அல் குர் ஆன் இறை வேதம் என்பதற்கான சான்றுகள்


அல்லாஹுவின் திருப்பெயரால் 
உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் என்றென்றும் நிலவட்டுமாக....
உலகில் பல மதங்கள் மற்றும் அவற்றின் வேத புத்தகங்கள் அவர் அவர் சார்ந்த மதத்தின் மீது நம்பிக்கை வைத்து அதை அவர்களின் சான்றுகளாக இன்றும் கட்டிக்காத்து வருகின்றனர் ,,அவைகளில் கிருத்துவ மதத்தின் பைபிள் பல நபர்களால் கையாடல் செய்யப்பட்டு அது இறைவனின் வேதம் தான் என்னும் நம்பிக்கையை ,இழந்து விட்டதை கடந்த காலங்களில் கிருஸ்துவ மத போதகர்களின் வாய்களாலே ஒத்துக்கொண்டுள்ளனர் ,,அதேபோல் இந்து மதமும் அதனுடைய நம்பிக்கையை இழந்து,அதில் மூடத்தனமான ,மனிதன் பின்பற்றுவதற்கான நற் போதனைகளே இல்லை என்பது போன்ற வகையில் தான் இருக்கிறது,,,இவைகளுக்கெல்லாம் அப்பார்ப்பட்டு ஒரு மார்க்கம் சத்தியத்தை மட்டுமே சொல்லிக்கொண்டு,செயல்படுத்திக்கொண்டு ,நடைமுறை படுத்திக்கொண்டு இருக்கிறது என்றால் அது இந்த உலகத்தை படைத்து பரிபாலிக்கும் அல்லாஹ்வின் வேதமாகிய அல்குர் ஆன் மட்டுமே என்பதில் சந்தேகமே இல்லை,,,அது எந்தளவிற்கு என்றால் கடந்த 1433 ஆண்டுகளுக்கு முன்னர் இறங்கிய இந்த குர்ஆனின் மூலப் பிரதி இன்றும் உலகில் இரண்டு இடங்களில் உள்ளது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன் ...அந்த மூலப் பிரதியில் உள்ள அல்லாஹுவின் வசனங்கள் இன்றளவும் ஒரு வார்த்தை கூட மாற்றமில்லாமல் பதினான்கு ஆண்டுகளாக இறைவனால் பாதுகாக்கப்பட்டு வருகிறது என்றால் அது இறைவனின் வார்த்தை தான் என்பதில் யாருக்கும் சந்தேகம் சிறிது கூட இருக்க முடியாது,இப்படி உள்ள அந்த வேதத்தில் அது இறைவேதம் தான் என்பதை நிருபிக்கும் விதமாக குர்ஆனில் பல அறிவியல் சான்றுகளை அல்லாஹ்  வைத்திருக்கின்றான் என்றால் அது மிகையாகாது,,,,அதை  படிக்க,ஆய்வுக்கு உட்படுத்த,தவறு கண்டு பிடிக்க வரும் பல மாற்று மத சகோதர,சகோதரிகளை தன்வசம் ஈர்த்து அவர்கள் தூய இஸ்லாமிய மார்க்கத்தை பின்பற்றியவர்களாக பல நபர்களை நாம் கன்கூடாக கண்டு வருகிறோம்.அந்த மாற்றங்கள் தங்களுக்குள்ளும் நிகழவேண்டுமாயின்,தூய மார்க்கத்தை நோக்கி உங்களை அழைக்கிறோம் ,,வாருங்கள் அல்லாஹ்விடம் பல நற்பேறுகளை பெற்று அழகிய சொர்க்கத்திற்குள் நுழைய ,,,,, கீழே உள்ளவை  திருக்குர்ஆனில் உள்ள அறிவியல் சான்றுகள்....படித்து பயன் பெறவு,,குர் ஆனை ஆய்வு செய்யவும்,

அல்குர் ஆனின் அறிவியல் சான்றுகள் உள்ள திரு மறை வசனங்கள் 
* பிற கோள்களிலிருந்து பூமிக்கு வரும் ஆபத்துக்களைத் தடுக்கும் முகடாக வானம் அமைந்துள்ளது - 2:22, 21:32, 40:64, 52:5
* பூமியிலிருந்து மேலேறிச் செல்பவற்றைத் திருப்பியனுப்பும் தன்மை வானத்திற்கு உண்டு என்ற அறிவியல் உண்மை - 86:11
* மனித உடலின் தோல்களில் தான் வேதனையை உணரும் நரம்புகள் உள்ளன என்ற அறிவியல் விளக்கம் - 4:56
* விண்வெளிப் பயணம் மேற்கொள்ளும் போது மனித இதயம் சுருங்கும் என்ற அறிவியல் உண்மை - 6:125
* பூமியில் மட்டும் தான் உயிரினங்கள் வாழ முடியும் என்ற உண்மை - 2:36, 7:24, 7:25
* ஆகாயத்தில் பறந்து கொண்டிருக்கும் பறவைகள் பூமியின் மீது மோதாமல் இருப்பதற்குப் புவி ஈர்ப்பு விசையே காரணம் என்ற உண்மை - 16:79, 67:19
* விண்வெளியில் எவ்வளவு தொலைவு செல்ல முடிந்தாலும், பூமிக்கு அடியில் மலையின் உயரம் அளவுக்குச் செல்ல இயலாது என்ற பேருண்மை - 17:37
* பூமி உருண்டை என்பதை உணர்த்தும் துல்கர்ணைன் பயணம் - 18:90
* பூமி தொட்டிலாக அமைக்கப்பட்ட அற்புதம் - 20:53, 43:10, 78:6
* பெரு வெடிப்பின் மூலமே உலகம் தோன்றியது என்ற தற்காலக் கண்டுபிடிப்பு குறித்த அறிவியல் முன்னறிவிப்பு - 21:30
* கருவில் வளரும் குழந்தை மூன்று மாதங்கள் கழித்தே மனித உருவம் பெறும் - 23:14
* நிலத்தடி நீர் எவ்வாறு சேமிக்கப்படுகிறது - 23:18
* கடல்கள் ஒன்றோடொன்று இணைந்திருந்தாலும் அவற்றுக்கு இடையே தடுப்பு உள்ளது என்ற அறிவியல் உண்மை - 25:53, 27:61, 35:12 55:19,20
* காற்றின் சராசரி வேகம் எவ்வளவு என்பதைக் கணித்துச் சொல்லும் அற்புதம் - 34:12
* வானங்களுக்கும் பூமிக்கும் இடையே ஈர்ப்பு சக்தி - 35:41
* பல கிழக்குகள், பல மேற்குகள் என்று கூறுவதன் மூலம் பூமி உருண்டை என்பதை நிரூபித்தல் - 37:5, 55:17, 70:40
* பெரு வெடிப்புக்குப் பின் தூசுப் படலத்திலிருந்து கோள்கள் உருவாயின - 41:11.
* மனித இனம் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களும் பூமியிலிருந்தே தங்கள் எடையை எடுத்துக் கொள்கின்றன என்ற உண்மை - 6:98, 50:4, 71:17
* விண்வெளிப் பயணம் சாத்தியமே என்று அறிவித்தல் - 55:33-35
* விரல் ரேகை தான் மனிதனின் முக்கிய அடையாளம் - 75:4
* உயிரின உற்பத்தியில் பெண்களுக்கும் பங்குண்டு - 76:2
* தேனீக்களின் வாயிலிருந்து தேன் வெளிப்படவில்லை, வயிற்றிலிருந்து வெளியாகின்றது என்ற அறிவியல் - 16:69
* கடலின் மேற்புறத்தில் மட்டுமின்றி கடல் ஆழத்திலும் பேரலைகள் ஏற்படுகின்றன என்ற அறிவியல் கருத்து - 24:40
* அன்னியப் பொருள் எதையும் ஏற்காத கர்ப்ப அறை, கருவை மட்டும் குறிப்பிட்ட காலம் வரை ஏற்றுக் கொள்ளும் அற்புதம் - 13:8
* பொய் சொல்வதற்கான நரம்புகள் மூளையின் முன் பகுதியில் தான் உள்ளன என்ற விஞ்ஞானக் கூற்றை முன்பே தெரிவித்தது - 96:15
* காற்றிலுள்ள ஆக்ஸிஜன் நீக்கப்பட்டால் அது அனைத்தையும் அழித்து விடும் என்ற அறிவியல் உண்மை - 51:41,42
* கைகளை விலாப்புறத்துடன் சேர்த்துக் கொள்வது பயத்தைக் குறைக்கும் என்ற மனோதத்துவ உண்மை - 28:32
* விந்து எங்கிருந்து வெளியேறுகின்றது என்ற அறிவியல் உண்மை - 86:7
* வான்வெளியிலும் பாதைகள் உண்டு என்று கூறும் வானியல் விஞ்ஞானம் - 51:7
* பூமிக்கு ஈர்க்கும் சக்தி உள்ளது என்ற அறிவியல் உண்மை - 13:2, 31:10
* சூரியனும் கோள்களும் ஓடுகின்றன என்ற அறிவியல் உண்மை - 13:2, 31:29, 35:13, 36:38, 39:5
* சந்திரன் பிளந்தது பற்றியும் அதற்கான சான்று சந்திரனில் பதிவாகி உள்ளது பற்றியும் அறிவித்திருப்பது - 54:2
* வான் எல்லை விரிவடைந்து கொண்டே செல்கின்றது என்ற அறிவியல் விளக்கம் - 51:47
* உயிரினங்கள் மட்டுமின்றி அனைத்திலும் ஜோடி உண்டு என்ற உண்மை - 13:3, 20:53, 36:36, 43:12, 51:49
* உலக வெப்ப மயமாதலால் பனிப்பாறை உருகி, கடல் மட்டம் உயர்ந்து நிலப்பரப்பு குறையும் என்ற அறிவியல் முன்னறிவிப்பு - 13:41, 21:44
* வான் மழை எவ்வாறு உருவாகின்றது என்பது பற்றி இன்றைய விஞ்ஞானிகளின் கூற்றை அப்படியே முழு விபரத்துடன் விளக்கும் அதிசயம் - 24:43
* அணு ஆயுதங்கள் தயாரிக்க முடியும் என்பது பற்றிய முன்னறிவிப்பு - 105:1-5, 11:82, 15:74, 26:173, 27:58, 51:32
* "இருள்கள்' என்று பன்மையாகக் கூறுவதன் மூலம் நிறங்களுக்கு அலை நீளம் உண்டு என்பதையும், நிறத்திற்கு நிறம் அலை நீளம் மாறுபடும் என்பதையும் விளக்கியுள்ளது. - 2:17, 2:19, 2:257, 5:16, 6:1, 6:39, 6:59, 6:63, 6:97, 6:122, 13:16, 14:1, 14:5, 21:87, 24:40, 27:63, 33:43, 35:20, 39:6, 57:9, 65:11
* பொருட்களைக் கெட்டுப் போகாமல் பாதுகாக்கும் தொழில் நுட்பம் பற்றிய முன்னறிவிப்பு- 2:259
* குளோனிங் சாத்தியம் என்பது பற்றி 14 நூற்றாண்டுகளுக்கு முன்பே கூறியது - 19:21, 19:29,30, 21:91, 23:50
* ஒட்டகத்தின் விந்தையான உடலமைப்பைப் பற்றிய விளக்கம் - 88:17, 36:41,42
* இரும்பு இப்பூமியில் உருவாகவில்லை, வானிலிருந்து இறக்கப்பட்டது என்பது பற்றி அறிவியல் உண்மை - 57:25
* படுவேகமாகச் சுழலும் பூமியை அதிர்விலிருந்து காக்கும் முளைகளாக மலைகள் உள்ளன - 13:3, 15:19, 16:15, 21:31, 27:61, 31:10, 41:10, 50:7, 77:27. 78:7, 79:32
* பூமி உருவானதற்குப் பின்னர் தான் மலைகள் உருவாயின என்ற விஞ்ஞானிகளின் கூற்றை உண்மைப்படுத்துகிறது. - 41:9,10
* நவீனக் கருவிகளும் ஆய்வுக் கூடங்களும் இல்லாத காலத்தில், பாலூட்டி உயிரினங்களிடம் பால் எவ்வாறு உற்பத்தியாகின்றது என்பது குறித்த அறிவியல் உண்மை - 16:66
* மனிதனைத் தூக்கிச் செல்லும் அளவுக்குப் பெரிய பறவைகள் உலகத்தில் இருந்தன என்ற அறிவியல் உண்மை - 22:31
* வருடத்திற்கு எத்தனை மாதங்கள் என்பது நெறிமுறைப்படுத்தப்படாமல் இருந்த காலத்தில் 12 மாதங்கள் தான் என்று அறிவித்தது - 9:36
* கவலையில் ஆழ்ந்திருப்பவர்களுக்கு, தவறான தகவல் மூலம் அதைவிடப் பெருங்கவலையை ஏற்படுத்தினால் கவலை மறைந்து விடும் என்ற மனோதத்துவ விளக்கம் - 3:153

இன்ஷா அல்லாஹ் தொடரும் ஆய்வுகள் ....
Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger