கள் சமூகத்தை சார்ந்த சகோதரிகளை பற்றி நீங்கள் உண்மைக்கு மாற்றமாக விமர்சித்ததால், இந்து மக்களுக்கும் உங்களுக்கும் உண்மையை புரிய வைப்பதற்கு தான் இந்த பதிவு.

நீங்கள் பதிவு செய்த அதே தலைப்பை மீண்டும் கீழே தந்துவிட்டு என்னுடைய விளக்கத்தை தருகிறேன்.

"குதிரைக்கு இருக்கும் சுதந்திரம் கூட இந்த பெண்களுக்கு கிடையாதா ??? இப்படி ஒரு கேடு கேட்ட நிலைமை நம் பெண்களுக்கு வேண்டுமா" - ராஜ் சென்னை

அருமை சகோதரர் ராஜ் அவர்களே...

குதிரைக்கு இருக்கும் சுதந்திரம் கூட இந்த பெண்களுக்கு இல்லை என்பதை அந்த பெண்கள் உங்களுக்கு போன் பண்ணி சொன்னார்களா ? அப்படியென்றால் எந்த தேதியில் எந்த ஊரிலிருந்து போன் பண்ணி சொன்னார்கள் என்பதை பொது இடத்தில் நீங்கள் சொல்லியே ஆகவேண்டும்,

எந்த பெண்களுக்கு சுதந்திரம் இல்லை என்று நீங்கள் சொல்கிறீர்களோ அதே பெண்கள் எனக்கு போன் பண்ணி சொன்னார்கள்...

அண்ணா நாங்கள் குதிரை சவாரி செய்த பின் எங்களை தொடர்ந்து இரண்டு இந்து சகோதரிகள் குதிரை சவாரி செய்தார்கள், அந்த இரண்டு இந்து சகோதரிகளும் குதிரையை விட்டு இறங்கும் போது அவர்களின் அந்தரங்கம் தெரிந்ததால் அங்கு இருந்த இரண்டு கயவாளி பசங்கள் அந்த இரண்டு இந்து சகோதரிகளையும் யாருக்கும் தெரியாமல் போட்டோ எடுத்தார்கள்,

ஆனால் நாங்கள் பார்த்துவிட்டோம், உடனே அந்த இந்து சகோதரிகளிடம் உங்களை போட்டோ எடுக்கிறார்கள் என்று சொன்னோம்.

உடனே அங்கிருந்தவர்கள் அந்த இரண்டு கயவர்களையும் அடித்து, உதைத்து அவர்களிடம் உள்ள மொபைலை சோதனை செய்து பார்த்ததில் அந்த இரண்டு இந்து சகோதரிகள் மட்டுமின்றி பல இந்து சகோதரிகளை அவர்களுக்கே தெரியாமல் போட்டோ எடுத்துள்ளார்கள் என்பது தெரிய வந்தது,

இறுதியில் இரண்டு கயவர்களையும் காவல்நிலையத்தில் ஒப்படைத்து விட்டார்கள், என்று கூறிய அந்த முஸ்லிம் பெண்கள் மேற்கொண்டு கூறினார்கள்...

அண்ணா நம்முடைய மார்க்கத்தில் கணவனுக்கு மட்டுமே தெரியவேண்டிய உடலை கண்டவனுக்கு காட்டவேண்டாம் என்ற அடிப்படையில் கொடுக்கப்பட்ட பாதுகாப்பு கவசமான பர்தா வை நாங்கள் அணிவதால் எங்களது கண்ணியம் காப்பாற்றப்பட்டது, அதே பர்தா அந்த இந்து சகோதரிகளுக்கும் இருந்திருந்தால் அவர்களின் கண்ணியமும் காக்கப்பட்டிருக்கும் என்று அந்த இரண்டு முஸ்லிம் பெண்களும் கூறினார்கள்.

என்ன ராஜ் சார்... இந்த பதில் போதும் என்று நினைக்கிறேன் ?


நன்றி - முக நூலில் இருந்து ...சங்கை ரிதுவான் பக்கம் 
Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger