பொலன்னறுவையில் பாரிய வெள்ளம் – களத்தில் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்


ஓரிரு நாட்களாக இலங்கையில் பல இடங்களிலும் பெய்து வரும் தொடர் மழை காரணமாக வெள்ளப் பெருக்குகளாலும் மண் சரிவுகளினாலும் அதிகளவான மக்கள் பாதிக்கப் பட்டு வருகின்றனர். இன்று வரைக்கும் சுமாராக 77000 பேர் பாதிக்கப் பட்டுள்ளனர். 15 பேர் உயிரிழந்துள்ளனர். 8500 பேர் இடம் பெயர்ந்துள்ளனர்.
பொலன்னறுவையில் பாரிய வெள்ளம்
பொலன்னறுவை மாவட்டம் தமன்கடுவ பிரதேச சபைக்கு உற்பட்ட  மாணிக்கம்பிட்டி, குசுங்கம, கல்லேல்ல,  திவுலான, புதூர் ஆகிய கிராமங்களும் மணம்பிட்டி பகுதியும் வெள்ளத்தால் மூழ்கியது. நேற்று (18.12.2012) காலை முதல் தற்போது வரை மாணிக்கம்பிட்டி பகுதியில் 4 அடிக்கு மேற்பட்ட வெள்ள நீர் காணப்படுகிறது.மற்ற பகுதிகளிலும்வெள்ள நீரால் மக்கள்அவதிப்படுகின்றனர்.
களத்தில் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்
மாணிக்கம்பிட்டி பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப் பட்ட மக்களுக்கான முதலுதவிகளை ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் தமன்கடுவ கிளை சகோதரர்கள் நேற்று முதல் செய்து வருகின்றனர். பாதிக்கப் பட்ட மக்கள் பொது இடங்களில் தங்கவைக்கப் பட்டுள்ளனர்.
 நன்றி - sltjweb.com 
Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger