”ஒழுங்கான ஆடை அணியாதது தான் கற்பழிப்புக்கு முக்கிய காரணம்” காப் பஞ்சாயத்து அறிவிப்பு


ஹிசார் கிராமத்தில் இளம் பெண்கள் ஜீன்ஸ், டி சர்ட் அணிய கப் பஞ்சாயத்து தடை விதித்துள்ளது.
ஹரியானா மாநிலம் ஹிசார் கிராமத்தில் பெண்கள் செல்போன் பயன்படுத்த கப் பஞ்சாயத்து தடை விதித்திருந்தது.
இந்நிலையில் இளம்பெண்கள் ஜீன்ஸ் மற்றும் டி-சர்ட் அணிய தற்போது பஞ்சாயத்தார்கள் தடை விதித்துள்ளனர்.
கேதர் கிராமத்தில் நடந்த பஞ்சாயத்து கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதை பஞ்சாயத்து தலைவர் ஷம்ஷேர் சிங் செய்தியாளர்ளிடம் தெரிவித்துள்ளார்.
பஞ்சாயத்து கூட்டத்தில் கலந்து கொண்ட சாந்தி தேவி என்ற நடுத்தர வயது பெண் கூறுகையில், பஞ்சாயத்து நல்ல முடிவை எடுத்துள்ளது. இந்த முடிவால் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறையும். ஒழுங்காக ஆடை அணியாதது தான் கற்பழிப்புக்கு முக்கிய காரணம் ஆகும் என்றார்.
ஹிசார் கிராமத்தைச் சேர்ந்த பஞ்சாயத்து உறுப்பினர் மகாவீர் சிங் கூறுகையில், பஞ்சாயத்து முடிவை வரவேற்கிறோம். யாராவது டிஜே பார்ட்டிக்கு ஏற்பாடு செய்தால் அவர்களுக்கு ரூ.11,000 அபராதம் விதிக்கப்படும் என்றார்.
இஸ்லாமிய சட்டம் தான் மனித குலத்திற்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கு சரியான தீர்வு என்பதை உலகம் இன்று உணர்ந்து வருகின்றது… அல்ஹம்துலில்லாஹ்!
இறைவன் திருமறையில்..
நபியே! (முஹம்மதே!) உமது மனைவியருக்கும், உமது புதல்வியருக்கும், (ஏனைய) நம்பிக்கை கொண்ட பெண்களுக்கும் முக்காடுகளைத் தொங்க விடுமாறு கூறுவீராக!அவர்கள் (ஒழுக்கமுடைய பெண்கள் என்று) அறியப்படவும், தொல்லைப்படுத்தப்படாமல் இருக்கவும் இது ஏற்றது. அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்.  (அல்குர்ஆன் 33:59)
நன்றி - tntj.net 
Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger